Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

December 21, 2015

குறுந்தொகை - காமம் காமம்

136. குறிஞ்சி - தலைவன் கூற்று

காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றாள்மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.
    -மிளைப்பெருங் கந்தனார்.

Translation 1
Love, love, they say. Love
is neither a demoness
nor a malady.

Neither does it grow on you
infinitesimally
nor does it cool off
with time.

No, the nature of love
is that of the elephant
that placidly chews on foliage
and yet, is driven into musth
when the time comes,
and lightning strikes

at the first sight
of her.
  - By Milai Perung-Kandhan

Translation 2 (by (AK Ramanujam)
Love is not a disease nor it is a feeling which will come and leave you after some time(effectively saying it is not a crush or infatuation). It is a feeling which is always hidden in you and get triggered suddenly. The trigger in case of love is when you see your lady love. All your hidden feeling takes complete control over you. This is is compared with madness(madam) of the elephant which is usually very calm creature. The madam is a very aggressive state similarly the poet is building an imagery that the madness of love is so aggressive(the love desire) that a person cannot take control over it. He doesn't know when it occurs and will never know when it is going to go away.

 
பொருள்: (கற்க நிற்க) 
     (பி-ம்.) 3. ‘தணித்தலும்’; 4. ‘றாள் பதம்’.
     (ப-ரை.) காமம் காமம் என்ப - காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்; காமம் - அக்காமமானது, அணங்கும் - புதியதாகத் தோற்றும் வருத்தமும், பிணியும் அன்று - நோயும் அன்று; நுணங்கி - நுண்ணிதாகி, கடுத்தலும் - மிகுதலும், தணிதலும் - குறைதலும், இன்று - இலது; யானை---, குளகு மென்று ஆள் மதம் போல - தழை யுணவை மென்று தின்று அதனாற் கொண்ட மதத்தைப் போல, காணுநர் பெறின் - கண்டு மகிழ்வாரைப் பெற்றால், அது பாணியும் உடைத்து - அக்காமம் வெளிப்படும் செவ்வியையும் உடையது.

     (முடிபு) காமம் காமம் என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்று; கடுத்தலும் தணிதலும் இன்று; அது காணுநர்ப் பெறின் பாணியும் உடைத்து.

     (கருத்து) காமம் இயல்பாகவே ஒருவரிடம் இருந்து உரிய காலத்தில் வெளிப்படுவது.
     (வி-ரை.) தலைவன் ஒரு தலைவியைக் காமுற்றா னென்பதை யறிந்த பாங்கன், “பேரறிவுடைய நீ காம நோயை அடைதல் நன்றோ?” என்று இடித்துரைக்க, அவனை நோக்கித் தலைவன் கூறியது இது.

     என்ப - என்று உலகினர் கூறுவர். பொதுவாகச் சுட்டினும் பாங்கன் கூறியதையே தலைவன் கருதினான். அணங்கு - பிறரால் உண்டாகும் வருத்தம். பிணி - தன்பால் தோன்றும் நோய். கடுத்தல்: கடியென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது; (குறள். 706, பரிமேல்..)

     நுணங்கிக் கடுத்தலென்னும் தொடரை இரண்டு செயலாக்கி நுணங்குதலும், கடுத்தலுமென்று கொள்க. கடுத்தல் - வெம்மையாதல்; தணிதல்- தண்மையாதல் எனலும் பொருந்தும் (குறள். 1104.)

     அடங்கியிருந்த யானையின் மதம் தழையுணவை உண்ட காலத்தில் வெளிப்படுவதைப் போல, ஊழின் வலியால் காணற்குரியாரைக் காணப்பெறின் இயல்பாகவே உள்ளத்துள் அடங்கியிருந்த காமம் வெளிப்படுமென்று உவமையை விரித்துக் கொள்க. இங்ஙனம் கூறியதனால், “தெய்வத்தின் ஆணை வழியே யான் தலைவியைக் கண்டேன்; அவள் எனக்குரிய ளாதலின் அவளைக் கண்ட மாத்திரத்தே என்பால் இதுகாறும் தோற்றாமல் அடங்கியிருந்த காமம் வெளிப்படும் செவ்வியை உடையதாயிற்று. ஆதலின் யான் கொண்ட காமம் பிறரால் வந்த வருத்தமன்று; என்பால் புதிதாக வந்த நோயுமன்று” என்பதைத் தலைவன் விளக்கினான்.


பொருள் 2 (மூன்றில்)
    “காமங் காமம் என்ப காமம்
    அணங்கும் பிணியும் அன்றே”

என்ற இரு வரிகள் பொதுவாய் கொண்ட கவிதைகள் அவை. இரு கவிதைகளும் காமத்தின் இரு வேறு அம்சங்களைப் பற்றி பேசுகின்றன. மிளைப்பெருந்தனாரையும் கலாப்ரியாவையும் அருகருகில் நிறுத்திப்பார்ப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.

அணங்கு என்றால் சோகம் என்று பொருள். என்னை மிகவும் பாதித்த குறுந்தொகை வரி ஒன்று உண்டு. “யார் அணங்குற்றனை கடலே” என்று கடலை நோக்கி கேட்பாள் தலைவி. இதற்கு என்ன பொருள்? யாருக்காக சோகப்பட்டாய் என்பது தானே அந்த வரிக்கான பொருள்? ஆனால் அணங்கு என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் உண்டு என்று பின்னர் அறிந்தேன். சன்னதம் கொண்டு ஆடுதல், பேய்ப்பிடித்து ஆடுதல். இப்பொழுது அந்த “யார் அணங்குற்றனை கடலே” வரியின் பொருள் என்ன? “யாருக்காக வெறிபிடித்து ஆடுகிறாய் கடலே? “ அல்லது “யார் காரணமாக வெறி பிடித்து ஆடுகிறாய் கடலே?”. கடலின் கொந்தளிப்பின் முன் நின்று நான் இந்த வரியை உச்சரித்திருக்கிறேன். இன்று இந்த வரியை கற்பனாவாத வரி என்று ஒரு விமர்சகன் நிராகரிக்கலாம். ஆனால் அந்த வரியுள் புதைந்திருக்கும் எழுச்சி உணரக்கூடிய ஒன்று.

காமம் என்பது அணங்கோ நோயோ அல்ல என்கிறார் மிளைப்பெருங்கந்தனார். இங்கு அணங்கு என்பதற்கு சோகம், துயரம் என்று பொருள் கொள்ளலாம். வெறி வந்தாடுதல் என்ற பொருள் கொண்டால் அந்த கணம் மட்டுமே தோன்றும் உணர்வெழுச்சி என்ற பொருளும் வருகிறது அல்லவா? சரி, துயரமோ, உணர்வெழுச்சியோ, நோயோ அல்ல காமம். பின் என்ன தான் அது? விளங்கங்களுக்குள் போவதற்கு முன்... இங்கு காமம் என்பதை உடல்சார்ந்த காமம் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் உளம் சார்ந்த காதலையும் குறிப்பதாக கொண்டால் பாடலின் வீர்யம் அதிகரிப்பதாகத் தோன்றுகிறது.

முதல் விளக்கத்தை பார்க்கலாம்.
   
    காமம் காமம் என்ப காமம்
    அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
    கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
    குளகு மென்றாள் மதம் போலப்
    பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.
   
    - மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 136)
காமம் காமம் என்கிறாயே, காமம் என்பது அணங்கோ பிணியோ அல்ல. அது குறைவதும் இல்லை, தணிவதும் இல்லை. அதிமதுர தழைகளை உண்ட யானையின் உணர்வெழுச்சி போன்றது அது. யானை ஒரு முறை மிக இனிப்பான அந்த தழைகளை உண்டதும் அது உணர்வெழுச்சு கொள்கிறது. அந்த உணர்வெழுச்சி எங்கே போகிறது? எங்கும் இல்லை. தணியாது குறையாது அதனுள் உறைகிறது அந்த உணர்வெழுச்சி. அதே தழைகளை மீண்டும் பார்த்த கணம் அது குடம் உடைந்து நீர் வெளியேறுவது போல வெளியேறுகிறது. அது போன்றது தான் காதலும் என்கிறார். காதல் ஒரு முறை வரும் உணர்வெழுச்சி அல்ல. காதல் கொண்டவரை காணும் போதெல்லாம் பொங்கும் உணர்வு. இதுவே முதல் விளக்கம்.
அடுத்த விளக்கம்,
   
    காமம் காமம் என்ப காமம்
    அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
    முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
    மூதாதை வந்தாங்கு
    விருந்தே காமம் பெருந்தோ ளோயே.
   
    - மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 204)
காமம் காமம் என்கிறாயே, காமம் என்பது அணங்கோ பிணியோ அல்ல. மேட்டு நிலத்தில் விளைந்த முற்றாத இளம்புல்லை முதிய பசு ஒரே சமயத்தில் உண்டு முடிக்காமல் அசை போட்டுக்கொண்டே இருக்குமே அது போல நினைக்க நினைக்க இன்பம் தருவது அது. இலை, புல் ஆகியவை ஜீரணிக்க மிகவும் கடினமான பொருட்கள். ஒவ்வொரு மிருகமும் இதை ஒவ்வொரு விதத்தில் எதிர்கொள்கிறது. ஆடு மாடு போன்ற கால்நடைகள் உண்ட இலைகளை மீண்டும் வாய்பகுதிக்கு கொண்டு வந்து அசை போடுகின்றன. வயதான பசுவின் ஜீரணசக்தி இன்னமும் மழுங்கியே இருக்கும். அசை போடுதலின் நீளம் அதிகமாகவே இருக்கும். அசை போடப் போட இலையிலிருந்து புதுப்புது சுவைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த இலைகளுடன் ஏன் காதலை ஒப்புமைப்படுத்த வேண்டும்? காதலும் அது நிகழும் பொழுது முழுதும் புரிவதில்லையா? அதை அசை போடப் போடத்தான் பிடிபடுகிறதா? காதல் என்ன என்பதும் ஒவ்வொரு முறை “அசை” போடும் போதும் புதிதாக உருவாகி வருகிறதா?
இன்னொன்றும் உள்ளது. இந்த இரண்டாம் விளக்கம் முதல் விளக்கத்தின் ஒரு வெற்றிடத்தை நிரப்புகிறது. முதல் விளக்கத்தில் காதல் காதலிப்பவரை காணும் தோறும் வரும் உணர்ச்சி என்கிறது. எனில் காணாத போது? காணாத போதும் அசை போடுதலை போன்று இன்பம் பயப்பது அது.

குறிப்பு : எனது பழைய கட்டுரை ஒன்றின் நீட்சி இது.



