Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

October 07, 2013

Kolu 2013

Kolu or Navarathiri Kolu is a festival celebrated in the Sep-Oct of every year. Here is a collage of Kolu 2013 (this is almost 20th Kolu) in my home.

  


 

 

 

 


  


 



 



 

 
  
  


  

 

 

 

 

 



 





  



  
   


புதுச்சேரி எக்ஸ்ப்ரஸ்

அக்டோபர் - 1. என்னுடன் வேலைப் பார்த்த ரகுவீர் தரிமலா வீட்டில் நன்றாய் சாப்பிட்டேன். எதற்கு இந்த செய்தி ? இறுதியில் சொல்கிறேன். இரவு 10:35க்கு க்ருஷ்ணராஜபுரம் வரவேண்டிய புதுச்சேரி எக்ஸ்ப்ரஸ் சற்றுத் தாமதமாக 11 மணிக்கு வந்தது. S4 பெட்டியில் 49ஆம் படுக்கை எனக்கு.

(நன்றி: வலையுலகம்) 

நான் ஏறும் போது சிலர் அவர்களுடைய பெயர்களை பெயர்ப் பலகையில் இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் பெயர்கள் இல்லை என்று சற்றுக் குழம்பினார்கள். நான், அது தாதர்-இல் இருந்து வரும் சாலுக்யா எக்ஸ்ப்ரஸ். ஆதலால் அங்கு பெங்களுரில் இருந்துப் புதுவைச் செல்லும் பெயர்ப் பட்டியல் இருக்க வாய்ப்பு குறைவு என்று ஆங்கிலத்தில் சொன்னேன். அந்த பொன்னு என்னப் பாத்து யா யா`னு சொல்லிட்டு ஏறினாள். அந்த பொன்னு ரொம்ப நல்ல இருந்தா. நவீன உலகுத்துப் பெண் போன்று ஒரு தோற்றமும் பேச்சும் இருந்தாலும் அவளிடம் இருந்த அடக்கும் தேவையான அளவு நாணமும் மரியாதையும் அவளிடம் ஒரு நல்ல எண்ணத்தை உறுவாக்கியது. பரவா இல்லையே நம்ம பெட்டிலக் கூட பாக்க லக்‌ஷனமா இருக்குரப் பொன்னுங்க ஏறுதேனு நெனச்சுக்குட்டு ஏறினேன். எப்படியும் நம்ம கம்பார்ட்மேன்ல வரமாட்டாங்கனு (ஏன்னா அப்படி ஒரு ராசி/அனுபவம்) மனச தேத்தினு சென்றேன். அந்த மூன்றுப் பெண்கள் என்னோட கம்பார்ட்மேன்ல நின்றுக்கொண்டு அவர்களுடைய சாமான்களை கீழ்ப் படுக்கையின் கீழ் வைத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களுடன் மூன்றுப் பசங்களும் இருந்தார்கள். எனக்கு ஒரு மெல்லிய சந்தேகம் இருந்தது. ஒரு வேலை அந்தப் பொண்ணுங்க பக்கத்து கம்பார்ட்மேன்ல படுத்துக்கப் போதுங்கனு. ஆனா அவுங்க அங்கேயே இருந்தாங்க ஒரு பத்து நிமிஷம். எதிர்ப்பார்க்காதப் போது தான் கடவுள் கொடுப்பார் என்பார்களே அதுப் போல் அமைந்தது. எனக்கு பயங்கரச் சந்தோஷம். இருப்பினும் ஒரு மெல்லிய சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. ஏன்னா அந்தப் பொண்ணுங்க கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விட்டு எப்ப வேண்டுமானாலும் கிளம்பலாம். நாகமணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - தல. காட் இஸ் க்ரேட் தல. ஐ அம் ஆல் ஸ்மைல்ஸ். ய ஆவ்சம் க்ஏல் இன் தி ட்ரைன். ஜஸ்ட் ஸ்போக் டு ஹர் வைல் சீன்ங் நேம் இன் சார்ட் லிஸ்ட். ஆர் நேம்ஸ் வெர் தெர். ஐ ஹவ் ய லாஜிக்கல் எக்ஸ்ப்ப்லனேஷன் தட் இட் இஸ் ஃப்ர்ம் தாதர். சோ இட் மைட் நாட் பி தெர். டு யு நொ தீ பெச்ட் திங். ஷி இஸ் இன் மை கம்பார்ட்மேண்ட் தட் இஸ் வித்-இன் தி 6 சீட்ஸ் இன் தி பாக்ஸ். :D நாகமணிக்கு மற்றும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - இத்தன வாட்டி ட்ரைன்`ல வந்துருக்கேன். இவ்லோ மாடர்னா க்லாசியா ஒரு பொன்னு வாய்ப்பே இல்ல. தே ஆர் ப்லேயிங் டம்-சி :) அவர் எனக்கு ஒரு பதில் குறுஞ்செய்தி அனுப்பினார் - :) என்ஜாய் பாஸ். அம் சிட்டிங் நெஸ்ட் டு 70இயர் ஒல்ட் தாத்தா.

