Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

December 04, 2016

இன்று 2016/ 12 /04

இன்று என் வாழ்வில் நான் ஒரு பாதுகாப்பின்மை உணர்கிறேன் முன்பெப்பொழுதையும் விட. நான் பள்ளிகளில் படிக்கும் பொழுது உற்றார் உறவினர் இல்லாத பாதுகாப்பின்மை சில நேரங்களில் வந்ததுண்டு. தந்தை இல்லை என்று கூட கவலை பட்டது இல்லை. பட்டபடிப்பு பற்றியை கவலையை விட வேலை பற்றிய கவலையே பள்ளி நாட்களில் உண்டு.
பள்ளிகளில் படிக்கும் பொழுது என் மேல் இருந்த குடும்ப பொறுப்பு ஒரு புறம் சுமையாக இருந்தாலும் எனக்கு அது அவ்வளவு சுமையாக இல்லை.  பின்னாளில் வேலை செய்யும் போது கூட சுமையாக எண்ணியதில்லை. ஏனெனில் நான் அப்பொழுது தான் வேலை செய்ய துவங்கினேன். என் மேல் எனக்கு அதீக தன்னம்பிக்கை இருந்தது. எனக்கு நிலையான வருமான இருந்தது. 

வேலைக்கு சென்று 4-5 ஆண்டுகள் பிறகு வேலையை பற்றிய பாதுகாப்பின்மையை உணர்ந்தேன். என் திறமை மேலும், என் தொழில் சுத்தத்தின் மேல் நம்பிக்கை இருந்தாலும், எனக்கு இத்தொழிலில் வளர்ச்சி என்பது குறைவாகவே இருக்கும் என்று கருதினேன். "நான்" செல்லவேண்டிய இடம் மிக தொலைவில் இருப்பதாக நினைத்தேன். மேற்ப்படிப்பு என்பது எனது வளர்ச்சிக்கும் மட்டும் இன்றி எனது அறிவுக்கும் மிக தேவையான கட்டுமானமாக கருதினேன். ஆதலால் மேற்ப்படிப்பு படித்தேன்.

மேற்ப்படிப்பு படிக்கும் பொழுது வேலை கிடைக்காமல், கல்யாணத்திற்கு பெண் கிடைக்காமல் வாழ்வின் மீது பாதுகாப்பின்மையை உணர்ந்தேன். இவ்வளவு நேர்மையாக உழைத்தும், படித்தும், எவர் உடைமையின் மீதும் பற்றற்று இருந்தும், நல்லது நினைத்தும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். என மக்களுக்கும் என் குடும்பத்தினருக்கும் சிறந்த கட்டுமானத்தையும் வழிகாட்டுதலையும் சுற்றத்தையும்  தரவேண்டும் என்று என் மனம் விழைக்கிறது .  ஆனால் அதற்கான வேலைகளில் என்னால் முழுமையாக ஈடுப்பட முடியவில்லை. 

என்னுடைய புதிய வேலையில் என்னை பாதுக்காப்பின்மையில் ஆழ்த்தும் ஒரு மேலாளர். என் மீது சிறிதும் நம்பிக்கையில்லாமல் இருக்கும் அவர் எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை தருகிறார். என் மனம் அமைதியாகவே இல்லை. பலவற்றை நினைக்கிறது. ஒன்றும் செய்ய மறுக்கிறது. 

ஏன் என்று தெரியவில்லை. வாழ்வு எனக்கு இப்படி உள்ளது. ஒரு நேரத்தில் கடந்த கால நினைவுகள் பசுமையாக தென்றலாக தோன்றுகிறது. அதுவே சற்று ஆறுதல் அளிக்கிறது. 

எனக்கு வயது 32. காலம் சென்று விட்டது. நான் வந்தடைந்த தூரம் மிக குறைவாகவே தோன்றுகிறது. செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமாக தோன்றுகிறது. கிட்டதட்ட நான் சபரிமலையில் அழுதை மலை ஏறிய பிறகு கொள்ளும் மனநிலை. இன்னும் இறக்கம், கரிமலை, நீலிமலை, சபரிமலை இருக்கிறதே என்கிற மன சஞ்சலம். 

எங்கே என் மேலாளர் என்னை சறுக்கிவிடுவாரோ என்று ஐயம் கொள்கிறேன். இதனால் நான் இன்று என் நிகழ்காலத்தில் இல்லை. நான் நாளை பற்றியும் பல மாதங்கள் கழித்து எனது வேலையின் நிலை பற்றியும் ஐயம் கொள்கிறேன். வருங்காலத்தை பற்றி ஐயம் கொள்கிறேன்.

கடந்தகாலம் இவ்வளவு வேகமாக சென்று விட்டதே என்று நினைக்கிறேன். நிகழ்காலத்தில் யாருடனும் உடன் இல்லாமல் தனித்த ஒரு வனத்தில் உணவு சமைத்து, உழைத்து உண்டு வாழ்கிறேன். என் மக்கள் மீதும், என் நண்பர்கள் மீது ஆவிதழுவாமல் ஏற்றம் ஏற்றம் என்று எண்ணி எது சிகரம் என்று தெரியாமல் இருக்கிறேன். இன்றை நான் சிறுதும் வாழவில்லை. அதுவே அப்பட்டமான உண்மை.

எனக்கு இருக்கும் ஒரே மனநிறைவு என் வருங்கால மனைவி என்னுடன் எல்லாவற்றிலும் உடனிருப்பாள் என்னும் தெளிவும் நம்பிக்கையும் தான்.

September 17, 2016

En route to Luxembourg where Next Adventure begins

Folks,


I am thrilled to start the next voyage in my career and life. I am heading to Luxembourg where I will work for Amazon as Sr.Product Manager in their Retail Leadership Development Program!



With lots of hopes, dreams, ambition and perseverance, I landed in this country USA - a typical destination for many middle class Indians. I joined the BYU MBA program which turned out to be the best investment I've made in my career. In this program I met many fabulous people and made life time friends. However, it has also been a journey of many ups-n-down and uncharacteristic self doubts. I am glad that I was resolute and stayed there.


I wished I could stay here for some more time. However, life has different plans in store for me. Amazon-Luxembourg was the only non-USA job I had applied only because it is Amazon. Fortunately, I got the job offer in their Retail Leadership Development Program. In early October, I will begin my new career.

As I leave this truly diverse country, I carry, incredible friends, fond memories n stories and many invaluable lessons. I am sure I would come back after a while for another stint here. Until then Good Bye to all my friends here and I will stay in touch!


I like to take this opportunity to thank many people who helped me unconditionally. The list is really long and I apologize if I miss anyone. I learnt at least one thing from every official/unofficial Sherpa or mentor or BYU alum. Thank you BYU MBA Class of 2016, 2015, BYU MBA Network, my core Team 6 of first semester, my core Team 8 and Adobe Field Study Team of second semester and my all other teams viz Brand, A/c Mgmt etc.,. Big shout-out to Abhishek Reddy, Andrew Kinji Watanabe,@Anil.Dhawan (Meetup mentor), Austin Bagley, Austin Johansen, Christie Clark Rasmussen, Danner Banks, Gary K Rhoads, Meghan Whalen, Nirmal Ganesh, Reid Clark, and Sravya Vankayalapati Susarla. Thanks to Angel-Sheila Martinez, Brady David Leavitt, @Chetan Prasad, Chetan Zawar, Dave Crosby, Elena Samuels, John Peterson, Jorge Omar Ramirez, Julia Tian Mann, @Kari Ann Sewell, Lahari Prabha(for showing the path of Amazon Europe), Mark Nugent, Scott K. Christofferson, Sreekanth Rajoli Raichur and so many others. :)

And apologies to many as I couldn't call you to inform before my departure because I got my visa only yesterday while my USA visa expires tomorrow.

நான் வருவேனு சொல்லு! திரும்பி வருவேன்னு .. 20-25 மாசத்துக்கு முன்னால எப்படி போனாரோ ..ராஜேஷ் அப்படியே திரும்பி வருவேன்னு சொல்லு!!

Love you all!!