(பொருள்: காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்; அக் காமம் புதியதாகத் தோன்றும் வருத்தமும் அன்று; உடலில் தோன்றும் நோயும் அன்று. கடுத்தலும்(மிகுதலும்), தணிதலும் இன்று; யானை குளகு என்ற தழையுணவை மென்று தின்று அதனால் கொண்ட மதத்தைப் போல கண்டு மகிழ்வாரைப் பெற்றால் அக்காமம் வெளிப்படும் சிறப்பினை உடையது).

அடங்கியிருந்த யானையின் மதம் குளகு என்ற தழையுணவை உண்டதும் வெளிப்படுவதுபோல ஊழின் வலிமையல் காணற்குரியவரைக் காணப்பெறின்இயல்பாக உள்ளத்தில் அடங்கியிருந்த காமம் வெளிப்படும் என்று உவமையை விரித்தால் பொருள் புலப்படும்.

சிந்தாமணியிலும் நச்சர் உரையில் " குளகுபோல் மதத்தை விளைவிப்பவள் இவளும் ஆதலால் விடுத்தலரிதென்றான்"(சிந்தமணி உரை 750) என்று குளகு பற்றிக் குறித்துள்ளார்.

மேலும் மதம் கொண்ட யானையின் மத்தகம் வாழையின் குருத்தைத் தடவும்பொழுது மதம் அடங்கும்(வலிமை அழியும்) என்று ஒரு குறிப்பு வருகின்றது.

" சோலை வாழைச் சுரிநுகும் பினையஅணங்குடை யருந்தலை நீவலின் மதனழிந்துமயங்கு துயருற்ற மையல் வேழம்"( குறுந்தொகை 308)

யானைக்கும் வாழைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி (அகம் 302-1-4),அகம் 8- 9-11) என்னும் சங்க நூல் வரிகளாலும் இதனை உறுதிசெய்துகொள்ளலாம்.

எனவே யானைக்குக் குளகு உண்டால் மதம் பிடிக்கும் என்றும் வாழை இலையின் குருத்து மதத்தை நீக்கும் என்று குறுந்தொகை வழியாக அறியமுடிகின்றது.

வாழையினால் யானையின் வலி கெடும் என்றது " யானைக்கு வாழைத்தண்டு,ஆளுக்குக் கீரைத்தண்டு" என்று சிற்றூரில வழங்கும் பழமொழியாலும் உணரலாம் என்று உ.வே.சா பழமொழியை எடுத்துக்காட்டுகின்றார்.

இது பற்றி பிரஞ்சு நாட்டுப் பேராசிரியர் செவியார் அவர்களிடம் உரையாடியபொழுது அவர் புதுமைச்செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.அவர் தொல்காப்பியம் சேனாவரையர் உரையை எழுத்தெண்ணிக் கற்றுப் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்த்தவர்.

சேனாவரையர் உரையில் இடம்பெறும் (தொல்.சொல். நூற்பா 37 உரை) "யானைநூல் வல்லானொருவன்" என்னும் தொடரை எடுத்துக்காட்டி யானை இலக்கணம் குறிப்பிடும் நூல் தமிழில் இருந்ததையும் "கஜ சாஸ்திரம்" என்னும் நூல் சரசுவதிமகால் நூலகத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டு யானை நூல் படித்தால் நான் தேடுவதற்கு விடை கிடைக்கலாம் என்று ஒரு குறிப்பை விளக்கினார்.


December 11, 2015

நின்னயே ரதி என்று

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாள்!
பல வருடங்களாக எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் ஒன்று.

நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
I think you are the most beautiful women, Oh Lover (Kannammaa)!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)
I thought you as my friend and surrendered to you Oh Lover(Kannammaa)!

பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!..
Gold might equal your skin! Nothing to equal you(or only your resemblance can equal you)!
பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!..... (நின்னையே!)
And then you are the young angel! Oh Lover(Kannammaa)

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
The king is showering me with arrows... at that time
கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா! ...... (நின்னையே!)
Look at me! Reach out to me (to save me)! Oh Lover(Kannammaa)

யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்!
Everything is bliss now onwards when united with the God(Lover) is what it appears to me!
மேவுமே!, இங்கு யாவுமே கண்ணம்மா..... (நின்னையே!)
​Love! Love Everything here! Oh Lover (Kannammaa)!

December 07, 2015

தாமதம்

வாழ்வில் முடிவுகளை தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கொடியது என்பதை முடிவு எடுத்தப்பின்பு அறிந்துக்கொள்கிறேன். சில சமயம் தாமதத்தின் தாக்கம் தற்செயலில் நம் ஆற்றாமையால் விளங்குகிறது. சில சமயம் முடிவின் முடிவு நல்லவையாக இருக்கும். ஆனால் முடிவிற்கு முன் நாம் தயங்கிய ஒவ்வொரு நாளும் நரகம். இரு விதத்திலும் தாமதம் கொடியதே. இரவு துயிலும் பொழுது உரக்கம் இல்லையென்றால், சிந்தனைகள் தற்செயலில் முழுமனதுடன் குவிக்க முடியவில்லையென்றால் அது துன்பத்திற்கு அறிகுறி. சில முடிவுகளுக்கு மிகபெரிய பரிசுகளை கொடுத்துள்ளேன்.

October 09, 2015

உன் மீது வைத்திருப்பேன்

முன்பு சில பெண்கள் மீது
ஏன் அன்பை வைத்தேனொ
தெரியவில்லை
எல்லா அன்பையும்
உன் மீது வைத்திருப்பேன்
இனி ஒவ்வொருநாளும்
இன்னும் அதீதமாய்
காதல் கொள்வேன் ஹம்சினி

உன்னை காதலிக்கிறேன்
என்று நீ
ஒவ்வொரு முறை
உச்சரிக்கும் போதும்
என் மனம்
கள்வெறிக்கொள்ளுதடி
செல்லமே
உன் அதரத்தில்
பரிசிக்கை செய்வேன்

August 07, 2015

கவிப்ரசங்கி!

உன்னுடன் பழகிய பின்பு
உனக்காக கவியெழுத அமர்ந்தேன்
கவிக்கு கவியெழுதும்
கவிப்ரசங்கியோ நான்
என்று நினைத்தேன்!

July 30, 2015

உருவாய் அருவாய் | முருகர் பாடல்

சில வாரங்களாக முன்பு  முருகபெருமானுக்கு பாடும் இப்பாடலை பற்றி அறிந்தேன். தமிழ்ப்பாடல் ஆயினும் எனக்கு இதன் அக அர்த்தம் விளங்கவில்லை. சற்று நேரடியாக இல்லை. ஜெயமோகனின் வளையத்தில் தற்செயலாக படிக்க நேரிட்டது. எப்படிப்பட்ட வரிகள் இவை என்பதை நீங்களே படித்து தெரிந்துக்  கொள்ளுங்கள்!

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வளையத்தில் இருந்து பொருள் இங்கே 

அதிலும் அருணகிரிநாதர் நுட்பமான சம்ஸ்கிருத தத்துவக் கலைச்சொற்களை தாராளமாகவே பெய்து தன் பாடல்களைப் பாடியிருக்கிறார். இருபெருமொழிகளிலும் ஆழ்ந்த ஞானம் உடைய ஒருவரால் மட்டுமே அந்நூலின் அகம் காணமுடியும், அனுபூதியும் கனியுமென்றால். கந்தரனுபூதியும் அப்படிப்பட்ட நூலே.

நீங்கள் சொன்ன கவிதை இது. பெரும்பாலான சைவர்களுக்குத் தெரிந்த பாடல் இதுவாகவே இருக்கும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


மிக எளிமையாக ‘முருகனே நீ வந்து எனக்கு அருள்வாய்’ என்று கூவும் வரிகள் இவை என நம்மில் பலர் சொல்லலாம். ஆனால் இவ்வரிகள் வழியாகச் செல்லும் ஒரு கூர்ந்த மனம் அடையும் பொருள்நிலைகள் முடிவிலாதவை.

முருகனை பரம்பொருளாகக் கண்டுவணங்குகிறது இக்கவிதை. பொதுவாக நம் மரபில் உருவம் கொண்ட எந்த ஒரு தெய்வத்தையும் தோத்திரங்களில் உருவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட பிரம்ம வடிவமாக, நினைப்புக்கு எட்டாத எல்லையற்ற பரம்பொருளாக உருவகித்துப் பாடுவதே வழக்கம்.

அந்தப் பரம்பொருளின் சித்திரத்தை இக்கவிதை அளிக்கும் விதமே கூர்ந்து கவனிக்கவேண்டியது. ‘உருவமாகவும் அருவமாகவும், மொட்டாகவும் மலராகவும், மணியாகவும் அதன் ஒளியாகவும், கருவாகவும் அதன் உயிராகவும், செயலாகவும் அதன் விதியாகவும் இருப்பவனே நீ குருவாக வந்து அருள்வாய்’ என்று இறைஞ்சுகிறது.

இந்தவரிகளில் அருவமான பரம்பொருள் உருவவடிவம் கொண்டு வருவதன் ஒரு நுண் சித்திரத்தை அருணகிரிநாதர் அளிக்கிறார். இப்பிரபஞ்சவெளியின் சாரமாக உள்ள அலகிலா ஆற்றல், அல்லது இப்பிரபஞ்சத்தின் அடிப்படையாக உள்ள பெருங்கருத்து, அல்லது இப்பிரபஞ்சமேயாக மாறித்தெரியும் அது எவ்வாறு நாமறியும் நூறாயிரம் பொருட்களாக, அவற்றில் நாம் கண்டு வணங்கும் தெய்வங்களாக, உருமாற்றம் கொண்டது? இன்றைய இயற்பியலாளனின் பெருவினாவும் அதுவே என நாம் அறிவோம்.

‘உருவாய் அருவாய்’ என்ற எதிரீடு முதலில் முன்வைக்கப்படுகிறது. நாம் காணும் அனைத்துமே உருவமாக உள்ளன. அவ்வுருவங்கள் அனைத்துமாக தன் இறைவனை உருவகிக்கும் இக்கவிதை பொருள்வயப்பிரபஞ்சமாகவே அவனை முன்னிறுத்துகிறது. அந்தப்பொருள்வயப்பிரபஞ்சம் அல்லாத அருவமான வெளியாகவும் அவனை உருவகிக்கிறது.

உருவம் கொண்ட இறைவடிவமாகவும் உருவமில்லாத இறைவடிவமாகவும் இருப்பவன் எனச் சொல்லிவிட்டு அதன்பின் அதற்கு இணையாக பிற எதிரீடுகளை வைத்துச் செல்கிறது கவிதை. ‘உள்ளதாகவும் இல்லாததாகவும்’ என்பது அடுத்த எதிரீடு. உள்ளது உருவம். இல்லாதது அருவம். உள்ளவை எல்லாம் அவனே. இல்லை என்ற நிலையிலும் அவனே இருக்கிறான். பெருவெளியில் இன்மையும் கூட  ஓர் ஆற்றலாக, பரம்பொருளின் இருப்பாக ஆகலாம். அது இல்லாமல் இருக்கும்நிலைகூட அதுவே!

