Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

September 03, 2013

அவளது வாசனை - குறுந்தொகை

வெளியே மழை
உள்ளே மின்சாரமில்லை
மெழுகு வற்தியுடன் குறுந்தொகை
கண்மூடி திறந்தேன்
இப்பாடல் வந்தது
இதோ . . .

168. பாலை - தலைவன் கூற்று

மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
நறுந்தண் ணியளே நன்மா மேனி
புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்
மணத்தலுந் தணத்தலு மிலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.
-சிறைக்குடி யாந்தையார்.

விளக்கம் (சுஜாதவின் குறுந்தொகை - ஒரு எளிய அறிமுகம் புத்தகத்தில் இருந்து).

(அவளது வாசனை)
மழையில் மலரும்
பிச்சிமலர்களின்
நனைந்த அரும்புகளை
பனங்குடையில் சேகரித்து
மழை பெய்யும் விடியற்காலையில்
விரித்துவிட்டது போல
மணக்கும்
அந்தப் பெண்ணின் தோளை
அணைக்கவும் முடியவில்லை
பிரியவும் முடியவில்லை
பிரிந்தால் உயிர் வாழ்வது
அதனினும் இல்லை

Meaning: Never cheat on your wife

No comments:

Post a Comment