ரயில் வரும் வேளையில் நான் என்னுடன் முன்பு வேலைப் பார்த்த ஜகதீஷிடம் பேசிக்கொண்டு இருந்தேன். ரயில் வந்ததால் அழைப்பை துண்டித்து விட்டேன். மேற்ச் சொன்னவர்கள் என்னுடன் பயணம் செய்துக் கொண்டு இருந்தும் நான் ஜகதீஷுக்கு மறுபடியும் அழைத்து சிறிது நேரம் பேசினேன். இவர்களோ டம்-சி எனப்படும் ஒரு செய்கை விளையாட்டினை ஆடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் மிக சுவாரச்யமாக மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள். அவர்களுடையக் கேலிகள் என்னை கவர்ந்தன. என் மனம் ஜகதீஷின் பேச்சில் இல்லை என்பதே உண்மை. அவன் பேச்சு எனக்கு நன்றாய்  ஒலித்தப் போதும், ரயில் வேகமாய் செல்கிறது எனக்குக் கேட்கவில்லை என்று செல்லப் பொய்ச் சொல்லி அழைப்பை நிறைவு செய்தேன் (அவனுக்கு கல்யானம் உறுதியானதால் அவனுக்கு அங்கு ஒருவர் காத்திருந்தார் என்பதாலும் நான் அவசரமாக  நிறைவு செய்தேன்). சேவியர் அழைத்தான். அவனிடமும் ஒரிரு வாரத்தைகள் பேசி, இங்கு சில முதன்மையானவர்கள் இருக்கிறார்கள் என்று  நிறைவு செய்தேன். பிறகு `The Sunlith Path' என்கிற ஒரு புத்தகத்தைப் படித்தேன். கொஞ்சப் பக்கங்களை படித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் மனமெல்லாம் டம்-சி-யில் அல்லவா இருந்தது. (இதில் ஒன்றும் வியப்பில்லை).

(நன்றி: வலையுலகம்)

அவர்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள். என் மனமோ அவர்களிடம் தான் இருந்தது என்று முன்பே கூறினேன். அப்போது எனது காதில் நாப்பது என்று கேட்டது. என்னடா இது, இதுவரைக்கும் தமிழ் வார்த்தையே இவர்களுடைய விளையாட்டில் வரவில்லையே என்றப்பின் அவர்களின்  விளையாட்டை நோக்கினேன். அப்ப ஒருவன் நமாஸ் செய்வதுப் போல் காண்பித்துக் கொண்டு இருந்தான். நான் நாப்பது என்பதை வைத்து இது "அலிபாபவும் 40 திருடர்களுமா" என்றேன். அவன் ஆம் என்றான். அப்ப அந்தப் படத்தின் பெயரை கண்டுப்புடிக்க முயற்சித்த பெண் அவள் உள்ளங்கையை என் உள்ளங்கையில் அடிக்க அவள் விரல்கள் வானத்தை நோக்க காண்பித்தாள். நான் என் உள்ளங்கையை அவள் உள்ளங்கையுடன் லேசாக தட்டி வெற்றி வெற்றி என்றவாரு மகிழ்ந்தோம். நீங்களும் ஆட்டத்துல சேந்துக்கோங்க`னு அவுங்க கூப்பிடாங்க. நான் எனக்கு விளையாட தெரியாது. நான் வேண்டுமானால் படத்தின் பெயர்களை சொல்கிறேன். நீங்கள் உங்கள் ஆட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றேன்.  நாகமணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - ஐ அம் ஆல்சோ ப்லேயிங் டம்-ஷராஸ் என்று.

புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். அவர்களுடன் சேர்ந்து நானும் தமிழ்ப் படங்களுக்கு மட்டும் யூகித்தேன். ஒரு பெண் மலையாளம் என்பதை அறிந்துக்கொண்டேன். சரி நீங்கள் நீளத் தாமரா என்ற படத்தின் பெயரை இவர்களுக்கு நடித்துக் காண்பியுங்கள் என்றேன். அவங்களும் காண்பித்தார்கள். இவர்கள் எளிதாகக் கண்டுபிடித்தார்கள். பிறகு ஒருவன் ஒரு மூன்று வார்த்தை திரைப்படம் என்றான். கடைசி வார்த்தை வாலிபன் என்று கண்டுப் பிடித்தார்கள். உலகம் சுற்றும் வாலிபன் என்றோம். இல்லை. இரண்டாவது வார்த்தை அரண்மனை என்று செய்கை காண்பித்தான். சற்று குழம்பினோம். நான் கோட்டையா என்றேன். ஆம் என்றான். வஞ்சிக் கோட்டை வாலிபன் ? ஆம். சரியான பதிலை சொல்லி அவர்கள் மனதில் ஒரு சந்தோஷத்தை உண்டாக்கினேன். அவர்கள் ஹே ஹே ஹே என்று கோஷமிட்டார்கள். :) அவர்களுக்கு வஞ்சி என்றால் பெண் என்று பொருள் கூறி, பெண்களின் கோட்டையில் வாலிபன். அது நம் காதல் மன்னன் ஜெமினி என்று கூறினேன். அவர்கள் துத்துதுத்துது என்று உச்சுக் கொட்டினார்கள்.

(நன்றி: வலையுலகம்)

"முதல் மரியாதை" படத்தைப் பரிந்துரைத்தேன். அவர்கள் அதை உடனே கண்டுப்பிடித்து விட்டார்கள். அவர்கள் என்னை ஒரு படத்தின் பெயரை செய்கை செய்து காண்பிக்க சொன்னார்கள். இல்லை எனக்கு நடித்து காண்பிக்க தெரியாது என்று பவ்யமாக மறுத்துவிட்டேன். அவர்கள் இல்லை பரவாயில்லை முயற்சி செய்யுங்கள் என்றார்கள். ஆனால் மனதில் ஒரு சிறிய ஆசை செய்து காண்பிப்போமே என்று. மனதை மாற்றிக்கொண்டேன். செய்து காண்பிக்கலாம் என்று வந்தேன். அங்கு பலர் ஆர்வமாய் இருந்தனர். அதைக் கண்டு எனக்கு ஒரு அச்சம் உருவாயிற்று. ஆதலால் இல்லை எனக்கு நடிக்க வராது என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு சில ஆங்கில படங்கள் "அப் இன் தி எர்", "ஆல் அப்போட் உமென்" (அது "ஆல் அப்போட் மதர்ஸ்") மற்றும் 'கல்யானம் பன்னியும் ப்ரம்மச்சாரி" படங்கள் பெயரை என்னுடன் இருந்த சென்னை பெண்ணிடம் கூறினேன். அவுங்க ப்ரம்மச்சாரி, பன்னியும் ஆகிய வார்த்தைகளை கண்டுப்பிடிப்பதில் கொண்ட மெனக்கேடல் ஒரு அலாதி. ஆக மொத்தம் இந்த டம்-சி ரொம்ப நல்லா போச்சு. இதுக்கு முன்னாடி அரிசெண்ட்’ல வெள்ளிக்கிழமை மதியம் சில வாரங்கள் டம்-சி விளையாடி உள்ளோம். இன்றும் ரொம்ப நல்லா இருந்துச்சு. நம்மளும் நடிச்சுக் காண்பிக்க ஒரு நல்ல வாய்ப்ப நம்ம தவர விட்டுடோமேனு தோணுச்சு. நம்ம எதுக்கு இன்னும் இந்த கூச்சமெல்லாம் வைத்துக்கொண்டு இருக்குரோம். நாளை போய் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போரோம். இன்னும் இப்படி இருக்கோமேனு இருந்துச்சு.

பிறகு அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் எங்கு எதற்கு செல்கிறார்கள் என்று கேட்டேன். ஏன் என்றால், நான் செவ்வாய் அவர்களை சந்தித்தேன். புதன் காந்தி ஜெயந்தி என்றாலும், வியாழன் வெள்ளி விடுப்பு எடுத்து எங்க ஊரை சுற்ற ஒன்றும் பெரிதாக இல்லை. அவர்கள் சொன்னார்கள் அவர்கள் அசிம் ப்ரெம்ஜி பல்கலைகழகத்தில் எம்.ஏ எஜுக்கேஷன் படிக்கிறார்களாம். ஆதலால் அரசுப் பள்ளிகளில் ஒரு துறையில் ஆய்விற்காக (Field Study) வந்துள்ளார்களாம். குறிப்பாக ஆசிரியர்களிடம் நேர்காணல் எடுப்பார்களாம், வேண்டுமென்றால் பெற்றோர்களுடம் கலந்துரையாடுவார்களாம். வந்தவர்களில் சித்தார்த் என்பவன் சென்னைவாசி, ஒருவன் மதுரை, ஒருவன் கேரளாவில் மனப்புரம், ஒரு பெண் பஞ்சாப் மாநிலம், ஒரு பெண் சென்னை - ஆனா தமிழ் கொஞ்சம் கஷ்டபடுது (ஆங்கிலம் சரளம்), ஒரு பெண் கேரளம். இவர்கள் அனைவரும் மிக கண்ணியமாக அவர்களுடன் பழகிக்கொண்டு வந்தார்கள். பார்க்கவே நன்றாய் இருந்தது.  1 மணி ஆயிற்று. இரண்டு மணி நேரம் எப்படிச் சென்றது என்றே தெரியவில்லை. ஆனால் மிக மிக அருமையாக சென்றது.. சரி எங்க தங்கப் போரிங்க என்றேன். அவர்கள் ரெட்டியார்ப்பாளையம்’ல விடுதி ஒன்றை அவுங்க அசிம் ப்ரேம்ஜியோட புதுவை செயல்பாட்டு உழியர்கள் ஆயத்தம் செய்து உள்ளதாக சொன்னார்கள். ஆட்டோக்கு எவ்ளோ ஆகும்னு கேட்டாங்க. நான் ஒரு 200 கேட்க வாய்ப்பு இருக்கு என்றேன். எங்க போலாம்னு சித்தார்த் கேட்டான். பாண்டி’ல எப்போதும் போல் ஆரோவில், ஆஷ்ரம், மனக்குள் விநாயகர் கோவில், சுன்னாம்பார் போகலாம். நீங்க வேணும்னா சிதம்பரம் பக்கதுல பிச்சாவரம் போய்ட்டுவாங்க. ஒரு அறை நாள் ஆகும்னு சொன்னேன். சிறிது நேரம் பிறகு எல்லாரும் தூங்கலாம் என்றார்கள். எல்லோரும் உறங்கினார்கள். நானும்.  (குறிப்பு: நான் எப்போதும் ட்ரைனோ பஸ்-ஓ - ஏறி உட்காந்த உடனே தூங்கிருவேன்)  நாகமணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - அந்தப் பொன்னு மல்லூ பொன்னு. வெரி நைஸ் நைட். ஐ ஹட் ய ஹெவ்வி டின்னர். இன் ஸ்பைட் ஆப் தட் ஐ டிண்ட் கெட் ஸ்லீப் ;)

(நன்றி: வலையுலகம்)

காலை 6:30 மணிக்கே எழுந்துவிட்டேன். அந்த மல்லூ பொன்னு சைடு லொயர் உட்கார்ந்துனு வேடிக்கைப் பார்த்துனு வந்துச்சு. விழுப்புரம் வந்த உடனே நான் போய் வாயக் கொப்லிச்சுட்டு நாகமணிக்கு ஒரு ப்பொணப் போட்டேன். இரவு நடந்தையேல்லாம் கூறினேன். அவுரு என்ன சொன்னாருனு மறந்துட்டேன். ஆனா அவுரு 30 வருஷமா நானும் எத்தனையோ ரயில் பயணங்களில் சென்று வந்துள்ளேன்.  ஆனா இந்த மாதிரி ஒன்னுக் கூட நடத்து இல்லைனு பீல் பன்னார். வாழ்க்கைல இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷக்குதுக்கு தானே இந்த சின்ன மனசு ஏங்குது. FB'க்கு ஒரு குறுஞ்செய்தி தட்டினேன் - லாஸ்ட் நைட்ஸ் ட்ரைன் ஜர்னி - ஈஸிலி தி பெஸ்ட் ட்ரைன் ஜர்னி சொ ஃபார்.

(நன்றி: வலையுலகம்)

விழுப்புரத்தில் ஒரு காப்பி அடித்து விட்டு மறுபடியும் ஏறினேன். (குறிப்பு: நான் எப்போதும் விழுப்புரம் தாண்டி புதுவைக்கு 15நிமிடம் முன்னாடி தான் எழுந்துப்பேன்) அப்போது, மறுபடியும் விட்ட இடத்தில் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த மல்லூ பொன்னு சைடு லோயர்’ல எதிர்ப் பக்கம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். நான். எதுவும் பேசவில்லை. ஒரு 25 நிமிடம் கழித்து நீங்க கேரளால எந்த ஊரு ? நான் உட்டப்பலம் (Ottappalam)’னு சொன்னா. ஓ! அது எங்கே ? பாலக்காடு பக்கத்துல. ஓ! நான் பாலக்காடுக்கு என் ஃப்ர்ண்டோட கல்யானத்துக்கு வந்து இருக்கேன்’னு சொன்னேன். ஓ அப்படியா என்றாள். கொஞ்ச நேரம் கழித்து ஒரு சில வீடுகளையும், ரயில்வே கடப்புகள் (க்ராசிங்ஸ்) நகரப்புரம் வந்துவிட்டது போல் ஒரு எண்ணம் தனை உண்டாகிற்று. எனக்கு அச்சம். என்னடா 8 மணிக்கு தானே இந்த ரயில் புதுவையை சென்றடையும். இதென்ன 7:45க்கு விற்கெல்லாம் புதுவை வந்து விட்டது என்று. அந்தப் பொன்னு கிட்ட இன்னும் கொஞ்ச நேரம் பேச்சுக்கொடுக்கனும் போலைய இருந்துச்சு. பாவி ரயில் 20 நிமிஷம் முன்னாடியே வந்துருச்சு அன்னிக்கு. அம்மாக்கு எங்க இருக்கேள் என்று ப்போன போட்டேன். 7:45’க்கே வந்துருச்சா. 8 மணிக்குத்தானே வரும் என்றார்கள். புதுவை இரண்டாவது ரயில் நடைமேடையை வந்தடைந்தது புதுச்சேரி எக்ஸ்ப்ரேஸ். அந்தப் பொன்னு மத்தவங்கள எழுப்பிச்சு. (எச்சரிக்கை: நான் சொல்லப்போவது சிலருக்கு வயத்து எரிச்சலை உண்டாக்கி, இதய எரிச்சலை உண்டாக்கி, மாரடைப்பே வரக்கூடும்) என்னிக்கி ரிட்டன் என்றேன். அந்தப் பொன்னு அக்டோபர் -15 என்றாள். எனக்கு கடந்த சில நாட்களில் விழுந்த மிக இனிமையான செய்தி அதுவே என்று பரவசமடைந்தென். ஏன் என்றால் அக்டோபர் -15 அன்று கொலு பொம்மைகளை எடுத்து பரன்மேல் வைத்துவிட்டு கிளம்புவது என்று ஒரு இரண்டுமாதம் முன்பே திட்டம் செய்து உள்ளேன். எல்லாரும் எழுந்த உடன் ஹவ் ய நைஸ் ஸ்டே. என்ஜாய்னு சி யூ என்று கிளம்பினேன். அவர்களும் த்ன்க்யூ என்றார்கள். நான் கட கட வென்று வெளியே வந்து அம்மாவுக்காக காத்திருந்தேன். அவர்கள் சிறிது நேரம் கழித்து வந்தார்கள். அவர்களே ஆட்டோப் பார்த்துக்கொண்டு ஆட்டொவில் ஏறினார்கள். அவ்வளவு என்று கேட்டேன் 100 என்றார்கள். பிறகு அம்மாவுடன் அவர்கள் சென்றப் பாதையில் அவர்கள் பின்னால் தாவரியல் பூங்கா வரை சென்றேன். (குறிப்பு: வழக்கமாக நான் மகாத்மா காந்தி ரோட் வழியாக இந்தியன் காப்பி ஹொஸ் சென்றுவிட்டு செல்வேன்). அவர்கள் இடபக்கம் ரெட்டியார்பாளையம் சென்றார்கள். நான் வலப்பக்கம் ராஜா தியேட்டர் பக்கம் சென்றேன். பின்பு அல்லாவற்றையும் அசைப்போட்டுக்கொண்டு சென்றேன். சேவியர், நம்பினு எல்லார்க்கிட்டேயும் சொன்னேன். நேத்து ரயில்’ல வசந்துகிட்ட முழுசா சொன்னேன். FB-ல போட்டேன். நாகமணி மெய்ன் கரக்டர்ஸ் நரேஷன் மிஸ்ஸிங்னு கம்மண்ட் பன்னார். அவருக்காக ஒரு சிறு குறிப்பு கொடுத்தேன். ட்ரைன விட்டு இறங்கியப்பின் அல்லவா தோன்றியது அந்தப் பெண்ணிடம் நெல்லியம்ப்பதி பத்திப் பேசி இருக்கலாம். இப்போது  அவர்களுடைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டு அக்டோபர்-15’க்கு சாலுக்யா எக்ஸ்ப்ரஸில் அவர்களுக்காக காத்திருக்கிறேன்.  குறிப்பு: உண்மையிலேயே எனக்கு சித்தார்தோட பெயரைத் தவிர வேறு யாருடைய பெயரும் தெரியாது. கேட்கவுமில்லை).

பி.கு (16-அக்டோபர்) - 15-அக்டோபர் அன்று புதுச்சேரியில் இருந்து பெங்களுரு செல்கையில் அவர்களை மீண்டும் கண்டேன். அவர்களில் இரண்டு ஆண்கள்  (மற்றும் ஒரு புதிய நபர்) மட்டுமே இருந்தனர் . மற்ற நான்கு பேர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று அப்படியே பெங்களுர் வருவதாக அவர்கள் திட்டத்தை மாற்றி கொண்டனர். அந்த ஒரு நபரின் பெயரை கேட்க எனக்கு ஆவலாய் இருந்தது. ஆனால் கேட்பது ஒழுக்கம் அல்ல என்று கேட்க கூடாதென்று இருந்துவிட்டேன். பின்பு இரண்டு மணி நேரம் கழித்து அந்த பசங்க எதேர்ச்சய்யாக ஒருவர் பெயரை பேசிக்கொண்டாட்கள் (ஒட்டப்பலம் சென்ற வழியை பற்றி). ஒட்டப்பலம் ப்ரீத்தா, மதுரை தாமரைச் செல்வன், மனப்புரம் ரபிக், சென்னை சித்தார்த் (மற்ற இருவர் பெயர் தெரியவில்லை)

கேள்வி முயல்.
பொருள்: கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய் 
Meaning: Listen to good advice/techniques from knowledgeable/ experienced person

October 03, 2013

Wayanad - Kannur - Muzhappilangad Drive-in Beach

A small collage of photos on my recent trip to Wayanad and Kannur, Kerala.

 (On way to Wayanad from Panoor)
 Soochipara Falls




 Banasura Lake

 St.Angelo Fort, Kannur

 Payambalam Beach

Muzhappilangad Drive-in beach





ண்டொன்று சொல்லேல்.
Meaning: Say what you see - Don't exaggerate 

September 28, 2013

Vaishnav Jan To [One Who is a Vaishnav]

Vaishnav Jan To, sung by Bharat Ratna Shrimathi M.S.Subbulakshmi, is a song that freezes me everytime I listen to it. M.S.Subbulakshmi has given so much soul to such excellent lyrics. It was roughly in early 2008 I listened to this song, since then it has always been in my playlist. I listened to this again today and felt crying. Many singers have sung Vaishnav Jan To. But the one by M.S.S stands out. She is a legend. Her lesser known erraticaly written part of life has been excellently perceived in an essay by writer Mr.Jeyamohan at ஓர் அக்கினிப்பிரவேசம்  (click)

Video Linkhttp://www.youtube.com/watch?v=yHqhLHn6Ezc 

M.S.Subbulakshmi in sublime form [Photo Courtesy: Raghu Rai]

Song and Meaning
        Vaishnav jan to tene kahiye je
        [One who is a vaishnav]  
        PeeD paraayi jaaNe re
        [Knows the pain of others]
        Par-dukhkhe upkaar kare toye
        [Does good to others, esp. to those ones who are in misery]
        Man abhimaan na aaNe re
        [Does not let pride enter his mind]
        Vaishnav...
     
        SakaL lok maan sahune vande
        [A Vaishnav, Tolerates and praises the the entire world]
        Nindaa na kare keni re
        [Does not say bad things about anyone]
        Vaach kaachh man nishchaL raakhe
        [Keeps his/her words, actions and thoughts pure]
        Dhan-dhan janani teni re
        [O Vaishnav, your mother is blessed (dhanya-dhanya)]
     
        Vaishnav...

        Sam-drishti ne trishna tyaagi
        [A Vaishnav sees everything equally, rejects greed and avarice]
        Par-stree jene maat re
        [Considers some one else's wife/daughter as his mother]
        Jivha thaki asatya na bole
        [The toungue may get tired, but will never speak lies]
        Par-dhan nav jhaalee haath re
        [Does not even touch someone else's property]
        Vaishnav...

        Moh-maaya vyaape nahi jene
        [A Vaishnav does not succumb to worldly attachments]
        DriDh vairaagya jena man maan re
        [Who has devoted himself to stauch detachment to worldly pleasures]
        Ram naam shoon taaLi laagi
        [Who has been edicted to the elixir coming by the name of Ram]
        SakaL tirath tena tan maan re
        [For whom all the religious sites are in the mind]
        Vaishnav...

        VaN-lobhi ne kapaT-rahit chhe
        [Who has no greed and deciet]
        Kaam-krodh nivaarya re
        [Who has renounced lust of all types and anger]
        BhaNe Narsaiyyo tenun darshan karta
        [The poet Narsi will like to see such a person]
        KuL ekoter taarya re
        [By who's virtue, the entire family gets salvation]
        Vaishnav...
                            - Narsinh Mehta

னம் தடுமாறேல்.
Meaning: Never get disturbed

September 10, 2013

ஊக்கம்

"இந்த விதை தன் மேல் கிடந்த பாறைகளை முட்டி முட்டியே முளைத்தது" - இந்த வரியை இன்று நான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் (Thamizh Pechu Engal Moochu : Sep 8, 2013 - கடைசி 10 நிமிடத்தில் வரும்) கேட்டேன். நரம்புகள் சிலிரிக்கும் படியாக இருந்தது. எனது வாழ்க்கையில் குறிப்பிட்ட காலம் வரை மேற்சொன்னவாரு தான் இருந்தது. இன்று என் மேல் எனக்கு கேள்விகள் அதிகம் உள்ள இந்நாட்களில் இந்த வாக்கியம் மிகுந்த உத்வேகத்தை தருகிறது.

September 06, 2013

யாவரும் கேளிர் - கடிதம்


எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் பரிந்துரைத்த யாவரும் கேளிர் சிறுகதையினை படித்தபின் அவருக்கு நான் எழுதிய மடல்.

யாவரும் கேளிர்  => http://www.jeyamohan.in/?p=36570

அன்புள்ள திரு.ஜெ  மற்றும் திரு.சிவா-கிருஷ்ணமூர்த்தி,

இன்று இந்த யாவரும் கேளிர் சிறுகதையினை படித்தேன். ஒரு சிறிது நேர சந்திப்பில் ஒரு பெரிய உண்மையினை உணர்ந்தேன். கதை மிக நன்றாக இருந்தது. 

இது போன்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு என் வாழ்வில் ஒரு தொலைப்பேசி உரையாடலில் என்னுள் இருந்த ஒரு உண்மையை உணர்ந்தேன் களைந்தேன். உங்களிடம் அதை (நேரம் கருதி முக்கியமான 2-3 கேள்விகளை மட்டும்) பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன். 2010`இல் எனது தோழியுடன் பல மாதங்கள் கழித்து தொலைப்பேசியில் உரையாடுகையில் அவள் தனது மேற்படிப்பு பற்றி என்னிடம் பேசினாள். அவள் வீட்டில் அவளுக்கு வரன் பார்த்து கொண்டு இருப்பதனால், அவளிடம் கேட்டேன் உங்க வீட்ல வரன் பார்க்கிறார்கள், நீ படிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறாய். இரண்டும் ஒன்றாய் நேர்ந்தால் என்ன செய்வாய் ? அவள் அதற்கு என்னிடம் கேட்டாள் `அவுங்க(வருங்கால கணவர்) கல்யாணம் ஆனா பிறகு யு.ஸ்`ல படிக்க அனுமதிப்பார்களா? சொல்ல முடியாது. எல்லாரும் அதற்கு சம்மதிப்பார்களா என்று. அதற்கு அவள் பதில் கேட்டாள், அப்ப என்ன கல்யாணம் ஆனா புள்ள பெத்துப் போட்றத்துக்குத் தானா ? ஒரு 10 வினாடி என்னை நடு மண்டையில் குட்டியது போல் இருந்தது.  பின்பு சில நாட்கள் என்னை நான் வெளியில் இருந்து கண்டேன். என்னுள் இருந்த ஒரு குறுகிய மனப்பான்மை நான் கண்டுக்கொண்டேன்.  அதுவரையில் பெண்கள் கல்யாணம் ஆன பிறகு  படிக்க ஆசைப்பட்டால் ஒரிரு ஆண்டுகள் பிறகு படிக்கலாம் என்றே மனதில் பதிக்காத ஒரு எண்ணமாக இருந்தது என்னில் இருந்தது. அன்று முதல் பெண்கள் மீதான பார்வையை நான் மாற்றிக் கொண்டேன். 

யாவரும் கேளிர் எழுதிய திரு.சிவா-கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.அதனை தனது இனையத்தளத்தில் பரிந்துரைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி. 

Best,
Rajesh
http://rajeshbalaa.blogspot.in/
FandFstores.com

மெல்லி நல்லாள் தோள்சேர்.
Meaning: Never cheat on your wife

September 03, 2013

அவளது வாசனை - குறுந்தொகை

வெளியே மழை
உள்ளே மின்சாரமில்லை
மெழுகு வற்தியுடன் குறுந்தொகை
கண்மூடி திறந்தேன்
இப்பாடல் வந்தது
இதோ . . .

168. பாலை - தலைவன் கூற்று

மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
நறுந்தண் ணியளே நன்மா மேனி
புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்
மணத்தலுந் தணத்தலு மிலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.
-சிறைக்குடி யாந்தையார்.

விளக்கம் (சுஜாதவின் குறுந்தொகை - ஒரு எளிய அறிமுகம் புத்தகத்தில் இருந்து).

(அவளது வாசனை)
மழையில் மலரும்
பிச்சிமலர்களின்
நனைந்த அரும்புகளை
பனங்குடையில் சேகரித்து
மழை பெய்யும் விடியற்காலையில்
விரித்துவிட்டது போல
மணக்கும்
அந்தப் பெண்ணின் தோளை
அணைக்கவும் முடியவில்லை
பிரியவும் முடியவில்லை
பிரிந்தால் உயிர் வாழ்வது
அதனினும் இல்லை

Meaning: Never cheat on your wife

பொய் - பாரதி

பொய் சொல்வதை பற்றி நகைச்சுவையாக ....

பானையிலே தேளிருந்து
பல்லால் கடித்ததென்பார்
வீட்டிலே பெண்டாட்டி
மேல்பூதம் வந்ததென்பார்
பாட்டியார் செத்துவிட்ட
பன்னிரண்டாம் நாளென்பார்
   --- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

(தேள் பல்லால் கடிக்காது, பெண் மேல் பூதம் வராது, பன்னிரண்டாம் நாளென்று `காரியங்'களில் கிடையாது)

September 02, 2013

சில திரைப்பதிவுகள்

யார் பாரதி ?

1) நெல்லை கண்ணன்


2) பாரதி பாஸ்கர் & பட்டிமன்றம் ராஜா



சிந்திப்போம் - நெல்லை கண்ணன் @ ஈரோடு புத்தக கண்காட்சி
(மொத்தம் - 10 திரைப்பதிவுகள்)