Warm Regards
Rajesh

September 16, 2016

M.S. Subbulakshmi 100

When I started listening seriously to Carnatic Music / Indian Classical music, in 2007, I was listening to multiple sources/musicians. It was like a cat running in a closed dark room trying to find a way out. My violin guru Shri Babu advised me to listen to @M.S.Subbulakshmi. I followed it blindly falling more in love with the music. Her music is so simple which IMO is very difficult to achieve. Her music is so spiritual with 100% Bhakti. Not to forget her perfect diction in any language that she sung in. If anyone listens to her music they can easily sing it along. She showed that one can attain Brahman (immortality) by Bhakti, hardwork and simple way of life irrespective of the birth (here her devdasi birth(no offense)). #MSS100 #birthCentenaryYear #MSSubbulakshmi #Inspiration


August 15, 2016

மானுட சாத்தியத்தின் எல்லைகள் | தீபா கர்மாகர்

முன் குறிப்பு: இப்பதிவினை எழுதுவதற்கு முன் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் கிரிக்கேட் விளையாட்டினை தவிர வேறு எந்த விளையாட்டினையும் தீவிர ஈட்டுபாட்டுடன் கவனித்தவனும் அல்ல தொடர்ந்து கவனித்தவனும் அல்ல. அவ்வப்போது சில விளையாட்டுகளை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான். பொதுவாக தனி நபர் (Athletics) விளையாட்டுகளுக்கான உலக பிரபல விளையாட்டு போட்டி என்றால் அது ஒலிம்பிக்ஸ் (Olympics) தான். எனக்கு விவரம் தெரிந்து அட்லாண்டா (Atlanta) 1996 தான் நான் முதல் முறையாக கேள்விப்பட்ட ஒலிம்பிக்ஸ். அதன் பின் பல ஒலிம்பிக்ஸ் வந்தாலும் 2008 பிஜீங் (Beijing) ஒலிம்பிக்ஸ்-இன் துவக்கம் மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை கண்டுகளித்திருகிறேன். அதன் பின் அவ்வளவு பார்த்தது இல்லை. ஈடுபாடு இல்லை. பொதுவாக கடைசியில் இந்தியா ஏதாவது பதக்கம் வென்றதா என்று செய்திகள் மூலம் தெரிந்துக்கொள்வேன். இந்த ஆண்டு ரியோ (Rio) 2016வும் அப்படித்தான். ஆனால் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்க் (Lance Armstrong - Cycling) மற்றும் அண்ட்ரி அகாசி(Andre Agassi)  போன்றோரின் சுய வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வாசித்து  உள்ளேன். அவ்வளவுதான் எனக்கும் விளையாட்டுக்கும் உள்ள உறவு. 

​இந்த ஆண்டு ரியோ 2016 ஒலிம்பிக்ஸில் தீபா கர்மாகர் (Dipa Karmakar) என்கிற இருபத்தி மூன்று வயது பெண் ஜிம்னாஸ்டிக்கில் (Gymanstics) பங்கேற்று உள்ளார் என்று செய்தி அறிந்தேன். அதற்கு முன் எனக்கு தீபாவை தெரியாது. அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் ஜிம்னாஸ்டிக்கில் இருந்து ஒருவர் ஓலிம்பிக்ஸில் பங்கேற்கும் அளவுக்கு இந்தியாவில் அதை பயில்கிறார்கள் என்பதே புதிய செய்தி. ​ஆக தீபா ஜிம்னாஸ்டிக்ஸில் விளையாட்டு பிரிவில் பங்கேற்கிறார் என்பதே எனக்கு ஆச்சர்யம் தான்! 

தீபா கர்மாகர்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிப்புராவின் (Tripura) தீபா கர்மாகர் ஜிம்னாஸிட்டிக்கில் ப்ரொடுனோவா (Produnova) என்னும் மிகவும் அபாயம் வாய்ந்த விளையாட்டு பிரிவில்/முறையில் சிறப்பாக (வெற்றிகரமாக நிறைவு செய்தார்) பங்கேற்றார் என்று அறிந்தேன். இந்த ப்ரோடுனோவாவில் ஒரு பிசிரு ஆனாலும் உயிருக்கே ஆபத்தாக விளைவுகள் அமைய வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு ஒரு ஆண் விளையாட்டில் காலினை ஊன்றும் பொழுது உடைத்துக்கொண்டார்.அவ்வளவு அபாயகரம். ஆனால் இதனை 1980 ஒலிம்பிக்ஸில் முதன் முதலாக வெற்றியின்றி முயற்சி செய்து உள்ளார் ஒரு விளையாட்டு வீரர். முதல் முறையாக 1999’இல் எலீனா ப்ரோடுனோவா (Elena Produnova) என்னும் பெண்மணி வெற்றிகரமாக முடித்து உள்ளார் (ஆதலால் ப்ரொடுனோவா என்று இவ்விளையாட்டு பிரிவுக்கு அப்பெயர்). அதன் பின் உலகில் மூன்றாவதாக முறையாக தீபா கர்மாகர் வெற்றிகராமாக உலக மேடைகளில் செய்து உள்ளார். 

தீபா கர்மாகர் - தகுதி சுற்றுகளில் ப்ரோடுனோவா

இந்தியாவில் இருந்து முதல் முறையாக ஒலிம்பிக்ஸில் ஜிம்னாஸ்டிக்ஸின் இறுதி சுற்றிற்கு (பாலினம் பாகு பாடு இன்றி) இந்த ஆண்டு தீபா கர்மாகர் நுழைந்தார். எட்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் இறுதி சுற்றில் நான்காவது இடத்தில் முடித்தார்.  அவர் எடுத்த புள்ளிகள் 15.066. மூன்றாவதாக எடுத்தவரின் புள்ளிகள் 15.216. வெறும் 0.15புள்ளிகளில் வெங்கல பதகத்தை கைபற்ற முடியவில்லை. ஆனால் இவர் கைப்பற்றிய நெஞ்சங்கள் லட்சோப லட்சம், கோடான கோடி என்று சொல்லலாம். கிரிக்கேட்டை தவிர எந்த விளையாட்டிற்கும் போதிய பயிற்சிகளும் வசதிகளும் ஊக்கமும் பார்வையாளர்களும் இல்லாத இந்திய நாட்டில் இந்த இடம் மிக முக்கியமானது. இது போன்ற பெயர் தெரியாத விளையாட்டில் நுழைந்தாலே இவர்களின் ஊக்கத்தை குறைக்க ஒரு கும்பல் இருந்துக்கொண்டே இருக்கும். வெற்றி பெற்றால் கூட இவர்களின் எதிர்க்கால வேலை வாய்ப்பு கேள்விக்குறியே. கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்துக்கொண்டு வசதி இல்லாமல் இவர்கள் படும் பாடு இவர்களுக்கு மன வேதனை அளிக்கும். ஊக்கம் இழக்க அதிக வாய்ப்பு உண்டு. 

ஆனால் இத்தனை இடர்களையும் மீறி இவ்வீரர்கள் தோடும் சிகரங்கள் அதிகம். இவர்கள் தொட நினைக்கும் சிகரத்தின் உயரங்களும் அதிகம். இவர்களின் உழைப்பு அசாத்தியம். தன்னுள் நிகழ்வதை ஒருவன் கவனிப்பான் என்றால் தன் சாத்தியங்களும் எல்லைகளும் தெளிவாகும். இத்தகையவர்கள் வெளி உலகம் போடும் இடர்களை பொருட்டாக எண்ணாமல் தங்களை அவதானிக்கிறார்கள். ஆகச்சிறந்த சாத்தியங்களை நோக்கி நாம் ஏன் அடி எடுத்து வைக்கக்கூடாது என்று என்னுகிறார்கள். விளைவுவாக இவ்விளையாட்டுகளில் இவர்கள் மானுட சாத்தியத்தின் எல்லைகளை ஒரு அடி விரிவு படுத்துகிறார்கள். விதி சமைக்கிறார்கள்!!

இப்பெண் என் வாழ்வில் நான் நினைவில் வைத்துக்கொள்ளும் நபர்களில் ஒருவராக அமைவார்!!

2020 டொக்யோ (Tokyo) இவரின் கனவுகளுக்கு மகுடம் சூட்டும்!

August 09, 2016

காடு வாசிப்பு எனக்கு ஒரு மீட்சியரிதாதல்

==================================================================
காடு நாவலை வாசித்தப் பின்பு நான் தொகுத்து/synopsis-ஆக ஒரு மடலாக நாவலாசிரியர் ஜெயமோகனுக்கு எழுதியது
==================================================================




அன்புள்ள ஜெ,

நலமா?

தங்களின் 'காடு' நாவலை முதலாவதாக  2-3 நாடகள் முன்பே வாசித்து முடித்தேன். நான் நீலத்திற்கு உள்ளே செல்லலாம் என்பதே என் திட்டமாக இருந்தது. ஆனால் காடு கொண்டு சென்ற வழி விரிந்து விரிந்து என்னை வழிதவறினேன். ஆதலால் நீலத்திற்கு முன்பு ஒர் இடைவேளையில் காடு-இனை தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று பின்வருமாறு எழுதியுள்ளேன். மிக நீளாமான மடல். மன்னிக்கவும்


காடு நாவலை நான் கிரிதரனின் பார்வையிலும், ஐயரின் பார்வையிலுமே அதிகம் அறிந்துக்கொண்டேன். மறுவாசிப்பில் இன்னும் பல திறப்புக்களை கண்டுக்கொள்வேன் என்று நினைக்கிறேன். மற்றவர் பார்வையில் இன்னும் அதிகம் பார்க்கவில்லை. அடுத்த வாசிப்பில் கண்டுக்கொள்வேன். காட்டில் பல தளங்களை காண்கிறேன். 


