Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

December 31, 2013

ஆண்டு 2013

ஒவ்வொரு ஆண்டு ஒரு பாடமே. இருப்பினும் பட்டு கற்று செல்வது சிறிது. அவ்வகையில் எனக்கு முந்தைய ஆண்டுகளை விட 2013 சற்று ஆக்கபூர்வமான ஆண்டாக அமைந்ததாக கருதுகிறேன்.

ஆண்டின் துவக்கத்தில் BYUவிற்கு விண்ணப்பித்துவிட்டு தென்கொரியா சென்றேன். வேலையில் ஒவ்வாமல் தான் வேலை செய்துக்கொண்டு இருந்தேன். ஆயினும் அலுவகத்தில் நான் செய்யவேண்டியதை செய்து முடித்தேன். BYUவில் இருந்து தொலைபேசி நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. நன்கு ஆயத்தமானேன். ஆனால் நேர்காணலின் முடிவு தோல்வியாக இருந்தது. மிகுந்த மனசோகத்தில் ஆழ்ந்தேன் என்பது தான் உண்மை. கொரியா செல்லும் பொழுது சில புத்தகங்கள் எடுத்துக் கொண்டு சென்றிருந்தேன். சில சிறுகதைகள், மதரின்(Mother) ஆன்மிக புத்தகங்கள், கல்வி இயக்க புத்தகங்கள், வேதம் சம்மதமானவை, ஜித்து (Jiddu) ஆகிய புத்தகங்கள். மன சோர்ந்திருந்த காலங்களில் வழக்கம் போல் உதாரித்தனமாக இருந்துவிட்டு பிறகு அவைகளை படித்தேன். பின்பு காந்தியின் சத்திய சோதனையை படித்தேன். என் வாழ்வில் ஒரு மிக பெரிய தாக்கதை ஏற்படுத்திய முதல் புத்தகம் அதுவே. அவர் எழுத்தில் இருந்த அந்த நேர்மையே என்னை ஆட்கொண்டது.

இப்படி காலம் சென்றுக் கொண்டு இருக்கையில் ஒரு நாள் கமல்ஹாசன் பங்கேற்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் கடைசியில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அறம் என்ற புத்தகத்தை பிரகாஷ்ராஜிற்கு பரிசாக அளிப்பதை கண்டேன். அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் விதையாக மனதில் விழுந்தது. இந்தியா வந்ததும் வாங்கி படித்தேன். அதிர்ந்துபோனேன். நேர்மை, அறம் போன்ற வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை என்பது எனக்கு ஆழமாக விளங்கிற்று.

நடுவில் மணிகண்டனுக்கு Qualcomm (San Diego) வில் வேலை கிடைத்தது எனக்கும், பட்டுவிற்கும், அம்மாவிற்கும் மகிழ்ச்சியளிக்கும் வண்ணமாக அமைந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி பொழுது கழிப்பதை குறைக்க தொடங்கினேன். எழுத்தாளர் ஜெயமோகன் அவரின் வலைப்பை நாளும் படிக்க துவங்கினேன். அந்த வாசல் எனக்கு மிகப்பெரிய வாசலாக அமைந்தது. அதில் கட்டுரைகள், சிறுகதைகள், வாசகர் கடிதங்கள் படித்தது நன்றாக இருந்தது. 

எமது மேலாளர் ராஜாஜியுடன் காந்தியை பற்றி உரையாடினேன். அவருடன் உரையாடுவது மிகவும் ஆக்கபூர்வமாக அமையும். அவர் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தருவார். அவர் அப்படி எனக்கு அறிமுக படுத்தியது தான் காந்தியின் சத்திய சோதனை. இந்த 2010 ஆண்டு அதை காந்தியின் சத்திய சோதனை படிக்க வேண்டும் என்று சொன்னார். அப்படி தான் எனக்கு அதில் ஒரு உந்துதல் உருவாயிற்று. பாருங்கள் 2013இல் தான் படித்து இருக்கிறேன். 

எனக்கு வேலையிலும் அவ்வளவு நாட்டமில்லை. ஒரு கட்டத்தில் நாம் செய்யும் வேலைக்கு நாம் நேர்மையாக இருக்கவில்லை என்ற எண்ணம் உருவாக துவங்கியது (சத்திய சோதனை, அறம் ஆகியவற்றின் தாக்கம்). மேலும் நான் இந்த ஆண்டும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க துவங்கினேன். அந்த நேரம் பார்த்து அலுவகத்தில் ஒரு புதிய வேலை வந்தது. இதில் முழுதாக கவனம் செலுத்த முடியாது. விண்ணப்ப வேலைகள் பாதிக்க படும் என்று அஞ்சி வேலையை விட்டு விலக முடிவு செய்து விலகினேன். ஆனால் என் மேலாளர் ஒத்துக்கொள்ளவில்லை. மற்றும் எனக்கும் நிதி தேவை இருந்தது. ஆதலால் வேலையை தொடர்ந்தேன். விலகலை திரும்பப் பெற்றேன். 

இந்த சமையத்தில் தான் ராஜாஜி அவர்கள் எனக்கு COURSERA.ORG என்ற கல்விக்கூடத்தை அறிமுகம் செய்தார். நான் அதில் Introduction to Marketing என்ற பாடத்தை படித்து முடித்து தேர்ச்சிப் பெற்றேன் (Q1: 17/20, Q2: 19/20, Q3: 19/20, Final: 34/40). கொஞ்சம் காசுக் கொடுத்து படித்தாலும் இதுப் போன்ற செயல்கள் என் நேரத்தை ஆக்கபூர்வமாக அமைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கிறது. ஆனால் Introduction to Financial Accounting, Statistics போன்ற பாடங்களும் படிக்க வேண்டும்.

இப்படி சென்று கொண்டு இருக்கையில் 20 புத்தகம் படிக்க வேண்டும் என்று வைத்து இருந்த இலக்கை ஆகஸ்ட் மாதமே அடைந்தேன். பின்பு 30 புத்தகம் என்று இலக்கை உயர்த்தினேன். ஜெயமோகன் புத்தகங்கள், அவர் (மற்றும் அவரது வாசகர்கள்) சிபாரிசு செய்த புத்தங்களைப் படிக்க துவங்கினேன். புத்தகம் வாங்கி குவிக்க துவங்கினேன். இப்படி படித்து இந்த வருடம் 29 புத்தகங்கள் படித்து உள்ளேன். அது இல்லாமல் மூன்று நூல்கள் பாதியில் உள்ளன. ஜெ`வின் இன்றைய காந்தி  காந்தியை பற்றிய ஒரு மிகப்பெரிய கண் திறப்பாய் இருக்கிறது.

இப்போது கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து உள்ளேன். ராஜாஜி, நாகமணி, சுந்தரேசன் அம்மா, செவியர், நம்பியார் ஆகியோர் மிகுந்த உத்தாசியாக இருந்து பங்காற்றினார்கள். இந்த ஆண்டு ஒரு காணொளி நேர்காணல் கொண்டேன். முடிவிற்காக காத்து இருக்கிறேன். BYUவிற்கு மறுபடியும் விண்ணப்பித்து உள்ளேன். காத்திருக்கிறேன். நன்றாக செய்ய வேண்டும்.

விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சென்று வந்தது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. வானவன் மாதேவி வல்லபி சகோதரிகளின் சந்திப்பு எனக்கு ஒரு திருப்பு முனை. வாழ்வில் நேர்தை வீண்செலவு செய்ய கூடாது என்பதை உணர்ந்தேன். தன்நம்பிக்கை என்றால் என்ன என்று கற்று கொண்டேன். 

பாலா, நம்பியார் கல்யாணங்கள், ஒரு ரயில் பயணம், நாகமணி-ரகு-ப்ரித்வி வீட்டிற்கு வந்து இருந்தது, TATA ELXSI-CHENNAI நண்பர்களுடன் ஒரு நாள் கூடியது, வீட்டில் கொலு, TBR uncle-நம்பியார் குடும்பங்களுடன் பழனி பயணம், 15 ஆண்டுகள் பின்பு சிவா குருக்கள் அண்ணனை சந்தித்து பேசியது, சேவியரின் ஜீவித்தன், வீட்டில் சிவா அண்ணன் செய்து வைத்த ஐயப்பன் பூஜை, பாட்டி என்னோட இந்த நேர்காணலின் போது சமைத்து உதவ வந்தபோது நிறை புத்தங்கள் படித்து இன்புற்றது, சில திரைப்படங்கள், சில பாடல்கள் ஆகியவை இந்த ஆண்டின் இன்பக்கீறல்கள்.

நண்பர் நாகமணியுடன் நாளும் ஒரு திருக்குறள் படிக்க வேண்டும் என்ற கூட்டு முயற்சி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்.

மொத்தமாக இந்த ஆண்டின் ஆக்கபூர்வமாக நான் கருதுவது.
1) காந்தியின் சத்திய சோதனை படித்தது.
2) ஜெயமோகனின் புத்தகங்கள் (அறம்) மற்றும் கட்டுரைகள் படித்தது.
3) Introduction to Marketing பாடம் படித்து தேர்ச்சிப் பெற்றது.
4) புத்தக வாசிப்பின் 30 இலக்கில் 29 படித்தது.
5) குறிப்பிட தக்க தருணங்களை வலைப்பதிவு செய்து வருகிறேன். 2012 ஆண்டு காலமாக வலைப்பதிவு அவ்வளவு சீராக இல்லை.
6) Daily Thirukkural Project துவங்கியது. (ஒரு சின்ன துவக்கம் - மூன்று வாரமாக).
7) இரண்டு மாதமாக அலுவலகத்திற்கு மிதி வண்டியில் செல்கிறேன்.

2014ற்கு கொண்டு செல்ல கூடாதது
1) வீட்டில் கோவமாக பேசக் கூடாது.
2) துணுக்கு வலையங்களை படிக்கக் கூடாது. (இரண்டு வாரம் முன் கைவிடப்பட்டது).
3)  செய்தி வலையங்களை நாள் ஒன்றிற்கு 15 நிமிடம் மேல் பார்க்கவோ வாசிக்கவோ கூடாது. கண்டிப்பாக அடிக்கடி பார்க்கும் பழக்கம் அறவே கூடாது. 
4) மத்திய வேளையில் உறங்கக் கூடாது.
5) YouTube-இல் நேரத்தை விரையம் செய்யும் காணொளிகளை காணக் கூடாது.
6) வெட்டி தொலைபேசி அலைபேசி அழைப்புகள் கூடாது. 
7) மனதிற்கு ஆரோக்கியம் இல்லாத எந்த ஒரு செயலையும் செய்யவோ நினைக்காவோ கூடாது.
8) கடந்த கால நினைவுகளில் திளைத்திருக்க கூடாது.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

December 27, 2013

மீன்கள் - தெளிவத்தை ஜோசப் - சிறுகதை தொகுப்பு

சென்ற வாரம் விஷ்ணுபுரம் விருது விழாவில் பங்கேற்க செல்லும் முன் இவ்வாண்டின் விழா நாயகர் எழுத்தாளர் திரு.தெளிவத்தை ஜோசப் (இலங்கை மலையக பகுதி எழுத்தாளர். பூர்வீகம் - தமிழ்நாடு) அவர்களின் மீன்கள் சிறுகதையை மட்டும் படித்தேன். வலையங்களின் இன்னும் சில சிறுகதைகள் இருந்தன ஆனால் பின்புப் புத்தக வடிவில் வாங்கி படிக்கலாம் என்று எண்ணிப் படிக்கவில்லை. இன்று படித்தேன். 

நான் நிரம்ப சிறுகதைகள் முன்பின் படிக்காவிட்டாலும், எனது பாட்டியும் படித்து கருத்துக் கூறியதால், நானும் சற்று ஆழ்ந்து படித்தமையால் என்னால் ஒன்று சொல்ல முடியும் - மீன்கள் சிறுகதை தொகுப்பு (நற்றிணை பதிப்பகம்) படிக்க வேண்டிய ஒரு மிகசிறந்த தொகுப்பு. 

நான் சிறிது அறிந்துக்கொண்டவற்றில் சில 

(சிறுகதையின் வலையத்தல சுட்டி உள்ளது. தட்டவும்)

ஒரு மிக சிறிய வீட்டில் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளுடன் ஒரு கணவன் மனைவி வாழ்கின்றனர். கதையின் துவக்கமே ஒரு பெரிய திகைப்போடு (கதையின் முடிவுடன்) துவங்குகிறது. இப்படி பட்ட சிறிய வீட்டில் இவர்களுக்கு அந்தரங்கமே கிடையாது. அந்தரங்கம் இல்லாத் வாழ்வு ஒர் வாழ்வா ? இவர்கள் ஒரு குடிசையைக் கூட மற்றவர் அனுமதி இன்றி கட்டிகொள்ள முடியாது. இவர்களுக்கு இன்னொரு வீடு கேட்க கங்கானியை காண செல்கிறான். அங்கு என்ன நடப்பது என்பது தான் கதை. 

கதையில் வரும் வரி - "எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!" என்பதே கதையின் சாரம்சம்.

ஒரு கல்யாணம் ஆன தமிழன் தன்னுடன் வேலை புரியும் சிங்கள பெண்ணுடன் நாளடைவில் பழகி உறவு கொள்கிறான். இதனை அவனின் மனைவி மூலம் அறியும் அவனது நண்பர் ஆச்சர்யப்படுகிறார். இந்த விவகாரம் துவங்கும் முன் கேள்விப் பட்ட போது நம்பவில்லை ஏனென்றால் அலுவகத்தில் கிசுகிசுக்கள் சகஜம்.  அவன் நினைப்பது இது தான் "பிலாக்காய் என்றால் பிளந்து பார்த்துவிடலாம். மனிதனை எப்படிப் பார்ப்பது என்று". 

மனைவியை (அவள் சொந்த ஊரிக்கு அனுப்பி) ஒதுக்கி வைத்து அந்த சிங்கள பெண்னை கல்யாணம் செய்து கொள்கிறான். பெண் குழந்தை. காலம் செல்கிறது. புதிய பெண்டாடி இத்தனை ஆண்டுகளுக்குள் வியூகம் அமைக்கிறாள். மொழி, மதம், இனம், சுற்றம், சூழல் சமூகம், எனப் பல படிகள் கொண்ட வியூகம் அது. வெளித்தோற்றம் காட்டாத உள் மன விலங்குகள்.

