Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

December 31, 2013

ஆண்டு 2013

ஒவ்வொரு ஆண்டு ஒரு பாடமே. இருப்பினும் பட்டு கற்று செல்வது சிறிது. அவ்வகையில் எனக்கு முந்தைய ஆண்டுகளை விட 2013 சற்று ஆக்கபூர்வமான ஆண்டாக அமைந்ததாக கருதுகிறேன்.

ஆண்டின் துவக்கத்தில் BYUவிற்கு விண்ணப்பித்துவிட்டு தென்கொரியா சென்றேன். வேலையில் ஒவ்வாமல் தான் வேலை செய்துக்கொண்டு இருந்தேன். ஆயினும் அலுவகத்தில் நான் செய்யவேண்டியதை செய்து முடித்தேன். BYUவில் இருந்து தொலைபேசி நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. நன்கு ஆயத்தமானேன். ஆனால் நேர்காணலின் முடிவு தோல்வியாக இருந்தது. மிகுந்த மனசோகத்தில் ஆழ்ந்தேன் என்பது தான் உண்மை. கொரியா செல்லும் பொழுது சில புத்தகங்கள் எடுத்துக் கொண்டு சென்றிருந்தேன். சில சிறுகதைகள், மதரின்(Mother) ஆன்மிக புத்தகங்கள், கல்வி இயக்க புத்தகங்கள், வேதம் சம்மதமானவை, ஜித்து (Jiddu) ஆகிய புத்தகங்கள். மன சோர்ந்திருந்த காலங்களில் வழக்கம் போல் உதாரித்தனமாக இருந்துவிட்டு பிறகு அவைகளை படித்தேன். பின்பு காந்தியின் சத்திய சோதனையை படித்தேன். என் வாழ்வில் ஒரு மிக பெரிய தாக்கதை ஏற்படுத்திய முதல் புத்தகம் அதுவே. அவர் எழுத்தில் இருந்த அந்த நேர்மையே என்னை ஆட்கொண்டது.

இப்படி காலம் சென்றுக் கொண்டு இருக்கையில் ஒரு நாள் கமல்ஹாசன் பங்கேற்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் கடைசியில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அறம் என்ற புத்தகத்தை பிரகாஷ்ராஜிற்கு பரிசாக அளிப்பதை கண்டேன். அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் விதையாக மனதில் விழுந்தது. இந்தியா வந்ததும் வாங்கி படித்தேன். அதிர்ந்துபோனேன். நேர்மை, அறம் போன்ற வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை என்பது எனக்கு ஆழமாக விளங்கிற்று.

நடுவில் மணிகண்டனுக்கு Qualcomm (San Diego) வில் வேலை கிடைத்தது எனக்கும், பட்டுவிற்கும், அம்மாவிற்கும் மகிழ்ச்சியளிக்கும் வண்ணமாக அமைந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி பொழுது கழிப்பதை குறைக்க தொடங்கினேன். எழுத்தாளர் ஜெயமோகன் அவரின் வலைப்பை நாளும் படிக்க துவங்கினேன். அந்த வாசல் எனக்கு மிகப்பெரிய வாசலாக அமைந்தது. அதில் கட்டுரைகள், சிறுகதைகள், வாசகர் கடிதங்கள் படித்தது நன்றாக இருந்தது. 

எமது மேலாளர் ராஜாஜியுடன் காந்தியை பற்றி உரையாடினேன். அவருடன் உரையாடுவது மிகவும் ஆக்கபூர்வமாக அமையும். அவர் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தருவார். அவர் அப்படி எனக்கு அறிமுக படுத்தியது தான் காந்தியின் சத்திய சோதனை. இந்த 2010 ஆண்டு அதை காந்தியின் சத்திய சோதனை படிக்க வேண்டும் என்று சொன்னார். அப்படி தான் எனக்கு அதில் ஒரு உந்துதல் உருவாயிற்று. பாருங்கள் 2013இல் தான் படித்து இருக்கிறேன். 

எனக்கு வேலையிலும் அவ்வளவு நாட்டமில்லை. ஒரு கட்டத்தில் நாம் செய்யும் வேலைக்கு நாம் நேர்மையாக இருக்கவில்லை என்ற எண்ணம் உருவாக துவங்கியது (சத்திய சோதனை, அறம் ஆகியவற்றின் தாக்கம்). மேலும் நான் இந்த ஆண்டும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க துவங்கினேன். அந்த நேரம் பார்த்து அலுவகத்தில் ஒரு புதிய வேலை வந்தது. இதில் முழுதாக கவனம் செலுத்த முடியாது. விண்ணப்ப வேலைகள் பாதிக்க படும் என்று அஞ்சி வேலையை விட்டு விலக முடிவு செய்து விலகினேன். ஆனால் என் மேலாளர் ஒத்துக்கொள்ளவில்லை. மற்றும் எனக்கும் நிதி தேவை இருந்தது. ஆதலால் வேலையை தொடர்ந்தேன். விலகலை திரும்பப் பெற்றேன். 

இந்த சமையத்தில் தான் ராஜாஜி அவர்கள் எனக்கு COURSERA.ORG என்ற கல்விக்கூடத்தை அறிமுகம் செய்தார். நான் அதில் Introduction to Marketing என்ற பாடத்தை படித்து முடித்து தேர்ச்சிப் பெற்றேன் (Q1: 17/20, Q2: 19/20, Q3: 19/20, Final: 34/40). கொஞ்சம் காசுக் கொடுத்து படித்தாலும் இதுப் போன்ற செயல்கள் என் நேரத்தை ஆக்கபூர்வமாக அமைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கிறது. ஆனால் Introduction to Financial Accounting, Statistics போன்ற பாடங்களும் படிக்க வேண்டும்.

இப்படி சென்று கொண்டு இருக்கையில் 20 புத்தகம் படிக்க வேண்டும் என்று வைத்து இருந்த இலக்கை ஆகஸ்ட் மாதமே அடைந்தேன். பின்பு 30 புத்தகம் என்று இலக்கை உயர்த்தினேன். ஜெயமோகன் புத்தகங்கள், அவர் (மற்றும் அவரது வாசகர்கள்) சிபாரிசு செய்த புத்தங்களைப் படிக்க துவங்கினேன். புத்தகம் வாங்கி குவிக்க துவங்கினேன். இப்படி படித்து இந்த வருடம் 29 புத்தகங்கள் படித்து உள்ளேன். அது இல்லாமல் மூன்று நூல்கள் பாதியில் உள்ளன. ஜெ`வின் இன்றைய காந்தி  காந்தியை பற்றிய ஒரு மிகப்பெரிய கண் திறப்பாய் இருக்கிறது.

இப்போது கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து உள்ளேன். ராஜாஜி, நாகமணி, சுந்தரேசன் அம்மா, செவியர், நம்பியார் ஆகியோர் மிகுந்த உத்தாசியாக இருந்து பங்காற்றினார்கள். இந்த ஆண்டு ஒரு காணொளி நேர்காணல் கொண்டேன். முடிவிற்காக காத்து இருக்கிறேன். BYUவிற்கு மறுபடியும் விண்ணப்பித்து உள்ளேன். காத்திருக்கிறேன். நன்றாக செய்ய வேண்டும்.

விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சென்று வந்தது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. வானவன் மாதேவி வல்லபி சகோதரிகளின் சந்திப்பு எனக்கு ஒரு திருப்பு முனை. வாழ்வில் நேர்தை வீண்செலவு செய்ய கூடாது என்பதை உணர்ந்தேன். தன்நம்பிக்கை என்றால் என்ன என்று கற்று கொண்டேன். 

பாலா, நம்பியார் கல்யாணங்கள், ஒரு ரயில் பயணம், நாகமணி-ரகு-ப்ரித்வி வீட்டிற்கு வந்து இருந்தது, TATA ELXSI-CHENNAI நண்பர்களுடன் ஒரு நாள் கூடியது, வீட்டில் கொலு, TBR uncle-நம்பியார் குடும்பங்களுடன் பழனி பயணம், 15 ஆண்டுகள் பின்பு சிவா குருக்கள் அண்ணனை சந்தித்து பேசியது, சேவியரின் ஜீவித்தன், வீட்டில் சிவா அண்ணன் செய்து வைத்த ஐயப்பன் பூஜை, பாட்டி என்னோட இந்த நேர்காணலின் போது சமைத்து உதவ வந்தபோது நிறை புத்தங்கள் படித்து இன்புற்றது, சில திரைப்படங்கள், சில பாடல்கள் ஆகியவை இந்த ஆண்டின் இன்பக்கீறல்கள்.

நண்பர் நாகமணியுடன் நாளும் ஒரு திருக்குறள் படிக்க வேண்டும் என்ற கூட்டு முயற்சி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்.

மொத்தமாக இந்த ஆண்டின் ஆக்கபூர்வமாக நான் கருதுவது.
1) காந்தியின் சத்திய சோதனை படித்தது.
2) ஜெயமோகனின் புத்தகங்கள் (அறம்) மற்றும் கட்டுரைகள் படித்தது.
3) Introduction to Marketing பாடம் படித்து தேர்ச்சிப் பெற்றது.
4) புத்தக வாசிப்பின் 30 இலக்கில் 29 படித்தது.
5) குறிப்பிட தக்க தருணங்களை வலைப்பதிவு செய்து வருகிறேன். 2012 ஆண்டு காலமாக வலைப்பதிவு அவ்வளவு சீராக இல்லை.
6) Daily Thirukkural Project துவங்கியது. (ஒரு சின்ன துவக்கம் - மூன்று வாரமாக).
7) இரண்டு மாதமாக அலுவலகத்திற்கு மிதி வண்டியில் செல்கிறேன்.

2014ற்கு கொண்டு செல்ல கூடாதது
1) வீட்டில் கோவமாக பேசக் கூடாது.
2) துணுக்கு வலையங்களை படிக்கக் கூடாது. (இரண்டு வாரம் முன் கைவிடப்பட்டது).
3)  செய்தி வலையங்களை நாள் ஒன்றிற்கு 15 நிமிடம் மேல் பார்க்கவோ வாசிக்கவோ கூடாது. கண்டிப்பாக அடிக்கடி பார்க்கும் பழக்கம் அறவே கூடாது. 
4) மத்திய வேளையில் உறங்கக் கூடாது.
5) YouTube-இல் நேரத்தை விரையம் செய்யும் காணொளிகளை காணக் கூடாது.
6) வெட்டி தொலைபேசி அலைபேசி அழைப்புகள் கூடாது. 
7) மனதிற்கு ஆரோக்கியம் இல்லாத எந்த ஒரு செயலையும் செய்யவோ நினைக்காவோ கூடாது.
8) கடந்த கால நினைவுகளில் திளைத்திருக்க கூடாது.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

December 27, 2013

மீன்கள் - தெளிவத்தை ஜோசப் - சிறுகதை தொகுப்பு

சென்ற வாரம் விஷ்ணுபுரம் விருது விழாவில் பங்கேற்க செல்லும் முன் இவ்வாண்டின் விழா நாயகர் எழுத்தாளர் திரு.தெளிவத்தை ஜோசப் (இலங்கை மலையக பகுதி எழுத்தாளர். பூர்வீகம் - தமிழ்நாடு) அவர்களின் மீன்கள் சிறுகதையை மட்டும் படித்தேன். வலையங்களின் இன்னும் சில சிறுகதைகள் இருந்தன ஆனால் பின்புப் புத்தக வடிவில் வாங்கி படிக்கலாம் என்று எண்ணிப் படிக்கவில்லை. இன்று படித்தேன். 