கிரியின் வாழ்வில் வரும் காதல் வேவ்வேறு காலங்களில் எப்படி இருக்கிறது. அவன் முதல் முதலாக  காட்டிற்குள் வரும் பொழுது காட்டின் மேல் கொள்ளும் காதலும், நீலியின் மேல் கொள்ளும் காதலும் அற்புதமான நேரங்கள். மொத்ததில் காட்டின் தீஞ்சுவை எனக்கு மீட்சியரிதாதல்

காதல் / காமம்

கிரி முதலாவதாக காட்டை காணும் பொழுது அப்பச்சை மரத்தடியில் அவன் கொள்ளும் எழுச்சியை போல அவனுள் இயற்கையான காதல் மலர துவங்குகிறது. பின்பு அது தீயின் துளி போல பெருகிறது. பின்பு காதலின் உச்சத்தில் பாறையின் மீது தகிக்கிறது. வழியில் காடு எப்படி பிரித்தறிய முடியாமல் மரங்களும் கொடிகளும் செடிகளும் உருவான  பச்சைப்பரப்பு. ஒர் இலைகளினாலான் ஏரி. அதில் கிரி முக்குளியிட்டு செல்கிறான். காதல் அதுபோலே பிரித்தறிய முடியாதது. ஆனால் இக்காடும் / காதலும்/ காமமும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருப்பது. ஒவ்வொரு இடமும் பார்த்தது போலவே இருந்தாலும் புதிய இடங்கள். திசையற்ற இடம் காடு. ஆனால் மனிதன் அங்கே திசை தேடி அபத்தம் ஆகிறான். ஆனால் காட்டை கண்டவன் காட்டை விட முடியாது. அது போல காதலும் .  கிரி காட்டிற்குள் மீண்டும் நுழைப்பொழுது மிக சீக்கிரம் ஓடைப்பாறை அடைகிறான். மேலே செல்ல நினைக்கிறான். அப்படி செல்கையில் காடு தன் எல்லையை விரித்து விரித்து உள்ளே இட்டுச் செல்கிறது. அங்கே கிரி காட்டின் மீது இருந்த பயம் கிளர்ச்சி அடங்குகிற்து. காதலும் காமும் இது போலவே என்று எனக்கு படுகிறது. துவக்கத்தில் காதல் பரவசம் இருந்தாலும் அதில் மனிதன் திளைத்தாலும் அவன் மேலே போவது என்பது அவனுடைய எண்ணத்தை பொருத்தது. அப்படி எண்ணினால் காதல் கூட்டிச்செல்லும். ஆனால் காடு விரும்பினதால் கூட்டிச்சென்றது. 

அங்கே காட்டில் கிரியும்/ மனிதனும் அறியாத விஷயம் மீது மோகம் கொள்கிறான், காதிலிக்கிறான். அப்போது வானத்தை பார்க்கிறான். வானம்போல அவன் மனம் விரியமுடிகிறது. மனிதன் இயற்கையாக இருக்கும்பொழுது அவன் மனம் எப்படி இருக்கிறது. ஆனால் செயற்கையான நகரங்களில் மனைவியிடமும் காதலியிடமும் நம் மனம் நேரம் ஒதுக்கி பேசுகையில் எங்கே நமக்கு விரிவடைய முடியும்? .. அத்தகைய கணங்களில் மிக மெல்ல இரவெனும் தாபம் அவனுள் நிகழ்ந்தும் கொண்டு இருக்கிறது.

அதன் பின் மனுஷனுக்கு உள்ள தீ காமகுரோத மோகங்கள்.. அது காடு போல. இலைகள் தளிர்கள் வானை நோக்கி எழும் உயிர் உள்ளவரை. பின்பு மட்கியும் எரியும். காடு ஈவு இரக்கம் அல்லாதது. அங்கே பூக்கள் வசந்த காலத்தில் பூத்து அழிகிறது தடமே இல்லாமல்.  நம் மனமும் காதலும் எப்படி பட்டது. 


நீலியை கண்ட பின்பு ஓர் இடத்தில் அவர்களை தவிர காலமே இல்லாதது போல் தோன்றுகிறது. நினைவும் அறுபடவில்லை. அசையவுமில்லை. அதுபோல சிற காலம் நானும் இருந்து உள்ளேன் என்று என்னை அங்கு காண்கையில் ஒரு புன்னகை. ஆனால் இன்று யோசிக்கையில் அதை பற்றிய ஒரு சுவடு கூட என் நினைவில் பெரியதாய் இல்லை.  பின்பு கூறுகிறீர்கள் எப்படி அக்கணங்கள் கொந்தளிப்பாக இருக்கிறது. ஆனால் அனுபவம் முடிந்த மறுகணம் அதனை பகுத்துப்பிரித்து பார்க்கிறோம். எவ்வளவு உண்மை என்றே நினைத்துக்கொண்டேன். ஓர் இடத்தில் கிரி திட்டம் தீட்டுகிறான் பின்பு புதிய திட்டம் ஆனால் குட்டப்பனை கண்ட பின்பு அது ஒரு நினைப்பாகி விடுகிறது. நான் சில ஆண்டுகள் முன்பு ஒரு பெண்ணிடம் என் காதலை கூற முற்படுகையில் அவ்வாறு நடந்து உள்ளது. என்னுடன் பேரூந்தில் பயணிப்பாள். யாராவது வந்து விடுவார்கள். அல்லது மழை பெய்து விடும். சொல்ல வந்ததையே மறந்து விடுவேன். ஆனால் அப்போது அவளுடன் மழையில் சிறிது நேரம் உணவு உண்டாலும் - நீங்கள் குறிப்பிட்டு இருந்தது போல அது ஒரு பெரிய வெகுமதி.  பின்பு இதனை "தாண்டிச் சென்றபடியே இருத்தலை, இழந்தபடியே இருத்தலையே வாழ்க்கை என்கிறோம்" என்று குறிப்பிட இடமும் நன்று. 


அவன் காதல் முதிர்ச்சி அடையும் பொழுது அவள் வெறும் பெண். முடிந்துபோகும் என்று எண்ணி தன் எண்ணங்களை சாந்தப்படுத்திக்கொள்கிறான். நிதானமாக நடக்கிறான். ஆனால் அந்நிலைக்கு வர ஒருவனுக்கு ஒரு சிறிய காலம் தேவை படுகிறது. அங்கே ஓர் இடத்தில் கூறுகிறீர்கள் நிழல்கள் இடம் மாறியிருந்தன. அது போல காதலும் எப்படி நிறம் மாறுகிறது.  


ஐயர் ஓர் இடத்தில் சொல்கிறார் எல்லா பெண்ணிலும் அழகு இருக்கு. காட்டை ரசிகனும்னு நினச்சா நிம்மதியா இருக்கலாம். ஆனால் நீங்கள் சொல்லாமல் சொன்னது அதை (காட்டையும், பெண்ணையும்) அடைய நினைக்கும் பொழுது தான் ஆபத்து. கடைசியில் உனக்கு அகங்காரம் - தன்னை எல்லாரும் பேண வேண்டும் என்னும் எண்ணம். அது போல "காமம் காமம் என்ப காமம்" பாடல் மூலம் ஒரு ஒப்பீடு . காமம் கடைசி வரைக்கும் தீராத ஒரு விருந்து. காதல் என்னும் பழம் ஆதாம் ஏவால் காலத்தில் இருந்தே இருக்கிறது. அதாவது மனிதன் உருவான காலத்தில் இருந்தே காதலும் காமமும் மிக மிக இயற்கையான ஒன்று. அதனை செயற்கை படுத்த கூடாது. அதுபோல ஏங்கி உண்டால் பழத்தின் ருசியினை அறிய முடியாமல் ஆகிவிடும். உண்ணும் தோறும் ருசியும் வெறியும் ஏறும் என்னும் வரிகள!! பொதுவாகவே நீங்கள் குறுந்தொகை பாடல்களை குறிப்பிட்டு அகம் சார்ந்து நோக்கும் பார்வையில் நான் இது வரையில் அணுகியது கிடையாது. இந்நாவல் எனக்கு இன்னொரு திறப்பை கொடுத்தது என்றே சொல்லலாம். 


