Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

May 10, 2014

Thrissur Pooram Festival 2014

Last year, I was thinking about attending the Thrissur Pooram Festival. However, my South Korea business trip didn't allow me. 

This year, my guru TBR Uncle and I planned well in advance to attend this festival [9 May 2014] and we went. I started from Pondicherry in Mangalore Mail while uncle started from Chennai in Allepey Express. We met at Thrissur railway station at 7:30am while it was raining. After stepping out of railway station, we both had a tea. Uncle had a Pazham puri (snack made by frying maidha topped Nendram Pazham (a banana variety) too. We looked out for an accommodation. Even a below average room costed Rs.1500. We weren't' satisfied. We hunted for few more rooms. All of them costed exorbitantly. We stopped searching.











We headed towards the Vadakumnaathan temple for (one of) the main attraction of the festival  Koda Maatram (கோடை மாற்றம் /Change of Umbrella). In front of the temple, an array of elephants adorned in gold plated ornaments were lined up. In front of the elephants, an array of musicians - playing native trumpet like instruments and Chenda melam. The sound and the beat was amazing. Many were waving their hands excitedly for the beat. We were standing there for 15-20 minutes.  I must say, I was charged up. We can't get this experience while watching it in television. The people watching this performance were highly charged up and waving their hand in beat.












(Umbrella Changing Ceremony begins)

Later, I and Uncle went to Guruvayor and Tripayar. We came back to Thrissur at 2:00pm and went to Vadakumnaathan Temple. Unseasonal cloudy overcast poured down as expected. Around 4:00pm, people started gather at the south of the temple. At 4:30pm, as the people cheered up, the elephant bearing the main deity of Paramekkavu Bhagavathy Temple headed out of the temple followed by another 14 elephants. Finally 15 elephants lined up facing the crowd. Few highly decorated umbrellas were changed. Later, all these elephants headed towards the the road end of the ground and faced the temple. 





Now, another 15 elephants headed by the main deity of Thiruvembadi Sri Krishna Temple came out of the Vadakumnaathan temple and faced the elephants of the Paramekkavu Bhagavathy Temple. By now, it was 5:30pm. People cheered up and were waving the hands in sync with the beat. People roared when the persons standing on the head of the elephant (of the Thiruvembadi Sree Krishna Temple) started changing the umbrella. People once again roared when the persons standing on the head of the elephant (of the Paramekkaavu Bhagavathy Temple) started changing the umbrella. It was awesome watch different colors of umbrella at one sight. Watching them in front of eyes in real is an unparalleled experience. 







A gentleman standing next to me explained certain facts about this festival
1. Vadakamunathan Temple only hosts the show. Only Paramekkavu Bhagavathy Temple and Thiruvembadi Sree Krishna Temple participates in this show.
2. It is show of strength by both the temples. Not a competition but they participate in a competitive spirit.
3. It is the not the number of elephants that count as the display of strength.
4. It is the (Design / Color / Quality of) umbrella's that is changed every two minutes is actually the display of strength.
5. These umbrella's are rich in color, high in aesthetics, high in design, finer in details which make them look fabulous when they are put on the 15 elephants.
6. Each side has around 40-50 sets of umbrella to change every two minutes. 
7. Each umbrella is made out of pure silk, gold and silver decorations giving them a rich look. The gentleman said it would cost about Rs.1 Lakh (I though it would be some Rs.3000 only). 
8. Many NRI's pour money to make these umbrellas and crores and crores of money is poured to organize this festival.

Overall, it is definitely a wonderful experience to witness in person. 

May 08, 2014

சீமந்தோன்னயனம்

எழுத்தாளர் ஜெயமோகனின் (மூலம்) வெண்முரசுவில் இருந்து ...
ஆதி மூலம்: http://venmurasu.in/

அரசி, குழந்தைக்கான சடங்குகளை கருபுகும் கணம் முதல் வகுத்துள்ளன நூல்கள். பார்த்திவப் பரமாணு கருபுகும் நாள் கர்ப்பதாரணம் எனப்படுகிறது ‘நான் யார்?’ என அது வினவுகிறது. ‘நீ இப்பிறவியில் இக்கரு’ என உடல் விடைசொல்கிறது. அதன்பின் கரு ஊனையும் குருதியையும் உண்டு வளர்ந்து ‘நான் இங்கிருக்கிறேன்’ என தன்னை அறிகிறது. அது முதல்மாதத்தில் அணுவுடல் கொண்டிருக்கிறது. இரண்டாம் மாதத்தில் புழுவுடல். மூன்றாம் மாதத்தில் மீனுடல். நான்காம் மாதத்தில் வால்தவளையின் உடல். ஐந்தாம் மாதத்தில் மிருக உடல். ஆறாம் மாதத்தில்தான் மானுட உடல் கொள்கிறது. அதற்கு மனமும் புத்தியும் அமைகிறது. முந்தையபிறவியின் நினைவுகளால் துயருற்றும் தனிமையுற்றும் கைகூப்பி வணங்கியபடி அது தவம்செய்யத்தொடங்குகிறது.

ஆகவே ஆறாவது மாதத்தில் சீமந்தோன்னயனம் என வகுத்துள்ளனர் முன்னோர். அப்போதுதான் வயிற்றில் வளரும் கருவுக்கு கைகால்கள் முளைக்கின்றன. அது வெளியுலக ஒலிகளை கேட்கத்தொடங்குகிறது. ஒரு மனித உடலுக்குள் இன்னொரு மனிதஉடல் வாழ்கிறதென்று காட்டுவதற்காக அன்னையின் நெற்றிவகிடை இரண்டாகப்பகுத்து நறுமணநெய்பூசி நீராட்டுவதே சீமந்தோன்னயனம் என்கின்றனர். அன்று வேள்வித்தீ வளர்த்து திதி தேவிக்கு காசியபரிடம் பிறந்த ஏழு மருத்துக்களுக்கும் முறைப்படி அவியளித்து வரவழைத்து தர்ப்பை, மஞ்சள்நூல், குதிரைவால்முடி, யானைவால்முடி, பனையோலைச்சுருள், வெள்ளிச்சரடு, பொற்சரடு ஆகியவற்றில் அவர்களைக் குடியமர்த்தி அன்னையின் உடலில் காப்புகட்டி தீதின்றி மகவு மண்ணைத்தீண்ட நோன்புகொள்வார்கள்.

சீமந்தோன்னயனத்துக்கு பெண்கள் மட்டுமே செல்லமுடியும். என் துணைவி சென்றுவிட்டு மீண்டு என்னிடம் அங்கு கண்டதைச் சொன்னாள். அவள் கண்டது முற்றிலும் புதிய காந்தார அரசியை. அவளுடைய வலிவின்மையும் சோர்வும் முற்றாக விலகி நூறுபேரின் ஆற்றல் கொண்டவளாக ஆகிவிட்டிருந்தாள். வயிறுபுடைத்து பெருகி முன்னகர்ந்திருக்க அவள் பின்னால் காலெடுத்துவைத்துவரும் பசுவைப்போலிருந்தாள் என்றாள். அரண்மனைக்கூடத்துக்கு அவள் நடந்துவந்த ஒலி மரத்தரையில் யானைவருவதுபோல அதிர்ந்தது என்றும் அவள் உள்ளே நுழைந்தபோது தூணில் தொங்கிய திரைகளும் மாலைகளும் நடுங்கின என்றும் சொன்னாள்.

May 01, 2014

ஏன் நாம் ஒரு தவறை பலமுறை தெரிந்தே செய்கிறோம் ?

எழுத்தாளர் ஜெயமோகனின் (மூலம்) வெண்முரசுவில் இருந்து ...
ஆதி மூலம்: http://venmurasu.in/

சீடனாகிய சுகுணன் பெருமூச்சுவிட்டு “ஓம்” என்றான். கபிலர் “யாருடைய வரவென நான் அறியலாமா?” என்றார். “என் பெயர் கிந்தமன். காசியபகுலத்தில் குஞ்சரர் என்னும் முனிவருக்கு அப்சரகன்னியில் பிறந்தவன்” சீடனின் வாயிலிருந்து நடுவயதான ஒருவரின் குரல் எழுந்ததைக் கண்டு மாத்ரி திகைத்து மூச்சை இழுத்தாள். “தாங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என அறியலாமா?” என்றார் கபிலர். சுகுணன் “நான் இங்கு அழைக்கப்பட்டேன். இங்கே விழுந்துள்ள விதியின் முடிச்சொன்றை நான் அவிழ்க்கவேண்டுமென விதியே ஆணையிட்டது” என்றான்.

“தங்கள் சொற்களுக்காகக் காத்திருக்கிறோம் முனிவரே” என்றார் கபிலர். சுகுணன் “சந்திரகுலத்தில் விசித்திரவீரிய மன்னரின் மைந்தனாகப்பிறந்த இம்மன்னர் பாண்டு எனக்கு பெரும் தீங்கொன்றை இழைத்தார்” என்றான். பாண்டு திகைப்புடன் எழுந்துகொண்டான். “முதிரா இளமையில் கூதிர்காலத்தில் இமயமலையின் அடிவாரத்திலுள்ள பிங்கலவனம் என்னும் குறுங்காட்டில் அஸ்தினபுரியின் இளவரசரான பாண்டு தன்னுடைய இருபது வேட்டைத்துணைவர்களுடன் யானைமீதமர்ந்து வேட்டைக்குச் சென்றிருந்தார்” என்று சுகுணன் சொன்னதும் பாண்டு அச்சம் குடியேறிய கண்களுடன் அமர்ந்துகொண்டான்.

“அந்த வேட்டையில் பாண்டுவால் ஓடும் செந்நாய்களையோ துள்ளும் மான்களையோ பதுங்கும் முயல்களையோ வேட்டையாடமுடியவில்லை. அவரது விழிகளுக்கு கூர்மையில்லை. அவரது அம்புகள் விழிகளைத் தொடரவும் முடியவில்லை. தன்னால் வேட்டையாடமுடியாதென்று அவர் உணர்ந்தார். ஒருவேட்டைமிருகமாவது கையிலில்லாமல் கானகத்திலிருந்து திரும்பக்கூடாதென அவர் எண்ணியபோது பசும்புதர்களுக்கு அப்பால் இரண்டு மான்கள் நிற்பதைக் கண்டு வில்குலைத்தார்.”

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“அப்போது வேட்டைத்துணைவனான குங்குரன் என்ற முதியவன் அரசே, அவை இணைமான்கள், அவற்றைக் கொல்ல வேட்டைத்தெய்வங்களின் ஒப்புதலில்லை என்றான். மிகவும் இளையவராகிய பாண்டு சினத்துடன் திரும்பி அதை நான் அறிவேன், ஆனால் இன்று ஒருவேட்டையேனும் இல்லாமல் திரும்புவதைவிட இந்தப்பாவத்தைச் செய்யவே விரும்புகிறேன் என்று கூவியபடி தன் வில்லை நாணேற்றி தொடர்ச்சியாக ஐந்து அம்புகளால் அந்த மான்களை வீழ்த்தினார்.”

சுகுணன் சொன்னான் “அந்த மான்கள் அம்புபட்டு அலறிவிழுந்தபோது அவற்றின் குரல் மானுடக்குரல் போலவே இருக்கிறது என்று பாண்டு நினைத்தார். வேட்டைத்துணைவர்களும் அவ்வண்ணமே நினைத்தனர். உண்மையில் அது மானுடனாகிய நானும் என் துணைவியாகிய கௌசிகையும்தான்.” பாண்டு நடுங்கும் கைகளை ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொண்டு வெளுத்த உதடுகளுடன் அமர்ந்திருந்தான். சாளரத்திரைச்சீலைகள் காற்றில் பறந்து அமைந்தன.

“முற்பிறவியில் நான் தித்திரன் என்னும் முனிவனாக இருந்தேன். ஐந்துவயதிலேயே ஞானம்தேடி கானகம் சென்று கடுந்தவம் செய்து உடல்துறந்து விண்ணகமேகினேன். ஏழு பிரம்ம உலகங்களை என் தவத்தால் கடந்து நான் விண்ணளந்தோன் வாழும் வைகுண்டத்தின் பொற்கதவம் முன் நின்றேன். அங்கே காவல்நின்றிருந்த ஜயனும் விஜயனும் என்னை அதிலிருந்த சின்னஞ்சிறு துளைவழியாக உள்ளே செல்லும்படி ஆணையிட்டனர். நான் உடலைச்சுருக்கி நுண்வடிவம் கொண்டு உள்ளே நுழைந்தேன். என் இடதுகையின் கட்டைவிரல் மட்டும் உள்ளே நுழையாமல் வெளியே நின்றுவிட்டது.”

”திகைத்து நின்ற என்னை நோக்கி ஜயவிஜயர் முனிவரே உங்கள் ஆழத்தின் அடித்தட்டில் முளைக்காத விதை ஏதோ ஒன்று உள்ளது. அனைத்தும் முளைத்துக் காய்த்துக் கனிந்தவர்களுக்கன்றி வைகுண்டத்தில் இடமில்லை என்றனர். நான் என் அகத்தை கூர்ந்து நோக்கியபோது என்னுள் கடுகை பல்லாயிரத்தில் ஒன்றாகப் பகுத்தது போல சின்னஞ்சிறு காமவிழைவு எஞ்சியிருப்பதைக் கண்டேன். அதை நிறைக்காமல் என்னால் உள்ளே நுழையமுடியாதென்று உணர்ந்தேன். முனிவரே இங்கே ஒருகணமென்பது மண்ணில் ஏழு பிறவியாகும். சென்று வாழ்ந்து நிறைந்து மீள்க என்றனர் ஜயவிஜயர்.”

“நான் காட்டில் நீத்த உடல் மட்கி மறைந்த மண்மீது அமர்ந்து தவம்செய்த குஞ்சரர் என்னும் முனிவரின் சித்தத்தில் குடியேறி அவர் விந்துவில் ஊறி பாத்திவப் பிந்துவாக ஆனேன். காமம் எழுந்து விழிதிறந்த குஞ்சரர் அந்தவனத்தில் மலருண்ண வந்த சதானிகை என்னும் அப்சரகன்னி ஒருத்தியைக் கண்டார். அவளை நான் அவருடலில் இருந்து அழைத்தேன். அவ்வழைப்பைக்கேட்டு அவள் அருகே வந்தாள். அவளுடன் அவர் இணைந்தபோது நான் என் உருவை மீண்டும் அடைந்தேன். கிந்தமன் என்ற மகனாகப் பிறந்து அவரது தழைக்குடிலில் வளர்ந்தேன்.”

“என் முதிராஇளமையில் ஒருநாள் தந்தை சொற்படி ஊழ்கத்தில் இருக்கையில் வைகுண்டவாயில் முன்னால் ஒரு எளிய கற்பாறையாகக் கிடந்த தித்திரனை நான் கண்டேன். நான் யாரென்று உணர்ந்தேன். என் இடக்கையின் கட்டைவிரலை என் தவத்தால் அழகிய இளம்பெண்ணாக ஆக்கிக்கொண்டேன். அவளுக்கு கௌசிகை என்று பெயரிட்டு என் துணைவியாக்கினேன். அவளுடன் காமத்தை முழுதறியத் தலைப்பட்டேன். ஒருபிறவியிலேயே எழுபிறப்பின் இன்பத்தையும் அறிந்து கனிய எண்ணினேன்.”

“என் இனிய துணைவி கௌசிகையும் நானும் ஊர்வன நீந்துவன பறப்பன நடப்பன என்னும் நால்வகை உயிர்களாகவும் வடிவெடுத்து காமத்தை அறிந்துகொண்டிருந்தோம். மானாக அந்த அழகிய பிங்கலவனத்தில் துள்ளிக்குதித்தும், தழுவியும் ஊடியும், சுனைநீர் அருந்தியும், நறும்புல்தளிர்களை உண்டும் மகிழ்ந்தோம். இணைசேர்ந்து முழுமையை அறிந்துகொண்டிருந்த கணத்தில் பாண்டுவின் அம்புபட்டு எங்கள் காமத்தவம் கலைந்தது. உடலும் உள்ளமும் பிரிந்து நாங்கள் விழுந்தோம். எங்கள் உடல்களை பாண்டுவின் வேட்டைக்குழு எடுத்துச்செல்வதை அந்தக் காட்டின் காற்றுவெளியில் நின்றபடி திகைத்து நோக்கிக்கொண்டிருந்தோம்.”

பாண்டு எழுந்து கைகளை வீசி “நான் ஓர் அரசனுக்குரிய செயலையே செய்தேன்! வேட்டையும் போரும் அரசனுக்குப் பாவமல்ல” என்று சிதறிய குரலில் கூவினான். சீற்றத்துடன் அவனைநோக்கித் திரும்பிய சுகுணன் “ஆம், அது நெறி. ஆனால் அந்நெறிதான் இணைசேர்ந்திருக்கும் உயிர்களையும் துயிலில் இருக்கும் உயிர்களையும் கொல்லலாகாது என்று விலக்குகிறது. புணரும் உயிரின் விந்துவில் வாழும் உயிர்களை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை. கனவில் எழும் மூதாதையரைக் கலைக்கவும் எவருக்கும் உரிமை இல்லை” என்றான். அந்தச்சீற்றத்தைக் கண்டு பாண்டு முகம் சிவக்க கண்கள் நீர் நிறைய அப்படியே அமர்ந்துவிட்டான்.

“காமமும் கனவும் அனைத்துயிருக்கும் உரிமைப்பட்டவை. காமத்திலும் கனவிலும் உயிர்களின் அகம் பெருகுகிறது. அப்போது ஓர் உடலை அழிப்பவன் இரு அகங்களை அழிக்கிறான். அவன் அந்த இரண்டாவது அகத்திற்கான பொறுப்பை ஏற்றே ஆகவேண்டும். நீ பிழைசெய்துவிட்டாய். ஆகவே என் சாபத்தை நீ அடைந்தேயாகவேண்டும்.” பாண்டுவின் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு கன்னங்களில் வழிந்தது. அவன் உதடுகளை அழுத்தியபடி கைகூப்பினான்.

வளையலோசை கேட்டு குந்தி நிமிர்ந்து அம்பாலிகையைக் கண்டாள். அவள் கண்களில் தெரிவதென்ன என்று அவளால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அறியாத விண்ணாழத்தில் இருந்து மண்ணுக்குவந்த தெய்வம் போல அவள் தோன்றினாள். நகைக்கிறாளா அழுகிறாளா என்று அறியமுடியாதபடி முகம் விரிந்திருக்க உதடுகள் இறுக்கமாக ஒட்டியிருந்தன.

“அன்று அந்தக் காற்றுவெளியில் நின்றபடி நான் தீச்சொல்லிட்டேன். நீ ஒருநாளும் காமத்தை அறியமாட்டாய் என்றேன். காமத்தை உன் உடலும் உள்ளமும் அறிந்துகொண்டிருக்கும். தீப்பற்றிக்கொள்ளாத அரணிக்கட்டை போல உன் அகம் முடிவில்லாது உரசிக்கொண்டிருக்கும். அவ்வெம்மையில் நீ தகிப்பாய். என்னைப்போலவே உன் உள்ளம் கவர்ந்த தோழியையும் நீ அடைவாய். ஆனால் அவளுடன் கூடும்போது அக்காமம் முதிராமலேயே நீ உயிர்துறப்பாய்.”

பாண்டு கைகூப்பியபடி “நான் அச்செயலைச் செய்யும்போதே அதன் விளைவையும் அறிந்திருந்தேன் என இன்று உணர்கிறேன் முனிவரே. அது நோயுற்ற குழந்தையின் வன்மம். இயலாத உடலில் கூடும் குரூரம். என் அகம் மீறிச்செல்ல விழைந்துகொண்டிருந்த வயது அது. என் உடலின் எல்லைகளை என் அகத்தின் எல்லைகளை நான் கற்பனையால் கடந்துசென்றுகொண்டிருந்தேன். அந்த விசையால் அறத்தின் எல்லைகளையும் கடந்துசென்றிருக்கிறேன். கடந்துசெல்லும்போது மட்டுமே நான் இருப்பதை நான் உணர்ந்தேன். எனக்கும் வலிமையிருக்கிறது என்று அறிந்தேன்.”

தலையை தன் கைகளில் சேர்த்து முகம் குனித்து தளர்ந்த குரலில் பாண்டு தொடர்ந்தான் “அந்த நாளை இன்றும் நினைவுகூர்கிறேன். இணைசேர்ந்து நின்ற மான்களை நான் ஏன் கொன்றேன்? வேட்டைக்காக மட்டும் அல்ல. அது மட்டும் அல்ல. அவை நின்றிருந்த இன்பநிலைதான் அதற்குக் காரணம். ஆம், அதுதான். அவற்றைக்கொல்ல நான் எண்ணிய கணம் எது? அவற்றில் அந்த ஆண்மான் உடலின்பத்தில் திளைத்து தன் பெரிய பீலிகள் கொண்ட இமைகளைத் தாழ்த்தி கண்மூடியது. அதைக்கண்ட கணமே நான் என் அம்புகளை எடுத்துவிட்டேன்.”

“அம்புகள் ஒன்றன் மீது ஒன்றாக மான்களைத் தைத்தன. ஐந்து அம்புகள். முதல் அம்பு என் கையை விட்டெழுந்தபோது என் அகம் குற்றவுணர்வு கொண்டு சுருண்டது. ஆனால் அடுத்த அம்பு அக்குற்றவுணர்ச்சியைச் சிதறடித்தது. என் உடல் உவகையில் அதிர்ந்தது. அதுவும் ஒரு காமம் என்பதைப்போல. அடுத்தடுத்த அம்புகள் வழியாக நான் இன்பத்தின் உச்சம் நோக்கிச் சென்றேன். என் கண்கள் கலங்கி உடல் சிலிர்த்துக்கொண்டிருந்தது. பாவம் போல பேரின்பம் வேறில்லை என அன்று அறிந்தேன். ஏனென்றால் பாவம்செய்பவன் தன்னைப் படைத்த சக்திகளை பழிவாங்குகிறான்.”

“அம்புகள் தசையில் சென்று குத்திநிற்பதை, அந்தத் தசைகள் அதிர்ந்து துடிப்பதை, குருதி மெல்லத்தயங்கி ஊறிக்கசிவதை, அம்பின்விசையில் நிலைதடுமாறி அவை எட்டுகால்களும் மாறிமாறி ஊன்ற சரிந்து மண்ணில் விழுவதை அவற்றின் இளமையான வால்களும் விரிந்த காதுகளும் துடிப்பதை நீள்கழுத்துக்கள் மண்ணில் எழுந்து விழுந்து அறைபடுவதை ஓடுவதைப்போல குளம்புகள் காற்றில் துழாவுவதை இத்தனைநாளுக்குப்பின்னும் கனவு என துல்லியமாக நினைவுறுகிறேன்.”

“அப்போதும் அவற்றின் உடல் இணைந்திருந்தது” என்றான் பாண்டு. “ஆம், அதை நான் மறக்கவேயில்லை. ஒவ்வொரு முறை நினைவுகூரும்போதும் என் உடலை அதிரச்செய்வது அதுதான். அவை இணைந்தே இறந்தன. நான் நேற்று மாத்ரியுடன் இருக்கையில் என் அகம் முழுக்க நிறைந்திருந்த காட்சியும் அதுவே. நினைவிழந்து சரிவதற்கு முன் நான் இறுதியாக எண்ணியது அதைப்பற்றித்தான்.”

சத்யவதி “தவசீலரே, வரமருளவேண்டும். பாவங்களனைத்தும் பொறுத்தருளப்படும் பேருலகைச் சேர்ந்தவர் நீங்கள். தங்கள் சினம் தணியவேண்டும். என் குழந்தைக்கு தங்கள் அருளாசி வேண்டும்” என்று கைகூப்பினாள். “பேரரசி, அக்கணத்துக்கு அப்பால் நான் சினமேதும் கொள்ளவில்லை. அக்கணமெனும் மாயையை கடந்ததுமே வாழ்வும் மரணமும் ஒன்றே என்றறிந்துவிட்டேன். ஆனால் பிழையும் தண்டனையும் ஒரு நிறையின் இரு தட்டுகள். அவை என்றும் சமன்செய்யப்பட்டிருக்கவேண்டும். அவற்றை மீற தெய்வங்களாலும் ஆகாது” என்றான் சுகுணன்.

சுகுணன் “நேற்றைத் திருத்த எவராலும் இயலாது என்பது வாழ்வின் பெருவிதி. அதை அறிபவர் கூட நாளையைத் திருத்த இக்கணத்தால் முடியும் என்ற பெருவிந்தையை அறிவதில்லை” என்று தொடர்ந்தான். “உங்கள் சிறுமைந்தனுக்கு என் அருளாசிகளை அளிக்கிறேன். அவன் மைந்தரால் பொலிவான். இழந்த காமத்தின் பேரின்பத்தை பலநூறுமடங்காக பிள்ளையின்பத்தால் நிறைப்பான். போர்முதல்வனும் அறச்செல்வனும் ஞானத்தவத்தவனும் சென்றடையும் முழுமையின் உலகையும் இறுதியில் சென்றடைவான். அவனுடன் காமநிறைவடையாத பெண் எவளோ அவள் அவனை அவ்வுலகுக்கு வழிகாட்டி அழைத்துச்செல்வாள். தன் பொற்கரங்களால் அவனுடைய அனைத்து வாயில்களையும் அவளே திறந்துகொடுப்பாள். ஆம், அவ்வாறே ஆகுக!”

April 20, 2014

True Consciousness - Flowers



The true consciousness is that you do the right thing not because it us your duty to do it, not because it is worthy to do it and it is expected of you to do it. The flower blooms spontaneously without any sense of duty. It possesses no sense of duty because its nature is to do so, to be beautiful. Human beings also could be like that, spontaneous and natural in its action and behavior. When you do a great thing, you do not feel that you are doing something marvelous or that you are exercising or stretching your power. You do not do a thing because it is your duty to do it but because it is your nature to do so, you cannot but do it.
    - Nolini Kanta Gupta (pg 95 FLOWERS and their Spiritual Significance)

March 30, 2014

அறம் - பெட்ரோல் வங்கி

இன்று ஞாயிறுக்கிழமை 30-3-2013 மாலை 7 மணியளவில். பெட்ரோல் நிரப்ப புதுவையில் உள்ள அட்லேயர் பெட்ரோல் வங்கியிற்குச் சென்றேன். ரூ.500 கொடுத்தேன். 3L பெட்ரோல் ரூ.220 90mL என்ஜின் எண்ணை ரூ.20 என்று ரூ.240 ஆயிற்று. பெட்ரோல் நிரப்புபவர் மீதி சில்லரை என்று கொடுத்தார். வாங்கிக்கொண்டு சற்று நகர்ந்தேன். என் முன்பு இடதுப் பக்கத்தில் வண்டி டயருக்கு காற்று நிரப்ப நான்குப் பேர் வரிசையில் இருந்தனர். நானும் காற்று நிரப்பி பல வாரங்கள் ஆகிவிட்டது என்று நின்றேன். நான்கு பேருக்கு காத்திருக்க சற்று பொறுமையும் இல்லை எனக்கு. இருப்பினும் மனதை சற்று கட்டுப்படுத்தி வண்டிக்கு அடிச்சி பல ஆச்சு, இதுல ஒரு அதிகபட்சம் அஞ்சு நிமிடம் தான் ஆகும். பரவாயில்லை. நம்ம ஒன்னும் வெட்டி முறிக்க போகவில்லை என்று காத்து இருந்தேன். ஒரு இரண்டு நிமிடம் பிறகு என்னிடம் ஒரு பெட்ரோல் பங்கு ஊழியர் (வேறு ஒருவர்) வந்து பேசினார். நீங்க எவ்ளோ காசு கொடுத்தீங்க ? ரூ.500 என்றேன். எனக்கு உடனே பளார் என்று மூஞ்சில் அடித்ததுப் போல் ஒரு எண்ணம். ஆமாம். நான் ரூ.260 வாங்க வேண்டிய இடத்தில் ரூ.60 வாங்கி விட்டு வந்து இருக்கிறேன். அவர் எனக்கு ரூ.200 தந்துவிட்டு சென்றார். அங்கேயே தலையில் கை வைத்து சிந்தித்தேன்.

இதில் இரண்டு அம்சங்களை நோக்க வேண்டும்
1) இன்றும் அறம் சார்ந்து நிறுவனங்கள் இயங்குகின்றன. என் நேரம் நான் அஞ்சு நிமிடன் நின்றதனால் எனக்கு ரூ.200 கிடைத்தது என்பதை காட்டிலும், அவர் வந்து எனக்கு ரூ.200 தனைத் தேடி வந்துக் கொடுத்த அறவுணர்ச்சியைப் பாராட்டாமலும், நெகிழாமலும், கற்காமாலும் இருக்க இயலாது. இதைப் போன்ற தருணங்கள் தான் வாழ்வில் அறம் சார்ந்து இருக்க வேண்டும் என்ற வேரிற்கு நீரூற்றிக்கொண்டே இருக்கின்றது. அறம் வாழ்க! 

2) நான் எவ்வளவு அலட்சியமாய் இருந்து உள்ளேன் என்பதை நான் திரும்பிப்பார்க்காமல் இருக்க முடியாது. இதற்கு என்ன காரணம் ? பர்சில் காசு இருக்கா? மறதியா ? கவனகுறைவா ? வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்கிற அவசரமா ? இவையெல்லாம் சேர்ந்த ஒரு அமைதியின்மையா ? என்னை நானே கேட்டுகொள்கிறேன்.  எல்லாமே தான் என்று தோன்றுகிறது. (பின்பு. அம்மாவிடம் சொன்னேன். அம்மா சொன்னார்கள், பெட்ரோல் வங்கியில் பெட்ரோல் போட்டு விட்டு தான் காசு கொடுக்க வேண்டும். இது பெட்ரோல் வங்கியிற்கு மட்டும் அல்ல)

ஒவ்வொரு ரூபாயும் இந்த தருணத்தில், அதுவும் கல்லூரிக்கு செல்லும் போது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நிகழ்வு எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. அடுத்த மூன்று மாதங்களும், அதன் பின்பும் வாழ்க்கையில் நாம் எவ்வளவு சிக்கனமாகவும், கவனமாகவும், பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பது உறுதிப்பட தெரிகிறது. 

March 28, 2014

சூக்‌ஷ்மகதனம்

பெரும்பாலான ஆயர்கள் அறிவார்கள். நாங்கள் தனித்து விலகி காட்டுக்குள் நிற்கும் பசுவை அருகே அழைப்பதற்கு அதன் உடலைக் கூர்ந்து நோக்கி ‘பார், பார், பார்’ என அகத்துக்குள் சொல்லிக்கொள்வோம். நம் அகவல்லமையை முழுக்க அந்தச் சொல்லில் குவித்தால் நாம் பார்வையைக் குவித்திருக்கும் பசுவின் உடற்பகுதியின் தோல் சிலிர்த்து அசையும். பசு திரும்பி நம்மை நோக்கும். நாம் அதன் கண்களைப்பார்த்து அருகே வா என்றால் அருகே வரும்’ என்றேன். ‘சிறுவயதிலேயே இவ்வித்தையை நானும் என் தமையனும் கற்றோம். அதை நான் மானுடரிலும் விரிவாக்கிக் கொண்டேன்’ என்றேன்.

முனிவர் வியப்புடன் “பெண்ணே, நான் இப்போது இச்சுவடியில் கற்றறிந்துகொண்டிருந்ததும் அதே வித்தையைத்தான். சூக்‌ஷ்மகதனம் என்று இதை முனிவர்கள் சொல்கிறார்கள். ஒரு மனம் இன்னொரு மனத்துடன் குரலில்லாமலேயே உரையாடமுடியும். அணுக்கள் பூச்சிகள் புழுக்கள் போன்ற சிற்றுயிர்கள் அவ்வாறு ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டிருக்கின்றன. உயிர்களின் அறிவும் மொழியும் விரிவடையும்தோறும் அத்திறன் இல்லாமலாகிறது. சித்தம் ஒருங்கமைந்த மனிதர்களிடம் அத்திறன் முற்றிலும் இல்லை” என்றார்.

“ஆனால் நம்மனைவருக்கும் உள்ளே நம் அறிவின் அலைகளுக்கு அடியில் அந்த முதற்பேராற்றல் உறைந்திருக்கிறது. குழந்தை அழுவதற்கு ஒருகணம் முன்னரே அன்னை அது அழப்போவதை உணர்ந்துகொள்கிறாள். காதல்கொண்ட மனங்கள் ஒன்றாகின்றன. தியானத்திலமரும் முனிவர்களின் உள்ளங்கள் ஒற்றைப்பெரும்படலமாக ஆகின்றன. சித்த அலைகளை அடக்கி அந்த ஆற்றலை உள்ளிருந்து துயிலெழுப்புவதையே சூக்‌ஷமகதனம் என்று சொல்கிறோம்” என்றார் முனிவர்.

நான் வியப்புடன் அதைப்பற்றி கேட்டேன். “அதன்மூலம் மனிதர்களின் உள்ளங்கள் ஒன்றாக முடியும். வேதங்கள் உங்கள் உள்ளங்கள் சுருதியால் ஒன்றாகட்டும் என அறைகூவுவது இதைப்பற்றித்தான். ஆயிரமாண்டுகாலமாக மானுடஞானம் மண்ணுக்கு அடியில் விரிந்திருக்கும் அந்தக் கடலைக் கண்டடைவதற்காகவே முயன்றுகொண்டிருக்கிறது. நான் தவம்செய்யப்போவதும் அந்த ஆலயவாயில் முன்புதான்” என்றார் துர்வாசர்.

March 26, 2014

தோழா தோழா கனவு தோழா

எனக்குப் பிடித்த பாடல்


தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்,

உன்ன நான் புரிஞ்சுக்கணும்,
ஒன்னொன்னா தெரிஞ்சுக்கணும்,
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா,
காதல் ஆகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது,
நட்புக்குள் தவறுகள் நடக்காது,
நட்புக்குள் தன்னலம் இருக்காது,
நட்புக்கு ஆண் பெண் தெரியாது,
நட்பு என்னும் நூல் எடுத்து,
பூமிய கட்டி நீ நிறுத்து,
நட்பு நட்புதான்,
காதல் காதல்தான்,
காதல் மாறலாம்,
நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை,
காதல் இன்றி மனிதனும் இல்லை,
நண்பர்களும் காதலர் ஆக,
மாறியப்பின் சொல்லிய உண்மை,

நீயும் நானும் பழகுறோமே,
காதல் ஆகுமா?
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?

தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,

நீயும் நானும் வெகு நேரம்,
மனம் விட்டு பேசி சிரித்தாலும்,
பிரியும் பொழுதும் சில நொடிகள்,
மௌனம் கொள்வது ஏன், தொழி?
புரிதலில் காதல் இல்லையடி,
பிரிதலை காதலை சொல்லுமடி,
காதல் காதல்தான்,
நட்பு நட்புதான்,
நட்பின் வழியிலே,
காதல் வளருமே,

பிரிந்து போன நட்பினை கேட்டால்,
பசுமையாக கதைகளை சொல்லும்,
பிரியமான காதலும் கூட,
பிரிந்தபின் ரணமாய் கொல்லும்,

March 18, 2014

அனசூயை - தத்தாத்ரேயன்

ஜெயமோகனின் வெண்முரசுவில் இருந்து...

பொறாமையை வெல்லும் பொறைநிலையோ கலையின் முதிர்நிலையே ஆகும். அனசூயை வாழும் பிரஜாபதியின் துணைவியாக பல்லாயிரம் மண்ணகங்களை தன் மடியில் தவழும் குழந்தைகளைப்போல காத்துவந்தாள். அன்றொருநாள் பூமி மீது இந்திரன் சினம் கொண்டான். வானில் அவன் வில் தோன்றாமலாயிற்று. தன் வஜ்ராயுதத்தை வளைதடியாக்கி மேகக்கூட்டங்களை வெள்ளாடுகளைப்போல அவன் ஓட்டிச்சென்று மேற்குத்திசையின் இருண்ட மடிப்பு ஒன்றுக்குள் ஒளித்துவைத்தான். மழையின்மையால் பூமி வெந்து வறண்டது. தாவரங்கள் பட்டு கருகின. கங்கை மணல்வரியாக மாறியது.

வைதிகர் தேவர்களுக்கு அவியிட்டு மும்மூர்த்திகளையும் வணங்கி காக்கும்படி மன்றாடினர். நாகர்கள் தங்கள் முதுநாகத்தெய்வங்களுக்கு பலிகொடுத்து வெறியாட்டாடி வணங்கினர். மானுடர் தங்கள் தேவர்களை வணங்க ஊர்வனவும் பறப்பனவும் நடப்பனவும் நீந்துவனவும் தங்கள் தெய்வங்களை வணங்கி மன்றாடின. மும்மூர்த்தியரும் தேவர்களும் இந்திரனைத் தேடி அலைந்தனர். அவனோ விண்ணக இருளுக்குள் ஒளிந்திருந்தான்.

நெய்யகன்ற அகலென பூமி தன் ஒளியவிந்து அணையும் நாளில் மண்ணில் வாழ்ந்த எளிய புழு ஒன்று தான் புழுவென்றறிந்தமையால் பொறாமையை வென்றது. அது தாகத்தால் வாடி இறக்கும் கணத்தில் அனசூயையை வேண்டியது. அன்னையே நான் இறப்பினும் என்குலம் அழியாது காத்தருள்க என்றது.

அதன் கோரிக்கையை அன்னை ஏற்றாள். அவள் கருணை மண்மீது மழையாகப் பொழிந்தது. மண்ணில் அனைத்துத் தாவரங்களும் எழுந்து விரிந்து தழைத்து மலர்ந்து கனிந்து பொலிந்தன. தேவர்கள் கோர அன்னை கருணைகொண்டாள். அவள் தவத்தாணையால் விண்ணிலும் மண்ணிலும் பத்து வெளியக நாட்கள் இருள் நிறைந்தது. விண்ணகம் இருளானபோது ஒளிந்திருந்த இந்திரன் தன் வஜ்ராயுதத்துடன் வெளியே வந்தான். அவனை தேவர்கள் கண்டடைந்தனர். தேவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்திரன் கனிந்து மழைமுகில்களை விடுவித்தான்.

அந்நாளில் கைலாயத்துக்குச் சென்ற நாரதர் முக்கண்முதல்வனை வணங்குவதற்கு முன்பு அனசூயையை எண்ணி வணங்கினார். அதற்குக் காரணம் என்ன என்று சிவன் கேட்டபோது மும்மூர்த்திகளும் தோற்ற இடத்தில் வென்றவள் அனசூயை அல்லவா, அவள் வல்லமையே முதன்மையானது என்றார் நாரதர். அவ்வண்ணமே சொல்லி மும்மூர்த்திகளையும் யோகத்திலிருந்தும் துயிலிலில் இருந்தும் மோனத்திலிருந்தும் எழச்செய்தார். அனசூயையின் வல்லமையை அறிவதற்காக மும்மூர்த்திகளும் அத்ரி முனிவரின் தவச்சாலைக்கு மூன்று வைதிகர்களாக வந்தனர். தங்களுக்கு தாங்கள் விரும்பியவண்ணமே உணவளிக்கவேண்டுமென்று கோரினர். அவ்வண்ணமே ஆகுக என்று சொன்ன அத்ரி பிரஜாபதி தன் துணைவியிடம் அவர்கள் கோரும்படி உணவளிக்க ஆணையிட்டார்.

வான்கங்கையாடி உணவுண்ண வந்தமர்ந்த மூன்றுவைதிகர்களும் அனசூயையிடம் தங்களுக்கு குலப்பெண் ஆடையின்றி வந்து அன்னமிடுவதே நெறி என்றனர். கணவனின் ஆணையையும் கற்பின் நெறியையும் ஒரேசமயம் அவள் எப்படி காத்துக்கொள்கிறாளென்று அறிய அவர்கள் விழைந்தனர். அனசூயை அவர்கள் மூவரையும் தன் புல்லை அமுதாக்கும் காமதேனுவின் கைநீட்டி நெஞ்சுடன் அணைத்துக்கொண்டாள். அவர்கள் கண்களில் பால்படலம் மறையாத கைக்குழந்தைகளாக மாறி அவள் மடியில் தவழ்ந்தனர். அவள் ஆடையின்றி வந்து மூவருக்கும் முலையமுதூட்டினாள்.
அவர்கள் அவள் மடியில் மதலைகளாக வாழ்ந்தனர். முதல்பொருளின்றிப் பிறந்த மூலவர்கள் அவள் வழியாகவே அன்னையின் பேரன்பை அறிந்து களித்தனர். முத்தொழிலை ஆற்றும்பொருட்டு அவர்கள் மீண்டும் தங்களுருக்கொண்டபோதிலும் அன்னையின் அன்பை முழுதறியும் பொருட்டு அவள் உதரத்திலேயே ஒரேகுழந்தையாகப் பிறந்தனர். அந்த மகவு தத்தாத்ரேயன் என்றழைக்கப்பட்டது.

மும்மூர்த்திகளையும் மூன்று முகங்களாகக்கொண்டு ஆறுகரங்களுடன் பிறந்த தத்தாத்ரேயர் இளமையிலேயே நான்கு அறங்களையும் துறந்தார். ஐம்புலன்களையும் வென்றார். களைவதொன்றுமில்லாத நெஞ்சுகொண்டிருந்தமையால் அவர் அறியவேண்டியதென்று ஏதுமிருக்கவில்லை. ஞானங்களின் கொடுமுடியான வேதங்களைக் கற்கும்பொருட்டு தன் தந்தையான பிரம்மதேவனைத் தேடிச்சென்றார் தத்தாத்ரேயர். அவரைக்கண்டதும் பிரம்மனின் கையில் வாடாததாமரைகளாக மலர்ந்திருந்த நான்கு வேதங்களும் தத்தாத்ரேயரின் உடலில் வீசிய அன்னையின் முலைப்பால் வாசனையை உணர்ந்து நான்கு நாய்களாக மாறி அவரைத் தொடர்ந்தன.

“மும்மூர்த்திகளையும் முலையூட்டி வளர்த்தவளை வாழ்த்துவோம். பிரம்மத்தை ஞானமாக பெற்றெடுத்தவளை வாழ்த்துவோம். பிறிதொன்றிலாத பார்வை கொண்ட அனசூயை அன்னையை வாழ்த்துவோம். ஆம், அவ்வாறே ஆகுக!”

March 07, 2014

Before Sunrise / Sunset / Midnight

I am not a great lover all Hollywood Movies. Of course, I watch many of them selectively. Recently, I came across this film 'Before Midnight' (Thanks to Sudhish Kamath (critic) who mentioned it in the list of movies he wish to watch in the International Film festivals that happened across South India). 

I watched 'Before Midnight' and I was bowled over by it. For me, it was first time to watch a movie that is only walk talk. They had sensible conversation discussing various things especially on the mid-life crisis part. Perhaps, I am about enter the 30s club, hence they sounded much needful insights.

Then, I came to know about the previous movies 'Before Sunrise' and 'Before Sunset' in this series. The main push for me to watch 'Before Sunrise' was the 'Tring Tring Tring' fake conversation because it was ripped in film Vaalee much later. Watching 'Before Sunrise' and 'Before Sunset' was again such a pleasure. Definitely all the three movies are some of the finest movies that I have seen and I recommend them very much. 

Before Sunrise
I liked many things in this movie. 
- The way Jesse gets into conversation Celine, then the talk in the tram
- Both of them at the top of the tower, just before sunset 
- Both of them listening to a song in a music shop. Both of them react to the lyrics/song and see each other when the other doesn't see.
- Both of them having the fake phone call conversation. It was beautiful. (Celine even says that 'I like to feel his eyes on me when I look away') 
- The night walk along the canal. Subsequently getting a poem written by a person there.
- The night in the park.
- Things they speak after sunrise . (Jesse remarks 'real time' - meaning last night was a dream kind). 

(at the top of the tower)

(Listening to song)

(Listening to song)

(Fake Phone Call Conversation)

Before Sunset
- While addressing his readers, Jesse gives a reaction on seeing Celine outside the shop. Awesome.
- Celine's reaction when she learns that Jesse waited for her on Dec 6
- All their talks in the walk. And the talks in the cruise. 
- Celine's tells that she was crying for both things 1) for her granny's death 2) for not going to meeting Jesse anymore in life
- Both of them confess that they would have wished they had met on that day and the life would have been lot better. 
- Celine says that, it was as if she had put all the romance in that one single night
- They both discuss in car. Celine talks about her ex-boyfriends and relationship breakups. Jesse says about his lifeless marriage and wished Celine was her.
- Subsequently, Celine hugs Jesse. Jesse decides to go to Celine's house. Jesse asks her to sing a song. Celine sings a song with lyrics meaning that both of them were together. Celine subsequently imitating a singer playfully. Celine says 'Babe, you are going to miss the flight'. Jesse says 'I know' - meaning he is going to say back with her. 
- In the car, Celine tries to touch Jesse's head. But stops within a second. 













I only wished that, I had watched these movies much earlier.

Before Midnight
- The conversation along the way after dropping Jesse's sun at the airport
- The conversation with friends in the table
- The conversation leading to the Hotel
- The fight they have at the hotel
- The way Jesse convinces Celine finally

One line that I liked very much in 'Before Sunset' is Memory is a wonderful thing, if we don't have to deal with the past. 

February 28, 2014

மீன் குழம்பு [குடைநிழல் - தெளிவத்தை ஜோசப்]

மகள் எப்போதுமே என் கட்சிதான். எப்போதும் எதற்கும் அப்பா வேண்டும் அவளுக்கு. அம்மாவுடனான, அண்ணாவுடனான சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண அவளுக்கு அப்பா வர வேண்டும்.

நேற்று பகல் சாப்பாட்டின் போதுகூட அம்மாவுடன் ஒரு றகளை.

நேற்று பகல் எங்கள் வீட்டில் மீன் குழம்பு.

மகள் மீன் சாப்பிடுவதில்லை! அவளது மறுப்பின் நியாயம் கருதி நானும் வற்புறுத்தவில்லை.

முன்பெல்லாம் மீன் என்றால் விரும்பி சாப்பிடுவாள். சின்ன மீன் என்றால் மாத்திரம் சற்றே சங்கடப்படுவாள். துண்டு மீன் என்றால் முள் பிரச்சினை கிடையாது. மிகவும் விரும்புவாள். அம்மாவின் மீன் குழம்பு வைப்பே ஒரு தனித்துவமானது. தனிச்சுவையானது. கிராமப் புற சிங்களப் பெண்கள் பலாக்காய்கறி சமைப்பதுபோல, ஒரு அருமையான கைப்பக்குவம் அது!

வெறும் குழம்பை வெறும் தட்டில் விட்டு வழித்து வழித்துச் சுவைப்போம். நானும் மகளும். அப்படி இருந்தும் இப்போது மீன் குழம்பு சாப்பிட மறுக்கின்றாள் என்றாள் அதற்கான் வலுவான காரணங்கள் உண்டு.

கொஞ்ச காலத்துக்கு முன் எதுவிதமான் கேள்வி கேட்பாடுகளுமின்றி இளைஞர் யுவதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். டயர் போட்டு எரிக்கப்பட்டனர்.

காலெரிந்த, அரையெரிந்த பிணங்கள் காடு மேடென்று கிடந்தன. கூடுதலானவை ஆறுகளில் எறியப்பட்டன.

வாயுப்பி வயிறுப்பிக் கரையொதுங்கி மனிதர்களை பயமுறுத்தியவை ஒன்றிரண்டு! மீதியெல்லாம் ஆற்றிலோடி கடலுக்குள் சங்கமித்து மீன்களுக்கு உணவாகின.

மனிதர்கள் மட்டுமா மீன் தின்னலாம்! மீன்களும் மனிதர்களைத் தின்ன வேண்டாமா! ஓடம் வண்டியிலும் வண்டி ஓடத்திலும் ஏறும் வரலாறுகள் தான்.

அரச இயந்திரத்தை செயலிழக்கச் செய்யும் உறுதியுடன் மேற்கிளம்பிய தென்னிலங்கைச் கிளர்ச்சிக்காரர்களை அரசு அடக்கி காட்டியவிதம் இது.

ஒருநாள் மனைவி சமையலுக்காக மீன் அரிந்து கொண்டிருந்தாள். வழக்கம்போல் மகளும் உடனமர்ந்து ஒத்தாசை செய்து கொண்டிருந்தாள். அரிந்த மீனின் அடிவயிற்றை நசுக்கிக் குடல் எடுக்கும்போது பிதுக்கிய வேகத்தில் விரல்களுக்கூடாக நழுவி ஒடித் தனியாக தரையில் விழுகிறது ஒரு விரல் துண்டு. மனித விரல்! வர்ணம் பூசிய நகத்துடனான ஒரு சுண்டு விரல் துண்டு.

மகள் பயப்படக்கூடும் என்பதால் தாய் லாவகமாக மறைக்க முயன்றிருக்கின்றாள். சின்னஞ்சிறிசுகள் ஆர்வம் மிக்கவர்களாயிற்றே.

‘அது என்னம்மா’ என்றவள் தெறித்தோடி விழுந்த விரல்துண்டைக் கண்டுவிட்டதும் ‘சீக்கே’ என்றப்படி எழுந்தோடிவிட்டள். அந்த சம்பவத்துக்குப் பிறகு மீன் என்றாலே அவளுக்கு ஒரு அறுவறுப்பு சாப்பிட மறுப்பாள். சாப்பிட மாட்டாள். நானும் வற்புறுத்துவதில்லை.

வீட்டில் மீன் குழம்பு என்றால் ஏதாவது மகளுக்கு தனியாக இருக்கும். நேற்றும் மீன் தான். தனியாகச் சமைத்திருக்கும் குழம்பை எடுத்துக் கொடுக்காமல் தாய் மீன் குழம்பை மகளிடம் தள்ள ‘பாருங்கப்பா’ என்று மகள் சிணுங்க. நான் எழுந்துபோய் மற்ற குழம்பை எடுத்து வந்து மகளுக்கு ஊட்டினேன். 

‘நீங்கள்தான் அவளை கெடுக்கிறது’ என்று பொய்யாகச் கோபித்துக்கொண்டாள் மனைவி. மகள் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் தாயைச் கேலி செய்தபடி ஓரக்கண்ணால் என்னை நோக்கி கண் சிமிட்டுவாள்.

HE IS MY EVERTHING
HE IS MY ALL - HE IS MY EVERYTHING
FOR GREAT THINGS AND SMALL
HE GAVE HIS LIFE FOR ME.

என்று ஏசுவின் நவநாள் பிரார்த்தனையின் போது படிக்கப்படும் பாடலை உயர்ந்த குரலில் பாடினாள். அம்மாவை உசுப்பிவிட.

(இலங்கை மலையக பகுதி எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் குடைநிழல் [2010] குறுநாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி அல்லது சிறுகதை என்றும் சொல்லலாம்)

மலையக பகுதி - யாழ்ப்பாணம் அல்ல. இந்தியாவில் இருந்து தேயிலை தோட்டதிற்கு அடிமைகளாக சென்றவர்கள்.

February 19, 2014

எனக்குப் பிடித்த பாடல்

’எனக்குப் பிடித்த பாடல்’ 2003-இல் வெளிவந்த பாடல். இத்தனை ஆண்டுகளில் ஒருதடவை கூட அதனை நான் கேட்டது இல்லை. தற்ச்செயலாக ஐ-பெட்-இல் எனது தம்பி பதிவிறக்கம் செய்து இருந்தான். அதை கேட்டேன். வரிகளில் மெய் மறந்தேன். மிகவும் பிடித்த வரிகளை பெரிதுப்படுத்தி உள்ளேன். :)

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

பித்துப் பிடித்ததைப் போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
திரைப்படம்: ஜுலி கணபதி
இசை: இளையராஜா
இயக்குனர்: பாலு மகேந்திரா.

February 12, 2014

சுப்ரை

இன்று எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசுவில் (மகாபாரதம் தமிழில் மறு ஆக்கம்) சுப்ரை என்ற ஒரு பறவையை பற்றிய ஒரு (தாய்மை பற்றிய) கதைப் படித்தேன். மிக அருமையாக இருந்தது.

அந்த கதையை இங்கு வெட்டி ஒட்டி உள்ளேன்.

சுட்டிகள் (சொடுக்கலாம்)

முன்னொரு காலத்தில் இந்திராவதி என்னும் ஆற்றின் கரையில் கௌரன் என்னும் சாதகப் பறவை தன் துணையுடன் வாழ்ந்து வந்தது. மழைநீரை வானிலிருந்து அருந்தும் சாதகப்பறவை பிற உயிர்கள் அறியாத ஆற்றிடைக்குறைக்குச் சென்று அங்குள்ள மரப்பொந்தில் முட்டையிடும் வழக்கம் கொண்டது. தந்தை அமைக்கும் மரப்பொந்துக்குள் சென்று அமரும் தாய்ப்பறவை உள்ளே முட்டையிட்டு இறகுகளால் பொத்தி அடைகாக்கும். ஆண்பறவை பறந்துசென்று இரைதேடிக்கொண்டுவந்து தன் துணைக்கு உணவூட்டும்.

காட்டெருதின் கொம்புகளைப் பிணைத்ததுபோல் அலகுள்ள சாதகப்பறவையான கௌரன் தன் துணைவி சுப்ரை ஐந்து முட்டைகளுடன் மரப்பொந்துக்குள் முட்டைமீதமர்ந்து தவம் செய்யத்தொடங்கியதும் அதை உள்ளே வைத்து தன் உடற்பசையால் மூடியது. பின்பு காட்டுக்குள் சென்று உணவுகொண்டு வந்தது. நாற்பத்தொருநாட்கள் அவ்வாறு கௌரன் தன் மனைவிக்கு ஊட்டியது. ஒருநாளில் நூறுமுறை அது உணவுடன் வந்தது. கிடைக்கும் உணவில் ஏழில் ஒருபங்கை மட்டுமே அது உண்டது. மெலிந்து சிறகுகளை வீசும் வல்லமையை இழந்தபோதிலும் கௌரன் சோர்வுறவில்லை.

ஒருநாள் வானில் உணவுதேடிச்சென்ற கௌரன் சிறகு ஓய்ந்து ஒரு மரத்தில் அமர்ந்திருக்கையில் ஒரு வேடன் அதை அம்பெய்து வீழ்த்தினான். இறகுகள் முழுக்க உதிர்ந்து கருக்குழந்தைபோல ஆன சுப்ரை சிறகுகள் முளைக்காமல் புழுக்கள் போல நெளிந்த சிறு குஞ்சுகளுடன் மரப்பொந்தில் காத்திருந்தது. ஐந்து குஞ்சுகளும் தீராப்பெரும்பசியுடன் அன்னையை முட்டி உணவுக்காகக் குரலெழுப்பின. இரண்டுநாள் காத்திருந்தபின் சுப்ரை என்ன நடந்திருக்குமென புரிந்துகொண்டது.



சுப்ரை தன் குஞ்சுகளிடம் சொன்னது, ‘குழந்தைகளே, இந்த ஆற்றிடைக்குறையில் இருந்து நாம் தப்ப ஒரேவழிதான் உள்ளது. நீங்கள் என்னை உண்ணுங்கள். முதலில் என் குருதியைக் குடியுங்கள். பின்பு என் கால்களை உண்ணுங்கள். அதன்பின் என் கைகளை. என் இதயத்தை கடைசியாக உண்ணுங்கள். உங்கள் சிறகுகள் வளர்ந்ததும் பறந்துசெல்லுங்கள். என்னை நீங்கள் சிறிதும் மிச்சம் வைக்கலாகாது.’

அன்னையின் ஆணைப்படி ஐந்து குஞ்சுகளும் அதனை உண்டன. அதன் குருதியை அவை குடித்து முடித்ததும் சுப்ரை வெளுத்து வெண்ணைபோல ஆகியது.  அவை அதன் கால்களையும் கைகளையும் உண்டன. கடைசியாக மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த இதயத்தை உண்டன. அன்னையை சற்றும் மிச்சமில்லாமல் உண்டு முடித்த அவை புதியசிறகுகளுடன் வானில் எழுந்து பறந்து சென்றன. அந்த ஐந்து குஞ்சுகளில் ஒன்றுக்கு மட்டும் அன்னையின் கடைசி ஆணை நினைவில் இருந்தது. அது திரும்பி வந்தது. அந்தப்பொந்தில் அன்னையின் வாசனை எஞ்சியிருப்பதை அதுமட்டும்தான் அறிந்தது. அதை எப்போதும் போக்கமுடியாதென்பதை புரிந்துகொண்டது.

தேவருலகு நோக்கி ஒளிமிக்கச் சிறகுகளுடன் பறந்துகொண்டிருந்த சுப்ரையை மூதாதையரின் உலகில் கௌரன் சந்தித்தது. ‘நான் உன் துணைவன்.. என் சிறகுகள் ஏன் ஒளிபெறவில்லை?’ என்று கேட்டது. ‘நான் மண்ணில் தாய்மையின் பேரின்பத்தை அடைந்து முழுமைகொண்டேன். என் பிறவிக்கண்ணி அறுந்தது’ என்றது சுப்ரை. ‘ஆம், நான் என் இச்சை அறாமல் இறந்தேன்’ என்றது கௌரன். ‘நீ மண்ணில் மீண்டும் பிறந்து நான் பெற்ற முழுமையைப் பெறுவாய்’ என சுப்ரை கெளரனை வாழ்த்தி விண் ஏகியது.’