இப்போது முதல் மனைவியின் குடும்பம் எப்படி இருக்கும் என்று எண்ணுகிறான் நண்பன். காலம் எப்படி எல்லாம் மனித மனங்களின் காயங்களை குணப்படுத்திவிடுகிறது. குணப்படுத்தி விடுகிறதா அல்லது மறைத்து வைத்துக் கொண்டு மறக்கடித்து விடுகிறதா…! அந்த பெண் குழந்தைக்கு கல்யாணம் ஆகும் நேரம் ஒரு சிக்கல். இவன் கிறுஸ்துவனாக மாறவேண்டும். இவன் எதிர்கிறான். ஆனால் அவர் சூழ்நிலைகளின் கைதியாக வெகு காலமாகிவிட்டது.

இந்த கதை திபாவளி நாளை மத்தியமாக கொண்டு மூன்று நாட்களில் நகர்கிறது. 

பஸ்ஸில் – ரயிலில் – தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக் கொள்வதற்கு முட்டி மோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை. - என்று துவங்குகிறது கதை.

பஸ்ஸில் ஒரு பிச்சைகாரனுக்கு காசுப் போடும் மக்களின் மனநிலையை படம் பிடித்து காண்பிக்கிறது இக்கதை. 

ஒரு பேருந்தில் நடக்கும் பயணமே கதை. இதில் சிங்களவர்களுக்கும் மலையக தமிழ் மக்களுக்கும் பேருந்தில் நடக்கும் பாரபட்சமே கதை. 

இது ஒரு சின்னப் பயணம். பத்துமைல் தூரம் ஓடும் பஸ் பயணம். இதே இந்த மக்களுக்கு இத்தனை சிரமமானதும், சிக்கலானதுமாக இருக்கிறதென்றால் வாழ்க்கை எனும் பெரும்பயணம்…..?

ஒரு சிங்கள டாக்டர் ஒரு தமிழரின் வீட்டில் காந்தி, நேரு, போஸ் படங்களை பார்த்து, நீங்கள் எங்கள் நாட்டு தலைவர்களின் போட்டோகளை வைக்காமல் உங்கள் பூர்விக நாட்டு தலைவர்கள் போட்டோவை வைத்து உள்ளீர். ஆனால் இங்கு குடியுரிமை கேட்கின்றீர். கடைசி தமிழன் வரை அனுப்ப வேண்டும் என்கிறார். படத்தில் உள்ளவர் யார் என்று சிங்கள டாக்டர் கேட்கிறார். தமிழனின் பதில் : 

காந்தியின் படத்தைப் பார்த்து இது யாருடைய படம் என்று கேட்பதன் மூலம் தனக்கும் எனது தலைவர்களுக்கும் பெருமைத் தேடிக் கொள்வதாக எண்ணிக்கொள்ளும் அய்யாவின் அறியாமை அவனுக்கு சிரிப்பூட்டியது.

“இது யாருன்னு அய்யாவுக்குத் தெரியலையா… அடப்பாவமே! ‘மனிதர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள் என்பதால் மற்ற நாட்டை வெறுக்கிறார்கள் என்பதல்ல பொருள்’ என்று கூறிய மகாத்மா இவர்தான்.

மற்றவர்களுடைய தலைவர்களை, மற்ற நாட்டவர்களை வெறுப்பதன் மூலம் மட்டுமே உங்கள் நாட்டை, உங்கள் தலைவர்களை, உங்கள் நாட்டவர்களை நேசிப்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளும் உங்கள் போன்றவர்களுக்கு உலகத்துக்கே ஒப்பற்றவரான ஒரு மனிதரைத் தெரிய முடியாதுதான்….”

ஒரு இரண்டு வயது குழந்தை குளியல் அரையில் தாழ்ப்போட்டுக்கொண்டு மாட்டிக் கொள்கிறாள். இருட்டில் அவள் உற்சாகம் இன்றி இருக்கிறாள். வீட்டில் உள்ள உறவினர்கள் தவிக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி இந்த நேரத்தில் குழந்தையுடன் பேசவேண்டும் என்று தெரியவில்லை. 

தாத்தா குழந்தையிடம் நான் உங்களிடம் வருகிறேன் என்று பேசியப் பின் குழந்தை மனதில் ஒரு உற்சாகம். பின்பு குழந்தையிடம் லாவகமாக பேசி குழந்தை வைத்தே கதவை திறக்கிறார் தாத்தா. 

குழந்தை வந்தவுடன் இனிமேல் குழந்தை பிரச்சனையில் மாட்டிகொள்ளாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூச்சல் இடுகிறார்கள். ஆனால் ஒரு சிக்கலில் (இருக்கும் குழந்தை) எப்படி செயல் படவேண்டும் என்ற பாடத்தை அங்கு யாரும் கற்கவில்லை.

ஒருவன் கொழும்புவில் இருந்து தன் உடம்பு சரியில்லாத (சாக கிடக்கும்) அம்மாவை காண தனியாக அவன் சொந்த ஊர்க்கு செல்கிறான். அவன் குடும்பம் வரவில்லை. 

முன்பு அவன் வந்தால் "அந்த வயதிலும் அந்தக் குளிரிலும் அம்மா சிட்டைப்போல் பறப்பதாகத் தெரியும் அவனுக்கு. உழைத்து உரமேறிய உடல் சீக்கிற்கோ தளர்வுக்கோ அது இடமளிக்காது. அவனுடைய வருகையும் அவளுக்கு ஒரு புதுத் தென்பைக் கொடுக்கிறது. உடலிலே ஒரு இளமை@ நடையிலே ஒரு துள்ளல்!"

தங்களைச் சுற்றி சுற்றியே வலம் வரும் அம்மாவின் அன்புப் பார்வை அவனைத் தடுமாறச் செய்கிறது.

அம்மாவுக்கென்று அவன் என்ன செய்திருக்கின்றான்? படித்து பாஸாகி உத்தியோகம் தேடி காதலித்துக் கல்யாணம் கட்டிக் குழந்தை பெற்று …..

என் மகன் இப்படி இப்படி இருக்கிறான் என்று கூறிக் கூறிப் பெருமை படும் நெஞ்சம் அது!

மருமகளிடம் அம்மா மூச்சு விடமாட்டார்கள். ‘ வாம்மா, இரும்மா’ என்றுகூடச் சொல்லமாட்டார்கள்: ‘வாங்க, இருங்க’ தான். மருமகள் அம்மாவுக்கு ஒரு மகாராணி மாதிரி! என் மகளை நம்பி வந்தவளாயிற்றே என்னும் நினைவு.


எனக்கு என்ன செய்தாய் என்று எதிர்ப்பார்க்கும் நெஞ்சமல்ல… இப்படி ஒருநாள் வருவதுவும் “இனி எப்பப்பா?…..” என்னும் கேள்வியுடன் விடை பெறுவதுவும்தான்; அவன் செய்வது!

என்று அம்மாவின் பாசத்தை உணர்த்துகிறார். 