இருப்பினும் கிரி போல நானும் ஐயரால் எரிச்சல் அடைந்தேன். அவன் அவ்வளவு கற்பனையில் இருக்கும் பொழுது ஐயர் எளிதில் அதில் இருந்து விளகி மற்றொன்றுக்கு சென்று விடுகிறார். அவளின் அழகிற்கு விடுத்த அநீதி, தன் உணர்வுகளை சிறுமைபடுத்தியது போல. ஆனால் ஐயர் முதிர்ந்தவர் இதை போல பல நூறு பெண்களை பார்த்து இருப்பார் என்று நினைக்கும் பொழுது அது அவரது இயல்பு என்று படுகிறது. 


அது போல ஓர் இடத்தில் சொல்லுக்குள் வாழ்வதை அனுபவித்து பார்த்தால் தான் அறிந்துக்கொள்ள முடியும் என்பதனையும் ரசித்தேன். அது போல "மனம் அழகை உணரும் விதங்களின் மர்மங்களில் அலைக்கழிந்தேன்" என்னும் வரிகளில் பயணிக்கிறேன் இப்போது. நமக்கு ஏன் இப்படி எல்லாம் இதுக்கு முன்னாடி நடந்தது இல்லை. இப்ப எப்படி இதெல்லான் நடக்குது. அதுவும் நம்மலா இப்படினு நினைக்கும் பொழுது உண்மையாகவே மர்மமாக இருக்கிறது. 


நீலியின் பின்னால் அளவிட முடியாத பொன் காற்றில் குலுங்கி எழுந்தமர்ந்து (பொன்னைவிட ஒளி கொண்ட) பூக்கள் உதிர்கிறது. எவ்வளவு அழகான கற்பனை. அது போலவே அவள் பின்னால் காதல் உள்ளது என்றே எனக்கு படுகிறது. காதலே அங்கே பூக்களாக பொழிகிறது. ஆதலால் அவளே முக்கியமற்று இருக்கிறாள். .... ஆனால் "என்னால் அறிந்துகொள்ளவே முடியாத அளவுக்கு மகத்தான அபாயகரமான விஷயங்களின் விளிம்பில் உலவிக் கொண்டிருக்கிறேன் என்று நெஞ்சுக்குள் ஒரு சிறு அச்சம் சோன்றியது. கையில் அந்த மூக்குத்தி இருந்தது ஒரு சிறு கூழாங்கல்போல. உண்ணமுடியாத தானிய மணி போல. அதை ஆற்றை நோக்கி வீசினேன்" .. கிரி எப்படிபட்ட ஒரு அபாய கட்ட இடத்தில் இருக்கிறான். ஒரு படி தவறினாலும் விளைவு மிக மோசம். அங்கே அவன் கையில் எவ்வளவு அழகான ஒரு காதல் அழகிய மூக்குத்தி போல கூழாங்கல் (கூழாங்கல் உறுவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்)  போல தானியம் (அது எத்தனை விதைகளை உள்ளே கொண்டது) போல இருக்கிறது... ஆனால் அவன் அக்கனவை ஆற்றில் வீசுகிறான். எப்படி அதை நீங்கள் எழுதினீர்கள். பலர் அத்தகைய நேரங்களை வாழ்வில் தவறவிடுகின்றனர். 

கிரி காதலின் உச்சியில் எல்லாம் தெரிந்த பறவை இருக்கு என்கிறீர்கள். எனக்கு ஒருமாதிரி தான் புரிந்தது. இரண்டாவது தடவை பறவை தனை குறியீடாக வருகிறது. மீள் வாசிப்பில் அறிவேன் என்று நினைக்கிறேன்.


"காட்டையே ஒற்றைப் பெரும் பூவாக மற்றும் வேங்கை, தீப்பற்றி எரியும் காந்தள், பொன் சொரியும் கொன்றை எத்தனை மலர்கள். மாறாப் பசுமைக் காடு என்பது பூக்களின் பேருலகம். இந்த நிலத்திற்கு அடையாளமாக இந்த அபத்தமான பூவை ஏன் கற்பனை செய்தார்கள்? ஆனால் மொத்த சங்க இலக்கியப் பரப்பிலும் குறிஞ்சிப்பூ பற்றிய வர்ணனைகளே இல்லை என்பது நினைவுக்கு வந்தது." - இவ்விடத்தில் இவனுடைய காதல் என்பது எவ்வளவு சாதாரணமான ஒன்று என்று ஆகிறது. எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் காதலை போலவே. அதற்கு நீங்கள் மற்ற சில இடங்களில் காவியைத்தை பற்றியும் தூய காதல் பற்றியும் பேசுகிறீர்கள்.


பல இடங்களில் மாமியை நினைக்கும் பொழுதெல்லாம்,தனிமையிலும், அவன் மனம் ஒன்றையே நாடுகிறது மாறாத சடங்காய். குற்ற உணர்வு, இழிவுணர்வு, சுய இரக்கம். அச்செயல் முடிந்த உடன் ஒரு வெறுமை. ஆனால் தவிர்க்க நினைத்தால் இரண்டு நாட்களைத் தாண்டாதது. பிறகு. கண்களை மூடி நினைவுகளை மனதிலிருந்து விரட்டுகிறான். அதுவே பல சமயம் நடக்கிறது.  எப்படி அவனுக்கு காமம் ஒரு கேளிக்கையாக மாறிவிடுகிறது. 

நான் சில இடங்களில் கிளியை பற்றிய குறிப்புகளை கவனித்தேன். கொஞ்சம் தவறான புரிதலா என்று தெரியவில்லை. பேசி தெரிந்துக்கொள்ள வேண்டும்.  "கிளி பறந்து போனதும் கிளை சற்று விடுபட்டது. காற்றில் ஆடிச் சரிந்தது. அதன் இலைகள்மீது வெயிலின் ஒரே ஒரு கதிர். இலைகள் கைவிரித்து அதை அள்ள முயன்றன 'கிளி விளி பயிற்றும் வெயில் ஆடு பெருஞ்சினை... பின்பு ஓர் இடத்தில் நீங்கள் மாமி கட்டிலில் அமர்கிறாள் என்றும் கிளிக்கு ஒப்புவாக கிரியை கிளையாக சொல்கிறீர்கள். மாமி சென்ற உடன் அவன் மனம் எப்படி விடுபடுகிறது. 


நகரம்

நகரத்தை பற்றியும் காற்றை பற்றியும் நீங்கள் சொன்ன பல குறிப்புகள் மிக மிக சரியாகவே எனக்கு பட்டது. எனக்கு பிடித்த வற்றையும் நான் வாழ்வில் சந்தித்த வற்றையும் கீழே குறிப்பிட்டு உள்ளேன். 

1. காட்டில் மனிதன் எவ்வளவு நிதானமாக இயங்கிக் கொண்டு இருக்கிறான். காட்டை ரசித்துக்கொண்டு, காதல் கொண்டு காமம் கொண்டு. ஆனால் அங்கே இருக்கும் பொழுது தெரியவில்லை வெளியே வரும் பொழுது தான், நகரத்துடன் ஒப்பிடுகையில் தெரிகிறது நாம் எவ்வளவு வேகமாக சென்று கொண்டு இருக்கிறோம் ஒன்றுமே ரசிக்காமல். 

2. காடும் மனிதனின் இச்சைப்போல சீரற்றது. ஆனால் மனிதன் காட்டை சமன் செய்து கொண்டு இருக்கிறான். துல்லிய வடிவங்களால் நிர்ப்புகிறான். 


3. நகரங்களில் காதலிப்பது தவிர வேறு பிரச்சினைகளே இல்லையா என்றும் கேட்கும் இடத்தில் நம் சமூகத்தில் இன்று நடக்கும் சம்பவங்களை (பல பெண்களை கொலை செய்தல், சினிமாக்களில் காதல் இல்லாமல் டூயல் பாடல்கள் இல்லாமல் இல்லை) பார்க்கையில் இது மாறுமா என்றே கேட்டுக்கொள்கிறேன்.


4. குடிசைகள் எவ்வளவு ஆபாசமான ஒன்று. மழை என்னும் அமுதை ஓவ்வொரு அணுவும் திளைக்காமல் மனிதன் எலி போன்று இருட்டில் பதுங்குகிறான். அவனுடைய பயம், பலவீனம், சுயநலத்தின் அடையாளமே குடிசை. நம்முடைய வாழ்வில் சொந்தமான வீடே ஒரு பெரும் லட்சியமாக இருக்கிறது என்று நினைக்கையில் சற்று ஆபாசமாக உள்ளது. 