நான் நிரம்ப சிறுகதைகள் முன்பின் படிக்காவிட்டாலும், எனது பாட்டியும் படித்து கருத்துக் கூறியதால், நானும் சற்று ஆழ்ந்து படித்தமையால் என்னால் ஒன்று சொல்ல முடியும் - மீன்கள் சிறுகதை தொகுப்பு (நற்றிணை பதிப்பகம்) படிக்க வேண்டிய ஒரு மிகசிறந்த தொகுப்பு. 

நான் சிறிது அறிந்துக்கொண்டவற்றில் சில 

(சிறுகதையின் வலையத்தல சுட்டி உள்ளது. தட்டவும்)

ஒரு மிக சிறிய வீட்டில் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளுடன் ஒரு கணவன் மனைவி வாழ்கின்றனர். கதையின் துவக்கமே ஒரு பெரிய திகைப்போடு (கதையின் முடிவுடன்) துவங்குகிறது. இப்படி பட்ட சிறிய வீட்டில் இவர்களுக்கு அந்தரங்கமே கிடையாது. அந்தரங்கம் இல்லாத் வாழ்வு ஒர் வாழ்வா ? இவர்கள் ஒரு குடிசையைக் கூட மற்றவர் அனுமதி இன்றி கட்டிகொள்ள முடியாது. இவர்களுக்கு இன்னொரு வீடு கேட்க கங்கானியை காண செல்கிறான். அங்கு என்ன நடப்பது என்பது தான் கதை. 

கதையில் வரும் வரி - "எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!" என்பதே கதையின் சாரம்சம்.

ஒரு கல்யாணம் ஆன தமிழன் தன்னுடன் வேலை புரியும் சிங்கள பெண்ணுடன் நாளடைவில் பழகி உறவு கொள்கிறான். இதனை அவனின் மனைவி மூலம் அறியும் அவனது நண்பர் ஆச்சர்யப்படுகிறார். இந்த விவகாரம் துவங்கும் முன் கேள்விப் பட்ட போது நம்பவில்லை ஏனென்றால் அலுவகத்தில் கிசுகிசுக்கள் சகஜம்.  அவன் நினைப்பது இது தான் "பிலாக்காய் என்றால் பிளந்து பார்த்துவிடலாம். மனிதனை எப்படிப் பார்ப்பது என்று". 

மனைவியை (அவள் சொந்த ஊரிக்கு அனுப்பி) ஒதுக்கி வைத்து அந்த சிங்கள பெண்னை கல்யாணம் செய்து கொள்கிறான். பெண் குழந்தை. காலம் செல்கிறது. புதிய பெண்டாடி இத்தனை ஆண்டுகளுக்குள் வியூகம் அமைக்கிறாள். மொழி, மதம், இனம், சுற்றம், சூழல் சமூகம், எனப் பல படிகள் கொண்ட வியூகம் அது. வெளித்தோற்றம் காட்டாத உள் மன விலங்குகள்.

இப்போது முதல் மனைவியின் குடும்பம் எப்படி இருக்கும் என்று எண்ணுகிறான் நண்பன். காலம் எப்படி எல்லாம் மனித மனங்களின் காயங்களை குணப்படுத்திவிடுகிறது. குணப்படுத்தி விடுகிறதா அல்லது மறைத்து வைத்துக் கொண்டு மறக்கடித்து விடுகிறதா…! அந்த பெண் குழந்தைக்கு கல்யாணம் ஆகும் நேரம் ஒரு சிக்கல். இவன் கிறுஸ்துவனாக மாறவேண்டும். இவன் எதிர்கிறான். ஆனால் அவர் சூழ்நிலைகளின் கைதியாக வெகு காலமாகிவிட்டது.

இந்த கதை திபாவளி நாளை மத்தியமாக கொண்டு மூன்று நாட்களில் நகர்கிறது. 

பஸ்ஸில் – ரயிலில் – தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக் கொள்வதற்கு முட்டி மோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை. - என்று துவங்குகிறது கதை.

பஸ்ஸில் ஒரு பிச்சைகாரனுக்கு காசுப் போடும் மக்களின் மனநிலையை படம் பிடித்து காண்பிக்கிறது இக்கதை. 

ஒரு பேருந்தில் நடக்கும் பயணமே கதை. இதில் சிங்களவர்களுக்கும் மலையக தமிழ் மக்களுக்கும் பேருந்தில் நடக்கும் பாரபட்சமே கதை. 

இது ஒரு சின்னப் பயணம். பத்துமைல் தூரம் ஓடும் பஸ் பயணம். இதே இந்த மக்களுக்கு இத்தனை சிரமமானதும், சிக்கலானதுமாக இருக்கிறதென்றால் வாழ்க்கை எனும் பெரும்பயணம்…..?

ஒரு சிங்கள டாக்டர் ஒரு தமிழரின் வீட்டில் காந்தி, நேரு, போஸ் படங்களை பார்த்து, நீங்கள் எங்கள் நாட்டு தலைவர்களின் போட்டோகளை வைக்காமல் உங்கள் பூர்விக நாட்டு தலைவர்கள் போட்டோவை வைத்து உள்ளீர். ஆனால் இங்கு குடியுரிமை கேட்கின்றீர். கடைசி தமிழன் வரை அனுப்ப வேண்டும் என்கிறார். படத்தில் உள்ளவர் யார் என்று சிங்கள டாக்டர் கேட்கிறார். தமிழனின் பதில் : 

காந்தியின் படத்தைப் பார்த்து இது யாருடைய படம் என்று கேட்பதன் மூலம் தனக்கும் எனது தலைவர்களுக்கும் பெருமைத் தேடிக் கொள்வதாக எண்ணிக்கொள்ளும் அய்யாவின் அறியாமை அவனுக்கு சிரிப்பூட்டியது.

“இது யாருன்னு அய்யாவுக்குத் தெரியலையா… அடப்பாவமே! ‘மனிதர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள் என்பதால் மற்ற நாட்டை வெறுக்கிறார்கள் என்பதல்ல பொருள்’ என்று கூறிய மகாத்மா இவர்தான்.

மற்றவர்களுடைய தலைவர்களை, மற்ற நாட்டவர்களை வெறுப்பதன் மூலம் மட்டுமே உங்கள் நாட்டை, உங்கள் தலைவர்களை, உங்கள் நாட்டவர்களை நேசிப்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளும் உங்கள் போன்றவர்களுக்கு உலகத்துக்கே ஒப்பற்றவரான ஒரு மனிதரைத் தெரிய முடியாதுதான்….”

ஒரு இரண்டு வயது குழந்தை குளியல் அரையில் தாழ்ப்போட்டுக்கொண்டு மாட்டிக் கொள்கிறாள். இருட்டில் அவள் உற்சாகம் இன்றி இருக்கிறாள். வீட்டில் உள்ள உறவினர்கள் தவிக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி இந்த நேரத்தில் குழந்தையுடன் பேசவேண்டும் என்று தெரியவில்லை. 

தாத்தா குழந்தையிடம் நான் உங்களிடம் வருகிறேன் என்று பேசியப் பின் குழந்தை மனதில் ஒரு உற்சாகம். பின்பு குழந்தையிடம் லாவகமாக பேசி குழந்தை வைத்தே கதவை திறக்கிறார் தாத்தா. 

குழந்தை வந்தவுடன் இனிமேல் குழந்தை பிரச்சனையில் மாட்டிகொள்ளாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூச்சல் இடுகிறார்கள். ஆனால் ஒரு சிக்கலில் (இருக்கும் குழந்தை) எப்படி செயல் படவேண்டும் என்ற பாடத்தை அங்கு யாரும் கற்கவில்லை.

ஒருவன் கொழும்புவில் இருந்து தன் உடம்பு சரியில்லாத (சாக கிடக்கும்) அம்மாவை காண தனியாக அவன் சொந்த ஊர்க்கு செல்கிறான். அவன் குடும்பம் வரவில்லை. 

முன்பு அவன் வந்தால் "அந்த வயதிலும் அந்தக் குளிரிலும் அம்மா சிட்டைப்போல் பறப்பதாகத் தெரியும் அவனுக்கு. உழைத்து உரமேறிய உடல் சீக்கிற்கோ தளர்வுக்கோ அது இடமளிக்காது. அவனுடைய வருகையும் அவளுக்கு ஒரு புதுத் தென்பைக் கொடுக்கிறது. உடலிலே ஒரு இளமை@ நடையிலே ஒரு துள்ளல்!"

தங்களைச் சுற்றி சுற்றியே வலம் வரும் அம்மாவின் அன்புப் பார்வை அவனைத் தடுமாறச் செய்கிறது.

அம்மாவுக்கென்று அவன் என்ன செய்திருக்கின்றான்? படித்து பாஸாகி உத்தியோகம் தேடி காதலித்துக் கல்யாணம் கட்டிக் குழந்தை பெற்று …..

என் மகன் இப்படி இப்படி இருக்கிறான் என்று கூறிக் கூறிப் பெருமை படும் நெஞ்சம் அது!

மருமகளிடம் அம்மா மூச்சு விடமாட்டார்கள். ‘ வாம்மா, இரும்மா’ என்றுகூடச் சொல்லமாட்டார்கள்: ‘வாங்க, இருங்க’ தான். மருமகள் அம்மாவுக்கு ஒரு மகாராணி மாதிரி! என் மகளை நம்பி வந்தவளாயிற்றே என்னும் நினைவு.


எனக்கு என்ன செய்தாய் என்று எதிர்ப்பார்க்கும் நெஞ்சமல்ல… இப்படி ஒருநாள் வருவதுவும் “இனி எப்பப்பா?…..” என்னும் கேள்வியுடன் விடை பெறுவதுவும்தான்; அவன் செய்வது!

என்று அம்மாவின் பாசத்தை உணர்த்துகிறார். 

ஆனால் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று ஏற்கனவே மூன்று முறை குடும்பத்துடன் வந்து பார்கிறான். சிறிய இடமென்பதால் ஒரே நாளில் ஊருக்கு திரும்பிச் செல்கிறான் ஒவ்வொரு தடவையும். இந்த தடவை தனியாக வருகிறான். இந்த நிலையில் அவர்களின் மனதை காண்பிக்கிறார். இங்கு வந்து செல்வது ஒரு நடுத்தர வர்கனான அவனுக்கு எவ்வளவு நிதி சுமையாக இருக்கிறது என்று காண்பிக்கிறார். 