ஆனால் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று ஏற்கனவே மூன்று முறை குடும்பத்துடன் வந்து பார்கிறான். சிறிய இடமென்பதால் ஒரே நாளில் ஊருக்கு திரும்பிச் செல்கிறான் ஒவ்வொரு தடவையும். இந்த தடவை தனியாக வருகிறான். இந்த நிலையில் அவர்களின் மனதை காண்பிக்கிறார். இங்கு வந்து செல்வது ஒரு நடுத்தர வர்கனான அவனுக்கு எவ்வளவு நிதி சுமையாக இருக்கிறது என்று காண்பிக்கிறார். 

திடீரென்று குஷி வந்து விட்டால் இருநூறு ரூபாய்க்கு ஐஸ்கிரிம் வாங்கி தின்பார்கள். நூறு ரூபாய்க்குக் குடைவாங்க சங்கடப்பட்டுக்கொண்டு கழுத்தில் டையுடன் மழைக்கு கையை தலையில் வைத்துக் கொண்டு றோட்டில் ஓடுவார்கள்.. அந்த வர்க்கத்தின் அச்சொட்டான பிரதிநிதிதான் இவனும்… இல்லாவிட்டால் ழும்பது ரூபாயில் பஸ்ஸில் செல்வதை விடுத்து ஐநூறு ரூபாய் செலவு செய்து காரில் போவானா?

இந்த தடவை அவனிடம் காசு அவ்வளவு இல்லை. வட்டிக்கு வாங்குவது அதிகம். அலுவகத்தில் Death Fund Scheme இல் போலிசி எடுக்க விண்ணப்பிகிறான். அவர்கள் மூன்று மாத சம்பளம் கொடுப்பார்கள் ஆனால் அம்மா இறந்தால் தான்.  அவன் என்னுகிறான் இந்த தடவை அம்மா ஏமாற்ற மாட்டார்கள்.

பாவ சங்கீர்த்தனம் (மின் அணு பதிப்பு (சுட்டி) இல்லை)
ஒரு வயதில் பெரியவர் ஒரு பெண்னை பார்த்து மனதில் எப்படி பட்ட எண்ணங்களை கொள்கிறார் என்று கதை சொல்கிறது. அந்த பெரியவரின் கடவுள் வழிபாடுகளை கூறுகிறார்.

மந்திரங்களை கீழ்வகுப்புப் பிள்ளைகள் பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிப்பதுபோல

உலகத்தின் அசுர வேகத்துடன் இணைந்தோட இறை வணக்கத்திலும் ஒரு வேகம். வெறும் உதட்டாட்டம். ஜபத்தின் கருத்து மனத்தைத் தீண்டமுடியாத ஒரு வேகம்.

எண்ணிப் பாத்தால் என்ன சுவாமி இருக்கிறது இவ்வுலக வாழ்வில் - ஒன்றுமே இல்லை.

இவர் உத்தியோகத்தில் மட்டுந்தான் பெரியவர்.

கோவிலில் மண்டியிட்டுக் கூறமட்டும்தான் ஜபம் என்றால் அந்த ஜபத்தை படிக்க வேண்டிய அவசியம் ... ?

பெண்ணின் கண்ணீருக்குச் சக்தி. கண்ணீரைவிட அந்தக் கண்களுக்கே சக்தி அதிகம்.

ஒருவாரம் செய்த பாவங்களைச் சுவாமியார் ஒருவரிடம் சொல்லிவிட வேண்டியது. அடுத்த வாரத்துக்கான பாவங்கள் அடுத்த வாரத்தில் ஒரு நாள்.

குப்பைத் தொட்டி நிறைவதும் காலிபண்ணுவதும் பிறகு நிறைவதும்போல. அதுவா பாவ சங்கீர்த்தனம் ? அவருக்குமா பாவ மன்னிப்பு கேட்கிறது ?

December 26, 2013

சில பாரதியார் பாடல்கள்


பிழைத்த தென்னந்தோப்பு

வயலிடை யினிலே செழுநீர் மடுக் கரையினிலே
அய லெவரு மில்லை தனியே ஆறுதல் கொள்ள வந்தேன்.

காற்றடித் ததிலே மரங்கள் கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவே.

சிறிய திட்டையிலே உளதோர் தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை- அதனை வாயு பொடிக்க வில்லை

வீழ்ந்தன சிலவாம்-மரங்கள், மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே-அதனை, வாயு பொறுத்து விட்டான்

தனிமை கண்டதுண்டு;-அதில்-சாரமிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில், அது தேம்பாகு மதுர மன்றோ?

இரவி நின்றது காண்-விண்ணிலே-இன்ப வொளித் திரளாய்;
பரவி யெங்கணுமே-கதிர்கள்-பாடிக் களித்தனவே.

நின்ற மரத்திடையே-சிறிதோர்-நிழலினில் இருந்தேன்,
என்றும் கவிதையிலே-நிலையாம்-இன்பம் அறிந்து கொண்டேன்.

வாழ்க பராசக்தி!-நினையே-வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பராசக்தி!-இதையென்-வாக்கு மறவாதே!

மழை

திக்குகள் எட்டும் சிதறி ‍ தக்கத்
     தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட‌
பக்க மலைகள் உடைந்து ‍ வெள்ளம்
     பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட‌
தக்கத் ததிங்கிட தித்தோம் ‍ அண்டம்
     சாயுது சாயுது சாயுது ‍ பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று ‍ தக்கத்
     தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட‌

வெட்டி யடிக்குது மின்னல் ‍ கடல்
     வீரத் திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் ‍ கூ
     கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா ‍ என்று
     தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய ‍ மழை
     எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!

அண்டம் குலுங்குது தம்பி!  தலை
     ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்  திசை
     வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;  என்ன‌
     தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்  இந்தக்
     காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்.

December 25, 2013

என் வாழ்வில் ஒரு முக்கிய சந்திப்பு

சென்ற வாரம் நான் கோவைக்கு விஷ்ணுபுரம் விருது விழாவிற்காக சென்று இருந்தேன். அது ஒரு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. அதைப் பற்றி எனது முந்தய பதிவில் எழுதி இருந்தேன். விழாவை பற்றி ஆழமாக அன்பர் சுனில்கிருஷ்ணன் எழுதி இருந்தார்.

ஆனால் நான் முக்கியமான ஒன்றை எழுதவில்லை. அது ஒரு மிகவும் அரிதான சம்பவம். ஞாயிறு அன்று காலை வானவன் மாதேவி வல்லபி சகோதிரிகளை முதல் முதலாக சந்திக்க நேரிட்டது. அவர்களை முதலில் பார்த்தப் போது எனக்கு அவர்களின் தெவிட்டாத புன்னகை தான் என் கண்ணுக்கு தெரிந்தது. பின்பு அவர்களின் உற்சாகமான குரல். அவர்களை விட்டு என் மனமும் பார்வையும் சில நிமிடங்களுக்கு நகரவில்லை. அவர்கள் இந்திரா பார்த்தசாரதி மற்றும் தெளிவத்தை ஜோசப் அவர்களிடம் அவர்களின் வாசிப்பைப் பகிர்ந்துகொண்டு நுட்பமான கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தார்கள். புதியதாய் இருப்பதால் அவர்களிடம் பேச எனக்கு சற்று தயக்கம். பேசவும் இல்லை. ஞாயிறு மதியம் 3:30 மணிக்கு பிறகு கலந்துரையாடல்கள் எதுவும் நடக்கவில்லை. அப்போது நான் சற்று தனிமைப் பட்டு முன் இருந்த இருக்கையில் தலை வைத்து சிறிது நேரம் அரைத் தூக்கம் கொண்டேன். 