5. நீலியை வரவழைத்து பார்க்க நினைக்கிறான். ஆனால் அதில் நியாயமில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. "காடு என்பது மனிதன் அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்று நினைக்கும் நகர் மனநிலையின் தொடர்ச்சி அது" ..என்னும் இடம்!!! பின்பு காற்றை வணிக பொருள்களின் (பலகை) உற்பத்தியாகும் இடம் என்று நினைக்கும் மனம். ஒரு தடவை நாஞ்சில் நாடனின் "மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்பற்றிய கட்டுரையை நினைத்துக்கொண்டேன். 

6. "நட்சத்திரங்களை ஏறிட்டுப் பார்த்தேன்.. அலங்காரக் கூரை.. வீட்டிற்க்குள்ளே சென்று விடுக்கிறான். மழையில் இருந்தும் வெயிலில் இருந்தும் தப்புவதற்க்காக இல்லை. அப்படி என்றால் ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் தான் தான் என்று சதா நினைத்தபடி ஓடுகிறான். வாழ்வின் துவக்க நாட்களில் தான் நிமிர்ந்து பார்க்க முடிகிறது... இதை பற்றி சில வருடங்களாக நினைத்ததுண்டு. நான் பள்ளிச்சிறுவனாக இருந்த பொழுது அரசு குடியிருப்புகளில் மொட்ட மாடியில் உணவு உண்டு உறங்கிய நாட்கள் உண்டு. ஆனால் இன்றோ அது நடந்து குறைந்தது 10 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் நாம் அப்படி இப்பொழுது எல்லாம் செய்ய முடியவில்லை. பல நேரம் சினிமா, கடற்க்கரை, நண்பர்களுடன் உணவகத்தில் என்று வீடு திரும்பவே 10 மணிக்கு மேல் ஆகிறது. இதன் பிறகு எங்கே மொட்ட மாடி.  தினசரிகளில் சாலையில் பயணமே 1-2 மணி நேரம், பின்பு எங்கே வானம். கடைசியாக நான் மேல் நோக்கி வியந்து வானம் பார்த்தது என் மனைவியாக போகிறவளுடன் தொலைப்பேசியில் உறையாடிக்கொண்டு இருக்கும் பொழுது. அப்பொழுதும் இதையே நினைத்துக்கொண்டேன். 


7."வாழ்க்கையை கடந்து சென்றபோது எத்தனையோ அனுபவங்கள் சிறு தடயம்கூட இல்லாமல் ஆகின்றன. அது மலையேற்றம் போல ... ஏறும் பொது ஒவ்வொன்றும் சிறியதாகி, அற்பமாகி பார்வையை விட்டு மறையும். உச்சியில் மலையே அற்பமாகி விடுகிறது. வானம் மட்டும் எஞ்சுகிறது"..என்று நீங்கள் கூறும் இடம் அற்புதம். நான் பதின் பருவங்களில் இருக்கையில் என்னுடைய சபரிமலை குரு இதனை யொட்டி கூறியுள்ளார். மலை ஏற ஏற நாம் தேங்காய் களை உடைத்துகொண்டு செல்கிறோம். நம் பாரங்கள்/ பாவங்கள் குறையும் என்று. அவரை நினைத்துக்கொண்டேன். நீங்கள் பொதுவாக மலையெற்றத்திற்கு கொடுத்த விளக்கம் மிக ஏற்ப்புடையாத இருந்தது. 

8. நகர வாழ்க்கையில் காதல் எவ்வளவு செயற்கையாகி கொண்டே இருக்கிறது. சிறுவர்களிடம் இருக்கும் பணம் போல என்னும் இடம்!! 

9. ஆனால் அழகு என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது. சுசீந்திரம்கிற சாக்கடைச் சந்திப்பு முனையில்கூட வானம் அழகு என்னும் இடம்!!


10. தெய்வங்கள் ஊரில் இருந்தாலும் காடுக்கு உரியவர்கள் காட்டில் முளைத்து ஊருக்குள் நிறுவப் பட்டவர்கள். நான் கேட்ட பல புராண கதைகள் காட்டில் நடந்தவை என்று நினைத்துப்பார்கையில் பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை ஏன் என்றால் உங்கள் தளத்தில் இந்து மதம் எப்படி பட்டது என்று நீங்கள் எழுதிய பல கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன். 


11. காடு என்பதை மனிதன் எப்படி உரிமை கொண்டாடுகிறான். ஒரு சாலை மௌனமாக ஒரு திட்டத்துடன் பாம்புபோல நீள்கிறது. .. அதேபோல முயல் காட்டில் எவ்வளவு இயல்பாக உள்ளது. ஆனல் சாலையில் வந்த உடன் மருண்டுவிடுகிறது என்னும் இடம்.  [ஆண்டுதோறும் 1993 முதல் சபரிமலை சென்று வருவதால் நீங்கள் காட்டை காட்சிப்படுத்தும் பொழுது என்னால் முழுமையாக உள்வாங்கி கற்பனை செய்ய முடிந்தது.  உதாரணமாக திசையில்லா காடு, பல பச்சைகள், பல நிழல்கள், பார்த்தது போல் தோன்றும் புதிய இடங்கள். ஆனால் இன்றோ எங்கு பார்த்தாலும் பீடி நாற்றம், ரப்பர் தோட்டங்களின் பரவலான ஆக்ரமிப்புகள், சாலைகள் சென்றுள்ள தொலைவு/வளர்ச்சி.  அந்த அழகிய காட்டின் மீது மனிதன் செய்த கொடுமைகளை பார்த்துள்ளேன்.  1995களில்  வெறும் கஞ்சி மட்டுமே கிடைக்கும். அதுவும் 5ரூபாயுக்குள்ளே. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் அங்கே தோசை முதல் சன்னா பரோட்டா வரை கிடைக்கிறது. அது மட்டும் அல்லாமல் மனிதனின் மலம் அங்கே சரியான முறையில் அப்புறபடுத்தாதனால் அங்கு காட்டிற்கு ஏற்படும் சுகாதார கேட்டினை ஒரு சுற்றுசூழல் தன் ஆர்வலுருமான நண்பரின் மூலம் அறிந்து கொண்ட பொழுது நெஞ்சம் கனக்கிறது. அன்றெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா என்று சொல்லும்பொழுது பழைய நினைவுகளின் மீது  ஏக்கம்/Nostalgia  வரவில்லை. மனிதனின் மீது கோபமே வருகிறது.  நீங்கள் ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள். காடு மனிதன் அனுபவிக்க படைக்க பட்டாதக எண்ணிக்கொள்கிறான். அற்பமான மனிதன்!! ]


12. நாகரீகம் என்பது நகர் சார்ந்தது. அதற்கு எதிர்ப்பதம் காட்டுமிராண்டி என்று பள்ளிகள் முதலே கற்பிப்பபடுவது. காட்டை வென்றடக்கும் ஊர்களின் கதையே மனித நாகரீகம் போலும். ஆனால் நகரம் என்பது எவ்வளவு செயற்கையானது. காடு எவ்வளவு இயற்கையானது என்று யோசிக்க தவறுகிறோம். 

பொது


மேலே காதல், நகரம் என்று மட்டும் அல்லாமல் நான் பொதுவாக ரசித்த இடங்கள். 

1. அவன் அம்மாவிடம் ஏற்படும் இழப்பினை  காதலிக்கும் கணத்தில் அன்னையை கண்டுக்கொள்கிறான் என்னும் இடத்திலும்... பின்பு அடிக்கடி தின்பதற்கு ஏதாவது தந்து முன்போலவே இருந்தாலும் கூட..வெகுதூரத்தில் என்னை உணர்ந்தேன் இடத்திலும்.. ஒரு நிமிடம் நின்று மீள் வாசிப்பு செய்தேன்!  