திடீரென்று குஷி வந்து விட்டால் இருநூறு ரூபாய்க்கு ஐஸ்கிரிம் வாங்கி தின்பார்கள். நூறு ரூபாய்க்குக் குடைவாங்க சங்கடப்பட்டுக்கொண்டு கழுத்தில் டையுடன் மழைக்கு கையை தலையில் வைத்துக் கொண்டு றோட்டில் ஓடுவார்கள்.. அந்த வர்க்கத்தின் அச்சொட்டான பிரதிநிதிதான் இவனும்… இல்லாவிட்டால் ழும்பது ரூபாயில் பஸ்ஸில் செல்வதை விடுத்து ஐநூறு ரூபாய் செலவு செய்து காரில் போவானா?

இந்த தடவை அவனிடம் காசு அவ்வளவு இல்லை. வட்டிக்கு வாங்குவது அதிகம். அலுவகத்தில் Death Fund Scheme இல் போலிசி எடுக்க விண்ணப்பிகிறான். அவர்கள் மூன்று மாத சம்பளம் கொடுப்பார்கள் ஆனால் அம்மா இறந்தால் தான்.  அவன் என்னுகிறான் இந்த தடவை அம்மா ஏமாற்ற மாட்டார்கள்.

பாவ சங்கீர்த்தனம் (மின் அணு பதிப்பு (சுட்டி) இல்லை)
ஒரு வயதில் பெரியவர் ஒரு பெண்னை பார்த்து மனதில் எப்படி பட்ட எண்ணங்களை கொள்கிறார் என்று கதை சொல்கிறது. அந்த பெரியவரின் கடவுள் வழிபாடுகளை கூறுகிறார்.

மந்திரங்களை கீழ்வகுப்புப் பிள்ளைகள் பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிப்பதுபோல

உலகத்தின் அசுர வேகத்துடன் இணைந்தோட இறை வணக்கத்திலும் ஒரு வேகம். வெறும் உதட்டாட்டம். ஜபத்தின் கருத்து மனத்தைத் தீண்டமுடியாத ஒரு வேகம்.

எண்ணிப் பாத்தால் என்ன சுவாமி இருக்கிறது இவ்வுலக வாழ்வில் - ஒன்றுமே இல்லை.

இவர் உத்தியோகத்தில் மட்டுந்தான் பெரியவர்.

கோவிலில் மண்டியிட்டுக் கூறமட்டும்தான் ஜபம் என்றால் அந்த ஜபத்தை படிக்க வேண்டிய அவசியம் ... ?

பெண்ணின் கண்ணீருக்குச் சக்தி. கண்ணீரைவிட அந்தக் கண்களுக்கே சக்தி அதிகம்.

ஒருவாரம் செய்த பாவங்களைச் சுவாமியார் ஒருவரிடம் சொல்லிவிட வேண்டியது. அடுத்த வாரத்துக்கான பாவங்கள் அடுத்த வாரத்தில் ஒரு நாள்.

குப்பைத் தொட்டி நிறைவதும் காலிபண்ணுவதும் பிறகு நிறைவதும்போல. அதுவா பாவ சங்கீர்த்தனம் ? அவருக்குமா பாவ மன்னிப்பு கேட்கிறது ?

December 26, 2013

சில பாரதியார் பாடல்கள்


பிழைத்த தென்னந்தோப்பு

வயலிடை யினிலே செழுநீர் மடுக் கரையினிலே
அய லெவரு மில்லை தனியே ஆறுதல் கொள்ள வந்தேன்.

காற்றடித் ததிலே மரங்கள் கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவே.

சிறிய திட்டையிலே உளதோர் தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை- அதனை வாயு பொடிக்க வில்லை

வீழ்ந்தன சிலவாம்-மரங்கள், மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே-அதனை, வாயு பொறுத்து விட்டான்

தனிமை கண்டதுண்டு;-அதில்-சாரமிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில், அது தேம்பாகு மதுர மன்றோ?

இரவி நின்றது காண்-விண்ணிலே-இன்ப வொளித் திரளாய்;
பரவி யெங்கணுமே-கதிர்கள்-பாடிக் களித்தனவே.

நின்ற மரத்திடையே-சிறிதோர்-நிழலினில் இருந்தேன்,
என்றும் கவிதையிலே-நிலையாம்-இன்பம் அறிந்து கொண்டேன்.

வாழ்க பராசக்தி!-நினையே-வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பராசக்தி!-இதையென்-வாக்கு மறவாதே!

மழை

திக்குகள் எட்டும் சிதறி ‍ தக்கத்
     தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட‌
பக்க மலைகள் உடைந்து ‍ வெள்ளம்
     பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட‌
தக்கத் ததிங்கிட தித்தோம் ‍ அண்டம்
     சாயுது சாயுது சாயுது ‍ பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று ‍ தக்கத்
     தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட‌

வெட்டி யடிக்குது மின்னல் ‍ கடல்
     வீரத் திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் ‍ கூ
     கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா ‍ என்று
     தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய ‍ மழை
     எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!

அண்டம் குலுங்குது தம்பி!  தலை
     ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்  திசை
     வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;  என்ன‌
     தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்  இந்தக்
     காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்.

December 25, 2013

என் வாழ்வில் ஒரு முக்கிய சந்திப்பு

சென்ற வாரம் நான் கோவைக்கு விஷ்ணுபுரம் விருது விழாவிற்காக சென்று இருந்தேன். அது ஒரு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. அதைப் பற்றி எனது முந்தய பதிவில் எழுதி இருந்தேன். விழாவை பற்றி ஆழமாக அன்பர் சுனில்கிருஷ்ணன் எழுதி இருந்தார்.

ஆனால் நான் முக்கியமான ஒன்றை எழுதவில்லை. அது ஒரு மிகவும் அரிதான சம்பவம். ஞாயிறு அன்று காலை வானவன் மாதேவி வல்லபி சகோதிரிகளை முதல் முதலாக சந்திக்க நேரிட்டது. அவர்களை முதலில் பார்த்தப் போது எனக்கு அவர்களின் தெவிட்டாத புன்னகை தான் என் கண்ணுக்கு தெரிந்தது. பின்பு அவர்களின் உற்சாகமான குரல். அவர்களை விட்டு என் மனமும் பார்வையும் சில நிமிடங்களுக்கு நகரவில்லை. அவர்கள் இந்திரா பார்த்தசாரதி மற்றும் தெளிவத்தை ஜோசப் அவர்களிடம் அவர்களின் வாசிப்பைப் பகிர்ந்துகொண்டு நுட்பமான கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தார்கள். புதியதாய் இருப்பதால் அவர்களிடம் பேச எனக்கு சற்று தயக்கம். பேசவும் இல்லை. ஞாயிறு மதியம் 3:30 மணிக்கு பிறகு கலந்துரையாடல்கள் எதுவும் நடக்கவில்லை. அப்போது நான் சற்று தனிமைப் பட்டு முன் இருந்த இருக்கையில் தலை வைத்து சிறிது நேரம் அரைத் தூக்கம் கொண்டேன். 

சிறிது நேரம் கழித்து வல்லபி என்னை பார்த்து சிரித்ததாய் தோன்றியது. பதிலுக்கு நானும் சிரித்தேன். என்னையா பாத்தீங்கனு கேட்டாங்க. எனக்கு என்ன சொல்வது என்று தோனவில்லை. அவர்கள் முதல் தடவையா என்று கேட்டார்கள். ஆம் என்றேன். அதான் தனியா இருக்கீங்க. உங்க பேர் ? ராஜேஷ் என்றேன். உங்க பேரு ? வல்லபி. எங்க இருந்து வரீங்க ? பாண்டிச்சேரி. சிவாவ தெரியுமா ? இல்ல இங்க தான் அறிமுகம் என்று சொன்னேன். பிறகு அவர்களிடம் பேசவில்லை. ஆனால் ஒன்று மட்டும் கண்டேன். அவர்களிடம் எல்லோரும் சென்று பேசினார்கள். எனக்கு பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்ன பேசுவது. நான் பேசி அவர்களின் மனதில் ஒரு வருத்தம் வரப்போகிறது என்று எண்ணி பேசவில்லை.

அவர்கள் Muscular Dystrophy எனும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் எப்படிப் பேசுவது என்பது எனக்கு சற்றும் தெரியவில்லை. ஒருவரின் மனம் எள்ளவும் நோகும் படி நடக்க கூடாது என்பது எண்ணம். ஒருவரிடம் பச்சாபதாபம் காண்பிப்பது ஒருவரின் தன்நம்பிக்கையை அவமானபடுத்துவதாகும். அவர்கள் என்னில் மிகுந்த ஒரு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர். 

நான் பொதுவாக என்னுள் உள்ள சோகங்களை, கவலைகளை வெளியே காண்பித்துக் கொள்ளக் கூடாது என்பதில் மிகுந்த உறுதி உள்ளவன். சுய பச்சாபதாபம் தேட கூடாது என்பது என் கொள்கை (அதற்கு என் வாழ்வில் நான் சந்தித்த சில மனிதர்கள் தான் காரணம்). ஆயினும் ஒரு சில (4-5) மிக நெருங்கிய நண்பர்களிடம் கூட "உனக்கு என்ன தெரியும் எனக்குப் பின்னாடி எவ்வளவு பர்ச்சனைகள் இருக்குனு" கொட்டி தீர்த்து இருக்கிறேன். ஆனால் மனதளவில் பல நாட்கள் சோர்வு அடைந்து இருக்கிறேன். அந்நாட்களில் நேரத்தை விரையம் செய்து இருக்கிறேன். எனது சக்தியை (energy) ஒன்றுக்கும் உதவாத செயல்களில் கொட்டி இருக்கிறேன். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனைகள் ? நான் ஒரு தவறும் செய்தது இல்லையே. யாருக்கும் கெடுதல் நினைத்து இல்லையே. என் வாழ்வின் ஒரு சில திருப்பங்களை ஏன் ஒரு சிலரது திருப்பங்கள் தீர்மானித்தது என்று எண்ணிய நாட்கள் பல. ப்ரகாசமாக (well settled) இருந்து இருக்க கூடிய இன்றைய நாட்கள் ஏன் அப்படி இல்லை. பணம் (அதற்கு உவமையாக வரும் அனைத்தும்) மகிழ்ச்சியின் அளவுகோள் அல்ல என்பதை நான் வேகு நாட்கள் முன்பே நன்கு உணர்ந்தவன். கையில் நல்ல வேலை, பணம்  இருந்தும் ஒரு மனதில் ஒரு நிறைவு இல்லையே. 