அடுத்த எதிரீடு எளிய உவமை. ‘மொட்டாகவும் மலராகவும்’ என்ற வரி இந்திய வேதாந்த மரபை உணர்ந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளிக்கும். ‘பரம்பொருள் அருவ நிலையில் இருந்து உருவமாகி வருகிறது’ என்பதே வேதாந்த தரிசனம். அருவநிலையே உண்மையானது, உருவநிலை அந்த அருவநிலை உருவாக்கும் ஒரு மாயத்தோற்றமே என அத்வைதம் வாதிடும்.

ஆனால் இந்த வரி உருவப்பிரபஞ்சத்தை முதல்நிலை உண்மையாக முன்வைத்து அதன் நுண்வடிவமாக அருவநிலையை உருவகித்துக்காட்டுகிறது.  உருவத்துக்கு மொட்டும் அருவத்துக்கு மலரும் உவமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. உருவம் கொண்டு நம் முன் நிற்கும் இந்த பெருவெளி என்ற மொட்டு மலர்ந்த நிலையே உருவமிலா பரம்பொருள் என்று சொல்லப்பட்டிருக்கிறது!

அடுத்த எதிரீடு இன்னொரு உவமைமூலம் அதையே மேலும் வலியுறுத்துகிறது. ‘மணியாகவும்  ஒளியாகவும்’. இந்த பருப்பிரபஞ்சம் மாணிக்கம் என்றால் அதன் ஒளிதான் அலகிலாத ஆற்றலாக விரிந்த பரவெளி. அருவம் என்பது உருவமாகி நிற்பவற்றின் சாரமாக உறையும் ஒளியே என்கிறது இந்த உவமை!

மேலும் வலியுறுத்துகிறது அடுத்த எதிரீடு. ‘கருவாகவும் உயிராகவும்’ கரு என்று இந்த பொருள்வயப்பிரபஞ்சமே சொல்லப்படுகிறது. அந்தக் கருவுக்குள் உள்ள உயிரே ஆற்றல்பிரபஞ்சம் அல்லது அருவ வெளி!

கடைசி எதிரீடு பௌத்த தரிசனத்துடன் தொடர்புடையது. பௌத்தம் இப் பொருள்வயப்பிரபஞ்சம் என்பது ஒரு முடிவிலா நிகழ்வே என்று வகுக்கிறது. இந்நிகழ்வின் இயங்குவிதியாக உள்ளதே பேரறம் அல்லது மகாதர்மம்.  ‘கதியாகவும் விதியாகவும்’ என்ற வரி அதையே சுட்டுகிறது. கதி என்றால் நிகழ்வு. அந்நிகழ்வாகவும் அதன் விதியாகவும் முருகனை உருவகிக்கிறது இவ்வரி.

எதிரீடுகளின் வரிசையை வைத்துப் பார்த்தால் உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட பொருள்பிரபஞ்சத்தையே கதி என்று சொல்கிறார் அருணகிரிநாதர். இப்பருப்பிரபஞ்சம் ஒரு கதி [இயக்கமுறை] மட்டுமென்றால் அதன் சாரம் அதன் விதி. அந்த விதியே அருவம், இன்மைநிலை, மலர் , ஒளி, உயிர்… இரண்டும் அவனே என்று சொல்கிறது.

கடைசி வரி மிக இனிய ஒரு முடிச்சுடன் முடிகிறது. ‘குருவாய் வருக’ என்று முருகனை அழைக்கிறது அது. குரு என்பது இங்கே உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட முதல்நிலையின் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் அருவம், இன்மை, மலர் , ஒளி, உயிர் எனச் சொல்லப்பட்ட இரண்டம்நிலையில் இருப்பது எது?

மொட்டு மலராவதுபோல, மணியில் ஒளி பிறப்பதுபோல, கருவில் உயிர் நிகழ்வது போல குருவின் விளைவாக உள்ளது ஞானமே. அனுபூதியே உயர் ஞானம். குருவாக முருகன் வந்தால் ஞானமுமாக அவனே நிற்பான் என உரைக்கிறது பாடல். குருவாய் வருக என்ற அழைப்பு அவ்வகையில் மேலும் முன்னகர்ந்து ஞானமுமாக வருக என முடிகிறது.

இவ்வரிகள் கந்தரனுபூதியின் கடைசிப் பாடல். இவ்வரிகளில் இருந்து பின்னால்நகர்ந்து முன்னாலுள்ள வரிகளை எட்டினால் பல வரிகளின் ஆழமும் தீவிரமும் நம்மை திகைக்கச் செய்யும்.

‘தன்னந் தனி நிற்பது தானறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ’

என்ற வரி ஓர் உதாரணம். வேதங்கள் முடிவிலா பரவெளியின் ஈடிணையற்ற தனிமையை பாடுகின்றன. அது அல்லாமல் வேறொன்றுமில்லை என்ற நிலையின் தனிமை. பரம்பொருளின் தனிமை. அந்த எல்லையற்ற தன்னந்தனிப்பொருள் தன்னை இன்னொருவருக்கு எப்படி அறிவுறுத்த இயலும்?

அவ்வினாவுக்கு விடையாகவே குருவாக வருக என்ற அழைப்பு. குருவாகி அது வருகையில் ஞானத்தின் அனுபூதி அதன் விளைவாக நிகழ்ந்தாகவேண்டும் அல்லவா?

கந்தரனுபூதி சைவசித்தாந்தத்தில் கிளைத்த நூல். ஆகவேதான் அது வேதாந்த மரபைப்போல உருவத்தை நிராகரிக்கவில்லை. பருப்பிரபஞ்சமும் அதற்கு ஓர் உண்மையே. அது மாயத்தோற்றம் அல்ல. மாயை என்பது அதை முழுதுணராது மயங்கும் நமது குறைநிலையே. பருப்பிரபஞ்சத்தை அல்லது உருவத்தை முதல் நிலையாக்கி அதில் இருந்து அதன் நுண்நிலையாக பரவெளியை அல்லது அருவத்தைக் கண்டு முன்வைக்கிறது இப்பாடல்.

ஆனால் இந்தியமெய்ஞான மரபுகள் அனைத்துமே உச்சநிலையில் ‘ஆற்றல் X ஜடம்’ அல்லது ‘உருவம் X அருவம்’ என்னும் எதிரீடுகளை தாண்டிய ஒருமையையே முன்னைக்கின்றன. அதையே பாம்பொருள்த்தன்மையாக காட்டுகின்றன. மேலும் பின்னால் சென்றால் இன்னொரு வரியில் அதைக் காணலாம்

அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அற நின்ற பிரான் அல்லையோ?

‘அறிவு என்ற ஒன்று அழியும் நிலையில் நின்று அறிபவர்களின் அறிவில் பிறிது என்ற ஒன்றே அழியும்படியாக நின்ற பிரான் அல்லவா நீ?’ அறிவின் உச்சம் என்பது அறிகிறேன் என்னும் நிலை இல்லாமலாதல். அறிவுடன் அறிபவனும் ஒன்றாதல். அந்நிலையில் நின்று அறிபவர் நெஞ்சில் அவர்களில் இருந்து பிறிதாக அல்லாமல் நிற்கும் அதுவே அவன் என்கிறார் அருணகிரிநாதர். அனுபூதி என்பது அந்நிலையே.

July 27, 2015

செவியோடு பேசியவள்

செவியோடு பேசியவள்
கவியேழுத வைத்தாள்
போகட்டுமா'னு கேட்டவள்
எதற்காக காத்திருந்தாள் ?
திங்கள்விதி சமைத்தவளின்
நினைவுகள் எனக்கு
திஞ்சுவை மீட்சியரிதாதல்

July 25, 2015

சின்சின்னாடி | Cincinnati

நேற்று 24-ஜூலை 2015 அன்று எனக்கு பிடித்த பாடகி ஷ்ரேயா கோஷல் அவர்களின் கச்சேரியினை காணச்சென்றேன். அது மட்டும் இன்றி நண்பன் ஜூட் சத்யனும் வந்தான். நான் ஃபஸ்புகில் ஒருவரிடம் டிக்கேட்டை வாங்கினேன்.  நாங்கள் சரியாக ஒரு வருடம் பின்பு பார்த்துக்கொண்டோம்.  

ஷ்ரேயா கோஷலின் பாடல்கள் அவ்வளவு இனிமை. அவர்களின் குரலும் தேன் சொட்டும் மதுரம். ஒலி பொறியாளர் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையை குறைத்துவிட்டார். நல்லாதாய் போயிற்று. ஆனால் ஷ்ரேயா கோஷலின் குரல் அவ்வரங்கத்தையே நிறைத்தது. சிலசமயம் இசை இல்லாமல் பாடல் மட்டும் பாடினார்கள். அவை அனைத்தும் அப்படி ஒரு மதுரம். அவர்களின் குரலில் லயித்து போனேன்.  அவர்கள் குரல் இந்நூற்றாண்டு முழுதும் ஒலிக்கட்டும். அதற்கான அனைத்து ஆரோக்கியத்தையும் இறைவன் அவர்களுக்கு அருள் வேண்டும். 