2. பெயர்களில் உள்ள அப்பத்தத்தை பற்றி ஒரு இடத்தில் கூறியிருப்பீர்கள். அவை ஒருபோதும் மந்திரங்களாக முடியாது. எவரும் அதைப் பிடித்து ஏறி முக்தியைத் தொடமுடியாது - என்னும் இடம் அற்புதம். நான் பதின் வயதில் இருக்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டுக்கொள்வேன். எனது அப்பாவின் பெயர் ஆறுமுகம். இதனை கேட்ட ஒருவர் உங்கள் பெற்றோர்கள் கலப்பு திருமணமா என்று கேட்டார். ஆம் என்றேன். எப்படி பேரை மட்டும் வைத்து அவர் கேட்டார் என்று எனக்கு ஆச்சர்யம். எனது பாட்டியை கேட்டேன். பாட்டி சொன்னாங்க நம்முள்ள அப்படி பெயர் வைக்க மா என்று கேட்டதற்கு பெயர்  கடவுளின் சமஸ்கிருத பெயராக இருந்தால் உன்னை கூப்பிடுபவர்களுக்கு முக்தி அடைய வாய்ப்பு உண்டு என்று. அதற்கு ஒரு உதாரணம் கொடுத்தார்கள். துரியோதனனுக்கு புஷ்ப விமானம் வந்துச்சாம். வந்துச்சு ஏன்னா கிருஷ்ணா கிருஷ்ணா என்று கிருஷ்ணனின் பெயரை உச்சரித்துக்கொண்டே இருந்தானாம். அன்றே எனக்கு அபத்தமாக தோன்றியது ஏன்றால் இன்னொரு பக்கம் கர்ணன் அவ்வளவு கொடைகளை அளித்ததனால் முக்தி அடைகிறான் என்று படம் பார்த்து உள்ளோம். 

3.  ஒரு மனிதனின் பழக்கங்கள் அவனுடைய மனம்தான். தன் மனதின் மேலேயே பிடி இல்லாத எளிய மனிதர்கள் பிறரது மனம் மீது கட்டளைகளை விதிக்கிறார்கள் ஆலோசனைகள் சொல்கிறார்கள். வருத்தமும் ஆதங்கமும் கொள்கிறார்கள். என்னும் இடம். 

4. "கருமையளவுக்கு அது இளமையை வெளிப்படுத்துவதில்லை. கரிய நிறம் கண்களை நிறைத்து விடுகிறது" போன்ற சிறு சிறு இடங்களையும் ரசித்தேன். 
5. மனுஷ உடல்ல இருந்து மலம் போறது மாதிரி மனசில இருந்தும் போகணும்
6. தருக்கம்னா அது அதருக்கத்தை போய்த் தொடணும். அப்பதான் அதுக்கு மதிப்பு..... ஏன்னா, ஒவ்வொரு தர்க்கத்துக்கும் கண்டிப்பா எதிர் தர்க்கம், சமானமான வலிமையோட இருக்கும்

7. "என்ன ஒரு அசைவு! செயற்கையான பவ்யம், தளுக்கு, வெக்கம் ஒண்ணும் கிடையாது. ஆனா மலர்ச்செடி அசையறா மாதிரி ஒரு மென்மை, நளினம்... பார்வதிதேவி மலைமகளா இப்படித்தான் இருந்திருப்பா சிவனுக்கு பித்துப் பிடிக்க வைக்கிற சிவகாமசுந்தரி." ... ஒரு பெயரை நான் இப்படி நோக்கியது இல்லை. அவ்வளவு அழகு. 


8. "ஒரு சங்கீத கச்சேரியில் இருப்பவர்களைப்போல ஒரு மிகையான நெகிழ்வு. ஆனால் நெகிழ்வையே கணக்கு வழக்கின் மொழியில் சொல்வார்கள்" - கச்சேரிகளில் சில நேரங்களில் எரிச்சல் அடையும் அளவுக்கு செய்வார்கள். அவர்கள் கணக்கு போடுவது அவர்களின் உரிமை. ஆனால் பக்கதில் உள்ளவரிடம் கலந்துரையாடும் பொழுது அது என்னை எரிச்சலடைய செய்கிறது. 

கடைசியாக/கிளைமாக்ஸ்

அவன் அவளுடைய அருகாமையை அவன் புலன்கள் கொண்டாடும் இடம் தன் அகம் போன்றது என்னும் இடங்கள் அதுவும் காடு போன்றது. பின்பு இருவரும் மலர்களை எறிந்து விளையாடும் இடத்தில் அங்கே உரசுவது மனங்கள். அது சிறுவிளையாட்டு என்னும் இடம். அருகாமையில் இருக்கையில் காற்று வெளியிடையையும் காலத்தையும் நிரப்ப முனைவது. காதல் எவ்வளவு அகம் சார்ந்த ஒரு விஷயம் என்று கூறுகிறீர்கள். ... ஆனால் இவை அனைத்திலும் ஒன்றையும் நிகழ்த்தாமல் காலம் சென்றுக்கொண்டு இருக்கிறது.

அதேப்போல இறுதியில் அவன் நீலியின் அருகாமையை உணர்கிறான். ஆனால் மாமியுடன் ஏற்படும் உறவினால் அவன் காதல் என்னும் கனவினை இழக்கிறான். அங்கே அக்கனவாக நீலி அழும் காட்சி அற்புதம். அவன் கனவை கொன்று/ தொலைத்து நிகழ் காலத்திற்கு வருகிறான். பின்பு வாழ்வில் செல்லும் பொழுது அவன் மனைவியுடன் மகிழ்ச்சியிள்ளாத வாழ்க்கை, மாமியின் நினைவுகள் அவனை ஒரு வழி செய்கிறது. காதலும்/ காமமும் கேளிக்கை ஆகுகிறது. ஒரு கட்டத்தில் மூத்திரம் போகவே கஷ்டப்படுகிறான். அவன் வாழ்வில் தோல்வி அடைகிறான். 

காடு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அதனில் ஒரு 2-3 நாட்கள் அலைந்து கொண்டு இருந்தேன். என்னுடைய வாசிப்பினை யாரிடமாவது கலந்துரையாடிக் காட்டினை இன்னும் அறிந்துக்கொள்ள நினைத்து கடலூர் சீனுவிற்கு அழைத்தேன். அவர் நான் காணாத இடங்களையும் தளங்களையும் காண்பித்தார். அப்போழுது தான் நான் ஆழமாக வாசிக்காத இடங்களை தெரிந்துக்கொண்டேன். அவரும் என்னை தொகுத்துக்கொள்ள ஊக்குவித்தார். ஆதலால் முதல் முறையாக தொகுத்துக்கொள்ள முனைந்தேன். 

காடு போன்ற படைப்பிற்கு மிக்க நன்றி! 

அன்புடன்,

ராஜேஷ்

June 17, 2016

அவளும் நானும் அமுதும் தமிழும்


பாரதிதாசன் காதல் கவிதைகள்

மூலம்1: தமிழ் இணையக் கல்விக்கழகம் (சுட்டியை தட்டவும்)

நானும் அவளும்

நானும் அவளும்! உயிரும் உடம்பும்,
நரம்பும் யாழும், பூவும் மணமும்,
தேனும் இனிப்பும், சிரிப்பும் மகிழ்வும்,
(நானும் அவளும்!)

திங்களும் குளிரும், கதிரும் ஒளியும்
மீனும் புனலும், விண்ணும் விரிவும்,
வெற்பும் தோற்றமும், வேலும் கூரும்,
ஆனும் கன்றும், ஆறும் கரையும்
அம்பும் வில்லும், பாட்டும் உரையும்
(நானும் அவளும்!)

அவளும் நானும் அமிழ்தும் தமிழும்
அறமும் பயனும், அலையும் கடலும்,
தவமும் அருளும், தாயும் சேயும்,
தாரும் சீரும், வேரும் மரமும்
(அவளும் நானும்!)

அவலும் இடியும், ஆலும் நிழலும்;
அசைவும் நடிப்பும், அணியும் பணியும்,
அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும்,
ஆட்சியும் உரிமையும், அளித்தலும் புகழும்!
(அவளும் நானும்!)

பி.கு: இங்கே "ஆளும் நிழலும்" என்பதில்  ஆல்(ஆலும்) என்பதே சரி. அச்சுப்பிழை என்று நினைக்கிறேன்.

 
திரைப்பாடல் வடிவத்தில் (கீழே சுட்டியை தட்டவும்)

(1)

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்

(2)

மீனும் புனலும்
விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும்
வேலும் கூரும்

ஆறும் கரையும்
அம்பும் வில்லும்
பாட்டும் உரையும்
நானும் அவளும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

அவளும் நானும்
தேனும் இனிப்பும்
அவளும் நானும்
சிரிப்பும் மகிழ்வும்

அவளும் நானும் 
திங்களும் குளிரும்
அவளும் நானும் 
கதிரும் ஒளியும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்

- பாவேந்தர் பாரதிதாசன்


பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் தகவல்
திரைப்படம்: அச்சம் என்பது மடமையடா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: விஜய் ஜெசுதாஸ்
இயக்குனர்: கௌதம் வாசுதேவ் மேனன்

April 24, 2016

The dream I had and the road I had traveled

Dear Friends and Families,

P.S: This is a long post, as I believe this is an opportune moment to share my thoughts.