சிறிது நேரம் கழித்து வல்லபி என்னை பார்த்து சிரித்ததாய் தோன்றியது. பதிலுக்கு நானும் சிரித்தேன். என்னையா பாத்தீங்கனு கேட்டாங்க. எனக்கு என்ன சொல்வது என்று தோனவில்லை. அவர்கள் முதல் தடவையா என்று கேட்டார்கள். ஆம் என்றேன். அதான் தனியா இருக்கீங்க. உங்க பேர் ? ராஜேஷ் என்றேன். உங்க பேரு ? வல்லபி. எங்க இருந்து வரீங்க ? பாண்டிச்சேரி. சிவாவ தெரியுமா ? இல்ல இங்க தான் அறிமுகம் என்று சொன்னேன். பிறகு அவர்களிடம் பேசவில்லை. ஆனால் ஒன்று மட்டும் கண்டேன். அவர்களிடம் எல்லோரும் சென்று பேசினார்கள். எனக்கு பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்ன பேசுவது. நான் பேசி அவர்களின் மனதில் ஒரு வருத்தம் வரப்போகிறது என்று எண்ணி பேசவில்லை.

அவர்கள் Muscular Dystrophy எனும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் எப்படிப் பேசுவது என்பது எனக்கு சற்றும் தெரியவில்லை. ஒருவரின் மனம் எள்ளவும் நோகும் படி நடக்க கூடாது என்பது எண்ணம். ஒருவரிடம் பச்சாபதாபம் காண்பிப்பது ஒருவரின் தன்நம்பிக்கையை அவமானபடுத்துவதாகும். அவர்கள் என்னில் மிகுந்த ஒரு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர். 

நான் பொதுவாக என்னுள் உள்ள சோகங்களை, கவலைகளை வெளியே காண்பித்துக் கொள்ளக் கூடாது என்பதில் மிகுந்த உறுதி உள்ளவன். சுய பச்சாபதாபம் தேட கூடாது என்பது என் கொள்கை (அதற்கு என் வாழ்வில் நான் சந்தித்த சில மனிதர்கள் தான் காரணம்). ஆயினும் ஒரு சில (4-5) மிக நெருங்கிய நண்பர்களிடம் கூட "உனக்கு என்ன தெரியும் எனக்குப் பின்னாடி எவ்வளவு பர்ச்சனைகள் இருக்குனு" கொட்டி தீர்த்து இருக்கிறேன். ஆனால் மனதளவில் பல நாட்கள் சோர்வு அடைந்து இருக்கிறேன். அந்நாட்களில் நேரத்தை விரையம் செய்து இருக்கிறேன். எனது சக்தியை (energy) ஒன்றுக்கும் உதவாத செயல்களில் கொட்டி இருக்கிறேன். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனைகள் ? நான் ஒரு தவறும் செய்தது இல்லையே. யாருக்கும் கெடுதல் நினைத்து இல்லையே. என் வாழ்வின் ஒரு சில திருப்பங்களை ஏன் ஒரு சிலரது திருப்பங்கள் தீர்மானித்தது என்று எண்ணிய நாட்கள் பல. ப்ரகாசமாக (well settled) இருந்து இருக்க கூடிய இன்றைய நாட்கள் ஏன் அப்படி இல்லை. பணம் (அதற்கு உவமையாக வரும் அனைத்தும்) மகிழ்ச்சியின் அளவுகோள் அல்ல என்பதை நான் வேகு நாட்கள் முன்பே நன்கு உணர்ந்தவன். கையில் நல்ல வேலை, பணம்  இருந்தும் ஒரு மனதில் ஒரு நிறைவு இல்லையே. 

நம்மை வழி நடத்த ஒருவர் இல்லையே. குறைந்தது திசை நோக்கி கைக்காட்ட ஆளில்லையே என்று என்னுவேன். அத்தனை அறிவிருந்தும் (அறிவு ஜீவி அல்ல நான்) நாம் எந்த ஒரு முயற்சியும் மேற்க்கொள்ள வில்லையே. இவ்வருத்தங்களுக்கு காரணம் தேடிய நாட்கள் பல. அதற்கு காரணமானவர்களை குற்றம் சாட்டி இருக்கிறேன். காரணங்கள் நேர்மையானலும் அதை தேட நேரம் விரையம் செய்து இருக்கிறேன். தவறு. மிக தவறு. சில நேரம் எனக்கு ஒரு நல்ல தளம் தனை அமைத்துக் கொடுத்த எனது அம்மா, பாட்டி, ஆசான்கள், மேலாளார்கள், நல்வழி நடத்திய நண்பர்கள் இருந்தும் நாம் ஏன் அதனை முழுக்க பயன்ப்படுத்தி நெறியாக செயல்படவில்லை என்று யோச்சித்து இருக்கிறேன். ஒரு சில கேள்விகளிலும் ஒரு சில வாதங்களால் நேர்ந்த வருத்தங்களை என் கவனத்தை மங்க செய்ய ஏன் விட்டேன் என்று கேட்டுக்கொண்டு இருந்தேன். மாறாக நான் எனது பாதையில் இன்னும் கவனுத்துடன் உன்னிப்பாக சென்று இருக்க வேண்டும். என்னை இக்கவலைகள் சூழ விட்டிருக்க கூடாது. விவேகானந்தர் சொன்னதுப் போல் நரம்புகளை ஸ்டீல் (steel) ஆக கொண்டு செயல் பட்டு இருக்க வேண்டும். எப்போதும் ஓர் சோர்வான மனதுடன் உத்வேகம் இல்லாத மனதுடன் தான் இருக்கிறேன். முன்பை விட நான் எனது பயணத்தில் நேரே சென்றாலும் ஒரு பாதுகாப்பு இல்லாதது போன்ற எண்ணத்துடனே செல்கிறேன். வாழ்வை ஒரு பயத்துடனே எதிர்க்கொள்கிறேன். 

