Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

December 12, 2017

இரண்டாயிறத்திப் பதினேழ்

இரண்டாயிறத்திப் பதினேழே
இன்னும் இருபது நாட்கள் இருக்கிறாய்
உன்னை நான் மறவேன்
என் திருமண நாளின் ஆண்டு
என்பதற்காக அல்ல

ஜனவரி ஒன்று காலை இவ்வாண்டை
நல்லபடியாக கடக்க வேண்டும்
என்று வேண்டினேன்
ஏனெனில் அதற்கு ஒருவாரம் முன்பே
இவ்வாண்டு எவ்வளவு கடுமை
என்பதற்கான கடுஞ்சொல்லை
என் செவி கேளச்செய்தாய்

மனதில் உறுதியுடன்
உன்னை எதிர்க்கொண்டேன்
ஆனால் உனக்கு கிடைத்த
முதல் தருணத்திலேயே
என்னை செம்மட்டியால் அடித்தாய்

வலித்தாளாமல் வருந்தினேன்
என் வலிமை முழுவதையும்
உனக்காக கொடுத்தேன்
ஆனால் நீ எனக்கு சிறிதும்
கை கொடுக்கவில்லை

முளைத்து விதையாய் எழுந்தாலும்
நீ என் தழைகளை
கிள்ளி எரியும் தோறும்
வீழ்வேனோ என்று நான்
தழைத்து மீண்டும் வந்தேன்

வஞ்சகத்திற்கு பிறர் கைக்கொர்த்து
பிறர் அறியாமல்
அவர் சொற்களை திரித்தாய்
கருணையின்றி வெட்கமின்றி
ஓல சாசனம் எழுதினாய்

உன் சொற்கள் என்னை
வாலால் வெட்டி
மன்னில் புதைத்து
உன் இயலாமைக்கு என்னை
நரபலி கொடுத்துக்கொண்டது

நீ நசுக்கியது என்னையல்ல
என்னுள் இருந்த தன்னம்பிக்கையை
நான் உன்னை நினைக்காத நாள் இல்லை
என்பதனை நீ அறிவாயோ?
ஏனெனில் நீ என் 70-80 அகவைகளில் ஒருவன்

எனக்கெதற்கு
ஏன் நான்
என்ன தவறு செய்தேன்
இப்பொழுது ஏன்
என்று மனதில் உன்னை கேட்காத நாளில்லை

நயவஞ்சகனே உன் பதில் வேண்டி
உன்னை கேட்டேன்
ஒன்றுக்கும் பதில் கூறவில்லை
இல்லாத நியதிகளை கூறி
உண்மையை மறைத்து உன்னை தற்காத்துக்கொண்டாய்

கரையான் போல் என்னில்
ஒவ்வொரு உயிரணுவிலும் புகுந்தாய்
என் சந்தோஷங்களை
என் அமைதி
என் நம்பிக்கை
என் முயற்சி
என் நேரம்
என் ஓர் ஆண்டு
என் உன்னத தருணங்கள்
ஏன் என்னை சார்ந்தோரின் இன்பங்கள் என்று கூட இல்லாமல்
இரக்கமின்றி அழித்தாய்

நீ உமிழ்ந்த சொற்கள் எனக்கு அகோர ஓலமாய் ரீங்கரிக்கிறது
அகோர ஓலம் என்றால் என்னவென்று கேட்கிறாய்?
தொடர்மழையால் முளைத்துக்கொண்டு இருக்கும்
காட்டில் முளைத்த பல கோடி விஷகாளான்கள் போல
என்னுள் முளைத்துக்கொண்டே இருந்தாய்
உனை களைய நான் பாடுபட்டு
சோர்வடைந்தேன்
வீழ்ந்தேன்

சோர்வில் வந்த
பிழற்றல் எண்ணங்கள்
மேலூன்றிய பொழுதெல்லாம்
என் வலிமையும் பிறர் வலிமையும் அன்பும்
என்னை எளிதாக தற்காத்தது

ஆனால் என்னை இந்த கதியிற்கு
ஆளாக்கிய உன்னை என்னவெல்லாம்
செய்ய நினைத்தேன் தெரியுமா
உன்னை கடத்தி
வருடத்திற்கு பன்னிரண்டு மாதம்போல
பன்னிரண்டு பாகங்களாய் வெட்டி எரிய நினைத்தேன்

உன்னை ஒரு ஆள் உயர
கண்ணாடியாய் பாவித்து
உன்னை ஒவ்வொரு சில்லாய்
அடித்து நொறுக்க விழைந்தேன்
கண்ணாடி நொறுங்கும் தோறும்
ஒவ்வொரு சில்-இலும் அதன் ஒவ்வொரு ஓரத்திலும்
உன் குருதி வழிவதை
பார்க்கவே விரும்பினேன்
உன் விகார முகமும் அகோர மனமும்
இரக்கமின்றி  சிதைக்கவே விணவுகிறேன்

இரண்டாயிறத்திப் பதினேழே
ஆண்ட்ரியாவே
நான் வேண்டாத பாக்டீரியாவே
உன்னை அழித்துக்கொள்
என்னை விட்டுவிடு
இன்னும் இருபது நாட்கள்
இருப்பினும் இப்போதே
என்னை விட்டுவிடு!!

ஆனால் ஒன்று
கெட்டதிலும் ஒரு நன்மை
இரண்டாயிறத்திப் பதினேழே
நீ எனக்கு நிறைய வலி தந்தாய்!

No comments:

Post a Comment