I graduated with a MBA degree last night. I am glad that I could make many people back home, cherish my feat. This ‪#‎byumba‬ is definitely one of the happenings which has contributed largely in me growing both personally and professionally. My MBA colleagues plus the BYU network as a whole have taught me a lot, making this program as well as my decision to pursue MBA here at BYU, an absolutely worthwhile experience.

At BYU, over the past two years, I have met many amazing people and have made some friends for life. Though I acknowledge the fact that I could have opened out myself some more, to have made more friends.., I still have a long list of BYU folks to thank, but I guess that it is only fair that I dedicate another post to them.


Last evening, as I was taking the “grad walk” towards the podium on the stage, I had mixed feelings. I missed many people by my side. There are many who have touched my life in a big way, helping me reach where I stand today, so, I dedicate this post to all of them. Almost everyone who knows me well, are aware of the amount of sacrifice and hard work which my mother and (unsung efforts of) my grandmother have put in for the last 25+ years, ever since I lost my father in 1990. In return, this MBA (and the MS that my younger brother accomplished 3 years ago) is a small thing we have been able to do, to make them happy.


Switching gears, there are countless people who have been a constant source of inspiration for me. Some of them have gone out of their way in making my life meaningful. Dr.Seetharaman Sir!! He played a pivotal role (during the years 1999-2001), in orienting me, the then young high school kid, to pursue engineering. He also made understand that hard work is necessary to succeed in life and believe in the fact that hard work always pays.


Next, I call her aunty, her name is Radha Krishnan, many people from PEC would know her as Sundaresan’s mother. I have seen very few souls like her. She considers me as her son, but I truly feel that I am far away to be given this title. I can write a separate post about her, but this post would be incomplete without mentioning her. During my high school/undergrad days, she seeded in me the desire to pursue higher education, as well as remained a constant source of encouragement to channelize my thoughts and actions to pursue my desire. Whenever I wavered from my path, due to professional or personal responsibilities, she reminded me of the milestones I had set for myself. 'Master's laan enna aachu?(what happened to Master's/MBA goals?)’ she would ask... I am blessed to receive her motivation.


Next, Lourdu Xavier- My friend for over a decade now, and in US slang, we are sort of MBA husband & wife. Over the past 10 years, I can’t count the number of times we have consulted each other while taking important decisions in life. In fact we both prepared for GMAT together . He, Gokul Nambiar and Rajesh Sundararaj  have persistently encouraged and inspired me to pursue my dreams. I am happy that both of us have succeeded in accomplishing the MBA. (He graduated with an EMBA from IIM Lucknow last month and has started his business career). I wish him good luck!


Special Mentions: RajaG - Who encouraged me and positively influenced my thoughts, Vijayaraman- who introduced me to BYU, Nirmal Ganesh - whom I bugged infinitely ever since I got the admit to BYU in March 2014, Vivek- for having provided me with the choultry every time I visited the Bay area, Perumal and Pinki (P4 family)- For all the love and affection you have showered. I could always turn to you whenever I needed guidance, Manikandan Arumugam bro - My Guberan (குபேரன், angel investor) - for the last two years !- (தம்பி உடையான் படைக்கு அஞ்சான் - One who has younger brother, doesn't need to worry about the opponent's army), @Balasubramani Arunachalam - for being my family more than a friend, Smruthy - for being contented with the little time I gave and showing glimpses of how awesome (to-be)-pondatti/wifey she is and how lucky-purusha(hubby) I am.


@All friends, colleagues, roommates and neighbors - who have encouraged and supported me in my decisions and helped me grow personally and professionally. And for all the times we partied, enjoyed, laughed.. You made it easier to stay away from home! - you will always be in my thoughts. Thank you so much.

One box, the job box, still remains unchecked in my goal list. I hope with all your blessings and prayers I will get it off the list soon.


Lastly, I leave you with some Kurals that inspire me!
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
(Think, and then dare the deed! Who cry,
'Deed dared, we’ll think.; disgraced shall be.)

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் (592)
(The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs.)

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து (596)
(Whate'er you ponder, let your aim be lofty still,
Fate cannot hinder always, thwart you as it will.)

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
(Though fate divine should make you labour vain;
Efforts its labour's sure reward will gain.)

Most importantly, I thank the almighty for all the blessings that has been showered upon me and my family

With gratitude,
Rajesh alias Balasubramanian Arumugam

April 07, 2016

எந்தன் தமிழ்!!

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
 ஆ -----> பசு
 ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
 உ -----> சிவன்
 ஊ -----> தசை, இறைச்சி
 ஏ -----> அம்பு
 ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
 ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
 கா -----> சோலை, காத்தல்
 கூ -----> பூமி, கூவுதல்
 கை -----> கரம், உறுப்பு
 கோ -----> அரசன், தலைவன், இறைவன்
 சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
 சீ -----> இகழ்ச்சி, திருமகள்
 சே -----> எருது, அழிஞ்சில் மரம்
 சோ -----> மதில்
 தா -----> கொடு, கேட்பது
 தீ -----> நெருப்பு
 து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
 தூ -----> வெண்மை, தூய்மை
 தே -----> நாயகன், தெய்வம்
 தை -----> மாதம்
 நா -----> நாக்கு
 நீ -----> நின்னை
 நே -----> அன்பு, நேயம்
 நை -----> வருந்து, நைதல்
 நொ -----> நொண்டி, துன்பம்
 நோ -----> நோவு, வருத்தம்
 நௌ -----> மரக்கலம்
 பா -----> பாட்டு, நிழல், அழகு
 பூ -----> மலர்
 பே -----> மேகம், நுரை, அழகு
 பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
 போ -----> செல்
 மா -----> மாமரம், பெரிய, விலங்கு
 மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
 மு -----> மூப்பு
 மூ -----> மூன்று
 மே -----> மேன்மை, மேல்
 மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
 மோ -----> முகர்தல், மோதல்
 யா -----> அகலம், மரம்
 வா -----> அழைத்தல்
 வீ -----> பறவை, பூ, அழகு
 வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
 வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

April 06, 2016

Yatho Manah thatho Bhaava

Yatho Hasta thatho Drishti,
Yatho Drishti thatho Manah
Yatho Manah thatho Bhaava,
Yatho Bhaava thatho Rasa.

It means-
Where the hands(hasta) are, go the eyes (drishti);
where the eyes are, goes the mind (manah);
where the mind goes, there is an expression of inner feeling (bhaava)
and where there is bhaava, mood or sentiment (rasa) is evoked.
— Source: Natyashastra


Image result for bharatanatyam karanas

April 03, 2016

வேலை வேண்டும்

வேலை வேண்டும். விரைவில் வேண்டும். வேற்றுகிரக மனிதனாய் தோன்றவும் வெற்று மனிதனாய் உணரவும் வைக்கும் அவ்வேலை எனக்கு வேண்டாம்.

எனக்கு பிடித்த வேலை வேண்டும். வையத்தலைமை கொள்ளும் வேலை வேண்டும்.

இந்நேரத்திலும் ஆயிர எதிர்மரை எண்ணம் மனதில் இருப்பினும் நம்பிக்கை எனக்கு உள்ளது. "இந்த விதை தன் மேல் கிடந்த பாறைகளை முட்டி முட்டியே முளைத்தது" என்று இத்தளத்தில் எழுதியவன் ஆயிற்றே நான்!

வாழ்வில் ஒவ்வொரு தருணம் ஒவ்வொரு செயலும் ஓவ்வொரு சோதனையும் ஒவ்வொரு தோல்வியும் ஒரு நன்மை பெயக்கும்! நன்மை நோக்கி பாயும் என் நெஞ்சம்



March 05, 2016

வையத் தலைமை கொள் - பாரதி

Image result for வையத் தலைமை கொள்

ஆத்திச்சூடியில் ஒரு சொல் இருக்கிறது. “வையத் தலைமை கொள்”. பாரதி ஒவ்வொருவரையும் பார்த்துச் சொல்கிறான் வையத் தலைமை கொள். இதில் ஒரு முரண்பாடு உண்டு.

வையகம் ஒன்றுதான். அதற்கு நான் தலைமை ஏற்றுக்கொண்டால் அந்த சொல் உங்களுக்கு இல்லையா? அப்படி சொன்னால் இந்த வையத் தலைமை கொள் என்கிற சொல்லுக்கு என்ன பொருள். சில இலக்கியச் சொற்களுக்கு பொருள் அற்புதமாக இருக்கிறது. ஆனால் பொழிப்புரை தந்தவர்கள் தவறாக தந்து விடுகிறார்கள். ஒரு வார்த்தைக்கான பொருள் எப்போது நமக்கு புரிந்துபோகிறதோ வாழ்க்கைக்கான அர்த்தம் அப்போது புரிந்து போகிறது.

