Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label BharathiyarPoems. Show all posts
Showing posts with label BharathiyarPoems. Show all posts

March 05, 2016

வையத் தலைமை கொள் - பாரதி

Image result for வையத் தலைமை கொள்

ஆத்திச்சூடியில் ஒரு சொல் இருக்கிறது. “வையத் தலைமை கொள்”. பாரதி ஒவ்வொருவரையும் பார்த்துச் சொல்கிறான் வையத் தலைமை கொள். இதில் ஒரு முரண்பாடு உண்டு.

வையகம் ஒன்றுதான். அதற்கு நான் தலைமை ஏற்றுக்கொண்டால் அந்த சொல் உங்களுக்கு இல்லையா? அப்படி சொன்னால் இந்த வையத் தலைமை கொள் என்கிற சொல்லுக்கு என்ன பொருள். சில இலக்கியச் சொற்களுக்கு பொருள் அற்புதமாக இருக்கிறது. ஆனால் பொழிப்புரை தந்தவர்கள் தவறாக தந்து விடுகிறார்கள். ஒரு வார்த்தைக்கான பொருள் எப்போது நமக்கு புரிந்துபோகிறதோ வாழ்க்கைக்கான அர்த்தம் அப்போது புரிந்து போகிறது.

“வையத் தலைமை கொள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். இன்று போலியாக நடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த உலகம் கோடி ரூபாய் கொட்டிக் கொடுக்கிறது. ஆனால் அதுவே ஒரு உண்மையான சிந்தனையாளனுக்குத் தரமாட்டார்கள். அப்படியென்றால் சிந்தனையாளர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக மாற மாட்டார்களா? சுகி சிவம் சொல்வார், “நான் கோடீஸ்வரன்தான், எப்போது தெரியுமா”? நான் சுகி சிவம் பேசுகிறேன் என்று சொன்னால் தமிழகத்தில் ஒரு கோடி காதுகள் எப்போது திறந்துகொள்கின்றனவோ அப்போது நான் கோடீஸ்வரன் ஆகிறேன்.” இப்போது எனக்கு “வையத் தலைமை கொள்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிகின்றது. நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் நீங்கள் அந்தத் துறையில் வல்லமை பெற்றீர்களென்றால் “வையத் தலைமை” கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். எந்தத் துறையை கையில் எடுத்தாலும் அந்தத் துறையில் முழுமையாக ஈடுபாடு கொண்டு அந்த உச்சத்தை தொடுவதற்கான வாய்ப்பு. அதுதான் வல்லமை. அது ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது. நான் இன்றைக்கு ஒரு வார்த்தையை விதைக்கிறேன். நண்பர்களே! அந்த வார்த்தையை உங்கள் மன அறையில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு மந்திரமாக சொல்லிக் கொடுங்கள். “வியப்பது வீழ்ச்சி” யாரைப் பார்த்தும் நீங்கள் வியக்காதீர்கள்.


நன்றி: நமது நம்பிக்கை

March 03, 2016

ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.


பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.


சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.


தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.

- மகாகவி சுப்ரமணிய பாரதி

Image result for ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)

December 11, 2015

நின்னயே ரதி என்று

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாள்!
பல வருடங்களாக எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் ஒன்று.

நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
I think you are the most beautiful women, Oh Lover (Kannammaa)!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)
I thought you as my friend and surrendered to you Oh Lover(Kannammaa)!

பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!..
Gold might equal your skin! Nothing to equal you(or only your resemblance can equal you)!
பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!..... (நின்னையே!)
And then you are the young angel! Oh Lover(Kannammaa)

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
The king is showering me with arrows... at that time
கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா! ...... (நின்னையே!)
Look at me! Reach out to me (to save me)! Oh Lover(Kannammaa)

யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்!
Everything is bliss now onwards when united with the God(Lover) is what it appears to me!
மேவுமே!, இங்கு யாவுமே கண்ணம்மா..... (நின்னையே!)
​Love! Love Everything here! Oh Lover (Kannammaa)!

May 29, 2015

காளி காதல் - பாரதியார்

சில பாடல்கள் நெஞ்சினைத் தாண்டி நேரடியாக வேறெங்கோ உள்ளேச் செல்லும். அப்படி ஒரு பாரதி பாடல் இது - காளி காதல்

காளி காதல்
பின்னொர் இராவினிலே -- கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே -- களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்,
அன்னை வடிவமடா! -- இவள்
ஆதி பராசக்தி தேவியடா! இவள்
இன்னருள் வேண்டுமடா! -- பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! 8

செல்வங்கள் பொங்கிவரும்; -- நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே -- இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை -- இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை -- நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா! 9
       - மகாகவி சுப்ரமணிய பாரதியார்

[பாமாலை : பக்தி பாடல்கள் >> தோத்திரப் பாடல்கள் >> மூன்று காதல்]


 

 

January 01, 2015

2015

பல நாட்கள் (மாதங்கள்) பின்பு ஒரு பதிவு. இரு பதிவுகள் எழுதத் துவங்கி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆண்டினை திரும்பிபார்க்கையில் எனக்கு சில மகிழ்ச்சி இருப்பினும் சில வருத்தங்கள் உண்டு. எனது ஆற்றலுக்கு இனையாக நான் செயல்லாற்றவில்லை. சிந்தனை சிதறடித்து செயல் கலைந்தது. 

2015 ஆண்டு அப்படியில்லாமல், வருத்தங்களை குறைக்க வேண்டும் (Regret Minimisation Framework)

பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்
                                        - பாரதியார்

December 26, 2013

சில பாரதியார் பாடல்கள்


பிழைத்த தென்னந்தோப்பு

வயலிடை யினிலே செழுநீர் மடுக் கரையினிலே
அய லெவரு மில்லை தனியே ஆறுதல் கொள்ள வந்தேன்.

காற்றடித் ததிலே மரங்கள் கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவே.

சிறிய திட்டையிலே உளதோர் தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை- அதனை வாயு பொடிக்க வில்லை

வீழ்ந்தன சிலவாம்-மரங்கள், மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே-அதனை, வாயு பொறுத்து விட்டான்

தனிமை கண்டதுண்டு;-அதில்-சாரமிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில், அது தேம்பாகு மதுர மன்றோ?

இரவி நின்றது காண்-விண்ணிலே-இன்ப வொளித் திரளாய்;
பரவி யெங்கணுமே-கதிர்கள்-பாடிக் களித்தனவே.

நின்ற மரத்திடையே-சிறிதோர்-நிழலினில் இருந்தேன்,
என்றும் கவிதையிலே-நிலையாம்-இன்பம் அறிந்து கொண்டேன்.

வாழ்க பராசக்தி!-நினையே-வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பராசக்தி!-இதையென்-வாக்கு மறவாதே!

மழை

திக்குகள் எட்டும் சிதறி ‍ தக்கத்
     தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட‌
பக்க மலைகள் உடைந்து ‍ வெள்ளம்
     பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட‌
தக்கத் ததிங்கிட தித்தோம் ‍ அண்டம்
     சாயுது சாயுது சாயுது ‍ பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று ‍ தக்கத்
     தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட‌

வெட்டி யடிக்குது மின்னல் ‍ கடல்
     வீரத் திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் ‍ கூ
     கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா ‍ என்று
     தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய ‍ மழை
     எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!

அண்டம் குலுங்குது தம்பி!  தலை
     ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்  திசை
     வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;  என்ன‌
     தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்  இந்தக்
     காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்.

September 03, 2013

பொய் - பாரதி

பொய் சொல்வதை பற்றி நகைச்சுவையாக ....

பானையிலே தேளிருந்து
பல்லால் கடித்ததென்பார்
வீட்டிலே பெண்டாட்டி
மேல்பூதம் வந்ததென்பார்
பாட்டியார் செத்துவிட்ட
பன்னிரண்டாம் நாளென்பார்
   --- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

(தேள் பல்லால் கடிக்காது, பெண் மேல் பூதம் வராது, பன்னிரண்டாம் நாளென்று `காரியங்'களில் கிடையாது)

September 02, 2013

சில திரைப்பதிவுகள்

யார் பாரதி ?

1) நெல்லை கண்ணன்


2) பாரதி பாஸ்கர் & பட்டிமன்றம் ராஜா



சிந்திப்போம் - நெல்லை கண்ணன் @ ஈரோடு புத்தக கண்காட்சி
(மொத்தம் - 10 திரைப்பதிவுகள்)

August 18, 2013

காதல் - பாரதி

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்.
   --- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

August 15, 2013

ஆங்கில கல்வி - பாரதியின் பார்வை

கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவிளம் காண்கிலார்;
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்;
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
சொல்லு வாரெட் டுணைப்பயன் கண்டிலார். 23

கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதைபு னைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளை மீனையும்
ஓர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்,
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும், 24

சேரன் தம்பி சிலம்மை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்ததும் தர்மம் வளர்த்ததும்,
பேரு ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழைப டாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும். 25

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
முன்னர் நாடுட திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்;
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே! 26

--- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

குறிப்பு -
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;

என்பதனை கீழ்வருமாறு படிக்கவும்
    அன்ன யாவும் அறிந்திலர்  பாரதத்து
    ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

நன்றி - http://temple.dinamalar.com/news_detail.php?id=8149 

தொன்மை மறவேல்.
Meaning: Don't forget antiquity 

July 22, 2013

Do you think, like others, I'll fall down ?

The below poem by Mahakavi Subramaniya Bharathiyar is one of the best poems I have read. These lines take us to give a deep thought about our actions. It is highly inspiring to lead a meaningful life. I am striving hard to make a positive change for myself but others.

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

              - மகாகவி சுப்ரமணிய பாரதியார்

Translation:
Searching for and having food daily,
And chattering with lots of small talk,
With the mind suffering in pain,
And your deeds making others suffer as well,
Then you age and become old ,
And face the grim reaper in death.
Like lots of other people,
Do you think I'll fall down?

I shall ask you a few boons ,
You shall directly grant me those.
Any evil deeds in my past and their effects,
Shall not come back to life again.
Hereby shall I be given a new life
With no worries for me.
Give me a clarity of thought ,
And making me happy forever.
- (Originally poem written by) - Mahakavi (Great Poet) Subramaniya Bharathiyar

Translation Courtesy: Thought Trickles

Translation 2: (Courtesy: Dhilip Shiva/newmaldentamilschool.org.uk)
Search! Search for food every day!
Speak! Speak of unwanted things through out!
Worry! Worry myself with thoughts!
Hurt! Hurt others in the way of pointless things!
Get! Get old day by day!
Die! Succumb to vileness, die and finally go without a trace!
I am not them! I am not you(them)!
Don’t you ever dare to think that, I would give up! I never give up! ​

பொருள்தனைப் போற்றி வாழ்.
Meaning: Do not spend naively. Protect and enhance your wealth.