நம்மை வழி நடத்த ஒருவர் இல்லையே. குறைந்தது திசை நோக்கி கைக்காட்ட ஆளில்லையே என்று என்னுவேன். அத்தனை அறிவிருந்தும் (அறிவு ஜீவி அல்ல நான்) நாம் எந்த ஒரு முயற்சியும் மேற்க்கொள்ள வில்லையே. இவ்வருத்தங்களுக்கு காரணம் தேடிய நாட்கள் பல. அதற்கு காரணமானவர்களை குற்றம் சாட்டி இருக்கிறேன். காரணங்கள் நேர்மையானலும் அதை தேட நேரம் விரையம் செய்து இருக்கிறேன். தவறு. மிக தவறு. சில நேரம் எனக்கு ஒரு நல்ல தளம் தனை அமைத்துக் கொடுத்த எனது அம்மா, பாட்டி, ஆசான்கள், மேலாளார்கள், நல்வழி நடத்திய நண்பர்கள் இருந்தும் நாம் ஏன் அதனை முழுக்க பயன்ப்படுத்தி நெறியாக செயல்படவில்லை என்று யோச்சித்து இருக்கிறேன். ஒரு சில கேள்விகளிலும் ஒரு சில வாதங்களால் நேர்ந்த வருத்தங்களை என் கவனத்தை மங்க செய்ய ஏன் விட்டேன் என்று கேட்டுக்கொண்டு இருந்தேன். மாறாக நான் எனது பாதையில் இன்னும் கவனுத்துடன் உன்னிப்பாக சென்று இருக்க வேண்டும். என்னை இக்கவலைகள் சூழ விட்டிருக்க கூடாது. விவேகானந்தர் சொன்னதுப் போல் நரம்புகளை ஸ்டீல் (steel) ஆக கொண்டு செயல் பட்டு இருக்க வேண்டும். எப்போதும் ஓர் சோர்வான மனதுடன் உத்வேகம் இல்லாத மனதுடன் தான் இருக்கிறேன். முன்பை விட நான் எனது பயணத்தில் நேரே சென்றாலும் ஒரு பாதுகாப்பு இல்லாதது போன்ற எண்ணத்துடனே செல்கிறேன். வாழ்வை ஒரு பயத்துடனே எதிர்க்கொள்கிறேன். 

ஆனால் இன்று (கண்டிப்பாய் படியுங்கள்) எஸ்.ராமகிருஷ்ணனின் மகத்தான சந்திப்பு  (சுட்டியை தட்டவும்) மற்றும் http://www.jeyamohan.in/?p=37457 தனை பற்றி படித்தவுடன் தான் நான் உலகில் எவ்வளவு மகத்தான இரு மனிதர்களை சந்தித்து இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அவர்களிடம் பேசி இருக்கவேண்டும் என்று இப்போது ஆசைப்படுகிறேன். அவர்களை கண்டது ஒரு விதத்தில் எனக்கு மிகுந்த வேதனை கொடுத்தது. அவர்களை நினைத்து பச்சோதாபம் படவில்லை. அப்படி செய்தால் என்னை விட குறுகிய உள்ளம் கொண்டவன் வேறில்லை. ஆனால் அவர்களை பார்த்ததே மகத்தான பாக்கியமாக கருதுகிறேன். வாழ்வில் இதுப்போன்ற தருணங்கள் எல்லோருக்கும் அமைவதில்லை. எனக்கு அமைந்துள்ளது. என்னை நானே சுய விமர்சனமும் சுயபரிசீலனையும் செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டேன். என் மேல் நானே சுய பட்சாபதாபம் கொண்டு தேங்கி இருக்க கூடாது என்று உணர்ந்தேன். அப்படி பட்சாபதாபம் பட ஒன்றும் இல்லை. வாழ்வில் இனிமேல் எந்த ஒரு நொடியும் பொருளற்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று சபதம் பூண்டு உள்ளேன். வாழ்வில் கடந்ததை நிணைத்து சோர்வடைய கூடாது அதற்கு நேரம் செல்விடவும் கூடாது. ஒரு விதத்தில் இது சுயநலமே. ஆனால் வாழ்வில் மேலே நோக்கி ஆக்கபூர்வமாக பாசிடிவாக (positive) வாழ எனக்கு இந்த சந்திப்பு தேவைப்பட்டுள்ளது. இதுப்போல் வாழ்வில் பலதடவை எழுச்சிப் பெற்றுள்ளேன். ஆனால் நான் பின்னோக்கி சென்றது இல்லை. அதன் பிறகு சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன். இந்த தடவையும் அப்படியே அமையும்.

தியானமும் - ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணம்

சமீபத்தில் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் வலையத்தில் ‘ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்’ என்ற ஒரு கட்டுரையை படித்தேன். அதில் ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணத்தில் உள்ள தியானம் சம்மந்தமான ஒர் ஆழமான தத்துவ குறியிடு உள்ளதை அவர் சுட்டிக்காட்டியதை படித்தேன். அதனை நகலெடுத்து இங்கு எழுதுகிறேன். 


ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணம்
அந்த அசுரனின் ஒவ்வொரு துளி குருதியும் ஒரு தனி ரத்த பீஜாசுரனாக முளைக்கும். அவனிடம் அம்பிகை போர்புரிய புகுந்தபோது அவள் ஆயுதத்தால் அவன் தாக்கப்பட்டபோதெல்லாம் பலவாக வளர்ந்தான். ஆகவே அம்பிகை இரண்டாக பிரிந்தாள். ஒரு அம்பிகை ரத்த தாகம் மிக்க ஒரு பூதமாக ஆனாள். அவள் இன்னொரு தெய்வீக அம்பிகை விட்ட அம்புகளால் ரத்த பீஜாசுரன் கொட்டிய குருதியை தன்  நாவால் நக்கிக் குடித்தாள். அசுரன் அழிந்தான்.

நம் தாய்தெய்வ உருவகத்தில் இருந்து அம்பிகை என்ற பெருந்தெய்வம் உருவாகி வந்தது அதன் வரலாற்றுப்பின்னணி. ஆனால் இக்கதை ஆழமான ஒரு தத்துவக் குறியீடு. தியான மரபில் மிக முக்கியமானது. அடிப்படை இச்சைகளுடன் நேருக்குநேராக நின்று போர் புரிய முடியாது என்று சொல்கிறது இது. போர்புரியும்தோறும் அது பெருகும். ஆகவே நம் போதமே இரண்டாக பிரியவேண்டியிருக்கிறது, அம்பிகையாகவும் பூதமாகவும். தியானம் பழகியவார்களுக்கு மேலும் புரியும்.

இப்படித்தான் நாம் புராணங்களைப் பார்க்க வேண்டும். இப்படித்தான் புராணங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் நமக்கு பௌராணிக மரபு அழிந்தது. புராணத்தை தத்துவத்துடன் இணைத்து எளிமையாகச் சொல்லிக்கொடுக்கும் பெரும் புராணிக சொற்பொழிவாளர்கள் இல்லாமல் ஆனார்கள்.

விளைவாக புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது. இன்று எந்தக்கோயிலில் சென்றாலும் அங்குள்ள அர்ச்சகர் அவருக்கு தோன்றிய ஓர் அற்புதக் கதையை சொல்வார். பல கதைகள் மக்குத்தனமாகவே இருக்கும்.

மூலம் : http://www.jeyamohan.in/?p=3720  [சுட்டியை தட்டுக]

December 23, 2013

விஷ்ணுபுரம் விருது விழா 2013 - ஜெ மற்றும் நண்பர்களுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களே,

கடந்த வார இறுதி எமக்கு மிகுந்த ஒரு மகிழ்ச்சியையும் ஒரு புது உலகையும் கொடுத்தற்கு திரு.ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு மிக பெரிய காரணம். ஆனால் எல்லோருடனும் சொல்லிக்கொண்டு செல்ல முடியவில்லை. அதற்கு என்னை மன்னிக்கவும். தெளிவத்தை அவர்களின் ஏற்புரை முடிந்தவுடன் நேரம் ஆனதால் பெங்களுருக்கு பஸ் எடுக்க கிளம்பிவிட்டேன்.

ஜெ அவர்களின் வலைதளத்தை கடந்த சில மாதங்களாக பின்பற்றி வருகிறேன். விழா அறிவிக்கபட்ட உடன் கட்டாயம் செல்லவேண்டும் ஒரு எண்ணம் இருந்தது. வாசகர்கூட்டத்திற்கு வருவதா வேண்டாமா என்ற தயக்கம் இருந்துக்கொண்டே இருந்தது. புதன்க்கிழமை அன்று சேலம் ப்ரசாதிற்கு டெலிபோன் செய்தபிறகு அந்த அச்சம் உடைந்தது. 

நான் சனிக்கிழமை மாலை சீனு வழிகாட்டுதலுடன் s.v.n கல்யாண மண்டம் சேர்ந்தேன். பிறகு, திரு ஜெ மற்றும் இந்திரா பார்த்தசாரதி ஆகியோருடன் அனைவரும் கலந்துரையாடிக்கொண்டு இருப்பதில் பங்கேற்றது எனக்கு ஒரு புது அனுபவம். இதுப்போல் அனைவரும் கேட்ட ஆழமான கேள்விகளும் அவர்களின் நுண்வாசிப்புதனை எனக்கு காண்பித்தது. உண்மையில் நான் அவ்வளவு உன்னிப்பாக வாசித்தது இல்லை. ஆனால் அப்படிபட்ட நுண்வாசிப்பு மிக முக்கியம் இல்லையேல் மூளைக்கு வெறும் ஒரு பயிற்சியாக (intellectual exercise) வாசிப்பு அமையும் என்றென்பதை மறுபடியும் உணர்ந்தேன். 

இவ்விரு நாட்களின் உச்சமாக நான் பார்ப்பது எல்லோருடனுமான கலந்துரையாடல்கள் தான். ஜெ, இந்திரா பார்த்தசாரதி, தெளிவத்தை ஜோசப், சுரேஷ் இந்த்ரஜித், வேணுகோபால், யுவன், நாஞ்சில் ஆகியோரின் கலந்துரையாடல்களை கவனித்தது ஒரு புதிய அனுபவத்தைத் தாண்டி மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்வேன். இவ்வனுபவம் எமது வாசிப்பு ஆர்வத்தை அதிகப் படுத்தியது என்றே சொல்லவேண்டும். ஜெ வை தவிர மற்றவர்களின் எழுத்துக்களை வாசிக்கவேண்டும் (இதுவரை வாசித்தது இல்லை) என்ற ஒரு உந்துதலை தந்த ஒரு வாசலாக இந்த வாசகர்க் கூட்டத்தை நான் பார்க்கிறேன்.

​​நான் முக்கியமாக சொல்ல நினைப்பது அனைவரும் ஒருவருடன் ஒருவர் அன்புசெலுத்தியதை பற்றித் தான். கூச்சம் காரணமாக நான் பொதுவாக ஒரு புதிய இடத்தில் முதற் சென்று அறிமுகப் படுத்திக்கொண்டு பேசுபவன் அல்ல. ஆனால் என்னிடம் பலர் தாமாக முன் வந்து அறிமுகம் செய்துக் கொண்டு என்னுடன் உரையாடி நம்முள் இருந்த பனியை உடைத்து உங்களின் உரையாடல்களில் என்னை சேர்த்துக்கொண்டது என்னை உங்களில் ஒருவன் போல் எண்ணச் செய்தது. அதேபோல் அனைவரும் ஒருவருகொருவர் உணவு பரிமாறிக் கொண்டு, இரவு தரையில் ஜமுக்காளம் விரித்து படுத்துக்கொண்டு, காலையில் டீ குடித்துக்கொண்டு வயது வித்யாசமின்றி பள்ளிக்கூட நண்பர்கள் போல் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தது நான் சற்றும் எதிர்பாராத ஒரு இன்ப அனுபவமாக இருந்தது.  விழாவில் 84 வயதான இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஒரு இரண்டு நாள் நான் என் வயசையே மறந்துவிட்டேன் என்று கூறும் போது அதற்கு காரணம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அன்பர்கள் என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது என்றென்பது அங்கு இருந்தவனாக என்னுடைய எண்ணம்.