“வையத் தலைமை கொள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். இன்று போலியாக நடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த உலகம் கோடி ரூபாய் கொட்டிக் கொடுக்கிறது. ஆனால் அதுவே ஒரு உண்மையான சிந்தனையாளனுக்குத் தரமாட்டார்கள். அப்படியென்றால் சிந்தனையாளர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக மாற மாட்டார்களா? சுகி சிவம் சொல்வார், “நான் கோடீஸ்வரன்தான், எப்போது தெரியுமா”? நான் சுகி சிவம் பேசுகிறேன் என்று சொன்னால் தமிழகத்தில் ஒரு கோடி காதுகள் எப்போது திறந்துகொள்கின்றனவோ அப்போது நான் கோடீஸ்வரன் ஆகிறேன்.” இப்போது எனக்கு “வையத் தலைமை கொள்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிகின்றது. நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் நீங்கள் அந்தத் துறையில் வல்லமை பெற்றீர்களென்றால் “வையத் தலைமை” கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். எந்தத் துறையை கையில் எடுத்தாலும் அந்தத் துறையில் முழுமையாக ஈடுபாடு கொண்டு அந்த உச்சத்தை தொடுவதற்கான வாய்ப்பு. அதுதான் வல்லமை. அது ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது. நான் இன்றைக்கு ஒரு வார்த்தையை விதைக்கிறேன். நண்பர்களே! அந்த வார்த்தையை உங்கள் மன அறையில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு மந்திரமாக சொல்லிக் கொடுங்கள். “வியப்பது வீழ்ச்சி” யாரைப் பார்த்தும் நீங்கள் வியக்காதீர்கள்.


நன்றி: நமது நம்பிக்கை

March 03, 2016

ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.


பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.


சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.


தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.

- மகாகவி சுப்ரமணிய பாரதி

Image result for ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)

January 18, 2016

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ....

மூலம்: எழுத்தாளர் ஜெயமோகன் (சுட்டியைத் தட்டுக)
"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி"

ராமன் ராவணனை வதம் செய்யும் காட்சிச் சித்திரம்


சில நாட்கள் முன்பு இவ்வரிகளை வாசித்து அதன் பொருளை, காவியத்தின் உச்சத்தை (காவிய உச்சமாக அமைவது அதிமானுடங்கள் இரண்டு மோதிக்கொள்ளும் ஒரு புள்ளி) மானுடன் வழியாக கம்பன் நிகழ்த்தி இருக்கும் கம்பராமயண வரி இது. இதற்கு பொருள் ஜெயமோகனின் எழுத்தால் பார்வையால் பார்க்க முடிந்தது. மானசீகமான் நன்றிகள்.

பொருள் இதோ (நன்றி: ஜெயமோகனின் வலையத்தில் இருந்து [சுட்டியை தட்டவும்]):

காவியம் என்பது கடல்போல் விரிந்து செல்லும் பேருள்ளம் கொண்ட கவிஞனால் கடவுளுக்கு நிகரான இடத்தில் நின்று இவ்வாழ்க்கையை நோக்கி எழுதப்படுவது. அவனுக்கு அந்தத் தளத்தில் மானுட உண்மைகளே கண்ணுக்குப்படுகின்றன, எளிய விருப்புவெறுப்புகள் அல்ல.

கம்ப ராமாயணத்தின் நாயகன் ராமன். அறத்தின் மூர்த்தியாக ஒரு மானுடனைப்பற்றிப் பேசுவதே கம்பனின் நோக்கம். ஆனால் காவியகர்த்தனாகிய கம்பன் கவிதையின் ஆயிரம் கால் புரவியில் ஏறிக்கொள்ளும் போது கம்பன் எனும் மானுடனை சிறிதாக்கி மெலெழுகிறான். அது நிகழாவிடில் அந்நூல் காவியமே அல்ல.

ராமனின் அனைத்துச் சிறுமைகளும் கம்பனால் தான் சொல்லப்படுகின்றன. ராவணனின் அனைத்து மாட்சிகளும் கம்பன் சொல்லாலேயே துலங்கி வருகின்றன. புலவர் குழந்தையே கம்பனில் அள்ளியே தன் காவியத்தை ஆக்கியிருக்கிறார். கம்பன் எவரையும் கீழிறக்கவில்லை. அவன் காவிய உச்சமாக அமைவது அதிமானுடங்கள் இரண்டு மோதிக்கொள்ளும் ஒரு புள்ளி.

ராவணன் ராமனின் அம்பு பட்டு விழும் உச்ச கட்டம். கம்பனின் சொற்கள் இப்படி எழுகின்றன. கோல் பட்டுச் சீறி எழும் ராஜநாகத்தைப் போல…

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி

இங்கே அரக்கனைக் கொல்லும் அவதாரம் அல்ல, அறமிலியை அழிக்கும் பேரறத்தான் அல்ல ஒரு கணவனும் இருக்கிறான். தன் மனைவி மேல் காமம் கொண்ட அன்னியனின் உள்ளத்தின் ஆழத்து அடுக்குகளுக்குள் சென்று தேடித் தேடித் துழாவிச் சலிக்கும் ஒரு கணவனின் உள்ளத்தை காணமுடிகிறது இவ்வரியில்.

ஒவ்வொரு சொல்லாலும் அந்த நுட்பத்தை நிகழ்த்துகிறான் தமிழ்த் தெய்வம் சன்னதம் கொண்டெழுந்த நாவினன். சீதை கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஆகச் சொல்லப்படுகிறாள். கற்பின் கனலாக அல்ல, மோகவல்லியாக. பித்தூட்டும் பெண்ணாக.

அசோகவனத்தில் கோடை நதியென மெலிந்து தெளிந்து ஒளி கொண்டு தவக்கோலம் பூண்டிருக்கும் நாயகி அல்ல அவன் நினைக்கும் அப்பெண். கள் மலர் சூடி கண்மலர்ந்து சிரித்து ராமனை களி கொள்ள வைத்த இளங்கன்னி. அவன் அங்கு தேடுவது அவளை.

ராவணன் அந்தக் கன்னியை தன் ஊன்விழிகளால் கண்டிருக்கவே மாட்டான், அவனுள் கரந்த காதலன் காணாமலிருப்பானா என்ன?

ராவணன் சீதையை கவர்ந்து வந்தது தெரிந்த காதலே. அப்படியென்றால் கரந்த காதல் எது? எங்கோ ஆழத்தில் அப்பாலும் ஒரு காதல் இருந்ததா? முற்றிலும் வேறானது? கள்ளிருக்கும் மலரா அவன் உள்ளம்?

ராவணனின் நகர்ச்சிறையிலிருந்து அவளை மீட்கலாம் ராமன், மனச்சிறையிலிருந்து எப்படி மீட்பான்? உள்ளிருக்கும் எனக் கருதி தடவுகிறது அம்பு. பதைப்புடன் ஏமாற்றத்துடன் சீற்றத்துடன்…

இன்னும் சிலநாட்களில் அவளை அனல்தேர்வுக்கு அனுப்பப் போகிறவன் அவன். அதற்கு ஒர் சலவைக்காரரின் சொற்கள் மேலதிகமாகத் தேவைப்படுகின்றன , அவ்வளவே. அதற்கான அந்தத் தவிப்பு அவனுள் இப்போதே இருக்கிறது.
இந்த உச்சத்தில் மானுட ராமனின் அம்பு பட்டுச் சரியும் அமரக்காதலனாகிய ராவணனே வாசகனின் கண்முன் பேருருவம் கொள்கிறான். அவனை நோக்கியே காவியகர்த்தனும் கண்ணீர் உகுக்கிறான் எனத் தோன்றுகிறது.

வீழ்ந்தான் அரக்கன் என அலையெழுந்து பூசல் கொண்டாடவில்லை கம்பனின் சொற்கடல். அங்குநிகழும் மானுட நாடகத்தின் உள்ளே புகுந்து தடவிச் செல்கிறது காவியச்சொல் எனும் வாளி. அங்கு கவிஞன் பிரம்மத்தின் சொல்வடிவத் தோற்றமென நின்றிருக்கிறான்.

பின்னும் மனம் விரியும் வாசகன் மட்டுமே பெருங்காதல் கொண்ட கணவனே ஆயினும் , பேரறத்தான் ஆயினும், புவியணைந்த பரம்பொருளே ஆயினும் அவன் மானுடன் என உணர்ந்து , அவன் ஆழம் தன் ஆழமே என உணர்ந்து அவனை மேலும் அறிவான். நீ நான் என இங்கு வந்தவன் அல்லவா என நெகிழ்வான்.


கம்பர்