Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

May 29, 2015

காளி காதல் - பாரதியார்

சில பாடல்கள் நெஞ்சினைத் தாண்டி நேரடியாக வேறெங்கோ உள்ளேச் செல்லும். அப்படி ஒரு பாரதி பாடல் இது - காளி காதல்

காளி காதல்
பின்னொர் இராவினிலே -- கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே -- களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்,
அன்னை வடிவமடா! -- இவள்
ஆதி பராசக்தி தேவியடா! இவள்
இன்னருள் வேண்டுமடா! -- பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! 8

செல்வங்கள் பொங்கிவரும்; -- நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே -- இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை -- இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை -- நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா! 9
       - மகாகவி சுப்ரமணிய பாரதியார்

[பாமாலை : பக்தி பாடல்கள் >> தோத்திரப் பாடல்கள் >> மூன்று காதல்]