Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

August 18, 2013

காதல் - பாரதி

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்.
   --- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

August 15, 2013

ஆங்கில கல்வி - பாரதியின் பார்வை

கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவிளம் காண்கிலார்;
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்;
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
சொல்லு வாரெட் டுணைப்பயன் கண்டிலார். 23

கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதைபு னைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளை மீனையும்
ஓர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்,
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும், 24

சேரன் தம்பி சிலம்மை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்ததும் தர்மம் வளர்த்ததும்,
பேரு ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழைப டாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும். 25

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
முன்னர் நாடுட திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்;
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே! 26

--- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

குறிப்பு -
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;

என்பதனை கீழ்வருமாறு படிக்கவும்
    அன்ன யாவும் அறிந்திலர்  பாரதத்து
    ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

நன்றி - http://temple.dinamalar.com/news_detail.php?id=8149 

தொன்மை மறவேல்.
Meaning: Don't forget antiquity 

August 07, 2013

இனி

இனி எனது பெஸ்புக்-இலோ அல்லது மற்ற தளங்களிலோ சினிமா, அரசியல் போன்ற பொருள் அற்ற (விவாத) மேடைகளில் நான் பங்கேற்க மாட்டேன் என்று உறுதி பூண்டு உள்ளேன்.

August 06, 2013

When you are away Nothing to tell as Life

ஏன் என்று தெரியவில்லை நேற்று காலை வண்டியில் அலுவலகம் செல்லும் பொழுது இப்பாடலை வாய்விட்டுப் பாட ஆரம்பித்தேன். ஆனால் கடந்த இரு நாட்களாக இப்பாடலை மனதுள் பாடிக்கொண்டே இருக்கிறேன். நெஞ்சின் மிக அருகில் உள்ள சில வரிகள் இதோ. 

நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை;
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை;

ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் ;
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்.

நித்தம் சொல்வேன் என்னுள் அவள் இருக்கிறாள். அவளை தவிர வேர் யாரும் இப்பாடலில் எனக்கு தெரியவில்லை.

(முழு பாடல்)
வண்ணம் கொண்ட வெண்ணிலவே ;
வானம் விட்டு வாராயோ;
விண்ணிலே பாதை இல்லை ;
உன்னை தொட ஏணி இல்லை ;

பக்கத்தில் நீயும் இல்லை ;
பார்வையில் ஈரம் இல்லை;
சொந்தத்தில் பாஷை இல்லை ;
சுவாசிக்க ஆசை இல்லை ;

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் மில்லை;
நீலத்தைப்  பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை;
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை;

வண்ணம் கொண்ட வெண்ணிலவே ;
வானம் விட்டு வாராயோ;

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன்;
நங்கை வந்து சேர வில்லை நட்சத்திரம் வாடுதடி;

கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன் ;
ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் ;
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்.


பாடல் ஆசிரியர்: வைரமுத்து.
பாடி இயற்றியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியன்
திரைப்படம்: சிகரம்
பாடலின் ஒளிப்பதிவு இணைப்பு: http://www.youtube.com/watch?v=e7fXQrIg21o

August 01, 2013

அறம் - திரு.ஜெயமோகன் (Aram by Jeyamohan)

கடந்த சில நாட்களாக திரு.ஜெயமோகன் அவர்களின் ”அறம்” என்கின்ற சிறுகதைகள் தொகுப்புப் நூலினை வாசித்து வந்தேன். நான் வாசித்த சில நூல்களில் சிறந்த நூல்களில் இது முதன்மை பெரும். இச்சிறுகதைகள் அனைத்துக்கும் மையச்சரடு என்பது இவை உண்மை மனிதர்களின் கதைகள்தான் என்பதே. அனைத்தையும் விட மேலாக இக்கதைகளில் காண்பது இன்னொருவரிடம் தொற்றிக்கொள்ளக்கூடிவை.

ஒரிரு கதைகள் தவிர் மற்றவை யாவும் எனக்கு மிக மிக பிடித்தது. அறம், சோற்றுக்கணக்கு, யானை டாக்டர், நூறு நாற்காலிகள், உலகம் யாவையும், ஓலைச்சிலுவை, பெருவலி, வணங்கான்,  மெல்லிய நூல், தாயார் பாதம் ஆகியவை கண்டிப்பாய் படிக்கபட வேண்டியவை. அதிலும் அறம், சோற்றுக்கணக்கு,  யானை டாக்டர், நூறு நாற்காலிகள், உலகம் யாவையும் ஆகிய ஐந்து சிறுகதைகளும் என்னை நிமிரச்செய்து படிக்க வைத்தவை.

இந்நூல் என்னுள் ஒரு வேற் ஒர் பரிமாணத்தை போர்த்தியுள்ளது. அதனின் தாக்கம் என்னில் இருந்த பல கேள்விகளுக்கு நன்விடையை தேடி செல்லும் பாதையை வகுத்து அதில் விளக்காய் ஒளிர்கின்றது.

’அறம்’தனை உங்களுக்கு மிகுந்த நன்மதிப்புடன் பரிந்துரை செய்கிறேன்.

இதனை நீங்கள் திரு.ஜெயமோகன் அவர்களின் வலையதளத்திலும் இலவசமாய் படிக்கலாம். http://www.jeyamohan.in/?page_id=17097(அறம் சிறுகதைகள்).

(Translation)
Last few days, I have been reading a short stories collection "Aram" [Idealism] by Jeyamohan. Among the books I have read, among the bests, this book will be in the top of the list. The main thread in all these stories is, it is based on real life stories. Most importantly, above all the traits seen in these stories can catch on us.

Except couple of stories, I liked every story very much. Among them, Aram [Idealism], Sotrukanakku [Food Accounts], Yaanai Doctor [Elephant Doctor], Nooru Naarkaaligal [100 chairs], Ulagam Yaavaiyum [Entire World], Olai siluvai [Palm Christ Cross], Peruvali [Big Pain], Vanangaan [Unbendable person], Melliya Nool [Mild book],  Thaayar Paadam [Feet of Mother] are must reads. Especially, Aram, Sotrukanakku, Yaanai Doctor, Ulagam Yaavaiyum hit me hugely. 

This book has blanketed a different perspective upon me. Its impact has paved way, as well as serving as  a lamp, towards the answers for plenty of questions I have for a long time. 

With huge regards, I highly recommend 'Aram'.

You can read all these short stories in Jeyamohan's website itself.  
http://www.jeyamohan.in/?page_id=17097

(click to view original size)


வீடு பெற நில்.
Meaning: Stand to gain Liberation
முக்திக்கான வழியை அடைய முயற்சி செய்ய வேண்டும்