ஆனால் இன்று (கண்டிப்பாய் படியுங்கள்) எஸ்.ராமகிருஷ்ணனின் மகத்தான சந்திப்பு  (சுட்டியை தட்டவும்) மற்றும் http://www.jeyamohan.in/?p=37457 தனை பற்றி படித்தவுடன் தான் நான் உலகில் எவ்வளவு மகத்தான இரு மனிதர்களை சந்தித்து இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அவர்களிடம் பேசி இருக்கவேண்டும் என்று இப்போது ஆசைப்படுகிறேன். அவர்களை கண்டது ஒரு விதத்தில் எனக்கு மிகுந்த வேதனை கொடுத்தது. அவர்களை நினைத்து பச்சோதாபம் படவில்லை. அப்படி செய்தால் என்னை விட குறுகிய உள்ளம் கொண்டவன் வேறில்லை. ஆனால் அவர்களை பார்த்ததே மகத்தான பாக்கியமாக கருதுகிறேன். வாழ்வில் இதுப்போன்ற தருணங்கள் எல்லோருக்கும் அமைவதில்லை. எனக்கு அமைந்துள்ளது. என்னை நானே சுய விமர்சனமும் சுயபரிசீலனையும் செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டேன். என் மேல் நானே சுய பட்சாபதாபம் கொண்டு தேங்கி இருக்க கூடாது என்று உணர்ந்தேன். அப்படி பட்சாபதாபம் பட ஒன்றும் இல்லை. வாழ்வில் இனிமேல் எந்த ஒரு நொடியும் பொருளற்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று சபதம் பூண்டு உள்ளேன். வாழ்வில் கடந்ததை நிணைத்து சோர்வடைய கூடாது அதற்கு நேரம் செல்விடவும் கூடாது. ஒரு விதத்தில் இது சுயநலமே. ஆனால் வாழ்வில் மேலே நோக்கி ஆக்கபூர்வமாக பாசிடிவாக (positive) வாழ எனக்கு இந்த சந்திப்பு தேவைப்பட்டுள்ளது. இதுப்போல் வாழ்வில் பலதடவை எழுச்சிப் பெற்றுள்ளேன். ஆனால் நான் பின்னோக்கி சென்றது இல்லை. அதன் பிறகு சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன். இந்த தடவையும் அப்படியே அமையும்.

தியானமும் - ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணம்

சமீபத்தில் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் வலையத்தில் ‘ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்’ என்ற ஒரு கட்டுரையை படித்தேன். அதில் ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணத்தில் உள்ள தியானம் சம்மந்தமான ஒர் ஆழமான தத்துவ குறியிடு உள்ளதை அவர் சுட்டிக்காட்டியதை படித்தேன். அதனை நகலெடுத்து இங்கு எழுதுகிறேன். 


ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணம்
அந்த அசுரனின் ஒவ்வொரு துளி குருதியும் ஒரு தனி ரத்த பீஜாசுரனாக முளைக்கும். அவனிடம் அம்பிகை போர்புரிய புகுந்தபோது அவள் ஆயுதத்தால் அவன் தாக்கப்பட்டபோதெல்லாம் பலவாக வளர்ந்தான். ஆகவே அம்பிகை இரண்டாக பிரிந்தாள். ஒரு அம்பிகை ரத்த தாகம் மிக்க ஒரு பூதமாக ஆனாள். அவள் இன்னொரு தெய்வீக அம்பிகை விட்ட அம்புகளால் ரத்த பீஜாசுரன் கொட்டிய குருதியை தன்  நாவால் நக்கிக் குடித்தாள். அசுரன் அழிந்தான்.

நம் தாய்தெய்வ உருவகத்தில் இருந்து அம்பிகை என்ற பெருந்தெய்வம் உருவாகி வந்தது அதன் வரலாற்றுப்பின்னணி. ஆனால் இக்கதை ஆழமான ஒரு தத்துவக் குறியீடு. தியான மரபில் மிக முக்கியமானது. அடிப்படை இச்சைகளுடன் நேருக்குநேராக நின்று போர் புரிய முடியாது என்று சொல்கிறது இது. போர்புரியும்தோறும் அது பெருகும். ஆகவே நம் போதமே இரண்டாக பிரியவேண்டியிருக்கிறது, அம்பிகையாகவும் பூதமாகவும். தியானம் பழகியவார்களுக்கு மேலும் புரியும்.

இப்படித்தான் நாம் புராணங்களைப் பார்க்க வேண்டும். இப்படித்தான் புராணங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் நமக்கு பௌராணிக மரபு அழிந்தது. புராணத்தை தத்துவத்துடன் இணைத்து எளிமையாகச் சொல்லிக்கொடுக்கும் பெரும் புராணிக சொற்பொழிவாளர்கள் இல்லாமல் ஆனார்கள்.

விளைவாக புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது. இன்று எந்தக்கோயிலில் சென்றாலும் அங்குள்ள அர்ச்சகர் அவருக்கு தோன்றிய ஓர் அற்புதக் கதையை சொல்வார். பல கதைகள் மக்குத்தனமாகவே இருக்கும்.

மூலம் : http://www.jeyamohan.in/?p=3720  [சுட்டியை தட்டுக]

December 23, 2013

விஷ்ணுபுரம் விருது விழா 2013 - ஜெ மற்றும் நண்பர்களுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களே,

கடந்த வார இறுதி எமக்கு மிகுந்த ஒரு மகிழ்ச்சியையும் ஒரு புது உலகையும் கொடுத்தற்கு திரு.ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு மிக பெரிய காரணம். ஆனால் எல்லோருடனும் சொல்லிக்கொண்டு செல்ல முடியவில்லை. அதற்கு என்னை மன்னிக்கவும். தெளிவத்தை அவர்களின் ஏற்புரை முடிந்தவுடன் நேரம் ஆனதால் பெங்களுருக்கு பஸ் எடுக்க கிளம்பிவிட்டேன்.

ஜெ அவர்களின் வலைதளத்தை கடந்த சில மாதங்களாக பின்பற்றி வருகிறேன். விழா அறிவிக்கபட்ட உடன் கட்டாயம் செல்லவேண்டும் ஒரு எண்ணம் இருந்தது. வாசகர்கூட்டத்திற்கு வருவதா வேண்டாமா என்ற தயக்கம் இருந்துக்கொண்டே இருந்தது. புதன்க்கிழமை அன்று சேலம் ப்ரசாதிற்கு டெலிபோன் செய்தபிறகு அந்த அச்சம் உடைந்தது. 

நான் சனிக்கிழமை மாலை சீனு வழிகாட்டுதலுடன் s.v.n கல்யாண மண்டம் சேர்ந்தேன். பிறகு, திரு ஜெ மற்றும் இந்திரா பார்த்தசாரதி ஆகியோருடன் அனைவரும் கலந்துரையாடிக்கொண்டு இருப்பதில் பங்கேற்றது எனக்கு ஒரு புது அனுபவம். இதுப்போல் அனைவரும் கேட்ட ஆழமான கேள்விகளும் அவர்களின் நுண்வாசிப்புதனை எனக்கு காண்பித்தது. உண்மையில் நான் அவ்வளவு உன்னிப்பாக வாசித்தது இல்லை. ஆனால் அப்படிபட்ட நுண்வாசிப்பு மிக முக்கியம் இல்லையேல் மூளைக்கு வெறும் ஒரு பயிற்சியாக (intellectual exercise) வாசிப்பு அமையும் என்றென்பதை மறுபடியும் உணர்ந்தேன். 