  

ஷ்ரேயா கோஷல் அவர்கள் பாடிய பாடல்கள் இதோ

1) Bahara - I hate luv story
2) Agar Tum Mil Jao - Zeher
3) Oh Saathi Re - Omkara
4) Saans - Jab Tak Hai Jaan
5) Manwa Laage  - Happy New Year
6) Samjhawan - Humpty Sharma ki Dulhania
7) Journey - Piku
8) Piya O Re Piya - Tere Naal Love Ho Gaya
9) Dheere Dheere (Saibo) - Shor in the City
10) Munbe Vaa - Silunnu Oru Kaadhal
11) Aashiyan - Barfi
12) Barso re - Guru
13) Yeh Ishq Hai - Jab we met
14) Zoobi Doobi - 3 Idiots
15) Ooh La La - Dirty Picture
16) Radha - Student of the year
17) Chinki Chameli - Agneepath
18) Teri Meri - Bodyguard
19) Tujh Mein Rab - Rab Ne Bana Di Jodi
20) Teri Ore - Singh is King
21) Vintunnaavvaa - Ye Maaya Chesaave [Mannippaaya - Vinnaithaadi varuvaayaa]
22) Lag Ja Gale
23) Jaadu Hai Nasha Hai - Jism
24) Raabta - Agent Vinod
25) Bairi Piya - Dev Das
26) Mere Dholna - Bhool Bhulaiyaa
27) Nagada Sang Dhol - Ram Leela
28) Sun Raha - Aashiqui 2





 (Shreya Ghoshal on the stage)

Jude (Right) and I (Left)

ஹம்சாவிற்கு பிடித்த ஷ்ரேயா கோஷலின் பாடல்கள் இதோ
1) Bahara - I hate love stories
2) Sathiya Sathiya - Singam
3) Samjhawan - Humpty Sharma Ki Dulhaniya
4) Tujh me rab dikta hai - Rab ne bana di jodi
5) Jhalla Wallah - Ishqzade
6) Mein Agar Kahoon - Om Shanthi Om
7) Piyu Bole - Parineeta
8) Khabar Nahi - Dostana

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அவர்கள் பாடிய 30 பாடல்களில் (28 ஹிந்தி) 18 பாடல்கள் குறைந்த பட்ச பரிட்சயம் உண்டு எனக்கு. மனதுக்கு நிறைவான நாளாக அமைந்தது. கச்சேரி முடிந்த உடன் ஸ்டேஜ் டோர்க்கு சென்று ஷ்ரேயா கோஷலுடன் ஒரு புகைப்படம் எடுக்க 45 நிமிடம் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் எப்போழுதோ கச்சேரி முடிந்த உடன் அவழியாக கிளம்பிவிட்டார்கள் என்று தாமதமாகவே தெரிந்தது. சற்று வருத்தமே. பின்பு மோட்டலுக்கு வந்து உறங்கினோம். 






சனிக்கிழமை காலை எழுந்து சிறிது நேரம் தோழி ப்ரசன்ன தேவியுடன் கூகுல் ஹங்கொட்-இல் ஜூடும் நானும் உரையாடிக்கொண்டு இருந்தோம். பி.டி வேறு ராஜேஷ் நீ ரொம்ப அழகா தெரியர. இந்த மாதிரிலான் நான் உன்கிட்ட சொன்னதே கிடையாது தோன்னதும் கிடையாது. உன்கிட்ட ஒரு பெரிய மாற்றம் இருக்குனு. பிறகு என்னை பற்றியும் ஜூடை பற்றியும் எங்களது வாழ்வில் நடக்க இருக்க போகும் மாற்றங்களை பற்றியும் நகைத்து உரக்க வெடித்து சிரித்து உரையாடிக்கொண்டு இருந்தோம். ஒரு 30 நிமிடம் மிக நன்றாய் சென்று கொண்டு இருந்தது பேச்சு. குறைந்தது இன்னும் ஒரு 30 நிமிடம் சென்று இருக்க கூடியது. ஆனால்  நாங்கள் மோட்டலை 11 மணிக்கு காலி செய்ய வேண்டிய கட்டாயம்.  பின்பு ஒரு இடத்தில் மதிய உணவு உண்டோம். அதன் பின் ஒரு ஹிந்து கோயிலுக்கு சென்றோம். கோயில் உள்ளே மிக அழகாய் இருந்தது. நிறைவாகவும் இருந்தது. பின்பும் நானும் ஜூட்டும் எனக்கு வேண்டியவரிடம் பேசிக்கொண்டு இருந்தோம். துவக்கத்திலையே அனிமேஷன் அக்‌ஷன் (x-men, wolverine, superman, batman) அது இதுனு பேசி பனியை உடைத்து(ice break) நன்கு பேசினோம்.  சுமார் 90 நிமிடம் பேசினோம். அவர்கள் இருவருமே மிக நன்றாய் பேசினார்கள். புதியவர்கள் பேசிக்கொள்ளுவது போல இல்லை. 

அதன் பின்பு Ant Man(எறும்பு மனிதன்) திரைப்படம் பார்த்தோம் நானும் ஜூடும். வழக்கமான உலகத்தை காப்பாற்றும் ஒரு கதைக்களம். நல்ல படம்.  ஓ ஓ என்று எல்லாம் சொல்லக்கூடாது. ஆனால் Evangeline Lilly சூப்பரோ சூப்பர். அதுவும் அவளின் சிகை அலங்காரம் அவ்வளவு நேர்த்தி!

ஆக இன்று (24,25 July 2015) மிக நன்றாய் சென்றது!! 

 

 Evangeline Lilly

 

July 21, 2015

மௌனம்

பார்க்காத விழிகள்
இதயம்போல் துடித்தது
வாட்ஸ்ஆப்-குறைத்த  விரல்கள்
விச்சித்திரமாய் சொடுக்கியது
பேசாத மௌனம்
பெருக்கியது நேசத்தை


(கண் 8-10 முறைதான் துடிக்கும். இதயம் 72 முறை துடிக்கும்)
(சொடுகர்தே மறந்து போச்சாம்)
19-ஜூலை 

July 16, 2015

ஞாயிறு உன் நெற்றியில்

பதுமையை பார்த்து
ஞாயிறு நெற்றியில்
குடிக் கொண்டதோ
பொற்கதிர்கள்
சுற்றி வீசுகிறதே
அதை காண்கையில்
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே!
 

July 15, 2015

மெல்லிசை

உன்னோடு பேசுவதால்
மெல்லிசை பாடல்கள்
தேவையில்லை எனக்கு
அதனால் கேட்பதில்லை
இருவாரம் பின்பு
உணர்ந்தேன் நான்
 

July 02, 2015

மனத்தடை

நீயில்லாத இரவும் பகலும் பொழுதில்லை
உன்னுடன் வாழ தடையில்லை
ஆனால் காலம் செய்யும் அலைக்கழிப்பால்
மனத்தடை வருகிறதே  உன்னுடன் பேச
பேசாமலிருக்க முடியாதென்பது உனக்குத் தெரியும்
என்பதே ஆறுதல் எனக்கு
உன்னுடன் கொஞ்சம் என்று பேச

June 30, 2015

அலைக்கழிக்கப்பு | நான்கு வேடங்கள்

நான் சமீப காலங்களில் படித்த கட்டுரைகளில் முக்கியமான கட்டுரை இது. இலக்கிய உலகில் வரும் பெரும்பாலானோர் சிக்கித்தவித்து அலைக்கழிக்கப்படும் மனநிலைக்கு காரணம் என்னவென்று எழுத்தாளர் ஜெயமோகன் தர்க்க பூர்வமாக விளக்குகிறார்!

மூலம் :  (கீழ்காணும் தலைப்புகளை/ சுட்டிகளை தட்டவும்)
தன்வழிகள்

நான்கு வேடங்கள்

எழுதலின் விதிகள்

இரண்டு முகம்

தேடியவர்களிடம் எஞ்சுவது

தன்னறம்

தன்வழிச்சேரல்

பதுங்குதல்

ஒருமரம்,மூன்று உயிர்கள்

செயலின்மையின் இனிய மது

தன்னறத்தின் எல்லைகள்

தன்னறமும் தனிவாழ்வும்-கடிதம்

விதிசமைப்பவர்கள்

சராசரி

விதிசமைப்பவனின் தினங்கள்

தேர்வு செய்யப்பட்ட சிலர்


படிமங்கள்

பல்லாயிரம் முறை நான் உணர்ந்து பாடிய வாசித்த வரிகள் இன்று புதியதாய் தோன்றுகிறது. வாழ்க்கையில் இதற்கு முன்பும் நான் இது போல் நினைத்ததுண்டு. எங்கெங்கு காணினும் படிமங்கள்! 

June 29, 2015

இவள் இன்னருள் வேண்டுமடா!

பாரதியாரின் வரிகளே என் நெஞ்சினில் ஓடிக் கொண்டு இருக்கின்றது. 

June 27, 2015

ஏன் உள்ளமே ?

ஏன் உள்ளமே ?
எழுதியதை வெளியிடவில்லை
கரங்களை எழுதவிடவில்லை
கண்களை தீண்டவிடவில்லை
செவிகளை இன்புற்றவில்லை
இரு நாளாய்
சரியாக துயிலவில்லை

June 26, 2015

டா

என் வயது பெண் தோழிகளில் என்னை டா என்று அழைத்த தோழிகள் சிலர் உண்டு. அதுவும் ஓர் இரு முறை மட்டுமே. ஏன் என்றால் எங்கள் ஊர்களில் நாங்கள் படிக்கும் காலத்தில் அப்படி ஓர் பழக்கம் கிடையாது.  

23-ஜூன் 2015 அன்று மாலை, நான் உனக்கு பிடிக்காத பச்சை சட்டையை போட்டு இருக்கேனே, உன்னை பார்க்கும் முதல் நாளே! என்று அப்பெண்ணிடம் கேட்டேன். அவளோ, "நீ போட்டுக்கலான் டா. அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்ல டா. நானே நிறையா பேருக்கு வாங்கித்தருவேன்" என்றாள். அந்த டா-வின் ஓசையில் செவியினால் உணரலாகாத ஓர் எழில் உள்ளது. சிறிது நேரம் பின்பு அடுத்தவாட்டி பேசணும்னா என்கிட்ட சொல்லு இல்லாட்டினா வேற எதுவும் பேச இல்லனா உங்க வீட்டுல சொல்லிரு (முடிவை) என்று நான் சொல்ல. அவளோ! "நீ  எப்ப வேணாலும் பண்ணு டா!" என்றாள்.  டா-விலும் ஒரு காஞ்சனை உண்டு என்பதை அதை அசைப்போடும் பொழுது தான் உணர்கிறேன்! 
(முற்றிற்று)

(முளைந்த பின் 1-ஜூலை அன்று எழுதியது பகுதி) 
வஞ்சியிடம் இருந்து மலர்ப்போல் 
வாஞ்சையாக டா உதிர்ந்தால்
பாவலன் அதை இதயத்தில் 
முடிந்து முளைக்க வைத்து
பாவைக்கு கவிதை எழுதுவான்
அதையே நான் செய்தேன்
ஒன்பது நாள் பின்பு

பி.கு : இது என்ன குருட்டுத்தனமா ஒரு கிறுக்குத்தனம் என்று முட்டாள்த்தனமாய் தோன்றினாலும் அது ஒரு முட்டாள்த்தனம் என்று அறியும் ஆற்றலே அரிது. ஏன்  முட்டாள்த்தனம் என்றால் நான் சொன்ன அதுவே பிரபஞ்சத்தின் ஓர் மலரிதழ். [பிரபஞ்ச லீலைகளை அனுபவிக்க வேண்டும் காலவெளியில் பூத்த முடிவிலா இதழ்கள் கொண்ட ஒரு மலர் மட்டுமே. ‘ஒரு சிறிய மலரில் இருந்து இப்பிரபஞ்சமெனும் ஆனந்த வெளியை நாம் சென்றடைய முடியும். பூவை அறிய முடியாதவனுக்கு பிரபஞ்சத்தையும் அறிய முடியாது - சாய்ந்த வரிகள்/எழுத்துக்கள் எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளித்தில் பாரதியாரின் ‘கண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்’ என்ற ஒரு பதிவில்/கட்டுரையில் இருந்து எடுத்தது]

P.S: Translation of this post is available in the comments section

June 25, 2015

ரதி சுக சாரே கதம் அபி சாரே [Rati Sukha Sare Gatam Abhi Sāre]

[Archiving from my FB Post date 08-June-2015. i.e., a day before my birthday 09-June-2015]

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் [Thirukkural Link at the end]


Is it time? This weekend I learnt about this song ‘Rati Sukha Sare’ (translation and video are in appendix) (of Poet Jayadev’s Geeta Govind /Astapathi / Krishna’s Love songs) from my favorite writer Jeyamohan. I found a soulful rendition of that song by Mrs.Niranjana Srinivasan in youtube. When I was wandering in that paradise, thought about getting immersed in the Ocean of Love (Kammathuppaal of Thirukkural by Thiruvalluvar). When I was neck deep in it wrote a prose of this couplet (meaning in comments) thinking about the charming girl.

இது தான் நேரமோ தெரியவில்லை. பிறந்தநாளிற்கு ஓர் நாள் முன்பு எனது ஆஸ்தான எழுத்தாளர் ஜெயமோகன் மூலமாக (ஜெயதேவ-இன் கீத்கோவிந்தில் / அஷ்டபதியில்) “ரதி சுக சாரே கதம் அபி சாரே” என்ற பாடலை பற்றி அறிந்தேன். பின்பு யூட்யூபில் தேடி கடைசியில் ஸ்ரீமதி நிரஞ்சனா ஸ்ரீனிவாசன் ஆத்மாத்மார்த்தமாக நன்கு பாடிய நல்ல அப்பாடலை கேட்டேன். அவ்வின்ப வெள்ளத்தில் தத்தளிக்கும் நான் ஏன் நாம் வள்ளுவனின் இன்பத்துப்பாலில் திளைக்கக்கூடாது என்று என் மங்கல் ராதையை மிகுதியாக உள்ளியதால் ஒரு குறள் எடுத்து எழுத முற்பட்டேன்! அதன் மடல் இதோ (சுட்டியை தட்டவும்)

Appendix

Video / காணொளி

Rati Suka Sare [Translation/Meaning of Lyrics]

Oh Radha, Krishna is sitting in the same cottage where you met happily before. He is chanting your name like Mantra incessantly. He is yearning to enjoy the happiness of your embrace.


Oh dear Radha, go quickly to meet your beloved Krishna who is beautiful like Manmadha.The breeze is blowing gently. Krishna is waiting in Brundavana on the bank of Yamuna river. His hands play on the breasts of Gopikas. 

Krishna is playing flute calling your name, indicating where he was waiting for you. He admires even the breeze passing over you and reaching him.


He is alarmed even when a feather or dry leaf drops. He is setting on bed of tender leaves and is excited about your arrival.

Oh Radha, leave off your anklets lest they make noise when you meet him. Please go to that bower during night in black dress. 

When you meet Krishna your pearl necklaces fall on his chest. You shine like lightening on his chest which resembles dark clouds with white Sarasa birds.


Your eyes are beautiful like lotus flower. You are treasure of beauty lying on bed of tender leaves. You are bestower of happiness. 

Krishna is a person with self-respect. The night is ending He would be angry if you make delay. Go soon and fulfill his wish. 

Poet Jayadeva tells this delightful story of love between Radha and Krishna with utmost devotion. Oh devotees, bow to the most benevolent lord Krishna with pious hearts.


Meaning of the Couplet(Thirukkural)
My maiden perhaps thinks that now the night has set in, I would not be thinking of the act of riding the palm-horse. She is ignorant to understand my resolve; even in the middle of the night, I am only thinking of that without closing the lids of my eyes, says the man, making the intensity of his love known to her.

This way, he tries to let her know not only his mind but further his sleepless state, desiring her, perhaps, in a way to infuse sense of guilt in her.
(Courtesy: AshokSubra)

(Meaning in Tamil)
நான் பகல் வேளையில் மடலூர்தலை பற்றி நினைத்துக்கொண்டு இருப்பேன் இரவில் நினைக்க மாட்டேன் என்று நினைக்கும் அறிவில்லா பேதையே! நான் நள்ளிரவிலும் இமை மூடாமல் கண்விழித்து உன்னை எண்ணி எண்ணி மிக தெளிவாகவும் உறுதியாகவும் மனதில் நினைத்து கொண்டிருப்பது என்ன தெரியுமா ? (நாளை பகலில்) மடலூர்தலை(உன்னை அடைவதற்காக ஊர் மக்கள் முன்பு வெளிப்படையாக ஒரு குறீயிட்டின் (மன் குதிரையில் ஏறுவது) மூலம் தெரிவிப்பது) பற்றியே!

நம் காதலை இன்னும் சபைக்கு கொண்டுவராத குற்றவுணர்வு உனக்கில்லையா ?

Complete prose of the Thirukkural 1136 in tamil (Click the link)

June 21, 2015

நினைப்பதெல்லாம் . . .

உளமார எழுத வேண்டிய தருணம் இது.

2013 எனது எம்.பி.ஏ கனவுகளில் ஆயுத்தமாகி எனது மனதை முழுமையாக அதற்கு ஒப்படைத்தேன். அதன் விளைவாக எம்.பி.ஏ-வுக்கு நுழைவுக்கிடைத்தது.  அப்போழுது 2014 ஏப்ரல்-ஜூலை ஒய்வு விடுப்பு நேரத்தில் கல்யாணம் பேச்சும் எண்ணமும் ஒலித்தது வீட்டிலும் மனதிலும். எனக்கு அவளின் முகமும் ஞாபகத்திற்கு வந்தது. அவளை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவளுக்கும் எனக்கும் ஒற்றுமைகள் பல உண்டு. அப்படி இருவருக்கும் ரசனை, குறிக்கோள்கள் (சொல்ல போனால் அவளிடம் நான் நன்றாக பேசிய பொழுது அவளின் லட்சியங்களை கேட்டே அவள் மீது மதிப்புக் கொண்டு அவளின் நட்பு பாராட்ட விரும்பினேன்) உயர்வாக இருப்பதனால் இருவரும் வாழ நன்றாகவும் ஆனந்தமாகவும் இருக்குமே என்று நினைத்தேன்.

நினைவுகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் வேவ்வேறு பிரிவை சார்ந்தவர்கள். எனது தங்கையின் கல்யானத்தால் ஆன குழப்பமே அதிகம். நான் வேறா ? தம்பியின் கல்யாணமும் சிக்கல்களுக்கு உள்ளாகும். எல்லோரும் முழு நிறைவு என்பது சற்று குறைவாக இருக்க சாத்தியம் அதிகம். முக்கியமாக நான் எம்.பி.ஏ படிக்க போனால் கல்யாணம் நடத்த தாமதம் ஆகும். அவளுடைய வீட்டில் எப்படி சொல்லி கல்யாணத்தை தாமத படுத்தவும் முடியாது. அதுவும் மூன்று நான்கு ஆண்டுகளாக பெண்ணுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்களிடம். ஆதலால் என் எண்ணத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தேன்.

ஆனால் அவ்வெண்ணம் விளைந்தது. என்னை விட்டு நீங்கா வண்ணம் இருந்தது. இப்படி போய் கொண்டு இருக்கையில் எங்கள் வீட்டிலும் பெண் பார்க்கும் படலம் தீவிரமாய் சென்று கொண்டு இருந்தது. அந்த சுழற்சியிலும் என்னை வேறு வழியின்றி ஆட்படுத்திக்கொண்டேன்.  ஒன்றும் அமையவில்லை.  இப்படி சென்றுக்கொண்டு இருக்கையில் எனது கல்லூரியில் ஒரு பெண் மீஷாவிடம் பல நாள் நடந்த பேச்சுகளில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் - நீ எடுக்கும் முடிவை நீ வாழ்நாள் முழுவதும் சுமப்பாய். இதில் உன் குடும்பத்திற்கு என்று பார்த்தால் உன் மகிழ்ச்சி கேள்விக்குள்ளாகும். ஒருவேளை வீட்டில் பார்க்கும் பெண் சரியில்லை என்றால் என்ன செய்வாய் ? உனக்கு பிடித்ததை செய். வீட்டில் உள்ளவர்கள் உன் வாழ்க்கையில் இருக்கும் நேரம் குறைவு.

அதன் பின் நான் என்னை பற்றி அதிகம் யோசிக்க துவங்கினேன். நான் எனது வாழ்விற்கு என் நலனிற்கு என் அமைதியிற்கு என் மகிழ்ச்சியிற்கு வாழவேண்டிய நேரம் வந்து ஆயிற்று. கடந்த 10 ஆண்டுகளாக குடும்பம் என்னும் வண்டி தனை ஓட்டி ஆயிற்று. போதும். ஆதலால் என் மனதில் உள்ள நியாயமான எண்ணதிற்கு தர வேண்டிய இடத்தை தர நினைத்தேன்.  முதலில் தம்பியிடம் கூறினேன். அவன் சற்று குழப்பினான். இருப்பினும் என் முடிவு சரி என்றே எனக்கு பட்டது. ஊரில் இருந்து கிளம்பும் முன் அம்மாவிடம் மணக்குள விநாயகர் கோவிலில் வைத்து சொன்னேன். அம்மாவிடம் எதிர்ப்பு எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. அதேப் போல் அம்மா எதிர்க்கவில்லை. நீ ஒரு முடிவு எடுத்தால் நீ யோசித்து எடுப்பாய். ஆதலால் நான் சம்மதிக்கிறேன் என்று கூறினார்கள். பாட்டியிடம் கூறினேன். நீயுமா ? என்றாள். ஆம் பாட்டி. இவளை எனக்கு பிடித்து இருக்கிறது. நல்ல பெண் குணம் ரசனை என்றேன். பாட்டி முழு சரியும் சொல்லவில்லை முழு மறுப்பும் சொல்லவில்லை. சமூக சூழலில் பழைமைவாதியின் பின்புலத்தில் வாழ்க்கையில் அவள் பட்ட பாடத்தின் பின்னனியில் வைத்து பார்க்கையில் அதை தான் அவளிடம் எதிர்ப்பார்க்க முடியும். ஆனால் அவள் ஆசி எனக்கு இருநூறு சதவிகிதம் உண்டு என்று எனக்கு தெரியும்.  ஆதலால் துணிந்தேன்.

இருப்பினும் இப்பொழுது தான் மிகவும் கடினமான கட்டதிற்கு வந்தேன். அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்க போராட்டம். துன்னுள் விழைந்து மோதினேன். நண்பர்களை நாடினேன். அனைவரும் என்னை ஆதரித்தார்கள். கொலம்பஸ், இண்டியானவில் என் தூக்கங்கள் தொலைந்தது. எண்ணங்கள் அலைந்தது. கொலம்பஸில் வந்த முதல் வாரமே சொல்ல முற்பட்டேன். சொல்லக்கூடிய உன்னதமான தருணம் அல்ல. ஆதலால் பயணத்தை தள்ளிப்போட்டேன். ஆனால் அது எத்தனை உரக்கங்களை தள்ளிப்போட்டது தெரியுமா ? அதற்கு அடுத்த வாரம் சொல்ல முற்பட்டேன் . அதுவும் வேலைக்கு ஆகவில்லை. சரி இந்த வாரம் செல்லலாம் என இருந்தேன். செல்ல முடியாத சூழலில் அவள். வேறு வழியில்லை அலைப்பேசியில் சொல்வது தான் இப்போதைய வழி என்று முடிவு எடுத்தேன்.

இதற்கு ஆயுத்தம் என்பது அப்படி ஒரு முதன்மையான் செயல். ஆதலால் என் மனதில் உள்ளதை மிக தெளிவாக சொல்ல வேண்டும். ரத்தினச்சுருக்கமாக சொல்ல வேண்டும். ஆழமாக சொல்ல வேண்டும். அழகின்மையோடு சொல்லவேண்டும். ஆனால் நெஞ்சை பிராண்டும் அளவிற்கு மானே தேனே என்று எல்லாம் சொல்லக்கூடாது. பொதுவாக நான் எனது எம்.பி.ஏ வியூகங்களை வெளியே பேசுவதில்லை. ஆனால் நான் மார்கேட்டிங் ஃபில்ட் ஸ்டடியில் கற்றுக்கொண்டது என்னவென்றால் நீ சொல்வது மிக முக்கியம். அதுவே அடுத்தவர்களுக்கு போய் சேரும். உன் மனதில் என்ன நினைக்கிறாய் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும் ஆதலால் சொல்வதை நன்றாய் ஆராய்ந்து ஆழமாக தெளிவாக அழகாக சுருக்கமாக சொல்.  ஆதலால் நான் சொல்ல வேண்டியதை தற்காலிக மின் மடலில் கொட்டினேன். சரி செய்தேன். கூட்டினேன். முறைப்படுத்தினேன். வார்த்தைகளை மாற்றினேன். இரண்டு நாட்களாக.  பாரதி சொன்ன மதி தனில் மிக தெளிவு வேண்டியதை பெற்றேன். 

இவ்வளவு ஆயுத்தமாகியும் அவளிடம் சொல்ல நேரம் நெருங்கும் பொழுது அப்படி ஒரு பட படப்பு. ஆனால் ஆயுத்தமாவது எவ்வளவு நன்மை பயவிக்கும் என்பதை அப்பொழுது உணர்ந்தேன். நான் பேச நினைத்தது தெளிவாக இருந்தது. பேசக்கூடாததும் தெளிவாக இருந்தது. முதலில் ஆங்கிலத்தில் தான் எழுதி வைத்துக்கொண்டேன். ஆங்கிலத்தில் சொல்வது ஈசியாக இருக்கும் ஏனென்றால் நம்ம ஓர் அளவு மனப்பாடம் செய்தே பழகிய மொழி. ஆனால் தமிழில் தான் சொல்லுவேன் என்று மனசங்கல்ப்பம் செய்து கொண்டேன். தமிழிலும் ஆயுத்தமானேன். ஏன் என்றால் அது தான் உள்ளார்ந்து வரும் (internalize என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்)

இன்று ஜுன் 19 2015 வெள்ளி அன்று மாலை 7 மணி. அவளிடம் பேசுவது முன்பு கை பட பட வென்று இருக்கிறது. கால்களோ உட்காரவில்லை. முகத்தை அலம்பினேன். தலைவாரினேன். என்னை பார்த்து கண்ணாடியில் சிரித்துக்கொண்டேன். இது நடந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். மகிழ்ச்சியும் அடைந்தேன். ஆனால் இனம்புரியாத ஒரு நடுக்கும் இருந்துக்கொண்டே தான் இருந்தது. குளிர்சாதன அரையில் திடீர் என்று ஐந்து-ஆறு டிகிரி குறைந்தால் ஏற்படும் நடுக்கம் போல. மாலை7:35க்கு அவளுக்கு போன் செய்தேன். போனை எடுத்துப் பேசினாள். எடுத்த உடனே சொல்லாதே. அவள் கேட்கும் மனநிலையில் இருக்கிறாளா அல்லது வேறு வேலையா இருக்கிறாளா என்பதை தெரிந்துக்கொள். ஒரு 5-10 நிமிடம் மொக்கையை போட்டேன். பின்பு அவளிடம் சொன்னேன். உங்கிட்ட ரொம்ப நாளா ஒன்னும் சொல்லனும் சொல்லனும்’னு நினைக்கிறேன். இம்பார்டண்ட் மேட்டர். சொல்லலாமா. இப்ப பேச முடியுமா என்று கேட்டேன். என்ன விஷயம் சொல்லு என்றாள். "நான் எம்.பி.ஏ காலேஜுக்க்கு வருவதற்கு முன்பு எனக்கு இவ்வெண்ணம் தோன்றியது. அப்போழுது இரண்டு வருடம் காத்திருக்க சொல்ல என்னால் முடியவில்லை. பெண் வீட்டிலும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எங்க வீட்டிலும் பார்க்க துவங்கவில்லை. சரி மேலே படிப்போம். இந்த எண்ணம் வளருதா பார்ப்போம் என்று இருந்தேன். சரி கேட்கலாம்னு தான் நெனச்சு இந்த முடிவுக்கு வந்தேன். (உம்ம்ம் என்றால். அவள் முகத்தில் ஒரு புன்னகையை கண்டேன். நீயா ராஜேஷ்  என்று அவளுக்கு ஒரு எண்ணம் போல) நம்ம இரண்டு பேருக்கும் பல விஷயம் ஒத்துப்போது. we have many things in common. நம்ம இரண்டு பேரும் கல்யாண வாழ்க்கைல சந்தோஷமா இருக்க முடியும்’னு நினைக்குறேன். நீயும் அப்படி நெனச்சா எனக்கு ரொம்ப சந்தோஷம். யோசிச்சு சொல்லு. ஒன்னும் அவசரம் இல்லை. பொறுமையா சொல்லு. எனக்கு புரியுது உனக்கு கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். எனக்கு அப்படி தான் இருந்துச்சு. ரொம்ப நாள் யோசிச்சு தான் நான் கேக்குறேன்".  (பி.கு இதுவரை சொன்னவற்றில் ஒரு 90 சதவிகிதம் சொன்னேன். சில விஷயங்கள் பின்பு தொடர்ந்து பேசும் பொழுது சொல்லி இருப்பேன்) அப்பாடா என்று மூச்சு விட்டேன். 

ஆனால் அவளோ. நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லை என்றாள். மறுபடியும் (பொதுவாக மிக அதிக படியாக பெண்கள் சொல்லும்)அதே வார்த்தைகளா என்று என் மனம் கன கனத்தது.  (இல்ல நீ இப்ப எதுவும் சொல்லாதே. யோசிச்சு சொல்லு என்று மனதில் நினைத்தேன். வாயும் வந்தது). ஆனால் உடனே சொல்லிவிட்டாள். நீ சொல்லுவது சரி. ஆனால்  எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. உண்மையை சொல்லி விடுகிறேன் என் வீட்டில் ஒரு விஷயம்(கல்யானம்) முடிவு அடையும் நிலையில் உள்ளது. நான் அந்த பையனிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாள். அப்படியா. ரொம்ப சந்தோஷம். Happy for you. Wish you good luck என்றேன். எப்ப கல்யாணம் என்று கேட்டேன். அது போய் கொண்டு இருக்கு. கொஞ்சம் இழுவையாதான் இருக்கு. அடுத்த மாசம் ஆகும் என்றாள். என்ன மன்னிச்சுரு. நான் உன்ன ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். இப்ப என்ன நிலைமைல கல்யாண தேடல் போய்னு இருக்குனு கேட்டு இருக்கலாம். இல்ல ராஜேஷ், நீ கேட்டு இருந்தாலும் சொல்லி இருக்க மாட்டேன் என்றாள். முடியும் வரை சொல்ல வேண்டாம் என்றே சித்தம் (பாடங்கள்) .  உனக்கு தோனிச்சானா எனக்கு தெரியாது. எனக்கு தோனிச்சு கேட்டேன். சாரி என்றேன். பரவா இல்லை ராஜேஷ். அது மிக இயற்கையான ஒரு எண்ணம் ஒரு தவறும் இல்லை. நீ இருக்கும் சந்தர்பத்தில் நானும் இதை தான் செய்வேன். தவறு இல்லை. நீ தவறாகவும் கேட்கவில்லை. நீ நேராக என்னிடம் கேட்டதே நல்ல விஷயம் தான்.  ஒன்னும் தப்பு இல்லை என்றாள். நம்ம நல்ல நண்பர்களா இருப்போம் என்று சொன்னாள். (ஆமா முஸ்தபா முஸ்தபா-வே தான்) கேட்க நல்ல தான் இருந்துச்சு. ஆனா என் மனதிற்கு அது அதிர்ச்சியே (ஆதாவது அவளுக்கு முடியும் தருவாயில் இருந்தது. ஏனெனில் சென்ற மாதம் தான் அவளின் கல்யானத்தேடல் சொதப்பி கொண்டு இருப்பதாக சொன்னாள்). பின்பு அவளின் கதையை கேட்டு கொண்டு இருந்தேன்.   பிறகு ஒரு 15-20 நிமிடத்திற்கு இடையில் ஒரு 5 நிமிடம் ஒன்றுமே நிகழாததுப் போலவே இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். அவளிடம் பேசிய பின்பு வாய்விட்டு சிரித்தேன். சிரித்தேன். சிரித்தேன். ஆனா ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவளுக்கு விரைவாக நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணினேன்.

ஆயிரம் இருந்தாலும் அந்த அளவுக்கு ஒரு பக்குவத்தோட அவ எடுத்துக்குட்டதும் அதுக்கு அப்புறம் அவ பேசினதும் ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. ஏனா பல பேரு ஏதோ தலைக்கு வந்த தலை வலி தீடீர் என்று இடம் பெயர்ந்து நெஞ்சு வலி வந்தத்து போன்று அவள் பேசுவில்லை. அதுவும் அது இயற்கை என்று சொல்லுவதற்கு வாழ்வின் ஒரு புரிதல் வேண்டும் அல்லவா. ஒரு விதத்துல எனக்கு வருத்தம் (அதன் பின்பு நான் எவ்வளவு தான் நிகழ்ந்ததை நினைத்து வாய்விட்டு சிரித்தாலும் சில உண்மைகள் சிரிது நேரத்திற்கு கொஞ்சம் கசக்கத்தான் செய்யும்) இருப்பினும் பெரிய வருத்தம் இல்லாததிற்கு அவள் அதை எடுத்துக்கொண்டு என்னிடம் பேசிய விதமே காரணம்.  என் எம்.பி.ஏ கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் வகுப்பில் சொல்லி தந்தது தான் ஞாபகத்துக்கு வருது. எந்த ஒரு தருணத்திலும் நாம் சந்தர்ப்பத்திலும் (situation) சூழலிலும் தான் கவனம் செல்லுத்த வேண்டும். தனி நபர்(people) மீது கவனம் செலுத்தக்கூடாது என்று சொல்லி கொடுத்து உள்ளார்கள். (In difficult situations focus on situation not on people). அதை தானே அவள் அவ்வளவு அழகாக செய்தாள்.

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!!  
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

அதனால் தான் நினைப்பதெல்லாம் என்று இப்பதிவின் தலைப்பாக வைத்தேன். சொன்னவை யாவுமே நான் இப்பொழுது நினைப்பது. 

இப்பொழுது . . .
என் நெஞ்சுக்குள் முடிந்துவிட்டு
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்

May 29, 2015

காளி காதல் - பாரதியார்

சில பாடல்கள் நெஞ்சினைத் தாண்டி நேரடியாக வேறெங்கோ உள்ளேச் செல்லும். அப்படி ஒரு பாரதி பாடல் இது - காளி காதல்

காளி காதல்
பின்னொர் இராவினிலே -- கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே -- களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்,
அன்னை வடிவமடா! -- இவள்
ஆதி பராசக்தி தேவியடா! இவள்
இன்னருள் வேண்டுமடா! -- பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! 8

செல்வங்கள் பொங்கிவரும்; -- நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே -- இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை -- இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை -- நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா! 9
       - மகாகவி சுப்ரமணிய பாரதியார்

[பாமாலை : பக்தி பாடல்கள் >> தோத்திரப் பாடல்கள் >> மூன்று காதல்]


 

 

April 10, 2015

Diary of a Diva | Pretty Women is 25

I am an ardent fan of Julia Roberts though I had watched only four films [Notting Hill, Erin Brockovich, Pretty Women, and Eat Pray Love] of Julia Roberts. Pretty Women is definitely the least favorite among all those four movies. Yet, today April 9th 2015, when a picture of her appeared on the online daily newspaper of The Hindu, I couldn't resist reading it. So, I read it. It was usual blah blah blah stuffs of any movie that is celebrating 25 years. At the same time, I liked this particular line in that article - As chick-lit writer Marian Keyes, says, “Relationship gurus always said that an attraction based on friendship and mutual respect was far more likely to stay the course — and they were right.” That is actually nice and I can't agree more with that. 

Source: Pretty Women is 25 (The Hindu)


April 08, 2015

தமிழ் இலக்கிய உலகின் அசுரன் #‎ஜெயகாந்தன்

அற்பங்களை அகங்காரத்தால் எதிர் கொள்கிறேன் என்று சொன்ன தமிழ் இலக்கிய உலகின் அசுரன் #‎ஜெயகாந்தன்‬ இறந்து விட்டான்! ‪
                - ஜெயகாந்தன்

Face trifles (/ vileness / meanness) with conceit (/ arrogance / egotism / caprice)
                - Jeyakanthan

 



March 11, 2015

தனுர்வேதம்


அக்னிவேசர் அவனை கைத்தலம் பற்றி அழைத்துவந்ததைக்கண்ட ஷத்ரிய இளைஞர்கள் திகைத்தனர். அன்றைய தனுர்வேத வகுப்பில் அவனை அவர் முன் நிரையில் அமரச்செய்தபோது ஷத்ரியர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். அக்னிவேசர் கேட்டார் “வில் என்பது என்ன?” வில் என்பது வானத்தின் வளைவு என்றான் ஒருவன். மலைச்சிகரங்களின் வடிவம் என்றான் இன்னொருவன். நாகம் என்றான் பிறிதொருவன். அறம் என்றும் வீரம் என்றும் வெற்றி என்றும் சொன்னார்கள் பலர். அக்னிவேசர் துரோணனிடம் கேட்டார் “பரத்வாஜரின் மைந்தனே, நீ சொல்.”

துரோணன் எழுந்து “வில் என்பது ஒரு மூங்கில்” என்றான். மாணவர்கள் நகைக்கும் ஒலிக்கு நடுவே தொடர்ந்து “மூங்கில் என்பது ஒரு புல்” என்றான். அக்னிவேசர் புன்னகையுடன் “அம்புகள்?” என்றார். “அம்புகள் நாணல்கள். நாணலும் புல்லே” என்றான் துரோணன். “அப்படியென்றால் தனுர்வேதம் என்பது என்ன?” என்றார் அக்னிவேசர். “வில்வித்தை என்பது புல்லும் புல்லும் கொண்டுள்ள உறவை மானுடன் அறிந்துகொள்வது.” அக்னிவேசர் தலையசைத்தார். “புல்லை ஏன் அறியவேண்டும் மானுடர்?” என்றார். துரோணன் “ஏனென்றால் இந்த பூமியென்பது புல்லால் ஆனது” என்றான் .

அக்னிவேசர் திரும்பி தன் மூத்தமாணவனாகிய மாளவ இளவரசன் மித்ரத்வஜனிடம் “இவனை என்ன செய்யலாம்?” என்றார். “பிரம்மனில் இருந்து தோன்றியதும் ஐந்தாவது வேதமுமான தனுர்வேதத்தைப் பழித்தவனை அம்புகளால் கொல்லவேண்டும்” என்று அவன் சொன்னான். “அவ்வண்ணமே செய்” என்றபின் துரோணனிடம் “உன் புல் உன்னை காக்கட்டும்” என்றார் அக்னிவேசர். மாளவன் தன் வில்லை எடுத்து அம்பைத் தொடுப்பதற்குள் துரோணன் தன் முதுகுக்குப்பின் கச்சையில் இருந்த தர்ப்பைக்கட்டில் இருந்து இரு கூரிய தர்ப்பைகளை ஒரே சமயம் எடுத்து வீசினான். மாளவனின் கண்ணுக்கு கீழே கன்னச்சதைகளில் அவை குத்தி நிற்க அவன் அலறியபடி வில்லை விட்டுவிட்டு முகத்தைப்பொத்திக்கொண்டான். அவன் விரலிடுக்கு வழியாக குருதி வழிந்தது.

அனைவரும் திகைத்த விழிகளுடன் பார்த்து நிற்க அக்னிவேசர் புன்னகையுடன் சொன்னார் “இதையும் கற்றுக்கொள்ளுங்கள் ஷத்ரியர்களே. கணநேரத்தில் மாளவனின் கண்களை குத்தும் ஆற்றலும் அவ்வாறு செய்யலாகாது என்னும் கருணையும் இணைந்தது அந்த வித்தை. கருணையே வித்தையை முழுமைசெய்கிறது.” மாளவனை நோக்கித் திரும்பி “உன் இரண்டாம் ஆசிரியனின் காலடிகளைத் தொட்டு வணங்கி உன்னை அர்ப்பணம் செய்துகொள். அவன் அருளால் உனக்கு தனுர்வேதம் கைவரட்டும்” என்றார் அக்னிவேசர்.

February 09, 2015

மனப்பாடம் - கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகன் வலையத்தில் எனது கடிதம். ஒரு எழுத்தாளருடன் உரையாடலில் இருப்பது மனதிற்கு எவ்வளவு நன்றாக உணரச்செய்கிறது. :)
உனது எழுத்து நன்றாய் உள்ளது (சில ஒற்றெழுத்துப் பிழைகள் இருப்பினும்) என்று நண்பன் செவியர் சொல்லியது எனக்கு நன்றாய் உள்ளது. அதற்கு நான் ஜெயமோகனுக்குத் தான் கடமைப்பட்டு இருக்கிறேன். அவரது இணையத்தளத்தை தொடர்ந்து வாசிப்பதன் விளைவு.

வலையத்தில் வந்ததை பெருமையாக எண்ணவில்லை ஆனால் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

ஜெயமோகனின் -> மனப்பாடம் பதிவு (சுட்டியைத் தட்டவும்)
எனது கடிதம் -> மனப்பாடம் - கடிதம்  (சுட்டியைத் தட்டவும்) (கீழூம் உள்ளது)

அன்புள்ள ஜெ

தங்களின் மனப்பாடம் பற்றிய பதிவை பார்த்தேன். எனக்கு மனனம் செய்வதில் சிறு தயக்கம் இருந்தது. அது இப்பொழுது நீங்கியது. சென்ற ஆண்டு நானும் எனது நண்பரும் நாளும் ஒரு திருக்குறள் கற்க வேண்டும் என்று முடிவு செய்து, அக்குறளை பற்றிச் சற்று ஆராய்ந்து, அதற்கு ஒரு உதாரணம் கண்டுக்கொண்டு எங்களது வலைப்பூவில் பதிவு செய்துவந்தோம் (மேற்ப்படிப்பின் காரணமாக இடைவேளை ஆனால் வெண்முரசுவிற்கு அல்ல).

துவக்க காலத்தில் நான் எல்லா குறள்களையும் மனனம் செய்து வந்தேன். அது எனக்கு நன்கு நினைவில் உள்ளது. உதாரணமாக நான் துவக்கக் காலத்தில் மனனம் செய்த குறள் – “உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து”. ஒரு யானைப் பார்க்கும் பொழுது குறிப்பாக கோயில்களில் பாகனுடன் பார்க்கும் பொழுது அது இன்னும் ஆழமாய் நன்கு செல்கிறது. பின்பு எப்பொழுது கேட்டாலும் அக்குறளை அசைப் பிரித்து பொருள் சொல்ல முடிந்தது.

ஆனால், ஏன் மனனம் செய்ய வேண்டும்? என்னை மேம்படுத்திக்கொள்ளத் தானே பிறருக்கு சொல்வதற்கு/காட்டிக்கொள்வதற்கு இல்லையே என்று தோன்றத் துவங்கியப் பின்னர் மனனம் செய்வதைப் பெரும்பான்மையாக தவிர்த்து விட்டேன். அதனுடைய விளைவை நான் சில மாதங்கள் பின்பு தான் உணர்ந்தேன். குறள்களின் பொருள் (common sense-ஆக )நினைவில் இருந்தாலும் குறள் ஒரு படிமமாக நினைவில் இல்லாமல் ஒரு திறப்பாக இல்லாமல் இருந்தது. அது எவ்வளவுப் பெரிய தவறு. தியானத்திற்கு மனனம்-னும் எவ்வளவு முக்கியம் என்பதை உங்களது பதிவை கண்டப்பொழுது உணர்ந்தேன்.

நன்றி.

அன்புடன்
ராஜேஷ்

February 01, 2015

உயிர் என்றால் என்ன ?

ஜெயமோகனின் வெண்முரசுவில் (மகாபாரதம்) [நூல் மூன்று – வண்ணக்கடல் – 48] (சுட்டியை தட்டவும்) இருந்து 

“அழியாதது, என்றுமிருப்பது என்று இவற்றை அறிபவன் முதலில் உணர்வது தன்னுடைய அழிவையே. அருகமரபு அதையே முதல்ஞானமாக முன்வைக்கிறது. இத்தனை சொற்களுக்கு அப்பாலும் நீங்கள் அறிந்துகொள்ளாதது அது வைசேடிகரே. புடவியின் அகாலஇருப்பை தன் காலத்தைக்கொண்டே மானுட அகம் உணர்ந்துகொள்ளமுடியும்” என்றார்.

அப்பால் நீண்டகுழலை தோளில் அவிழ்த்துப்போட்டு கரியதாடியுடன் இருந்தவர்தான் வைசேடிகர் என்று இளநாகன் எண்ணிக்கொண்டான். “எது அழியக்கூடியது சாரங்கரே? எதுவும் அழிவதில்லை, அனைத்தும் உருமாறுகின்றன என்று உணர்வதே வைசேடிக மெய்யியலின் முதல்படி. இவ்வுடலை எரித்தால் சாம்பலாகும். காற்றில் பறக்கும். நீரில் கரையும். மண்ணில் கலக்கும். வேர்களில் உரமாகும். காயாகக் காய்த்து கனியாகக் கனிந்து உணவாக ஊறி இன்னொரு உடலாகும். எங்கு செல்கிறது அது? இங்குள அனைத்திலிருந்தும் அது எழுகிறது. இங்குள அனைத்திலும் மீண்டு செல்கிறது. பருப்பொருளுக்கு அழிவில்லை.”

“ஆனால் உயிர்?” என்று இருளுக்குள் எவரோ கேட்டனர். “உயிரென்பது ஒரு அறிதலே. வெற்றிலையும் சுண்ணமும் பாக்கும் கலந்து செந்நிறம் பிறப்பதுபோல இப்பருப்பொருட்களின் கூட்டால் உயிர் பிறக்கிறது. வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்து அது வெயிலில் காய்ந்தால் அச்செந்நிறம் எங்கே செல்கிறது? அது பிறிதொன்றாக மாறிவிடுகிறது. உயிரென்பது உடலின் ஒரு நிலை. இன்னொரு உடலின் அறிதல். உயிர் என்றால் என்ன என்று நான் கேட்டேனென்றால் நீங்கள் சொல்லும் அனைத்து விடைகளும் உயிரை இன்னொரு உயிரான நாம் அறியும் முறைகளைப்பற்றியதாகவே இருக்கும்.”

“முன்பொருநாள் கடலோடி ஒருவன் ஆழ்கடலில் கலம் உடைந்து நீந்தி மணிபல்லவம் என்னும் தீவுக்குச் சென்றான். அந்த மாயத்தீவுக்குச் செல்லும் முதல்மானுடன் அவன். அங்கே அவன் தாவரங்களுக்காக, பூச்சிகளுக்காக, பறவைகளுக்காக, மிருகங்களுக்காகத் தேடினான். பாறைகள் மட்டுமே இருந்த அந்தத் தீவில் உயிர்கள் இல்லை என்று எண்ணி ஏங்கி அவன் மடிந்தான். அவனை அழைத்துச்செல்ல வந்த தேவர்களிடம் ‘உயிர்களில்லா வெளிக்கு என்னை கொண்டுவருமளவுக்கு நான் செய்த வினை என்ன?’ என்றான். ‘இங்கே உயிர்களில்லை என நீ எப்படி எண்ணினாய்? இங்குள்ள பாறைகள் அனைத்தும் நீ அறியாத இயல்புகொண்ட உயிர்களே. உயிர் என நீ கொண்ட அறிதலின் எல்லையால் நீ இறந்தாய். வினை என்பது அறியாமையே’ என்றனர் தேவர். ஆம் வணிகர்களே, உயிரென்பது பருப்பொருளில் நாமறியும் ஒரு நிலை மட்டுமே.”

“அவ்வண்ணமே நாமறியும் இப்பருப்பொருள்வெளி என்பதும் ஓர் அறிதல்மட்டுமே என உணரும்போதே அறிதலின் பயணம் தொடங்குகிறது. இங்குள்ள ஒவ்வொன்றும் சொற்கள். அச்சொற்களால் சுட்டப்படுவதாக நிற்பதே பரு. அதையே பதார்த்தம் என்கின்றது வைசேடிக மெய்யியல். தென்மொழியாகிய தமிழிலேயே அதற்கு மிகச்சரியான சொல்லாட்சி உள்ளது. பொருள் என்னும் சொல்லுக்கு அவர்கள் அர்த்தம் என்றும் வஸ்து என்றும் பொருள்கொள்கிறார்கள்” வைசேடிகர் சொன்னார்.  “பருப்பொருள் வெளி கோடானுகோடி பதார்த்தங்களால் ஆனது.”

“அம்முடிவின்மையை ஒன்றொன்றாய்த் தொட்டு அறிய முடிவில்லா காலமும் அகமும் தேவை. ஆகவே அவற்றை நாம் அறிவதில் உள்ள நெறிகளை மட்டுமே வகுத்துக்கொள்கிறது வைசேடிகமெய்யியல். பொருண்மை, குணம், செயல், பொதுத்தன்மை, தனித்தன்மை, இணைவுத்தன்மை என்னும் ஆறு வெளிப்பாடுகளால் இப்பருவெளி நம்மை வந்தடைகிறது. இங்குள்ள ஒவ்வொரு பொருளும் இவ்வெளிப்பாடுகளில் காட்டும் சிறப்புத்தன்மையாலேயே தன்னை தனித்துக்காட்டுகிறது. ஆகவேதான் எங்கள் மெய்யியலை வைசேடிகம் என்கிறோம்.”

“பருப்பொருள் முதலியற்கையால் ஆனது என்று சொல்லும் சாங்கியர்களும் உங்களவர்களா?” என்று ஒரு குரல் கேட்டது. “இல்லை. அவர்கள் முதற்பொருளை உணர்ந்தவர்கள். ஆனால் தெளிந்தவர்கள் அல்ல. மூவாமுதலா பேருலகின் பொருண்மையை அவற்றில் எது அறியற்பாலதோ அதைக்கொண்டல்லவா அறியவேண்டும்? கரும்பாறையை உடைத்தால் தூளாகிறது. நீரை உடைத்தால்?” வைசேடிகர் சொன்னார். “நீர் நம் கண்ணுக்குத்தெரியாத அணுக்களாக ஆகிறது. அவ்வணுக்களின் படர்தலைத்தான் நாம் ஈரம் என்கிறோம்.”

“ஒன்றின் மிகச்சிறிய அலகே அணு. அதற்குமேல் பகுக்கமுடியாதது எதுவோ அதுவே அணு. இங்குள்ள ஒவ்வொரு பருப்பொருளும் அதன் நுண்ணணுக்களால் ஆனது. நீர் நீரின் அணுக்களால். நெருப்பு நெருப்பின் அணுக்களால். அவற்றின் தனித்தன்மைகள் அனைத்தும் அந்த அணுக்களின் இயல்புகளாக உள்ளவைதான். அணுக்கள் ஆறு நெறிகளால் ஆடும் ஆடலே இப்புடவி.”

இருளுக்குள் எவரோ அசைந்து அமர்ந்தனர். அவருக்குள் ஓடும் வினா அந்த அசைவில் தெரிந்தது. பலர் குறட்டைவிட்டுக்கொண்டிருந்தனர். “வணிகர்களே, அணு அண்டமாவதெப்படி என உங்கள் அகம் திகைக்கிறது. பாருங்கள், இதோ இந்தக் கூடத்தில் விளக்கொளியில் புகைபோலப் பறக்கும் நுண்ணிதின் நுண்ணிய நீர்த்துமிகளே அதோ வெளியே விண்ணையும் மண்ணையும் மூடிப்பொழிந்துகொண்டிருக்கின்றன. அதற்கப்பால் முடிவிலாது கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன” என்றார் வைசேடிகர். இருளில் அக்கணத்தில் அனைத்தையும் முழுமையாகக் கண்டுவிட்டதுபோல இளநாகன் உடல் சிலிர்த்துக்கொண்டது.

January 25, 2015

அன்னமே பிரம்மம்

பல நாட்களுக்குப்(மாதங்களுக்குப்) பிறகு ஒரு பதிவு இங்கே. கடந்த இரு வாரங்களாக என் மனதில் ஓடும் ஒரு வாக்கியம் ‘அன்னமே பிரம்மம் என்கின்றன உபநிடதங்கள்’. அதன் பிறகு எனக்கு சமையல் செய்வது இன்னும் இன்பமாய் உள்ளது. இன்புர செய்கிறேன்.

கீழ்காணும் ஜெயமோகனின் ‘வெண்முரசு’வில் வரும் அத்தியாயமே அதற்கு காரணம். இவ்வத்தியாத்தைப் வாசித்தால் நன்கு புரியும். சில முதன்மையான வற்றை மட்டும் வெட்டி எடுத்து மற்றும் ஒரு தனி தளத்தில் போட்டு உள்ளேன்.

வெண்முரசு: வண்ணக்கடல் 40 (சுட்டியைத் தட்டவும்) (Fantastic)
நான் கட்டிய தளம்; வண்ணக்கடல் 40 - பகுதிகள்

எனக்கு சாப்பாட்டின் மீதும், சமையிலின் மீதும் ஆர்வம் இருப்பதற்கு பெரிய காரணம் எனது பாட்டி (எ) பட்டு. அதை ஒரு தவமாகவே கற்பனையுடன் செய்வார்கள் தினமும். 


January 01, 2015

2015

பல நாட்கள் (மாதங்கள்) பின்பு ஒரு பதிவு. இரு பதிவுகள் எழுதத் துவங்கி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆண்டினை திரும்பிபார்க்கையில் எனக்கு சில மகிழ்ச்சி இருப்பினும் சில வருத்தங்கள் உண்டு. எனது ஆற்றலுக்கு இனையாக நான் செயல்லாற்றவில்லை. சிந்தனை சிதறடித்து செயல் கலைந்தது. 

2015 ஆண்டு அப்படியில்லாமல், வருத்தங்களை குறைக்க வேண்டும் (Regret Minimisation Framework)

பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்
                                        - பாரதியார்