கலந்துரையாடல்களிளும் விழாவிலும் தெளிவத்தை அவர்களின் பேச்சு எனக்கு இலங்கை தமிழ் மக்களுக்குள்ளேயே உள்ள மற்றுமொரு மலையக தேசத்தை அறிமுகம் செய்தது. அது வருத்ததிற்க்குரிய அறிமுகமாகும். ஜெவின் வலையத்தில் உள்ள தமிழின் சிறந்த நாவல்கள் வரிசையில் இலங்கை எழுத்தாளர்கள் பற்றி அதிகம் அறிமுகம் இல்லை என்று கூறியிருப்பார். ஏன் நமக்கு அறிமுகம் இல்லை என்று நான் அவ்வளவு நினைத்தது இல்லை. போர் சூழல் காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு சென்றுவிடுவேன். அதற்கு காரணம் அரசியல் என்பது கண்டிக்கத்தக்க மிகப் பெரிய துயரமாகும். தெளிவத்தை ஜோசப் அவர்களின் எழுத்து இலங்கை தமிழ் எழுத்துக்களுக்கு ஒரு நல்ல சாளரமாக எனக்கு அமைந்துள்ளதாக கருதுகிறேன். அதற்கு ஜெவிற்கும் வி.இ.வட்டதிற்கு நன்றி கூறுகிறேன். வரும் காலங்களில் நிரம்ப இலங்கை எழுத்துக்கள் இந்தியாவிற்கு வரும் என்று நம்புகிறேன். அதற்கும் வாசலாக வி.இ.வட்டம் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

மொத்ததில், இந்த இரண்டு நாட்கள் எனக்கு மிகுந்த ஒரு உத்வேகத்தையும் மன நிறைவையும் அளித்தது. இதைப்போன்று அடுத்து எங்குக் கூடினாலும் கலந்துக்கொள்ள ஆவலாய் உள்ளேன். இத்தனை பெரிய விழாவையும், அற்புதமான கலந்துரையாடல்களையும் நான்காவது முறையாக சாத்தியப் படுத்திய ஜெ மற்றும் வி.இ.வட்டதிற்கு நன்றிப் பாராட்டுகிறேன். 

பேரன்புடன்
ராஜேஷ்.
http://rajeshbalaa.blogspot.in/
FandFstores.com
எண்ணித் துணிக கருமம்

December 18, 2013

எங்கிருந்து வந்தாயடா?

இன்று காலை ஏனோ மிதிவண்டியில் அலுவலும் வருகையில் எங்கிருந்தோ இப்பாடல் என் உதடுகளில் வந்தது. பல மாதங்களுக்கு பின் ஒரு திரைப்பாடல் தனை பதிவு செய்கிறேன்.

இந்தப் பாடல் என்னில் எப்போதும் ஒலிக்கும் ஒரு பாடல். நான் கல்லூரியில் படிக்குமோது வந்த திரைப்படம் 5-ஸ்டார். இந்தப் படத்தில் இன்னும் இரண்டுப்பாடல்கள் (ரயிலே ரயிலே, திரு திருடா திரு திருடா) எனக்கு பிடிக்கும். இப்பாடல் அந்நாட்களிலேயே எனக்கு பிடிக்கும். இப்பொழுதும்.

இந்த பாடல் எப்பொழுதும் வரும் (ஆண்கள் பிரிவால் வாடும்) பாடகளைவிட சற்று வித்தயாசமானது. ஹிந்துஸ்தானி இசைச் சாயல் இருக்கும். ஒரு பெண் ஏங்குவதுப் போன்ற பாடல்கள் அக்காலத்தில் (இக்காலத்திலும்) குறைவே. ஆதலாலே இது இன்னும் சிறப்பு பெரும். 

படத்தில் தலைமகனுக்கும் தலைமகளுக்கும் நடுவில் சொல்லிக்கொள்ளும் படியான நேரடி ஊடல் இல்லை. ஆனால் தலைமகன் தலைமகளை விட்டுப் பிரிந்துச் சென்றமையால் தலைமகள் பிரிவால் வாடுகிறாள். அப்போது ஒரு கல்யாண நிகழ்ச்சியில் தலைமகள் பாடும் பாடல். முதலில் இது ஒரு கல்யாணப் பெண் பாடுவது போல் இருக்கும். ஆனால் கடைசியில் விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்  என்று பாடும்பொழுது  அவளை அறியாமலையே அவளுள் உள்ள சோகம் வெளிவந்துவிடும். பின்பு அந்தப் பாடலை முதலில் இருந்துப் பார்த்தாள் அவளின் சோகம் முதல் வரியில் இருந்து தென்படுகின்றது என்பது புரியும். இதனை ஒரு பெண் கவிஞர் (தாமரை) எழுதியது குறிப்பிடத்தக்கது.



பாடல்
எங்கிருந்து வந்தாயடா?
எனைப்பாடு படுத்த-நீ
எனைப்பாடு படுத்த

எங்கு கொண்டு சென்றாயடா
எனைத்தேடி எடுக்க-நான்
எனைத்தேடி எடுக்க

இன்பதுன்பம்
துன்பம் இன்பம் இன்பமென்று
நீ சோகம் ரெண்டும் கொடுக்க
சுகம் ரெண்டும் கொடுக்க.... ( நீ எங்கிருந்து )

வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும்
வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும்
கட்டைவிரலாய் நானும்
எழுதும் எதுவும் கவிதையாக மாறும்
விடாமலே உனை தொடர்ந்திடும் எனை

ஒரே ஒருமுறை மனதினில் நினை
ம்ம்ம்ம்ம் என்னை என்ன செய்தாயடா (எங்கிருந்து)

வாசல்வாழையோடு வார்த்தையாடலாச்சு
இனியும் பேச புதிய கதைகள் ஏது
ஒருவர் வாழும் உலகில்
மௌனம்தானே பேச்சு
மொழிகள் எதுக்கு
இருவர் இணையும் போது

விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்
கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள்
ம்ம்ம்ம் .. என்னை என்ன செய்தாயடா? (எங்கிருந்து)

திரைப்படம்  :  5 ஸ்டார்
பாடியவர்  :  சந்தனா பாலா
இசை  :  அனுராதா ஸ்ரீராம் - பரசுராம்
பாடல் இயற்றியவர்  :  கவிஞர் தாமரை
காணோளி பாடலின் சுட்டி > http://www.youtube.com/watch?v=BvrVTfMMbBc

[இந்தப் படம் வந்தப் பிறகு, பின்னனிப் பாடகி அனுராதா ஸ்ரீராமிடம் (மற்றும் அவரது கணவர் பரசுராம்) இருந்து இன்னும் சில படங்களை எதிர்ப்பார்த்தேன். ஏனோ பிறகு அவர்களிடம் இருந்து திரைப்படங்களுக்கு இசை இல்லை] 

December 13, 2013

Daily Project திருக்குறள் (Thirukkural)

On 11-December-2013 Wednesday, I and my friend /ex-colleague Nagamani have collaborated to work on a daily project called Daily Project திருக்குறள் (Thirukkural). Thirukkural is one the most important works in Tamil Literature. It is believed to be written around 2nd century BC and 5th century BC. More information available in Wikipedia.

There are numerous websites, blogs, tweeples available for Thirukkural. Most of them have ripped, though giving due credits to authors, from popular explanatory books such as the ones authored by Mu.Varadharajan, Solomn Paappaiyaa, Parimelazhagar etc. 

Objective
1) Learn and absorb Thirukkural on a daily basis
2) Byheart the Kural
- Not to come up with a new / detailed explanation as there are numerous books already.

Target Dates
1) Soft Target - 31st August 2017 (considering it takes 3 years and 235 days)
2) Hard Target - 30th November 2014 (Considering 30 days per year for festivals, sickness, exigencies)

Rules
1) Only One Kural (குறள்) per day

2) All three sections - Righteousness, Wealth, Love (பால் - 1.அறம், 2.பொருள், 3.காமம்) in a cyclic order. But not necessarily in same order 1-2-3. It can be permutations such as 1-2-3, 3-2-1, 2-3-1 etc)

3) No author should shy from one particular aforementioned Section or stick to one particular section

4) All Chapters (அதிகாரம்) will be covered in 10 cycles. I.e In one cycle, the chapter will not be repeated. 

5) There will not be any repeat in the Kural. If willing to any additional explanation, then re-edit it and save it to latest date. However, this will not be considered as the Kural of that day.

6) In future, no more than a total of 5 authors will be allowed.

7) Kurals in Chapters can be picked in random. Chapters can be picked in random. But aforementioned rules 2,3,4,5 will apply.
[Updated: Chapters has to be in order and Kurals also need to be in order. This will save time in making decisions and also avoid repetitions]

8) Authors will follow a cyclic fashion

9) Co-author can take up the role of the author of the day ONLY when they come to know about sickness or any exigency. 

Silver Lining

I have heard about this term Silver Lining during my very bad days. Incidentally, I came across it my Marketing Class recently. Here it goes.

Mental Accounting : Who's Happier ?

Mr. A was given tickets to lotteries involving the World Series. He won $50 in one lottery and $25 in the other.
Mr. B was given a ticket to a single, larger World Series lottery. He won $75.

Survey: Who is happier A or B ?
Results: A: 56  B: 16 No difference: 15

In Western culture, give gifts in multiple boxes than in single box.
Idea: Good News in Multiple Boxes.

Mental Accounting : Who's Unhappier ?

Mr. A received a letter from the IRS saying that he made a minor error on his tax return and owed $100. He received a similar letter the same day from his state income tax authority saying he owed $50. There were no other repercussions from either mistake.

Mr. B received a letter from the IRS saying that he made a minor error on his tax return and owed $150. There were no other repercussions from his mistake.

Survey: Who is unhappier A or B ?
Results: A: 66 B: 14 No difference: 7

Bad News in Multiple Boxes -> BAD Effect.
Bad News - Integrate it.

Silver Lining Principle
Amy lost a cycle $180.
Chris lost a cycle $200.
But Chris found a bill on the road for $20. So, in net,  Chris lost $180.
When considered that $20, Who is happier ? Chris is happier. This is called SILVER LINING Principle. Because that plus $20 makes him sort of better.

Apply to business
A car is worth $20000. Bill it for $22000. But give a rebate of $2000. So total price is $20000

December 10, 2013

P!NK - Just Give Me A Reason

Thanks to my brother Manikandan. He is the one who regularly updates me with good English songs even since my college days. In March 2013, he introduced me this song 'P!NK - Just Give Me a Reason' which I have been listening for so many months. Today it is haunting me. 

Official Lyric Video (below)



Lyrics
Right from the start
You were a thief you stole my heart
And I your willing victim
I let you see the parts of me
That weren't all that pretty
And with every touch you fixed them
Now you've been talking in your sleep
Things you never say to me
Tell me that you've had enough
Of our love, our love

Just give me a reason
Just a little bit's enough
Just a second we're not broken just bent
And we can learn to love again
It's in the stars
It's been written in the scars on our hearts
We're not broken just bent
And we can learn to love again

Im sorry I don't understand where all of this is coming from
I thought that we were fine
Oh we had everything
Your head is running wild again
My dear we still have everything
And its all in your mind
Yeah but this is happening
You've been having real bad dreams
Oh oh
You used to lie so close to me
Oh oh
There's nothing more than empty sheets
Between our love, our love, oh our love, our love

Just give me a reason
Just a little bit's enough
Just a second we're not broken just bent
And we can learn to love again
It's in the stars
It's been written in the scars on our hearts
We're not broken just bent
And we can learn to love again

I never stopped
You're still written in the scars on my heart
Your not broken just bent and we can learn to love again

Oh tears ducts and rust
I'll fix it for us
We're collecting dust but our love's enough
You're holding it in
You're pouring a drink
No nothing is as bad as it seems
We'll come clean

Just give me a reason
Just a little bit's enough
Just a second we're not broken just bent
And we can learn to love again
It's in the stars
It's been written in the scars on our hearts
We're not broken just bent
And we can learn to love again

December 06, 2013

பாவேந்தர் பாரதிதாசன் - நான் ரசித்த சில பாடல்கள்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பாடல்களில் நான் ரசித்த சில பாடல்கள்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !

November 27, 2013

Today's Gandhi

Mahatma Gandhi is world renowned person for the Nonviolence movement which stood as a pillar for the Freedom Struggle for India. However, just from what I heard, like many, I too had severe misconceptions about Gandhi. It is very sad. Fortunately, I happened to read the autobiography of Gandhi - The Story of My Experiments with Truth. It was a revelation about Gandhi. I could get very close to him because his autobiography is spotlessly honest. I had earlier written about it in my blog post. From then on, I didn't give much serious thought about the misconceptions about Gandhi. My thought was, Gandhi was such an honest person; How can such a wall be raised in front of Gandhi  ? Who does that so ? Why Gandhi is painted that way ?

Incidentally, I happened to read few of the essays by Writer-Novelist Jeyamohan's on Gandhi, E.Ve.Ra (Periyar) and others. In this year's book expo, I purchased a book Indraya Gandhi (இன்றைய காந்தி - Today's Gandhi) by Jeyamohan. I am glad, I got that book. This book is very neutral. That adds credibility to it. Jeyamohan laments Gandhi wherever he was naive. 

Since there are many misconceptions about Gandhi, I thought of penning down a synopsis of the book. This book is compilation of essays by Jeyamohan on Gandhi. These essays were written in response to many questions that he got through his website (from his fans and readers). Later, these essays were compiled into a book. The book is divided into three parts (1. Personality 2. Politics 3. Vision)

Part 1 - Personality
1) Gandhi's Simplicity 
Until Gandhi came back to India , Freedom Struggle was organized only by the rich, kings and Zamindaars (aristocrats) for their benefit / selfish-motives. Congress (Party) was functioning only among the rich. Hence, independence at that time would have not meant for the poor. It would have been just transfer of powers from the British Viceroys to the Kings in India. All the kings in India were thinking to renovate their palaces after independence.  

Gandhi understood that, independence must be for the entire country. This democracy should be for all the people in the country. He chose to be among the people. In Gandhi's autobiography, Gandhi has mentioned that, one of the reflection of democracy is that a train should have only one single class. It should not have first, second and third classes. He travelled in trains in third class. [Sarojini Naidu even mocked about Gandhi travelling in third class in train.] 

Zamindaars understood that Gandhi's way will shatter their dreams and plans of ruling people and leading an aristocratic life. Until Gandhi came, all the super rich (Nehru, Sarojini) would always travel in the elite trains (Rajdhani's) and elite class that was used by the British Viceroys. If not Gandhi, the partymen of Congress (and the rich) wouldn't have travelled to places that were not connected by rail. Only Gandhi travelled to places even if it didn't had rail connectivity. 

Gandhi was wearing the simplest dress (just Khadi dress). His attire (simple loincloth and a shawl) was exactly the dress a farmer would wear in India. People perceived him to be their leader for them.  He mingled among the poor. Simplicity is the reason why Gandhi attracted more people than Gokhale and Thilak. Gandhi, in the same agriculturist minimalistic dress, met King George V. Gandhi didn't follow the protocol (for dress) that has to be followed for meeting the King. He would live as what he was. He did not wish to deceive others by dressing up like the Britons. He would wear the dress of the people whom he represented. He represented the half-naked and half-starving millions of India. In the same dress, he spoke in the round table conference in front of the King. One journalist asked him: "Don't you feel embarrassed to see the King George V in this scanty dress?" Of course he was not participating in a beauty contest remember. Gandhi said: "Why should I feel ashamed?", and (humorously) added: "The King has enough on for both of us." That's the message. Simplicity.
[27-Nov-2013]

2) Mohandas Gandhi & Mahatma
Many people blame that Gandhi was the person who introduced the practice of bowing and touching the feet. He projected himself to be a Mahatma and thought himself a Mahatma. Both are different.

Gandhi was a modern man. He absorbed the European modernism. He approached things scientifically. So, that case, would he have considered himself to be a Mahatma ? Many European who have been with Gandhi have said that Gandhi was more of an European. His thought process was adhering that of Europeans.

Gandhi came from a religion Vainavam (Vaishnavism) which had it is roots in the religion Samanam. In this religion, the highest point is simplicity and total devotion. According to the religion, the man has to win himself. This religion is based on fasting. Fasting is a method to purify. Gandhi severely strained his body through fasting. According to him, the control on mind/heart and his body will make him more strong (mentally). He won by his sacrifice. His life always included - living closer to nature, self-control, rejecting consumerism. Through these he architected the Satyagraha movement.

Gandhi thought that to win himself two things were hurdles viz 1) Lust 2) Food. He founded Sabarmati Ashram and performed various experiments on himself to overcome lust and food. In general he wanted to control and overcome desires. And he overcame. At the end of the process, he was able to architect Satyagraha. Only here, people identified Gandhi as a Mahatma. It is purely because of the underlying Indian Heritage in their psychology or mindset or inner conscience. It is said (approximately) that in 1920 the tribals of Madhya Pradesh called Gandhi as Mahatma (against the popular misconceived belief that Rabindranath Tagore was the one who first called Gandhi as Mahatma). But Gandhi didn't allow people, who called him Mahatma, near him. Gandhi severely condemned calling him as Mahatma. This title Mahatma pained him a lot. In many of his speeches he has mocked at calling him as Mahatma. He mocked at himself and laughed out loudly.

Gandhi said Ahimsa (Nonviolence) and Truth are as old as mountains in this world and to the best possible extent I am trying to implement them in my life. The entire nation followed Gandhi not because what he says are correct but because he is the correct person. Entire nation was in his feet. But, whenever people touched his feet, his heart pained.

India is a nation in which for almost 20 centuries it was ruled by kings. Almost 75% of the nation was controlled by the kings. But in just 15 years Gandhi as a single person brought all the people to democracy. It was Gandhi (Gandhi's congress) who brought most number of women to Politics. In India, no other political party brought women to politics as Gandhi did. Even in today's world (21st century), in the world of information technology and mass communications, it is not so easy to communicate to the whole nation India. But in the first half of the 20the century itself Gandhi communicated with all the people. He made himself a message. He made his life a message. A leader needs astounding courage to tell that my life itself is my message. And it needs terrific guts to tell in front of the history (for all research enthusiasts) that in his private life there is no secret. Even his SIMPLE appearance in SIMPLE attire was a message. That's the message he gave to people who came to meet him.

Gandhi neither accepted not entertained others deference for him (பெரியாரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே). Gandhi was of opinion that if he can do one thing then all others also can do it. He visioned 1)  a world without any war 2) a world that doesn't loot the natural resources 3) a humanity without any differences in the world. For all these, he thought two things are needed 1) Control of desires 2) Love for fellow human being. But these were big challenges for normal men.

When we see Gandhi as Mahatma we jump into fixed notions and already have conclusions about him. And that is where we take him far away from him, thereby, thinking we cannot follow him. Gandhi followed Karmayoga (an Indian Heritage) matured to legendary fruit (கனிந்த ஞானி).  பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க வாழ்க. (India was a desolated nation. For which, to give life, came a person Gandhi - a Mahatma. Let your glory Hail)
[28-Nov-2013]

To be continued .....

3) Gandhi a Baniya
4) Gandhi and Brahmacharya
5) Gandhi's Children

Part 2- Politics
1) Dialogue with The Hatred 
2) Gandhi's way
3) Gandhi's mistakes
4) Hitler and Gandhi
5) Che Guevara and Gandhi
6) Gandhi's Betrayal
7) Gandhi and Caste
8) Gandhi and Hindi
9) Gandhi and Dalit Politics
10) Gandhi and Backward people
11) Vaikom Struggle 

 Part 3 - Vision
1) Gandhi and Technology
2) Gandhi's Medicine
3) Gandhi's Nation
4) Gandhi's Village Autonomy (Grama Swaraj)










November 18, 2013

Mahatma Gandhi's Dream

Read a nice poem on Mahatma Gandhi's poem in Young World section of The Hindu newspaper.

To the great country
We pay our homage
Let us all get together
And hear Bapu’s message

Hindu, Muslim, Sikh and Christian
Remember you all are Indians
Love, peace and equality
Was his message to humanity
Hear no evil, see no evil
Speak nothing untrue
‘Sathyameva Jayathe’ (Only Truth Triumphs)
Should be your motto too
No one’s high nor anyone low
Let all barriers of caste be thrown
Let us treat all mean as equals
Who are God’s creations
Like me and you
Little children though we are
Let us pledge to the country
With Satya and Ahimsa as our theme [Truth and Non-Violence]
That we will fulfil Bapu’s dream.
             - Ilakkiya
- The writer is a student of VI E, Montfort School, Tiruchi
Link: click here

November 10, 2013

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு

முதல் முறையாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பற்றிய எனது கருத்தை சொல்லப்போனால் எனது ஆதங்கத்தினால் முதல் முறையாக எதிர்வினையை எழுதுகிறேன். 