இவ்விரு நாட்களின் உச்சமாக நான் பார்ப்பது எல்லோருடனுமான கலந்துரையாடல்கள் தான். ஜெ, இந்திரா பார்த்தசாரதி, தெளிவத்தை ஜோசப், சுரேஷ் இந்த்ரஜித், வேணுகோபால், யுவன், நாஞ்சில் ஆகியோரின் கலந்துரையாடல்களை கவனித்தது ஒரு புதிய அனுபவத்தைத் தாண்டி மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்வேன். இவ்வனுபவம் எமது வாசிப்பு ஆர்வத்தை அதிகப் படுத்தியது என்றே சொல்லவேண்டும். ஜெ வை தவிர மற்றவர்களின் எழுத்துக்களை வாசிக்கவேண்டும் (இதுவரை வாசித்தது இல்லை) என்ற ஒரு உந்துதலை தந்த ஒரு வாசலாக இந்த வாசகர்க் கூட்டத்தை நான் பார்க்கிறேன்.

​​நான் முக்கியமாக சொல்ல நினைப்பது அனைவரும் ஒருவருடன் ஒருவர் அன்புசெலுத்தியதை பற்றித் தான். கூச்சம் காரணமாக நான் பொதுவாக ஒரு புதிய இடத்தில் முதற் சென்று அறிமுகப் படுத்திக்கொண்டு பேசுபவன் அல்ல. ஆனால் என்னிடம் பலர் தாமாக முன் வந்து அறிமுகம் செய்துக் கொண்டு என்னுடன் உரையாடி நம்முள் இருந்த பனியை உடைத்து உங்களின் உரையாடல்களில் என்னை சேர்த்துக்கொண்டது என்னை உங்களில் ஒருவன் போல் எண்ணச் செய்தது. அதேபோல் அனைவரும் ஒருவருகொருவர் உணவு பரிமாறிக் கொண்டு, இரவு தரையில் ஜமுக்காளம் விரித்து படுத்துக்கொண்டு, காலையில் டீ குடித்துக்கொண்டு வயது வித்யாசமின்றி பள்ளிக்கூட நண்பர்கள் போல் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தது நான் சற்றும் எதிர்பாராத ஒரு இன்ப அனுபவமாக இருந்தது.  விழாவில் 84 வயதான இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஒரு இரண்டு நாள் நான் என் வயசையே மறந்துவிட்டேன் என்று கூறும் போது அதற்கு காரணம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அன்பர்கள் என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது என்றென்பது அங்கு இருந்தவனாக என்னுடைய எண்ணம்.

கலந்துரையாடல்களிளும் விழாவிலும் தெளிவத்தை அவர்களின் பேச்சு எனக்கு இலங்கை தமிழ் மக்களுக்குள்ளேயே உள்ள மற்றுமொரு மலையக தேசத்தை அறிமுகம் செய்தது. அது வருத்ததிற்க்குரிய அறிமுகமாகும். ஜெவின் வலையத்தில் உள்ள தமிழின் சிறந்த நாவல்கள் வரிசையில் இலங்கை எழுத்தாளர்கள் பற்றி அதிகம் அறிமுகம் இல்லை என்று கூறியிருப்பார். ஏன் நமக்கு அறிமுகம் இல்லை என்று நான் அவ்வளவு நினைத்தது இல்லை. போர் சூழல் காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு சென்றுவிடுவேன். அதற்கு காரணம் அரசியல் என்பது கண்டிக்கத்தக்க மிகப் பெரிய துயரமாகும். தெளிவத்தை ஜோசப் அவர்களின் எழுத்து இலங்கை தமிழ் எழுத்துக்களுக்கு ஒரு நல்ல சாளரமாக எனக்கு அமைந்துள்ளதாக கருதுகிறேன். அதற்கு ஜெவிற்கும் வி.இ.வட்டதிற்கு நன்றி கூறுகிறேன். வரும் காலங்களில் நிரம்ப இலங்கை எழுத்துக்கள் இந்தியாவிற்கு வரும் என்று நம்புகிறேன். அதற்கும் வாசலாக வி.இ.வட்டம் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

மொத்ததில், இந்த இரண்டு நாட்கள் எனக்கு மிகுந்த ஒரு உத்வேகத்தையும் மன நிறைவையும் அளித்தது. இதைப்போன்று அடுத்து எங்குக் கூடினாலும் கலந்துக்கொள்ள ஆவலாய் உள்ளேன். இத்தனை பெரிய விழாவையும், அற்புதமான கலந்துரையாடல்களையும் நான்காவது முறையாக சாத்தியப் படுத்திய ஜெ மற்றும் வி.இ.வட்டதிற்கு நன்றிப் பாராட்டுகிறேன். 

பேரன்புடன்
ராஜேஷ்.
http://rajeshbalaa.blogspot.in/
FandFstores.com
எண்ணித் துணிக கருமம்

December 18, 2013

எங்கிருந்து வந்தாயடா?

இன்று காலை ஏனோ மிதிவண்டியில் அலுவலும் வருகையில் எங்கிருந்தோ இப்பாடல் என் உதடுகளில் வந்தது. பல மாதங்களுக்கு பின் ஒரு திரைப்பாடல் தனை பதிவு செய்கிறேன்.

இந்தப் பாடல் என்னில் எப்போதும் ஒலிக்கும் ஒரு பாடல். நான் கல்லூரியில் படிக்குமோது வந்த திரைப்படம் 5-ஸ்டார். இந்தப் படத்தில் இன்னும் இரண்டுப்பாடல்கள் (ரயிலே ரயிலே, திரு திருடா திரு திருடா) எனக்கு பிடிக்கும். இப்பாடல் அந்நாட்களிலேயே எனக்கு பிடிக்கும். இப்பொழுதும்.

இந்த பாடல் எப்பொழுதும் வரும் (ஆண்கள் பிரிவால் வாடும்) பாடகளைவிட சற்று வித்தயாசமானது. ஹிந்துஸ்தானி இசைச் சாயல் இருக்கும். ஒரு பெண் ஏங்குவதுப் போன்ற பாடல்கள் அக்காலத்தில் (இக்காலத்திலும்) குறைவே. ஆதலாலே இது இன்னும் சிறப்பு பெரும். 

படத்தில் தலைமகனுக்கும் தலைமகளுக்கும் நடுவில் சொல்லிக்கொள்ளும் படியான நேரடி ஊடல் இல்லை. ஆனால் தலைமகன் தலைமகளை விட்டுப் பிரிந்துச் சென்றமையால் தலைமகள் பிரிவால் வாடுகிறாள். அப்போது ஒரு கல்யாண நிகழ்ச்சியில் தலைமகள் பாடும் பாடல். முதலில் இது ஒரு கல்யாணப் பெண் பாடுவது போல் இருக்கும். ஆனால் கடைசியில் விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்  என்று பாடும்பொழுது  அவளை அறியாமலையே அவளுள் உள்ள சோகம் வெளிவந்துவிடும். பின்பு அந்தப் பாடலை முதலில் இருந்துப் பார்த்தாள் அவளின் சோகம் முதல் வரியில் இருந்து தென்படுகின்றது என்பது புரியும். இதனை ஒரு பெண் கவிஞர் (தாமரை) எழுதியது குறிப்பிடத்தக்கது.



