Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

January 25, 2015

அன்னமே பிரம்மம்

பல நாட்களுக்குப்(மாதங்களுக்குப்) பிறகு ஒரு பதிவு இங்கே. கடந்த இரு வாரங்களாக என் மனதில் ஓடும் ஒரு வாக்கியம் ‘அன்னமே பிரம்மம் என்கின்றன உபநிடதங்கள்’. அதன் பிறகு எனக்கு சமையல் செய்வது இன்னும் இன்பமாய் உள்ளது. இன்புர செய்கிறேன்.

கீழ்காணும் ஜெயமோகனின் ‘வெண்முரசு’வில் வரும் அத்தியாயமே அதற்கு காரணம். இவ்வத்தியாத்தைப் வாசித்தால் நன்கு புரியும். சில முதன்மையான வற்றை மட்டும் வெட்டி எடுத்து மற்றும் ஒரு தனி தளத்தில் போட்டு உள்ளேன்.

வெண்முரசு: வண்ணக்கடல் 40 (சுட்டியைத் தட்டவும்) (Fantastic)
நான் கட்டிய தளம்; வண்ணக்கடல் 40 - பகுதிகள்

எனக்கு சாப்பாட்டின் மீதும், சமையிலின் மீதும் ஆர்வம் இருப்பதற்கு பெரிய காரணம் எனது பாட்டி (எ) பட்டு. அதை ஒரு தவமாகவே கற்பனையுடன் செய்வார்கள் தினமும். 


January 01, 2015

2015

பல நாட்கள் (மாதங்கள்) பின்பு ஒரு பதிவு. இரு பதிவுகள் எழுதத் துவங்கி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆண்டினை திரும்பிபார்க்கையில் எனக்கு சில மகிழ்ச்சி இருப்பினும் சில வருத்தங்கள் உண்டு. எனது ஆற்றலுக்கு இனையாக நான் செயல்லாற்றவில்லை. சிந்தனை சிதறடித்து செயல் கலைந்தது. 

2015 ஆண்டு அப்படியில்லாமல், வருத்தங்களை குறைக்க வேண்டும் (Regret Minimisation Framework)

பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்
                                        - பாரதியார்