ஸ்டார் விஜய் தொலைக்காட்சிகளிலேயே நான் மதித்து விரும்பி முக்கியமாக நடுவர்கள் நடுநிலையானவர்கள் என்ற முழுநம்பிக்கையுடன் பார்த்த ஒரு நிகழ்ச்சி தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு. இந்த நிகழ்ச்சி கடந்த 2009ஆம் ஆண்டு முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.  அப்போது நான் தில்லியில் இருந்தேன். காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும். எனக்கு வயலின் வகுப்பு 10 மணிக்கு இருக்கும். ஆதலால் 9:50 வரை பார்ப்பேன். என்னை மிகவும் கட்டிப்போட்டு வைத்தது. நான் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அப்போது தொடங்க ஒரு உந்துதலாக இந்நிகழ்ச்சி . அன்று முதல் திரு. நெல்லை கண்ணன் ஐயா மீது மிகந்த மதிப்பு இருந்து வருகிறது.  முதல் தொகுப்பில் விஜயன் எல்லோரையும் மிரட்டினார். அவரது கருத்துக்கள் மிக சுயமாக ஆழ்ந்த அவதானிப்புகளின் பிரதிபலிப்பாக இருந்தது. பல நேரங்களில் நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் கண்கலங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பல நல்ல பேச்சாளர்கள் எழுத்தாளர்களை கண்டுகொண்டேன். இந்த ஆண்டு நிகழ்ச்சியை கண்டபின் திரு நெல்லை கண்ணன் ஐயா அவர்களின் பேச்சுக்கள் பலவற்றை யூட்யூபில் பார்த்தேன். 2009 பிறகே இவரது பேச்சுக்களின் ஒளிப்பதிவுகள் யூட்யூபில் ஏற்றம் அதிகம் பெற்றன என்றென்பது குறிப்பிடதக்கது. 

முதல் தொகுப்பை தொடர்ந்து தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு - சுட்டிகள் வந்தது. அலுவுலக பணி இட மாற்றம் மற்றும் படிப்பு காரணமாக அதை நான் முழுவதுமாக காணவில்லை. பார்த்த சில நாட்களில் குழந்தைகள் நன்றாய் பேசுவது மகிழ்ச்சியளித்தது. 

இந்த ஆண்டு 2013இல் ஜூலை மாதம் முதல் மறுபடியும் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் இரண்டாம் தொகுப்பு ஒளிப்பரப்பானது. துவக்கம் முதலே இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றார்ப்போல் பல நல்ல பேச்சாளர்கள் உரையாற்றினார்கள். திரு நெல்லை கண்ணன் அவர்கள் தலைமை நடுவராக இவர்களை நல்பாதையில் வழிநடத்தி  சென்றார். நிகழ்ச்சியின் துவக்க காலம் நல்துவக்கமாக அமைந்தது. இராமநாதன், கல்யாணசுந்தரம், ராஜ் மோகன், சரவண சித்தார்த், ஷண்முக சுந்தரம், மஞ்சரி, பௌசியா பானு, முனீஸ்  பவித்ரா, இளமுருகன், காசிநாதன்  ஆகியோர் நல்ல ஒரு தொகுப்பிற்கு நம்பிக்கையை விதைத்தார்கள். முதல் மூன்று சுற்றுக்கள் சில போதிய பயிற்சி அல்லாதவர்களை களைவதாக அமைந்தது.  இதில் ஒரு உறுத்தலான ஒன்று கண்ணுக்கு தெரியாமல் பின்புலத்தில் நடந்தது. அகிலா போன்ற நல்ல பேச்சாளரும் ராம் கபிலாவும் மற்றும் சிலரும் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தாங்கலாக வரவில்லை என்று சொல்லப்பட்டது. தாங்களாகவே திடீரென்று விலகினார்கள். ஒரு வேளை அவர்கள் உச்சரிப்பு அவ்வளவு சரியில்லை இல்லை தாங்கள் இன்னும் சிறுமிகளே என்று வரவில்லையோ தெரியவில்லை.

என்னை பொறத்தவரை நிகழ்ச்சி கலைகட்டியது நான்காவது சுற்றில் திருக்குறளை பற்றி அனைவரும் ஒவ்வொரு  அதிகாரத்தில் பேசியது  தான். அதுவும் மஞ்சரியின் ஒழுக்கமுடைமை, இளமுருகனின் உழவு, ஷண்முகசுந்தரரின் புணர்ச்சிவிதும்பல், முனீஸ் பவித்ராவின் நெஞ்சொடுகிளத்தல் பேச்சுக்கள் அபாரம் அபாரம். அதுவும் காமத்துப்பாலில் உள்ள உளவியல் ரீதியான செய்திகளை அன்று தான் முதல் முதலில் உணர்ந்தேன் என்று சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். எனது எதிர்ப்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்தது. வரும் வாரங்களில் சங்க இலக்கியம், கவியரங்கம், இசையரங்கம் போன்றவற்றில் திளைப்பேன் என்று நினைத்தேன்.

ஐந்தாவது சுற்று. இங்கு தான் பயணம் திசை மாறியது.  நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் நடுவர் இருக்கையில் இல்லை. எங்கள் மனதில் சந்தேகம் வர காரணம் அவர் மிக நேர்மையானவர். இந்த நிகழ்ச்சி தமிழுக்கு செய்யக்கூடிய ஒரு தேவையான தொண்டு என்று உணர்ந்தவர். அவருக்கு இதை தவிர்க்கும் அளவிற்கு வேறு வேலை வைத்து இருப்பாரா என்றால் ? இருக்கும். ஆனால் அவர் இதன் வீச்சை அறிவார். ஆதலால் ஒரு காலமும் அவர் வராமல் இருக்க வேறு காரணம் இருக்காது என்று எண்ணுகிறேன். வந்த இரு நடுவர்களும் அருண்மொழி அவர்களும் தமிழச்சி தங்கபாண்டியனும் பேச்சாளர்களை மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்கினார்கள். பேச்சாளர்களை மெருகேற்றவே எதிர்வினைகள். ஆனால் தமிழச்சி தங்கபாண்டியன் தன் திராவிட முன்னேற்ற கழக கொள்கைகளையே முன்னிறுத்தி கொண்டு இருந்தார். அவரை ஒரு படித்த பண்பட்ட உலக அறிவு கொண்ட ஒரு பகுத்தறிவு  பீரங்கியாக தன்னை ப்ரபலபடுத்திகொள்ளவே ஈடுபட்டார் என்பது பார்க்கும் யாருக்கும் விளங்கும். எதற்கு தமிழச்சியை அமர்த்தினார்களோ ? ஸ்டார் விஜய் தொலைகாட்சிக்குதான் வெளிச்சம். நிகழ்ச்சியின் முடிவில் சுமார் 6 பேரு நீக்க  பட்டனர். பேர்  அதிர்ச்சி. இந்த நிகழ்ச்சி குட்டிச்செவுரு என்று வருத்ததுடன் கொந்தளிப்புடன் எனக்கு  உறுதியானது. திறமையான மஞ்சரி, முனீஸ் பவித்ரா, போசிய பானு நீக்கப்பட்டனர். நான்காம் பத்தியில் கடைசியில் சொன்னது எனக்கு இப்போது ஐயமாக தோன்றுகிறது. ஒரு வேளை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியே அவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாதோ ? 

ஆறாம் வாரம் திரு நெல்லை கண்ணன் ஐயாவை மறுபடியும் கண்டதில் ஒரு நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் தமிழச்சியின் பங்கேற்பு கசப்பாகவே என் மனதை உறுத்தியது. ஆனால் ஆறாவது சுற்றே அரையிறுதிச்சுற்று என்று எண்ணுகையில் ஈடுபாடு அவ்வளவுவாக இல்லை. திரு நெல்லை கண்ணன் ஐயா பேருக்கு தான் உட்கார்ந்து இருந்தார் என்று தோன்றிற்று. இந்த சுற்றில் எட்டில் நான்கு பேர் விலக்கம். அதுவும் முதலில் பேசிய நான்கு பேர். 

இந்த வாரம் இறுதிச்சுற்று. ஒரு நடுவர் அருண்மொழி அவர்கள் நேரம் குறைவாக கொடுக்கப்  பட்டதனால் நீங்கள் குறைவாக செய்திகள் சேகரித்து உள்ளீர்கள் என்று  கூறினார். இதில் இருந்து எனக்கு மிக தெளிவாக தெரிந்தது அரையிறுதிச்சுற்றும் இறுதிச்சுற்றும்  ஒரிரு நாள் இடைவேளியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்று.  அதுவும் முதலில் பேசிய இருவரும் மிகுந்த குறைந்த நேரமே பேசினார்கள். 'வியப்பில்லாமல்' அவர்கள் இருவரும் கடைசிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கபடவில்லை. கடைசியாக ராஜ்மோகன் வெற்றிப்பெற்றார். அவர் நல்ல பேச்சாளர். ஆனால் முதல் பரிசு வாங்கும் அளவிற்கு அவரது உரை ஒன்று கூட இருந்தது  இல்லை. ஷண்முக சுந்தரம், ராமநாதன், மஞ்சரி, முனிஸ் பவித்ரா, கல்யாண சுந்தரம், இளமுருகன் ஆகியோர் இவரை விட முன்பு பல நல்ல ஆழமான பேச்சாற்றியுள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் (திருக்குறள் வாரத்திற்கு பிறகு) வெளியேற்றபட்ட யாவர் முகங்களிலும் ஒரு வருத்தமோ ஏமாற்றமோ இல்லை. வருத்தபட ஒன்றும் இல்லை - நிகழ்ச்சி சீர்கெட்டுவிட்டது என்று அறிவார் அவர்.

ஆக இந்த நிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. அதுவும் ஏழே சுற்றுகளில். இதில் ஒரு கவியரங்கம், விவாதம், பட்டி மன்றம் போன்ற சுற்றுக்கள் இல்லை. இங்கு தான் நான் இவ்வளவு நேரம் தொலைக்காட்சி மேல் சந்தேக பட்ட நான் சற்று ஒரு படி உள்ளே சென்று அவதானிக்க விரும்புகிறேன். 2009 ஒன்பது போல் 9 மணிக்கு அல்லாமல் 10 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது ஒரு ஆரோக்கியமான ஒன்று. 10 மணி என்பது சற்று அதிக டி-ஆர்-பி கொண்ட நிகழ்ச்சிகளுக்கு கொடுப்பார்கள் என்று எண்ணுகிறேன். அப்படியென்றால் மக்களின் மீது  நம்பிக்கை வைத்தே  இரண்டாம் தொகுப்பை நடத்தி உள்ளனர். ஆனால் அவசர அவசரமாக ஏழே சுற்றுகளில் முடிக்க பெரும் காரணமாக நான் மக்களையே பார்க்கிறேன். கண்டிப்பாய் டி-ஆர்-பி குறைவாக இருந்து இருக்கும். இது தொலைகாட்சியின் குற்றமா ? இல்லை. மக்களின் குற்றம். இங்கே மற்ற நிகழ்ச்சிகள் போல் அழுகைகளும் ஆராவரங்களும் போலி நாடங்களும் இல்லை. திறமையும் நேர்மையும் கைகோர்க்கும் இடமாகவே இருந்தது. ஆனால் மக்களுக்கு நல்ல அறிவுள்ள பேச்சுகளை கேட்க ஆயுத்தமாக இல்லை.  அவர்களுக்கு மலிவான சராசரியான பொழுதுபோக்கான நிகழ்ச்சிகள் மட்டுமே தேவை என்ற அவல நிலை உள்ளது. அவர்கள் மொழி,  வாசிப்பு தன்மை, இலக்கியம், சொற்பொழிவு,  கலாசாரம், விவாதங்கள் போன்றவற்றில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளார்கள். வேதனை அள்ளிக்க கூடிய ஒன்று. பாரதி சொன்ன "தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதர்கள்" உள்ளவரை இது போன்ற நிகழ்ச்சிகள் பெருவாரியான வெற்றிப்பெறாது. 

தமிழ் மக்களை காப்பாற்றுக! தமிழை காப்பாற்றுக!

November 07, 2013

Palani - Darasuram Trip

I planned to make a pilgrimage trip with my family to Palani Hills on this Diwali. Gladly, my Guruswamy family (my Guru in my Sabarimala Trip for last 18 years) and my friend Gokul Nambiar family also joined us for this trip. The plan started off with a 4 seater Tata Indica, then 6 seater Toyota Innova and finally 12 seater Force Traveller. I am glad that such a trip happened for me. My plan was to visit Palani Hills and Darasuram in a single day. But, since more number of people joined, we decided to extend the plan by half day. 

Day 1
On Saturday 2-Nov afternoon at 2:30pm, we headed to Srirangam. However, my guru suggested a temple in Thiruppattur (5km from Siruganur on the NH). At Thiruppattur, we first worshiped Lord Brahmapureeshwara (there is a separate shrine for Lord Brahma). Then Sri Devi Bhoodhevi Varadharaja Perumal Temple. After a tea, we headed to Sri-Rangam Temple . After long wait in spite of lined up in paid queue, we had a very good darshan of Lord Ranganadhaswamy. We had prasadam's from the stall as well as did our dinner at the temple itself under the Annadhana scheme. After dinner we headed to Palani Hills. 

Day 2
On Sunday 3-Nov Morning, we trekked 25 minutes to reach the Lord Dhandayudapany Shrine. My mother had made arrangements to do abhishekha for the Lord Murugan deity in the morning around 8:45a.m. Around 11am we headed to Darasuram from Palani. 

After our lunch at Trichy, we travelled via the Great Anicut Dam (Kallanai)m built by the Chola King Karikala Chola around 2nd Century AD). I must say that it was excellent part of travel. On my left, it was full of farm lands ranging from banana plantation to paddy fields while on my right it was the mighty Cauvery River. It was unfolding endlessly. Those two hours was a great watch for me.

We reached Darasuram at 5 p.m and visited the Airavatheeswara Temple.  This temple was built by Rajaraja Chola II in the 12th century CE is a UNESCO World Heritage Site and one of the Great Living Cholas Temples. It had excellent, intricate sculptures. One testimony for the excellent scriptures is the fused common face for a cow and a elephant. After spending one hour at the temple, we left to Swamimalai Murugan Temple. Later we headed to Vaitheeswaran Temple. Finally, our memorable satisfactory trip came to an end.

Places Covered
Thirupattur

Sri Brahmapureeswarae Temple,
Sri Sridevi Bhoodevi Varadharaja Perumal Temple
SrirangamSri Aranganatha Swamy Temple
PalaniSri Dhanayudhapany Swamy Temple
DarasuramSri Airavatheeswarar Temple
Swami MalaiSri Skanda Murugan Temple
Vaitheeswaran KoilSri Vaitheeswaran, Sri Thaiyal Naayagi, Sri Muthukumara Swamy

Here are few pictures.


Thiruppattur - Brahmapureeswara Temple

Palani Temple - A pilgrim carrying Milk-Abishekha Tank

Trichy to Darasuram - via Great Anicut Dam (Kallanai) - 
On my left - Banana Plantation and Paddy fields


 Trichy to Darasuram - via Great Anicut Dam (Kallanai) - 
On my right- Cauvery River



Airavatheeswara Temple 


Arthanareeswarar

Gokul Nambiar's Father at Horse Rath

A group pic but my guruswamy missing






My Guruswamy family




Main Gopura of Airavatheeswara Temple



Sri Durga

Mom and Grand Mom


Elephant and Cow with a common fused face

Elephant and Cow with a common fused face



October 27, 2013

மழலை சொல் கேளாதார்

நேற்று மாலை என் நண்பரின் வீட்டிற்குச் சென்றேன். வழக்கம் போல் அனைத்து உபயகுஷலோபயியும் ஆயிற்று. நண்பரின் குழந்தை நான் சென்ற தருணம் உறங்கிக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் பிறகு துயில் சிறிது களைந்து எட்டிப்பார்த்தான். நான் அருகில் அவனை சென்று அள்ள முயன்றேன். அழ ஆரம்பித்தான். பிறகு அவன் அப்பா அவனை மார்போடு அள்ளிக்கொண்டு அவனை சமாதானம் செய்தார். துயில் நன்றாய் களைந்த உடன் யார் புதியதாக என்று கூர்ந்து கவனித்தான். நான் சிரித்தேன். கொஞ்சம் சிரித்துவிட்டு தன் முகத்தை அவன் தந்தையின் மார்பில் புதைத்துக்கொண்டான். இம்முறை, நண்பரின் குழந்தை நன்றாக வளர்ந்திருந்தான் என்று எனக்கு தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து என்னை எட்டி எட்டிப் பார்த்தான், சிரித்தான் பிறகு முகத்தை திருப்பிகொண்டான். இதை ஒரு விளையாட்டை செய்துக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து நான் வீட்டிற்கு கிளம்பினேன். அப்போது கீழேப் பேசிக் கொண்டு இருந்தோம். அவன் கையை வைத்து என்மேல் மகிழ்ச்சியாக அடித்துக் கொண்டு இருந்தான். அவன் கண்கள் என்னையே நோக்கிக்கொண்டு இருந்தன என்று எனக்கு இப்போழுது தோன்றுகிறது. நான் சிரித்தால் அவனும் சிரிக்கிறான். பல நேரங்களில் அவனே என்னை பார்த்து சிரித்துக்கொள்கிறான். எனக்கு இப்போது தோன்றுவது ஒன்று தான். அவன் என்னிடம் எதிர்பார்த்தது (எதிர்ப்பார்த்தானா என்றால் எனக்கு தெரியாது) பதிலுக்கு ஒரு சிரிப்பு. சிரிப்பு மழையில் நனைந்தபின் நான் வீட்டிற்கு செல்கையில் வழியில் சற்று வான் மழையிலும் நனைந்தேன்.

இன்று மாலை இச்சம்பவத்தை அசைப்போட்டுக்கொண்டு இருந்தேன். அம்மழலை எதர்க்காக என்னிடம் சிரித்தான் ? ஒரு வேளை அவன் என்னிடம் விளையாடிக்கொண்டு இருந்தானா ? நான் ஒரு விளையாட்டு பொம்மையா ? நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், அவன் என்மேல் வைத்தது நம்பிக்கை - நான் பதிலுக்கு சிரிப்பேன் என்று. சிரித்தேன். அவனும் சிரித்தான். 

குழலினிது யாழினிது என்பர் தன்மக்கள்
மழலை சொல் கேளாதார் 

என்ற வள்ளுவரின் வாக்கை முழுமையாக மற்றுமொரு முறை அனுபவித்தேன்.

அவனுடன் பேசும் நாட்களுக்கு நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

October 25, 2013

சில நேரங்களில் சில மனிதர்கள்

திரு.ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய மகத்தான நாவல் சில நேரங்களில் சில மனிதர்கள். இந்நாவல் சிறப்பு வாய்ந்த சாஹித்திய அகாடமியின் விருதை பெற்றது. பின்பு 1975ஆம் ஆண்டில் திருமதி.லஷ்மி மற்றும் திரு.ஸ்ரீகாந்த் ஆகியோரின் சிறப்பான நடிப்பில் நாவலின் பெயர்க் கொண்டே திரைப்படமாய் வெளிவந்தது. இவை பெரும்பாலவனர்களுக்கு தெரிந்தவையே.

 


நேற்று இப்படத்தை யூடுயுபில் பார்த்தேன்.  முதலில் நான்கு நாட்களில் பார்க்கலாம் என்று தான் இருந்தேன். முந்தாநாள் முதல் அரை மணி நேரம் பார்த்தேன். நேற்றும் இரண்டாவது அரை மணி நேரம் பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் படம் என்னை கட்டிப்போட்டுப் ஒரே வீச்சில் பார்க்கச் செய்தது. 

கண்டிப்பாய் சொல்ல வேண்டும். தரமான படம். இன்று நான் துயிலில் இருந்து எழும் வரை நேற்று இரவு உறக்கத்தில் இப்படம் என் நினைவில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. இப்பொழுதும். என்னை மிகுந்த ஒரு சலனத்தில் இருந்து தெளிவுப்படுத்திய உணர்வை இப்படம் கொடுத்தது என்று சொல்வேன். இது பீம்சிங்ப் போன்ற இயக்குனர் கையாண்ட விதம் போற்றுதலுக்குரியது. 

அனைத்து கதாபாத்திரங்களுக்கும் அற்புதமான கதாபாத்திர வடிவமைப்பு. அனைவரும் ஒப்பனை என்று சொல்லாதவகையில் உடலும் சதையுமாய் நடித்திருந்தனர். குறிப்பாக லஷ்மி கங்காவாகவும் ஸ்ரீகாந்த் ப்ரபுவாகவும் வாழ்ந்திருந்தார்கள். கங்காவின் மாமாவாக வை.ஜி.பார்த்தசாரதியும், ஸ்ரீகாந்தின் மகள் மஞ்சுவாக ஜெயகீதா மனதில் பதிகின்றனர்.



இப்படிபட்ட துணிவான கதைக்களத்தில் 1975ஆம் ஆண்டிலேயே இப்படம் வந்தது ஆச்சர்யம் தான். இன்று இப்படி ஆண் பெண் உறவையும் அதில் உள்ள உளவியலையும் முன்னிலைப் படுத்தி திரைப்படம் வெளிவருமா என்றென்பது கேள்வியளவே இருக்கின்றது.  இன்றும் இதுப் போன்ற திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிப் பெறுவதில்லை என்பது வருத்தத்துக்குரிய நிலையாகும்.
 

  

கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம். அதுவும் 17 முதல் 20 வயதிற்குள் இருப்பவர்கள் பார்க்கவேண்டிய படம். இந்த நாவலை படிக்கலாம் என்று சென்ற மாதம் வாங்கினேன். இன்னும் படிக்கவில்லை. கண்டிப்பாய் படம் தொட்ட ஆழத்தை விட இன்னும் ஆழமாய் தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

ரம் சொல்லேல்.
பொருள்: ஒருதலைப் பட்சமாகக் பேசக் கூடாது. 
Meaning: Let your argument never be biased.