பாடல்
எங்கிருந்து வந்தாயடா?
எனைப்பாடு படுத்த-நீ
எனைப்பாடு படுத்த

எங்கு கொண்டு சென்றாயடா
எனைத்தேடி எடுக்க-நான்
எனைத்தேடி எடுக்க

இன்பதுன்பம்
துன்பம் இன்பம் இன்பமென்று
நீ சோகம் ரெண்டும் கொடுக்க
சுகம் ரெண்டும் கொடுக்க.... ( நீ எங்கிருந்து )

வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும்
வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும்
கட்டைவிரலாய் நானும்
எழுதும் எதுவும் கவிதையாக மாறும்
விடாமலே உனை தொடர்ந்திடும் எனை

ஒரே ஒருமுறை மனதினில் நினை
ம்ம்ம்ம்ம் என்னை என்ன செய்தாயடா (எங்கிருந்து)

வாசல்வாழையோடு வார்த்தையாடலாச்சு
இனியும் பேச புதிய கதைகள் ஏது
ஒருவர் வாழும் உலகில்
மௌனம்தானே பேச்சு
மொழிகள் எதுக்கு
இருவர் இணையும் போது

விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்
கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள்
ம்ம்ம்ம் .. என்னை என்ன செய்தாயடா? (எங்கிருந்து)

திரைப்படம்  :  5 ஸ்டார்
பாடியவர்  :  சந்தனா பாலா
இசை  :  அனுராதா ஸ்ரீராம் - பரசுராம்
பாடல் இயற்றியவர்  :  கவிஞர் தாமரை
காணோளி பாடலின் சுட்டி > http://www.youtube.com/watch?v=BvrVTfMMbBc

[இந்தப் படம் வந்தப் பிறகு, பின்னனிப் பாடகி அனுராதா ஸ்ரீராமிடம் (மற்றும் அவரது கணவர் பரசுராம்) இருந்து இன்னும் சில படங்களை எதிர்ப்பார்த்தேன். ஏனோ பிறகு அவர்களிடம் இருந்து திரைப்படங்களுக்கு இசை இல்லை] 

December 13, 2013

Daily Project திருக்குறள் (Thirukkural)

On 11-December-2013 Wednesday, I and my friend /ex-colleague Nagamani have collaborated to work on a daily project called Daily Project திருக்குறள் (Thirukkural). Thirukkural is one the most important works in Tamil Literature. It is believed to be written around 2nd century BC and 5th century BC. More information available in Wikipedia.

There are numerous websites, blogs, tweeples available for Thirukkural. Most of them have ripped, though giving due credits to authors, from popular explanatory books such as the ones authored by Mu.Varadharajan, Solomn Paappaiyaa, Parimelazhagar etc. 

Objective
1) Learn and absorb Thirukkural on a daily basis
2) Byheart the Kural
- Not to come up with a new / detailed explanation as there are numerous books already.

Target Dates
1) Soft Target - 31st August 2017 (considering it takes 3 years and 235 days)
2) Hard Target - 30th November 2014 (Considering 30 days per year for festivals, sickness, exigencies)

Rules
1) Only One Kural (குறள்) per day

2) All three sections - Righteousness, Wealth, Love (பால் - 1.அறம், 2.பொருள், 3.காமம்) in a cyclic order. But not necessarily in same order 1-2-3. It can be permutations such as 1-2-3, 3-2-1, 2-3-1 etc)

3) No author should shy from one particular aforementioned Section or stick to one particular section

4) All Chapters (அதிகாரம்) will be covered in 10 cycles. I.e In one cycle, the chapter will not be repeated. 

5) There will not be any repeat in the Kural. If willing to any additional explanation, then re-edit it and save it to latest date. However, this will not be considered as the Kural of that day.

6) In future, no more than a total of 5 authors will be allowed.

7) Kurals in Chapters can be picked in random. Chapters can be picked in random. But aforementioned rules 2,3,4,5 will apply.
[Updated: Chapters has to be in order and Kurals also need to be in order. This will save time in making decisions and also avoid repetitions]

8) Authors will follow a cyclic fashion

9) Co-author can take up the role of the author of the day ONLY when they come to know about sickness or any exigency. 

Silver Lining

I have heard about this term Silver Lining during my very bad days. Incidentally, I came across it my Marketing Class recently. Here it goes.

Mental Accounting : Who's Happier ?

Mr. A was given tickets to lotteries involving the World Series. He won $50 in one lottery and $25 in the other.
Mr. B was given a ticket to a single, larger World Series lottery. He won $75.

Survey: Who is happier A or B ?
Results: A: 56  B: 16 No difference: 15

In Western culture, give gifts in multiple boxes than in single box.
Idea: Good News in Multiple Boxes.

Mental Accounting : Who's Unhappier ?

Mr. A received a letter from the IRS saying that he made a minor error on his tax return and owed $100. He received a similar letter the same day from his state income tax authority saying he owed $50. There were no other repercussions from either mistake.

Mr. B received a letter from the IRS saying that he made a minor error on his tax return and owed $150. There were no other repercussions from his mistake.

Survey: Who is unhappier A or B ?
Results: A: 66 B: 14 No difference: 7

Bad News in Multiple Boxes -> BAD Effect.
Bad News - Integrate it.

Silver Lining Principle
Amy lost a cycle $180.
Chris lost a cycle $200.
But Chris found a bill on the road for $20. So, in net,  Chris lost $180.
When considered that $20, Who is happier ? Chris is happier. This is called SILVER LINING Principle. Because that plus $20 makes him sort of better.

Apply to business
A car is worth $20000. Bill it for $22000. But give a rebate of $2000. So total price is $20000

December 10, 2013

P!NK - Just Give Me A Reason

Thanks to my brother Manikandan. He is the one who regularly updates me with good English songs even since my college days. In March 2013, he introduced me this song 'P!NK - Just Give Me a Reason' which I have been listening for so many months. Today it is haunting me. 

Official Lyric Video (below)



Lyrics
Right from the start
You were a thief you stole my heart
And I your willing victim
I let you see the parts of me
That weren't all that pretty
And with every touch you fixed them
Now you've been talking in your sleep
Things you never say to me
Tell me that you've had enough
Of our love, our love

Just give me a reason
Just a little bit's enough
Just a second we're not broken just bent
And we can learn to love again
It's in the stars
It's been written in the scars on our hearts
We're not broken just bent
And we can learn to love again

Im sorry I don't understand where all of this is coming from
I thought that we were fine
Oh we had everything
Your head is running wild again
My dear we still have everything
And its all in your mind
Yeah but this is happening
You've been having real bad dreams
Oh oh
You used to lie so close to me
Oh oh
There's nothing more than empty sheets
Between our love, our love, oh our love, our love

Just give me a reason
Just a little bit's enough
Just a second we're not broken just bent
And we can learn to love again
It's in the stars
It's been written in the scars on our hearts
We're not broken just bent
And we can learn to love again

I never stopped
You're still written in the scars on my heart
Your not broken just bent and we can learn to love again

Oh tears ducts and rust
I'll fix it for us
We're collecting dust but our love's enough
You're holding it in
You're pouring a drink
No nothing is as bad as it seems
We'll come clean

Just give me a reason
Just a little bit's enough
Just a second we're not broken just bent
And we can learn to love again
It's in the stars
It's been written in the scars on our hearts
We're not broken just bent
And we can learn to love again

December 06, 2013

பாவேந்தர் பாரதிதாசன் - நான் ரசித்த சில பாடல்கள்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பாடல்களில் நான் ரசித்த சில பாடல்கள்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !